சமர்ப்பணம் அனிதா ராஜ்குமார்.
இந்த கதையின் ஹீரோ கௌதம் பிரபாகரன். ஹீரோயின் காவ்யா/ அஞ்சலி. நம்ம ஹீரோயின்களை சுற்றித்தான் கதை சுழல்கிறது. என்ன என்ற எதிர்பார்ப்போடு நம் கண்ணில் கதாநாயகனை காட்டாமல் கதையை நகர்த்தியது எழுத்தாளரின் தனி சிறப்பு. ஒவ்வொரு பிரச்சினைக்கு பின்னாடியும் அவரவர்களுக்கு என்று ஆயிரம் பிரச்சனை இருக்கு என்று புரிய வைத்த இடங்கள் கதைக்கு அழகு சேர்த்தது.இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க வைத்த பல காதப்பாத்திரம் நம்மை ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. ஒருவர் செய்யும் தவறில் எத்தனை பேரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று கதை படிப்பவர்களுக்கு புரியும் நான் சொல்ல விரும்பவில்லை. விருப்பமும் இல்லை. கதையில் அனைவரும் தங்களுக்கான ஒரு சிறந்த இடத்தை பிடித்தனர்.
அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு எபியிலும் அனிதா அக்கா கொடுத்த அதிர்ச்சி மிகு தகவல்கள் என்னை அதிகம் பாதித்தது. இந்த கதையில் நம்மை தாண்டி நடக்கும் பல பெண்களின் பிரச்சனைகளை தெள்ள தெளிவாக கூறி இருக்கிறார் எழுத்தாளர்.
ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும், அவள் பெண்ணே அல்ல. பெண்கள் இடம் தராமல் தவறு எப்படி நடக்கும் என்று தினமும் நியூஸ் பேப்பர் மட்டும் படித்துவிட்டு விவாதம் செய்யும் நாம் பல விசயங்களை புரிந்து கொள்வதில்லை. தவறு இப்படி நடந்திருக்கலாம் என்ற யுகம் மட்டும் நம்மிடம் இருக்கும். ஆனால் அதில் பாதிக்கபட்ட பெண்ணின் மனநிலை பற்றி நாம் யோசிப்பதில்லை.
கற்பழிப்பு, கடத்தல், பாலியல் தொந்தரவு என்று எத்தனை நடந்தாலும் அவளின் வாழ்க்கையை மீண்டும் சீர் செய்கிறேன் என்று இன்னொருவன் கையில் பிடித்து கொடுத்துவிட்டு கடமை முடிந்தது என்று இருக்கும் பெற்றோர்களுக்கும் தெரியுமா அவள் தினம் செத்து செத்து பிழைக்கிறாள் என்று..
மகள் ஓடிவிட்டால் என்றதும் துடியாய் துடிக்கும் பெற்றோர் ஒருநிமிடம், 'என் பிள்ளை தவறு செய்திருக்காது' என்று நம்பினாலே போதும் ஆயிரம் பிரச்சனைகளை தடுக்க முடியும். கற்பழிக்க பட்ட பெண்ணோ பாலியல் கொடுமைக்கு ஆளானோ பெண்ணோ சமுகத்தின் முன்னே குற்றவாளி என்று சொல்கின்றனர்.
ஆனால் அவளின் மனசாட்சிக்கு மட்டும் தெரியும் அவள் தெரிந்தே தவறு செய்யவில்லை என்று. களவும் கற்று மற என்று கத்துகொடுக்கும் சமூகம் அவளை மட்டும் இன்னும் இழிநிலையில் நிறுத்திப் பார்க்கிறது. பிள்ளைகள் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தால் போதும் அவளை துயரத்தில் இருந்து மீட்டெடுத்து அவளையும் அவளின் மனதையும் சீர் செய்துவிடலாம்.
நம்மை சுற்றி நடக்கும் விசயங்கள் பல நமக்கு கருத்து பேச மட்டும் பயன்படுகிறது என்பதோடு நின்று போகிறது. ஒரு படத்தில் விவேக் சொல்லும் டைலாக், 'உன்னிக்கிருஷ்ணனுக்கு விருது கிடைச்சிருச்சு என்று சந்தோசப்படும் நாங்க ரம்யாகிருஷ்ணனுக்கு கல்யாணம் ஆகிருச்சி என்று வருத்தபடுவோம்' என்று சொல்வார். இன்னைக்கு நியூஸ்ல பார்க்கும் விஷயத்தை நம்ம வீட்டில் விவாதம் பண்ணிட்டு நாளைக்கு வேற நியூஸ் வந்தா இதை மறந்துவிடுவோம்.
அப்படி இல்லாமல் ஒரு பெண்ணிற்கு இங்கே எந்த உருவத்தில் இருந்து பிரச்சனையின் ஆரம்பம் எங்கே முடிவு எங்கே என்று கதையின் ஒவ்வொரு இடத்திலும் எளிமையான எழுத்து நடையில், கிண்டலோடு சேர்த்து சிந்திக்கும் விதமாக எழுதிய எழுத்தாளருக்கு பாராட்டுகள்.
இந்த கதையில் வந்த சின்ன கதாபாத்திரத்திற்கு கூட உயிர் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. சிலநேரம் நாம் கண்ணில் பார்ப்பதும், காதல் கேட்பது பொய் என்பதை தாண்டி தீர விசாரித்தாலும் அதிலும் பொய்தான் இருக்கு என்று ஆணித்தரமாக நிரூபித்து காட்டிய சில கதாப்பாத்திரம் ருபேஷ், தீலிப் போன்றவர்கள் கண்முன்னே வந்து சென்றது உண்மை.
உண்மையான மலர்களின் வாசத்திற்கு முன்னால் காகிதப் பூக்களுக்களாக மாறிய சிலரின் காதலில் நிதர்சனம் புரிந்தது. கதையில் காற்று நுழையாத இடத்திலும் சில நுணுக்கமான தகவல்களை வசனங்களில் புதைத்து கதாபாத்திரங்களுக்கு மெருகூட்டிய அனிதா ராஜ்குமாரின் சிறந்த படைப்பு இந்த சமர்ப்பணம்.
யாருக்கு இந்த சமர்ப்பணம் என்று நிறையபேர் குழப்பத்தில் இருக்கலாம். உண்மையான காதல், சமூக அக்கறை கொண்ட மனிதர்களின் இடையே போலியான முகங்களை கண்டுகொண்டு விழிப்புடன் இருக்க வேண்டியது பெண்களே என்று சொல்லாமல், அவள் அடையும் ஆயிரம் துன்பங்களுக்கு இனி நாமும் ஒரு காரணமாக இருக்க கூடாது என்று கதையின் முடிவை படித்துவிட்டு நினைக்கும் நல்ல உள்ளங்களுக்கு இந்த சமர்ப்பணம்.
முடிந்தவரை பெண் இப்படி இருக்கணும் என்று சொல்லி வளர்ப்பதைவிட நீ இப்படித்தான் இருக்கணும் என்று பசங்களுக்கு சொல்லி வளர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சமூகத்தில் இருக்கிறோம் என்று புரிய வைத்த எழுத்தாளருக்கு என் பாராட்டுகள். இன்னும் இதுபோல பல படைப்புகள் படைக்க என் வாழ்த்துகள்.
பெண்ணாக பிறந்திட மாதவம்
செய்திட வேண்டும் என்ற
வரிகளில் உள்ள உண்மையை
உணர்ந்து நடைபோட பழகு.
பூப்படையும் நாளுக்கு பிறகு
ஆபத்துகள் அதிகம் என்று
சொல்லாமல் நீ பிறந்த
நாளில் இருந்தே உனக்கு
பிரச்சனை தொடங்கிவிட்டது
என்று பெண்ணுக்கு கற்றுக்
கொடுங்கள் பெற்றவர்களே..
பெண் என்பவள் இப்படிதான்
இருக்கவேண்டும் என்று
வளர்க்காமல்...
மகனே பெண்ணை மதிப்புடன்
நடத்த வேண்டியவள் என்று
மகன்களுக்கும் கற்றுகொடுங்கள்
தன்னை தாய் ஈன்றெடுத்தவளும்
ஒரு பெண்தான்..
தன்னோடு நொடிக்கு நொடி
சண்டைக்கு நிற்கும் தங்கையும்
ஒரு பெண்தான்..
நாளை உன்னை மணந்து
வீட்டிற்கு விளக்கேற்ற வருபவளும்
ஒரு பெண்ணே என்று
புரிய வையுங்கள்
ஐந்து வயதில் பிள்ளைகளை
கொண்டுபோய் பள்ளிகூடத்தில்
சேர்ப்பதும்..
குறிப்பிட்ட வயதில் கல்லூரியில்
சேர்ப்பதும்..
பருவ வயதில் அவளை மணம்
முடித்து வைப்பதோடு
கடமை முடிந்தது என்று
நினைக்க வேண்டாம்..
பெண்ணென்று பூமியில் பிறந்தாலே
அவளுக்கு நாளை வரும்
பிரச்சனைகளை இன்றே
கணக்கிட்டு ஐந்து வயதில்
பேனாவை கொடுக்கும் பொழுதே
அவளுக்கு தற்காப்பு என்ற கலையையும்
கற்றுகொடுங்கள்..
எட்டு வயதில் குட் டச் பேட் டச்
என்னவென்று கற்றுக் கொடுங்கள்..
மூடி மூடி வைத்தால்
திறந்து பார்க்க
ஆசைகொள்ளும் மனம்..
அவளின் மனதில் நல்ல விதைகளை
விதைக்கும் பொறுப்பு பெற்றவரின்
கைகளில் இருக்கிறது..
தன் மகனோ/ மகளோ தவறு
செய்தால் அதை மூடி மறைக்காமல்
தண்டனை கொடுங்கள்..
தண்டனை அதிகரிக்கும்போது
தவறுகள் குறையும்..
கதையை படித்து எனக்கு தோன்றியதை நான் கவிதையாக வடித்துவிட்டேன். தவறு என்று நினைப்பவர்கள் என்னை திட்டலாம். சரிதான் என்று தோன்றுபவர்கள் அனிதா அக்காவை பாராட்டலாம். சிறுதுளி பெருவெள்ளம். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று சொல்வதைவிட நிலம் பார்த்து விதைக்கும் விதைபோல குழந்தை பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு நல்லதை கற்றுகொடுக்க பழகுங்கள். முதல் பாடமே காதலுக்கும் / காகித பூவிற்கும் உள்ள வேறுபாட்டை கற்றுகொடுங்கள். மாற்றம் ஒன்றே மாறாது அல்ல. இன்றிலிருந்து மாற்றத்தை தொடங்குவோம் என்ற எண்ணத்துடன் விடை பெறுகிறேன்..
வாழ்த்துகள் அனிதா அக்கா.
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
Last edited: