THAZHAI KANI
அமைச்சர்
"அழுதிட
கண்ணீர்
இல்லை
காயம்பட்டிட
இதயத்தில்
காலி இடம்
இல்லை
இம்சைகளாய்
சில
செய்கைகள்
என் பாதையில்
என் பாதணிக்கும்
பயமில்லை
அவை கண்டு
என் பாதை
நான் உருவாக்கியது
என் வெற்றிக்காக
பயணம் அதில்
நான் மேற்கொள்ள
பாதியில்
என்னை
பாதித்திட
எது வந்தாலும்
பார்க்காமல்
செல்வேனே
எனக்கு
பிடிக்கவில்லையெனில்
என்னை
எதிர்த்து நின்றிடவும்
தான்
ஒரு தகுதி
வேண்டுமே
என் வழியில்
வந்திட்டால்
நான் சரிந்திடுவேன்
என்று
நினைத்தால்
சாணக்கியன் வழி
வந்த இவள்
சடுதியில்
சாவாளோ
இவள்
சாவையும்
எதிர்த்து நிற்கும்
சத்திரிய வம்சத்தவள் அல்லவா"