• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சித்திரையில் பிறந்த சித்திரமே 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
சித்திரையில் பிறந்த சித்திரமே 5

இவ்வாறாக எல்லாம் செல்ல எல்லையற்ற இன்பகளோடு சென்ற அவர்கள்
வாழ்னில் இடி தாக்கிடும் நாளும் வந்தது.


இன்று
லெட்சுமி இப்பொழுது பொறியியல் முதலாமாண்டு,அவளின் தம்பி பதினோராம் வகுப்பு படிக்க வாழ்க்கை மிக அழகாக சென்று கொண்டிருந்தது.


அது விடுமுறை நாள் வீட்டில் எல்லாருக்கும் உடல் சற்று பலவீனமாய்
இருப்பது போல் தோன்ற எல்லாரும் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தனர்.


“ லெட்சுமி அப்பாவ வந்து பாரு அப்பா ஒரு மாதிரி இருக்காரு என அவள்
அம்மாவின் குரல் கேட்டு ஓடி வந்து பார்க்க கண்ட காட்சி அவள் கண் நிரந்தரமாக மறக்காது.


அவளின் அப்பா கடைசி மூச்சிற்க்காக தவித்து கொண்டிருந்த தருணம் அது

ஏசி அறையின் குளுமையை தாண்டியும் அவர் வேர்த்து கொண்டிருக்க

அழும் அம்மாவையோ,தம்பியையோ கவனிக்க நேரமற்று

விரைந்தோடினால் தன் தந்தையிடம்

அவளின் முகம் காண காத்திருந்தனவோ என்னவோ அவள் அப்பாவின்

கண்கள் இதோ இமை பிறிக்க முடியாத நிலைக்கு சென்று விட்டன

தன் தாயையொத்த தன் மகளின் மடியிலேயே உயிர் பிரிந்து விட்டது.

அவர் இறுதியாக பேசிய வார்த்தை அவர் நிலை கண்டு கலங்கிய மகளின்

விழி கண்டு வருந்தியவராய்

“ அப்பாவுக்கு ஒன்னும் இல்லை டா"

என கூறி அவரின் எல்லாமுமான மகளின் மடியிலே தன் இன்னுயிர் நீத்து விட்டார்”

அதற்கு பிறகு என்ன நடந்தது என்று கேட்டால் லெட்சுமிக்கு எதுமே
தெரியாது.


"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்


அவள் குணத்தையே மாற்றியது அவளின் தந்தையின் இழப்பு

“ கடன் வேறு இருக்க எல்லாவற்றையும் சமாளிக்க தனது இரு பிள்ளைகளின் படிப்பையும் பாதியிலே நிறுத்தினார் பத்ரா”

அம்மாவின் பேச்சை தட்டாத பிள்ளைகளும் அவ்வாறே நடந்து
கொண்டனர்.


எல்லாமும் போய் இன்று சேகர் ஆசையாய் கட்டிய வீடு மட்டும்

“வீட்டின் ஆண்பிள்ளையாய் லெட்சுமின் தம்பி கமல் வேலைக்கு செல்ல
அவள் அம்மா தனக்கு தெரிந்த தையலை வீட்டிலிருந்த படியே செய்து
கொண்டிருந்தார்”


லெட்சுமிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை
நிமிடத்திற்க்கு நூறு அப்பா போடுபவள் இன்று அப்பா மீண்டும் நம்மை காண வர மாட்டாரா என ஏங்கி கொண்டிருந்தால்”


பத்ராவிற்க்கு தான் தாங்க முடியவில்லை மகளின் இந்த நிலை கண்டு
உலகின் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் விலைக்கு வாங்கியதை போல்
சுற்றும் தன் மகள் இன்று இடிந்து போய் அமர்ந்திருப்பதை கண்டு”


“பதினாறு வயதில் வேலைக்கு செல்லும் மகனை நினைத்து வருந்துவதா,
இல்லை இனி காணவே முடியாத காதல் கணவனை எண்ணி வாடுவதா,


இல்லை இளவரசியாய் இருந்த மகள் இன்று இருக்கும் நிலையை கண்டு வருந்துவதா’
அப்பொழுது சரியாய் பக்கத்து வீட்டு தொலைக்காட்சில் ஒலித்த்து இந்த பாடல்


பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்


ஆயிற்று லெட்சுமியின் அப்பா இறந்து இன்றோடு ஆறு மாதங்கள் முடிந்து விட்டது

“ தன்னையும் வருத்தி தன் அம்மாவையும் வருந்த வைக்க விரும்பாத லெட்சுமியோ இப்பொழுது தனியார் நிறுவனம் ஒன்றில் கணிணியில் கணக்கு பார்க்கும் வேலை ஒன்றில் சேர்ந்து விட்டால்”

“தன் அம்மாவினையும் தம்பியினையும் சிரிக்க வைப்பதற்க்காக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டால்”
இதோ இன்று வேலைக்கு அவளின் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருக்கிறால்,


“பிள்ளை பாவம் லேட்டாகிடுச்சுனு வேகமா போகுதுனு நினைச்சா அது உங்க தப்பு”
மேடம்க்கு சின்ன வயசில இருந்து சைக்கிள் நல்லாவே ஓட்ட தெரியும்
அதுனால மேடம் சைக்கிள் ஓட்டும் போது காலை தரையிலே படாது”


“எந்த காருக்கும் மேடம் வழியே விட மாட்டாங்க”

(கருவாச்சி ஓட்டுறது சைக்கிள் நினைப்புல மைக்கிளோ உன்னையெல்லாம் சாக்கடைக்குள்ள தாண்டி தள்ள போறாங்கே)

வர்ர வழியெல்லாம் எல்லாருக்கும் ஒரு கமெண்ட் போட்டுட்டு (மனசுக்குள்ள தான்)
ஒரு வழியா கம்பெனிக்கு வந்து சேர்ந்துட்டா(இப்பவே கண்ண கட்டுதே)
கம்பெனியில் வாசல் கூட்டி கொண்டிருந்த கிழவிடம் போய்


“என்ன அப்பத்தா ஒரு வாரமா ஆளைக் காணோம் எங்க போன” என லெட்சுமி கேட்க
அதுக்கு அந்த கிழவியோ “ வீட்டுல கறி விருந்து போட்டு விஷேசம் வச்சேன் உடம்பு முடியலை அதேன் வேலைக்கு வரலை மூனு லட்சம் மொய் வந்துச்சு “என கூற


“ மூனு லட்சம் மொய் வந்துச்சுனு சத்தமா சொல்லாத கிழவி எவனாவது உன்னை கடத்திட போறாங்கே “ என் லெட்சுமி கூற

“ என்னை எவன்டி கடத்துவான் அந்த அளவுக்கு எவனுக்கு தைரியம் இருக்கு “ என கேட்க

“ ரொம்ப பேசதா கிழவி நானே உன்னை தூக்கிருவேன் “ என மிரட்ட

“ எங்க தூக்குடி பாப்போம் என கிழவியும் “ கூற

“ இரு கிழவி நாளைக்கு காலையில நான் வரும் போது வருவல்ல அப்போ

உன் பின்னாடி சைக்கிள கொடுத்து இந்த போஸ்ட் மரத்துல விட்டு தூக்குறேன் பாரு “ என கூறி சிரிக்க

“ நீ செஞ்சாலும் செய்வடி “ என பாட்டியும் கூற “அந்த பயம் இருக்கனும்” என சிரித்து கொண்டே பாட்டியிடம் இருந்து விடை பெற்றாள்.

"சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்"


என்ற பாட்டை முனுமுனுத்து கொண்டே சென்றால்.

அப்பொழுது பார்த்து போன் சினுங்க அவளுடைய நிவேதா அக்கா தான்

முப்பெரும் படையின் முதல் அக்கா காலை அட்டன் செய்தவுடன்

“ பாப்பு நாளைக்கு வந்துடுடி பிளிஸ் டி எனக்கு நீயும் கீர்த்தியும் என் பக்கத்துளே இருக்கனும் டி பிளிஸ் டி “ என கூற

“நாளைக்கு சண்டெ தான எனக்கு லீவு தான் நான் வந்துருவேன் ஓகேவா “

உனக்கானு மட்டும் நினைச்சுறாதா நிவி பிளிஸ் மாப்பிள்ளை நல்லா இருக்காரானு பாக்கனும்.மாப்பிளையொட
பிரண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் சைட் அடிக்கனும் அதான் “ என கூற


“ எதுனாலும் பண்ணித்தொலை ஆனா வந்து சேரு “
என கூறி போனை வைத்தாள்.


“ நிவேதாவிற்க்கு தெரியும் அவள் வெளியே சாதரணமாக இருப்பது போல் நடித்து கொண்டிருக்கிறாள் ”

“ ஆனால் இன்னும் பழைய லெட்சுமியாய் மாறவில்லை என்று

அவள் கண்களில் இன்னும் பழைய துள்ளல் இல்லை எல்லாருக்காகவும் மட்டும் தான் இப்படி நடித்து கொண்டிருக்கிறாள் என்று “

நாளைக்கு லெட்சுமியொட செல்ல அக்கா நிவேதாவொட நிச்சயதார்த்தம்

மாப்பிள்ளை பேங்கில் பணிபுரிகிறார் நாளை அதற்க்கு செல்ல வேண்டும்.”

(போதும் லெட்சுமி புராணம் நம்ம ஹிரோவ பாக்க போவொம்)

"அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது
எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு உனக்கொரு எல்லை கிடையாது
யாரோ யாரிவனோ ஒரு நீரோ தீயோ யாரரிவார்
ஆலம் வேரிவனோ அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்"


வந்துட்டா வந்துட்டா ஹிரோயின் வந்துட்டா போட டேய்)

அது ஒன்னும் இல்ல போலிஸ் ஸ்டேஷன்ல்ல உதயா இன்ஸ்பெக்டர்ரோட
போன் தான் அடிக்குது.


சார் போன் அடிக்கிறது தெரியாம என்ன பண்ணுறாருனு பாக்குறீங்களா
வேற என்ன


"அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே"


குற்றவாளிய லாடம் கட்டிட்டு இருக்காரு சார்.

“ போனை எடுத்து காதுக்கு கொடுத்தான் கூப்பிட்டது அவனோட உடன் பிறவாத சகோதரன் மிஸ்டர் நிரஞ்சன் தான் “
(அதான் பா நம்ம நிவேதாவோட மாப்பிள்ளை )


“ சொல்லுடா நிரஞ்சன் என்ன விஷயம் “ என உதயா கேட்க

“ என்னடா இப்பிடி கேட்குற ஒரு வாரமா சொல்லுறேன் என் நிச்சயத்துக்கு
நீ கண்டிப்பா வரனும்னு இப்படி பேசுற ‘ என நிரஞ்சன் கோவப்பட


“ சரி நாளைக்கு கண்டிப்பா வந்துடுறேன் போதுமா “ என கூற

“ உதயா நீயும் கல்யாணம் பண்ணிக்கோடா சீக்கிரம் “ என கூற
நாளைக்கு உன்னோட நிச்சயத்துல ஏதாவது பொண்ணு நல்லா இருந்தா சொல்லு கல்யாணம் பண்ணிக்கிறேன் “ என கூற


டேய் நான் உன் அண்ணன் டா மாமா வேலை பாக்க சொல்லுற மரியாதையா வந்து சேரு “ என கூறி போனை கட் செய்தான்.

உதயா தான் விட்ட வேலையை கண்டியூ பண்ண சென்றான்’.

(இப்போ தெரிஞ்சுருக்கும் ஹிரோ உதயா தான்னு அவரை பத்தி கொஞ்சம் பாப்போம்)
பெயர் உதயா,நம்ம மாநிலத்துக்கே உரிய கரிய நிறம் ,உயரம் ஆறரை அடி(அதான் பய உடனே போலிஸ்ல சேர்ந்துட்டானோ)
வயசு 27,போலிஸ் டிரெனிங் முடிச்சுட்டு இப்போ மதுரை பெருங்குடி ஸ்டெசன்ல இன்ஸ்பெக்டரா வேலை பாக்குறார் பையன்


இன்னும் காதலிக்காத பையன் (பாவம் நம்ம தான் வைச்சு செய்ய போறோம்ல)

அம்மா வேணி,அப்பா மகேஸ்வரன் வீட்டுக்கு ஓரே புள்ள

சரி நாளைக்கு நிச்சயத்துல் மீட் பண்ணுவோம்

சித்திரம் சிந்தும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top