தேவையான பொருட்கள் :
மைதா மாவு - ஒரு கப்
லேசாக புளித்த தயிர் - அரை கப்
சீரகம் - ஒரு ஸ்பூனிற்கும் குறைவாக
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கருவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - மூன்று
இஞ்சி - ஒரு துண்டு
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
செய்முறை :
ஒரு மிக்ஸிங் பௌலில் மைதா மாவு சேர்த்து இதனுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.. கெட்டியாக இருப்பது போல இருக்கும், அதற்காக தண்ணீர் சேர்த்து பிசைந்துவிடாதீர்கள் மக்களே. தேவைப்பட்டால் மட்டும் இன்னும் கொஞ்சம் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.. பிசைந்து ஒரு அரை மணி நேரம் மூடி ஊற வைத்துவிடுங்கள் ..
அரைமணி நேரம் கழித்து எடுத்து அந்த கலவையை நன்றாக அடித்து கலக்கவும், கலந்த பின்பு இதனுடன் பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம்,உப்பு, சர்க்கரை, கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள், மிகவும் கெட்டியாக இருக்கக்கூடாது, இருக்காது இந்த கலவை, கொஞ்சம் கொழகொழவென்று தான் இருக்கும், அப்போது தான் பலகாரம் நன்றாக வரும்,,.....
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் கைகளில் தண்ணீர் தொட்டு கொண்டு இந்த கலவையை எடுத்து உருண்டையாக போட்டு மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும், அப்போது தான் உள்ளேயும் நன்கு வெந்து வரும்..
இதற்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும், சாஸ் அல்லது கார சட்னி என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது...
மைதா மாவு - ஒரு கப்
லேசாக புளித்த தயிர் - அரை கப்
சீரகம் - ஒரு ஸ்பூனிற்கும் குறைவாக
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கருவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - மூன்று
இஞ்சி - ஒரு துண்டு
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
செய்முறை :
ஒரு மிக்ஸிங் பௌலில் மைதா மாவு சேர்த்து இதனுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.. கெட்டியாக இருப்பது போல இருக்கும், அதற்காக தண்ணீர் சேர்த்து பிசைந்துவிடாதீர்கள் மக்களே. தேவைப்பட்டால் மட்டும் இன்னும் கொஞ்சம் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.. பிசைந்து ஒரு அரை மணி நேரம் மூடி ஊற வைத்துவிடுங்கள் ..
அரைமணி நேரம் கழித்து எடுத்து அந்த கலவையை நன்றாக அடித்து கலக்கவும், கலந்த பின்பு இதனுடன் பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம்,உப்பு, சர்க்கரை, கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள், மிகவும் கெட்டியாக இருக்கக்கூடாது, இருக்காது இந்த கலவை, கொஞ்சம் கொழகொழவென்று தான் இருக்கும், அப்போது தான் பலகாரம் நன்றாக வரும்,,.....
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் கைகளில் தண்ணீர் தொட்டு கொண்டு இந்த கலவையை எடுத்து உருண்டையாக போட்டு மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும், அப்போது தான் உள்ளேயும் நன்கு வெந்து வரும்..
இதற்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும், சாஸ் அல்லது கார சட்னி என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது...