மக்காஸ்...
இலக்கணப் போட்டிக்கு நீங்கள்லாம் இன்னிக்கே ஆர்வமா இருந்தீங்க...
உங்களைலாம் கொஞ்சம் ஏமாத்திட்டோம்... அதுக்குப் பரிகாரமா இந்தக் கொசுறு போட்டி:
இது நான் இயற்றின ஒரு ‘நாக்குழற்றுப்பா’ (டங் டிவிஸ்டர்!)
வெருளற வருளருளும் விரைமல ரிமையவர்கோ
விருமலர்த் திருவடிக ளிருளுறு வினையறவே
விரைவுற சரணுருவார் விழைபொரு ளவைவடைவார்
கரையறு தமிழுரையால் கழலிறைஞ் சினிதுறைவோம்!
இதைப் பிழையில்லாம வேகமா மூன்று முறைச் சொல்லனும்... முடியுமா?
(கவனிக்க: உங்கள் முயற்சிகளை ஒலிப்பதிவு செய்து இந்தப் பதிவின் மறுமொழியிலேயே இடுங்கள் (தனிக்கோப்பாக இணைக்கவும்))
@Manikodi அக்கா ரெடியா இருந்துக்கோங்க... (எப்படி நம்ம
‘பழிக்குப் பழி’ ஹா ஹா ஹா... )
---------
உங்களுக்கு உதவ பாடலைப் பதம் பிரித்து இடுகிறேன்:
வெருளற வருளருளும் விரைமல ரிமையவர்கோ
விருமலர்த் திருவடிக ளிருளுறு வினையறவே
விரைவுற சரணுறுவார் விழைபொரு ளவைவடைவார்
கரையறு தமிழுரையால் கழலிறைஞ் சினிதுறைவோம்
வெருள் அற அருள் அருளும் விரை மலர் இமையவர் கோ
இரு மலர் திரு அடிகள் இருள் உறு வினை அறவே
விரைவு உற சரண் உறுவார் விழை பொருள் அவை அடைவார்
கரை அறு தமிழ் உரையால் கழல் இறைஞ்சு இனிது உறைவோம்.
பொருள்:
இப்பா சிவனைத் துதித்துப் பாடப்பெற்றது.
அச்சம் (வெருள்) நீங்கும்படி (அற) நமக்கு அருள் செய்யும் வாசம் மிக்க (விரை) மலரை அணியும் விண்ணவர்களின் (இமையவர்) அரசரனான (கோ) [இறைவனின்]
இரண்டு மலர் போன்ற திருவடிகளை, இருள் சேரும் வினைகளை அறும் படிச் செய்யும் அவ்வடிகளை, தாமதமின்றி (விரைவு உற) சரண் அடையும் [அன்பர்கள்] தாம் விரும்பிய பொருள்களை எல்லாம் பெறுவார்...
கரை இல்லாத தமிழின் மொழியால் அவனது திருக்கழலை (அடியை) வழிபட்டு நாம் இனிதாக இருப்போம் [என்றவாறு].
இது ‘தரவு கொச்சக் கலிப்பா’ என்ற யாப்பு.
----------
போட்டியில் வெல்பவருக்கு ‘நாவரசி’ என்ற பட்டம் வழங்கப்பெறும் (ஆணென்றால் ‘நாவரசன்’!)
ரெடி... 1... 2... 3... ஸ்டார்ட்!
இலக்கணப் போட்டிக்கு நீங்கள்லாம் இன்னிக்கே ஆர்வமா இருந்தீங்க...
உங்களைலாம் கொஞ்சம் ஏமாத்திட்டோம்... அதுக்குப் பரிகாரமா இந்தக் கொசுறு போட்டி:
இது நான் இயற்றின ஒரு ‘நாக்குழற்றுப்பா’ (டங் டிவிஸ்டர்!)
வெருளற வருளருளும் விரைமல ரிமையவர்கோ
விருமலர்த் திருவடிக ளிருளுறு வினையறவே
விரைவுற சரணுருவார் விழைபொரு ளவைவடைவார்
கரையறு தமிழுரையால் கழலிறைஞ் சினிதுறைவோம்!
இதைப் பிழையில்லாம வேகமா மூன்று முறைச் சொல்லனும்... முடியுமா?
(கவனிக்க: உங்கள் முயற்சிகளை ஒலிப்பதிவு செய்து இந்தப் பதிவின் மறுமொழியிலேயே இடுங்கள் (தனிக்கோப்பாக இணைக்கவும்))
@Manikodi அக்கா ரெடியா இருந்துக்கோங்க... (எப்படி நம்ம
‘பழிக்குப் பழி’ ஹா ஹா ஹா... )
---------
உங்களுக்கு உதவ பாடலைப் பதம் பிரித்து இடுகிறேன்:
வெருளற வருளருளும் விரைமல ரிமையவர்கோ
விருமலர்த் திருவடிக ளிருளுறு வினையறவே
விரைவுற சரணுறுவார் விழைபொரு ளவைவடைவார்
கரையறு தமிழுரையால் கழலிறைஞ் சினிதுறைவோம்
வெருள் அற அருள் அருளும் விரை மலர் இமையவர் கோ
இரு மலர் திரு அடிகள் இருள் உறு வினை அறவே
விரைவு உற சரண் உறுவார் விழை பொருள் அவை அடைவார்
கரை அறு தமிழ் உரையால் கழல் இறைஞ்சு இனிது உறைவோம்.
பொருள்:
இப்பா சிவனைத் துதித்துப் பாடப்பெற்றது.
அச்சம் (வெருள்) நீங்கும்படி (அற) நமக்கு அருள் செய்யும் வாசம் மிக்க (விரை) மலரை அணியும் விண்ணவர்களின் (இமையவர்) அரசரனான (கோ) [இறைவனின்]
இரண்டு மலர் போன்ற திருவடிகளை, இருள் சேரும் வினைகளை அறும் படிச் செய்யும் அவ்வடிகளை, தாமதமின்றி (விரைவு உற) சரண் அடையும் [அன்பர்கள்] தாம் விரும்பிய பொருள்களை எல்லாம் பெறுவார்...
கரை இல்லாத தமிழின் மொழியால் அவனது திருக்கழலை (அடியை) வழிபட்டு நாம் இனிதாக இருப்போம் [என்றவாறு].
இது ‘தரவு கொச்சக் கலிப்பா’ என்ற யாப்பு.
----------
போட்டியில் வெல்பவருக்கு ‘நாவரசி’ என்ற பட்டம் வழங்கப்பெறும் (ஆணென்றால் ‘நாவரசன்’!)
ரெடி... 1... 2... 3... ஸ்டார்ட்!
Last edited: