@Chitrasaraswathi தோழி சித்ரா சரஸ்வதி அவர்களின் பார்வையில் "நீயும் நானும் அன்பே" நாவலுக்கான விமர்சனம்
சரோஜினியின் நீயும் நானும் அன்பே எனது பார்வையில். 90 களில் தொடங்கி 2006 வரையிலான காலகட்டத்தில் கதையின் நிகழ்வுகள். நவீனா தனது 9ம் வகுப்பு படிப்பை மத்திய அரசுப் பணியில் பதவி உயர்வுடன் மாறுதல் வருவதால் தனது தாய்வழிப் பாட்டி வீட்டிலிருந்து தொடர கொண்டு வந்து விடுகிறார்கள்.
நவீனாவின் பெரிய தாத்தாவின் பேரன் ஜெய்சங்கர் விவசாய பட்டம் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது தந்தை தாஸ் ன் நண்பர் நவீனாவின் தந்தை வெற்றிவேல். வெற்றியின் சின்னம்மா மகளான சசிகலாவை விரும்பி மணந்தாலும் இராணுவத்தில் பணிபுரியும் பொழுது வீட்டிற்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் அவர்களது உறவில் விரிசல் வந்துவிடுகிறது.
நவீனாவும் ஜெய்சங்கரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். ஆனால் மருத்துவம் படிக்கும் நவீனாவை மருத்துவம் படித்துள்ள நவீனாவின் மற்றொரு தாத்தாவின் பேரனான சாந்தனுவுக்கு திருமணம் பேசி முடிக்கிறார் வெற்றி. தாஸைப் போல மகனும் இருந்தால் மகளின் எதிர்கால வாழ்க்கை சரியிருக்காது என்று ஜெய்சங்கரை மறுக்கிறார்.
நவீன பெற்றோரை எதிர்த்து பெற்றோருக்கு தெரியாமல் ஜெய்சங்கரை திருமணம் செய்து கொள்கிறாள். அவளது படிப்பை பூர்த்தி செய்தாளா, அவளை அவளது பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா என்பதை பெரிய குடும்பத்தில் ஏற்படும் பல நிகழ்வுகள் இருவரின் மணவாழ்க்கை, குடும்ப உறவுகளின் பகை, எல்லாவற்றையும் சுவாரசியமாக தந்துள்ளார்.
சரோஜினியின் நீயும் நானும் அன்பே எனது பார்வையில். 90 களில் தொடங்கி 2006 வரையிலான காலகட்டத்தில் கதையின் நிகழ்வுகள். நவீனா தனது 9ம் வகுப்பு படிப்பை மத்திய அரசுப் பணியில் பதவி உயர்வுடன் மாறுதல் வருவதால் தனது தாய்வழிப் பாட்டி வீட்டிலிருந்து தொடர கொண்டு வந்து விடுகிறார்கள்.
நவீனாவின் பெரிய தாத்தாவின் பேரன் ஜெய்சங்கர் விவசாய பட்டம் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது தந்தை தாஸ் ன் நண்பர் நவீனாவின் தந்தை வெற்றிவேல். வெற்றியின் சின்னம்மா மகளான சசிகலாவை விரும்பி மணந்தாலும் இராணுவத்தில் பணிபுரியும் பொழுது வீட்டிற்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் அவர்களது உறவில் விரிசல் வந்துவிடுகிறது.
நவீனாவும் ஜெய்சங்கரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். ஆனால் மருத்துவம் படிக்கும் நவீனாவை மருத்துவம் படித்துள்ள நவீனாவின் மற்றொரு தாத்தாவின் பேரனான சாந்தனுவுக்கு திருமணம் பேசி முடிக்கிறார் வெற்றி. தாஸைப் போல மகனும் இருந்தால் மகளின் எதிர்கால வாழ்க்கை சரியிருக்காது என்று ஜெய்சங்கரை மறுக்கிறார்.
நவீன பெற்றோரை எதிர்த்து பெற்றோருக்கு தெரியாமல் ஜெய்சங்கரை திருமணம் செய்து கொள்கிறாள். அவளது படிப்பை பூர்த்தி செய்தாளா, அவளை அவளது பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா என்பதை பெரிய குடும்பத்தில் ஏற்படும் பல நிகழ்வுகள் இருவரின் மணவாழ்க்கை, குடும்ப உறவுகளின் பகை, எல்லாவற்றையும் சுவாரசியமாக தந்துள்ளார்.