அத்தியாயம்-14
சில வாரங்களில் கார்த்திக்கிற்கு ஒரு
கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் கிடைக்க
அந்த வேலை விஷயமாக 10
நாட்களுக்குச் சென்னை கிளம்பிச்
செல்ல வேண்டி இருந்தது அவன்.
"மூர்த்தி அங்கிள்.. அந்தப் ப்ராஜெக்ட்
விஷயமா நான் சென்னை
கிளம்பறேன்.. எப்படியும் வர்றதுக்கு 10
டேஸ் ஆயிரும்.. அது வரைக்கும் நீங்க
அந்த மால் ப்ராஜெக்ட்-ட கொஞ்சம்
பாத்துக்கங்க" என்று கார்த்திக்
சொல்ல அவர் பதில் பேசாமல்
இருப்பதை உணர்ந்தவன் அவரை
நிமிர்ந்து பார்த்தான்.
ஏதோ பதட்டமாக இருந்தவரைப்
பார்த்தவனுக்கு ஒன்றும்
புரியவில்லை.. அவர் ஏதோ சொல்ல
நினைக்கிறார் என்பதைப் புரிந்து
கொண்டவன் "என்ன அங்கிள் என்ன
ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க"
என்று வினவ அவர் சொன்னதைக்
கேட்டு கார்த்திக் சிரித்தான்.
"இங்க பாருங்க அங்கிள்.. நம்ம ஃபீல்ட்
ல இதெல்லாம் இருக்கிறது தான்..
இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா..
நம்ம கரெக்டா அமவுன்ட் போட்டோம்..
நமக்கு கிடைத்து விட்டது.. இதெல்லாம் நினைச்சு கலங்காதீங்க அங்கிள்..
ப்ரீயா விடுங்க" என்று சொன்னவன்
மாலை மது வரக் காத்திருந்தான்.
வழக்கம் போல மதுவை அழைத்துக்
கொண்டு வீடு வந்து சேர்ந்தவன்,
இரவு உணவை முடித்துக் கொண்டு
அனைவரும் உட்கார்ந்து பேசும் சமயம்
தனக்குக் கிடைத்த ப்ராஜெக்ட் பற்றிக்
கூறினான். பத்து நாட்கள்
சென்னையில் தங்க வேண்டும்
என்றுக் கூறினான். அனைவருக்கும்
சந்தோஷம் தாங்கவில்லை.
"ஏன் கார்த்திக் மாலை வந்தவுடனே
சொல்லி இருக்கலாம் இல்லை?"
என்று குறையாகக் கேட்டார் ஜானகி.
"இல்லை அம்மா... உங்க மூன்று
பேருக்கும் ஒன்றாக சொல்லி
விடலாம் என்று இருந்தேன்" என்று
மூன்று பேரையும் பார்த்துச்
சொன்னான்.
"அப்போ மதுவிற்கும்
சொல்லவில்லையா நீ" என்று
வியப்பாகப் பார்க்க 'இல்லை' என்று
தலை ஆட்டினான். மதுவும்
மாமியாரின் பார்வையைக் கண்டு
அவரிடம் உதட்டைப் பிதுக்கினாள்.
மகனின் மூளையை மனதிற்குள்
மெச்சிய வேலுமணி "என் மகன்
கெட்டிக்காரன் ஜானகி" என்று கூறி வேலுமணி சிரிக்க "ஆமாம் பெரிய
ப்ராஜெக்ட் இல்லை" என்று
கணவரிடம் திரும்பி கண்ணை
உருட்டினார்.
"அதில்லை.. இந்தப் ப்ராஜெக்ட்
டென்டர் வரும் போதே.. அதெல்லாம்
பிடித்து விடுவான் என்று தெரியும்"
என்று சிரித்தார். "பின்னே.. வேறு
என்ன?" என்று புருவத்தைச் சுருக்கிக்
கேட்டார் ஜானகி.. மதுவும் என்ன
சொல்ல வருகிறார் என்று உற்றுக்
கவனித்தாள்.
"ஆமாம் தனித்தனியாகச் சொன்னால்.. மாமியார் மருமகளுக்கு ஈகோ
பிரச்சினை வந்து விடும் என்று
எல்லோருக்கும் பொதுவாகச்
சொல்லிவிட்டான் பார்" என்று
சிரித்தவர் "இந்த விஷயத்தில் என்னை விடக் கெட்டிக்காரன் தான்"
என்று ஜானகியை வேலுமணி
வம்பிற்கு இழுத்தார். மதுவிற்கு
கார்த்திக் வம்பு இழுக்கும் பழக்கம்
எங்கு இருந்து வந்தது என்று தெரிந்து
கொண்டாள்.
எல்லோரும் சிரிக்க ஜானகி தன்
கணவனிடம் திரும்பி
"பார்த்துக்கொள்கிறேன்" என்று
முறைத்தார்.
பிறகு பேசிவிட்டு அறைக்குள்
நுழைந்த மது பால்கனிக் கதவைத்
திறந்துவிட்டு பால்கனியில் நின்றாள்.
பாத்ரூம் சென்று விட்டு வந்த கார்த்திக் மதுவைத் தேடிப் பால்கனிக்கு வந்தான். பால்கனி லைட்டை
அணைத்தவன் "ஏன் மது.. ஏதோ
யோசனையில் இருக்க.. என்ன
யோசனை?" என்று பின்னால் இருந்து
அணைத்து அவள் தோளில் தன்
முகத்தை வைத்தபடிக் கேட்டான்.
"அது... சென்னை போறீங்கள்ள..
பர்ஸ்ட் டைம் மேரேஜ் அப்புறம் பத்து
நாள் நீங்கள் இல்லாமல்.. போர்
அடிக்கும் எனக்கு அதான் யோசித்துக்
கொண்டு இருந்தேன்" என்று அவன்
கன்னத்தில் தன் தலையைச் சாய்த்த
படிச் சொல்ல கார்த்திக்கின்
அணைப்பு இன்னும் இறுகியது.
"பேசாமல் நானும் உங்க கூட வரவா?"
என்று தலையை மட்டும் திருப்பிக்
கார்த்திக்கிடம் கேட்டாள்.
"கஷ்டமே மது.. பர்ஸ்ட் டாக்டரம்மாக்கு
ஹாஸ்பிடல்ல லீவ் கிடைக்கனும்ல"
என்று அவளிற்கு நினைவூட்டினான்.
"எப்படி அதை மறந்தேன்' என்று மது
நினைக்க... கார்த்திக் தொடர்ந்தான்
"அதுவும் இல்லாமல் எனக்கு
அலைச்சல் இருக்கும் மது.. உன்னையும் அப்படிக் கூட்டிக்
கொண்டு அலைய முடியாது.."
என்றவன் அவளைத் திருப்பி "இந்த
பத்து நாள் இடைவெளியையும்
அனுபவித்துப் பார்க்கலாமே மது"
என்று அவளின் முகத்தில் விழுந்த
கற்றைக் கூந்தலை ஒதுக்கி மதுவின்
நெற்றியில் முத்தமிட்டான். இந்த
நெற்றி முத்தம் சிறுமுகையில் இருந்து
வந்த நாளில் இருந்து கார்த்திக்கும்
மதுவும் பழகி விட்ட ஒன்று. அதுவும்
இவர்களை விடவில்லை.. இவர்களும்
அதை விடவில்லை.
"பேசாம உங்க வீட்டில் போய்
இருந்திட்டு வா நான் வரவரைக்கும்"
என்றான் அவளது மூக்கை ஆட்டியபடி.
"அதெல்லாம் வேண்டாம்.. நீங்க
போனோன நான்பாட்டுக்கு அங்க
போன அத்தை என்ன நினைப்பார்கள்..ஏதோ உங்களுக்காக மட்டுமா இங்க இருக்க மாதிரித் தோணாதா.." என்றவள் "அவங்களும் தனியா இருப்பாங்க அவங்க கிட்ட பேசிட்டு இருப்பேன் நான்.. நீங்கள் இல்லாமல் எப்படி அங்க தனியாப் போவேன்..நீங்கள் இல்லாமல் போர் அடிக்கும் தான் சொன்னேன் தவிர இங்க இருக்க போர் அடிக்கும்ன்னு சொல்ல" என்று முழுதாகப் பேசி முடித்தவளைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
எல்லாரும் அம்மா வீட்டுக்கு எப்போ
எப்போ என்று இருக்கையில் அவள்
இப்படி சொன்னது ஏதோ அவனுக்கு
இதமாக இருந்தது. அவனே
பார்த்திருக்கிறானே தன் அன்னை
கூட அப்பா வர முடியவில்லை
என்றால் அவர் மட்டும் தன்னையும்
தங்கையையும் சிறுமுகை அழைத்துச்
சென்றது நினைவு வந்தது.
காதலும் மையலுமாக அவளை
நோக்கியவன் அவளின் தலையில்
முட்டி "சரி பத்து நாள் போறேன்ல..
ஏதாவது தர்றது..." என்று கழுத்தில்
புதைந்ததவனைத் தள்ளியவள்
"அய்யோ என்ன இது" என்றாள்
முறைப்பாக.
"ஏய் நீ என் பொண்டாட்டி டி.."
என்றவன் மறுபடியும் அருகில் வர
அவனைத் தடுத்தவள் "அதை தான்
நானும் சொல்றேன்" என்றவளைப்
புரியாமல் கார்த்திக் பார்க்க நமட்டுச்
சிரிப்பு சிரித்தவள் "புரியலையா.. இது
பால்கனி.. இதே பெட்ரூம்-னா யாரு
கேக்க போறா உங்க பொண்டாட்டி
உட்பட" என்று மது சொல்ல
அவனுக்குப் புரிந்தது.
"ஏய்ய் கேடி.... ரொம்ப முன்னேறிட்டடி"
என்று அவளைத் தூக்கிக் கொண்டு
உள்ளே சென்றவன் என்றுமில்லா
காதலுடனும் மையலுடனும் அவளுள்
புதைய அவனின் மணையாள்
அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.
பின் அடுத்த நாள் மாலை கார்த்திக்
கிளம்ப மது அவனிற்குத் தேவையான
அனைத்தையும் பாக் செய்து கொண்டு இருந்தாள். சுற்றிச் சுற்றி பாக்
செய்தவளைப் பார்த்தவன் "இவளின்
அராத்து இல்லாமல் எப்படி 10 நாள்
இருக்கப் போறேனோ" என்று
எண்ணிப் பெருமூச்சு விட்டான்.
பத்து நாள் தாங்குமாறு வம்பு இழுக்க
நினைத்தவன் "ஏன் மது.. நான்
பிசினஸ் விஷயமாகச் செல்லாமல்
அங்கு ஏதாவது... வந்து இன்னொரு
பெண்ணைப் பார்க்கச் சென்றால்
என்ன செய்வாய்" பாக் செய்து
கொண்டு இருந்தவளை இடித்தபடி
நின்றுக் கேட்டான்.
"டேய் உன்னை அவ்வளவுதான்" என்று
நிமிர்ந்தவள்.. சட்டென்று ஒன்று
நினைவு வர வயிற்றைப் பிடித்துக்
கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். "ஏய்
என்னடி சிரிக்கற?" என்று கார்த்திக்
கேள்வியாய் மதுவைப் பார்க்கச்,
சிரித்து முடித்தவள் "இல்லை நான்
ப்ரபோஸ் பண்ணதுக்கே இங்க 4
வருஷம் கழிச்சு தான் ரெஸ்பான்ஸ்
கிடச்சுது.. இதுல இன்னொருத்திய
நீங்கப் பார்க்கப் போயிட்டாலும்" என்று
சிரித்த மதுவைக் கார்த்திக் முறைக்க
"சரிசரி கீழே போலாம்" என்று
அவனைத் திருப்பி முதுகில் கை
வைத்து நடந்தாள்.
"என் மேல் உனக்கு சந்தேகமே வராதா
மது?" என்று அவளின் கையைப்
பிடித்து வினவினான்.
மது ஏதோ குறும்பாக யோசிக்க "ப்ளீஸ் மது.. சிரீயஸாக் கேட்கிறேன்..
விளையாடாமல் பதில் சொல்"
என்றான். அவனின் கேள்வியை
உணர்ந்தவள் "சீ.. உங்களை எப்படி
சந்தேகப்படுவேன்.. என்னிடம்
யாராவது நேரில் வந்து உங்களைப்
பற்றிச் சொன்னால் கூட நான் காது
கொடுத்துக் கேட்க மாட்டேன். அந்த
அளவு எனக்கு நம்பிக்கை இருக்கு
உங்க மேல.. அது கூட நமக்கு
கல்யாணம் ஆன புதிதில் நீங்கள்
நடந்து கொண்டதை வைத்துத்
தெரிந்து கொண்டது தான்" என்று தன்
கரங்களை அவன் கழுத்தில்
மாலையாகச் சுற்றியவள் "என்ன வம்பு இழுக்க தான் அப்படிக் கேட்டிங்க-ன்னு
தெரியும்.. அப்படி ஒருத்தி இருந்தால்
கூட்டிட்டு கூட வாங்க.. ஓட ஓட விரட்டி
அடிக்கலைன்னா பாருங்க" என்று மது
புருவத்தைத் தூக்கி சிரிக்க... அவளின்
தலையில் தன் தலையை
மென்மையாக முட்டிச் சிரித்தான்.
பிறகு அவனை அனுப்பி விட்டு உள்ளே நுழைந்தவளால் சும்மா இருக்க
முடியவில்லை.. மாமியாரிடம் சிறிது
நேரம் பேசிவிட்டு வேலையை
முடித்துக் கொண்டு மேலே வந்தவள்,
போர் அடிக்க ஒரு புத்தகத்தை
எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
இருவருமே இந்தப் பத்து நாள் பிரிவில் தவித்துத் தான் போயினர்.
கார்த்திக்கிற்கு தான் எப்போதுமே
அவளிடம் வம்பிழுத்து விளையாடி
விட்டு இப்போது இந்த 10 நாட்களைக்
கடத்துவது கடினமாக இருந்தது.
வேலை நேரத்திலும் அவ்வப்போது
அவளது நினைப்பு வந்து அவனை
இம்சித்து உண்மைதான்.
மாலை ஹோட்டல் அறைக்கு வந்ததும்
அவளிடம் போன் செய்து பேசுவான்.
மதுவிற்குமே அவனது பிரிவு
வாட்டினாலும் வேலையாகச் சென்று
இருப்பவனிடம் எதையும் காட்டக்
கூடாது என்று இருந்தாள். ஒருநாள்
பேசிக் கொண்டு இருக்கும் போது "ஐ
மிஸ் யூ" என்றாள் மது.
"என்ன மது கேக்கல" என்றான்
கார்த்திக்.. மது சொன்னது
நன்றாகவே அவன் காதில் விழுந்தது.
ஏனோ மறுபடியும் கேட்க ஆசை..
அதான் கேட்கவில்லை என்று
சொல்கிறான்.
"ஐ மிஸ் யூ" என்றாள் மது. இப்போது
சிக்னல் ப்ராப்ளத்தில் மெய்யாகவே
கார்த்திக்கிற்குக் கேட்கவில்லை...
மறுபடியும் "ஆ... கேக்கல" என்று
கார்த்திக் கத்த "முருகா.. இவன்கிட்ட
போன்ல பேசறதே வேஸ்ட்... 'ஐ லவ் யூ'
சொன்னப்பவும் ரெஸ்பான்ஸ் இல்ல...
இப்போ 'ஐ மிஸ் யூ' சொல்றப்பவும்
ரெஸ்பான்ஸ் இல்ல... உனக்கு tube
light-ன்னு பேரு வச்சதில்ல தப்பே
இல்ல" என்று நினைத்தவள் "ஒன்னும்
இல்லைங்க... சென்னை எப்படி
இருக்குன்னு கேட்டேன்" என்றாள் மது.
"அதெல்லாம் சூப்பர்.... மது உன்கிட்ட
கேட்கனும் என்று நினைத்தேன். உன்
ஹிப் சைஸ் என்ன?" என்று
வினவினான்.
"என்ன... ட்ரெஸ் எடுக்கப்
போறீங்களா?" என்று வினவ.. "நோ..
இது வேற.. சொல்லு ஹிப் சைஸ்
என்ன?" என்று கேட்டான். மது சொல்ல
மண்டையில் ஏற்றிக் கொண்டவன்
"ஓகே ஒரு வித்தியாசமான ஒன்று..
அதான்" என்றான்.. பிறகு இருவரும்
சிறிது நேரம் பேசிவிட்டுப் போனை
வைத்தனர்.
இந்த ஒரு வாரத்தில் மாமியாருடம்
அதிக நேரம் செலவழித்தாள் மது..
அவரும் இல்லை என்றால் மதுவிற்கு
போர் அடிக்கும். ஒரு நாள் ஜானகி
"இப்போது தான் எனக்கு ரொம்ப
சந்தோஷமா இருக்கு மதுமா..
கார்த்திக்கிடம் நிறைய மாற்றங்கள்"
என்று மதுவிடம் புன்னகைத்தார்.
"என்ன கல்யாணம் ஆகி பையன்
மாறிவிட்டால் எந்த அம்மாவும்
சந்தோஷப்பட மாட்டார்களே.. இவர்
என்ன சந்தோஷமாகச்
சொல்லுகிறார்" என்று யோசித்தவள்
"புரியவில்லையே அத்தை" என்றாள்
மது.
சில வாரங்களில் கார்த்திக்கிற்கு ஒரு
கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் கிடைக்க
அந்த வேலை விஷயமாக 10
நாட்களுக்குச் சென்னை கிளம்பிச்
செல்ல வேண்டி இருந்தது அவன்.
"மூர்த்தி அங்கிள்.. அந்தப் ப்ராஜெக்ட்
விஷயமா நான் சென்னை
கிளம்பறேன்.. எப்படியும் வர்றதுக்கு 10
டேஸ் ஆயிரும்.. அது வரைக்கும் நீங்க
அந்த மால் ப்ராஜெக்ட்-ட கொஞ்சம்
பாத்துக்கங்க" என்று கார்த்திக்
சொல்ல அவர் பதில் பேசாமல்
இருப்பதை உணர்ந்தவன் அவரை
நிமிர்ந்து பார்த்தான்.
ஏதோ பதட்டமாக இருந்தவரைப்
பார்த்தவனுக்கு ஒன்றும்
புரியவில்லை.. அவர் ஏதோ சொல்ல
நினைக்கிறார் என்பதைப் புரிந்து
கொண்டவன் "என்ன அங்கிள் என்ன
ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க"
என்று வினவ அவர் சொன்னதைக்
கேட்டு கார்த்திக் சிரித்தான்.
"இங்க பாருங்க அங்கிள்.. நம்ம ஃபீல்ட்
ல இதெல்லாம் இருக்கிறது தான்..
இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா..
நம்ம கரெக்டா அமவுன்ட் போட்டோம்..
நமக்கு கிடைத்து விட்டது.. இதெல்லாம் நினைச்சு கலங்காதீங்க அங்கிள்..
ப்ரீயா விடுங்க" என்று சொன்னவன்
மாலை மது வரக் காத்திருந்தான்.
வழக்கம் போல மதுவை அழைத்துக்
கொண்டு வீடு வந்து சேர்ந்தவன்,
இரவு உணவை முடித்துக் கொண்டு
அனைவரும் உட்கார்ந்து பேசும் சமயம்
தனக்குக் கிடைத்த ப்ராஜெக்ட் பற்றிக்
கூறினான். பத்து நாட்கள்
சென்னையில் தங்க வேண்டும்
என்றுக் கூறினான். அனைவருக்கும்
சந்தோஷம் தாங்கவில்லை.
"ஏன் கார்த்திக் மாலை வந்தவுடனே
சொல்லி இருக்கலாம் இல்லை?"
என்று குறையாகக் கேட்டார் ஜானகி.
"இல்லை அம்மா... உங்க மூன்று
பேருக்கும் ஒன்றாக சொல்லி
விடலாம் என்று இருந்தேன்" என்று
மூன்று பேரையும் பார்த்துச்
சொன்னான்.
"அப்போ மதுவிற்கும்
சொல்லவில்லையா நீ" என்று
வியப்பாகப் பார்க்க 'இல்லை' என்று
தலை ஆட்டினான். மதுவும்
மாமியாரின் பார்வையைக் கண்டு
அவரிடம் உதட்டைப் பிதுக்கினாள்.
மகனின் மூளையை மனதிற்குள்
மெச்சிய வேலுமணி "என் மகன்
கெட்டிக்காரன் ஜானகி" என்று கூறி வேலுமணி சிரிக்க "ஆமாம் பெரிய
ப்ராஜெக்ட் இல்லை" என்று
கணவரிடம் திரும்பி கண்ணை
உருட்டினார்.
"அதில்லை.. இந்தப் ப்ராஜெக்ட்
டென்டர் வரும் போதே.. அதெல்லாம்
பிடித்து விடுவான் என்று தெரியும்"
என்று சிரித்தார். "பின்னே.. வேறு
என்ன?" என்று புருவத்தைச் சுருக்கிக்
கேட்டார் ஜானகி.. மதுவும் என்ன
சொல்ல வருகிறார் என்று உற்றுக்
கவனித்தாள்.
"ஆமாம் தனித்தனியாகச் சொன்னால்.. மாமியார் மருமகளுக்கு ஈகோ
பிரச்சினை வந்து விடும் என்று
எல்லோருக்கும் பொதுவாகச்
சொல்லிவிட்டான் பார்" என்று
சிரித்தவர் "இந்த விஷயத்தில் என்னை விடக் கெட்டிக்காரன் தான்"
என்று ஜானகியை வேலுமணி
வம்பிற்கு இழுத்தார். மதுவிற்கு
கார்த்திக் வம்பு இழுக்கும் பழக்கம்
எங்கு இருந்து வந்தது என்று தெரிந்து
கொண்டாள்.
எல்லோரும் சிரிக்க ஜானகி தன்
கணவனிடம் திரும்பி
"பார்த்துக்கொள்கிறேன்" என்று
முறைத்தார்.
பிறகு பேசிவிட்டு அறைக்குள்
நுழைந்த மது பால்கனிக் கதவைத்
திறந்துவிட்டு பால்கனியில் நின்றாள்.
பாத்ரூம் சென்று விட்டு வந்த கார்த்திக் மதுவைத் தேடிப் பால்கனிக்கு வந்தான். பால்கனி லைட்டை
அணைத்தவன் "ஏன் மது.. ஏதோ
யோசனையில் இருக்க.. என்ன
யோசனை?" என்று பின்னால் இருந்து
அணைத்து அவள் தோளில் தன்
முகத்தை வைத்தபடிக் கேட்டான்.
"அது... சென்னை போறீங்கள்ள..
பர்ஸ்ட் டைம் மேரேஜ் அப்புறம் பத்து
நாள் நீங்கள் இல்லாமல்.. போர்
அடிக்கும் எனக்கு அதான் யோசித்துக்
கொண்டு இருந்தேன்" என்று அவன்
கன்னத்தில் தன் தலையைச் சாய்த்த
படிச் சொல்ல கார்த்திக்கின்
அணைப்பு இன்னும் இறுகியது.
"பேசாமல் நானும் உங்க கூட வரவா?"
என்று தலையை மட்டும் திருப்பிக்
கார்த்திக்கிடம் கேட்டாள்.
"கஷ்டமே மது.. பர்ஸ்ட் டாக்டரம்மாக்கு
ஹாஸ்பிடல்ல லீவ் கிடைக்கனும்ல"
என்று அவளிற்கு நினைவூட்டினான்.
"எப்படி அதை மறந்தேன்' என்று மது
நினைக்க... கார்த்திக் தொடர்ந்தான்
"அதுவும் இல்லாமல் எனக்கு
அலைச்சல் இருக்கும் மது.. உன்னையும் அப்படிக் கூட்டிக்
கொண்டு அலைய முடியாது.."
என்றவன் அவளைத் திருப்பி "இந்த
பத்து நாள் இடைவெளியையும்
அனுபவித்துப் பார்க்கலாமே மது"
என்று அவளின் முகத்தில் விழுந்த
கற்றைக் கூந்தலை ஒதுக்கி மதுவின்
நெற்றியில் முத்தமிட்டான். இந்த
நெற்றி முத்தம் சிறுமுகையில் இருந்து
வந்த நாளில் இருந்து கார்த்திக்கும்
மதுவும் பழகி விட்ட ஒன்று. அதுவும்
இவர்களை விடவில்லை.. இவர்களும்
அதை விடவில்லை.
"பேசாம உங்க வீட்டில் போய்
இருந்திட்டு வா நான் வரவரைக்கும்"
என்றான் அவளது மூக்கை ஆட்டியபடி.
"அதெல்லாம் வேண்டாம்.. நீங்க
போனோன நான்பாட்டுக்கு அங்க
போன அத்தை என்ன நினைப்பார்கள்..ஏதோ உங்களுக்காக மட்டுமா இங்க இருக்க மாதிரித் தோணாதா.." என்றவள் "அவங்களும் தனியா இருப்பாங்க அவங்க கிட்ட பேசிட்டு இருப்பேன் நான்.. நீங்கள் இல்லாமல் எப்படி அங்க தனியாப் போவேன்..நீங்கள் இல்லாமல் போர் அடிக்கும் தான் சொன்னேன் தவிர இங்க இருக்க போர் அடிக்கும்ன்னு சொல்ல" என்று முழுதாகப் பேசி முடித்தவளைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
எல்லாரும் அம்மா வீட்டுக்கு எப்போ
எப்போ என்று இருக்கையில் அவள்
இப்படி சொன்னது ஏதோ அவனுக்கு
இதமாக இருந்தது. அவனே
பார்த்திருக்கிறானே தன் அன்னை
கூட அப்பா வர முடியவில்லை
என்றால் அவர் மட்டும் தன்னையும்
தங்கையையும் சிறுமுகை அழைத்துச்
சென்றது நினைவு வந்தது.
காதலும் மையலுமாக அவளை
நோக்கியவன் அவளின் தலையில்
முட்டி "சரி பத்து நாள் போறேன்ல..
ஏதாவது தர்றது..." என்று கழுத்தில்
புதைந்ததவனைத் தள்ளியவள்
"அய்யோ என்ன இது" என்றாள்
முறைப்பாக.
"ஏய் நீ என் பொண்டாட்டி டி.."
என்றவன் மறுபடியும் அருகில் வர
அவனைத் தடுத்தவள் "அதை தான்
நானும் சொல்றேன்" என்றவளைப்
புரியாமல் கார்த்திக் பார்க்க நமட்டுச்
சிரிப்பு சிரித்தவள் "புரியலையா.. இது
பால்கனி.. இதே பெட்ரூம்-னா யாரு
கேக்க போறா உங்க பொண்டாட்டி
உட்பட" என்று மது சொல்ல
அவனுக்குப் புரிந்தது.
"ஏய்ய் கேடி.... ரொம்ப முன்னேறிட்டடி"
என்று அவளைத் தூக்கிக் கொண்டு
உள்ளே சென்றவன் என்றுமில்லா
காதலுடனும் மையலுடனும் அவளுள்
புதைய அவனின் மணையாள்
அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.
பின் அடுத்த நாள் மாலை கார்த்திக்
கிளம்ப மது அவனிற்குத் தேவையான
அனைத்தையும் பாக் செய்து கொண்டு இருந்தாள். சுற்றிச் சுற்றி பாக்
செய்தவளைப் பார்த்தவன் "இவளின்
அராத்து இல்லாமல் எப்படி 10 நாள்
இருக்கப் போறேனோ" என்று
எண்ணிப் பெருமூச்சு விட்டான்.
பத்து நாள் தாங்குமாறு வம்பு இழுக்க
நினைத்தவன் "ஏன் மது.. நான்
பிசினஸ் விஷயமாகச் செல்லாமல்
அங்கு ஏதாவது... வந்து இன்னொரு
பெண்ணைப் பார்க்கச் சென்றால்
என்ன செய்வாய்" பாக் செய்து
கொண்டு இருந்தவளை இடித்தபடி
நின்றுக் கேட்டான்.
"டேய் உன்னை அவ்வளவுதான்" என்று
நிமிர்ந்தவள்.. சட்டென்று ஒன்று
நினைவு வர வயிற்றைப் பிடித்துக்
கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். "ஏய்
என்னடி சிரிக்கற?" என்று கார்த்திக்
கேள்வியாய் மதுவைப் பார்க்கச்,
சிரித்து முடித்தவள் "இல்லை நான்
ப்ரபோஸ் பண்ணதுக்கே இங்க 4
வருஷம் கழிச்சு தான் ரெஸ்பான்ஸ்
கிடச்சுது.. இதுல இன்னொருத்திய
நீங்கப் பார்க்கப் போயிட்டாலும்" என்று
சிரித்த மதுவைக் கார்த்திக் முறைக்க
"சரிசரி கீழே போலாம்" என்று
அவனைத் திருப்பி முதுகில் கை
வைத்து நடந்தாள்.
"என் மேல் உனக்கு சந்தேகமே வராதா
மது?" என்று அவளின் கையைப்
பிடித்து வினவினான்.
மது ஏதோ குறும்பாக யோசிக்க "ப்ளீஸ் மது.. சிரீயஸாக் கேட்கிறேன்..
விளையாடாமல் பதில் சொல்"
என்றான். அவனின் கேள்வியை
உணர்ந்தவள் "சீ.. உங்களை எப்படி
சந்தேகப்படுவேன்.. என்னிடம்
யாராவது நேரில் வந்து உங்களைப்
பற்றிச் சொன்னால் கூட நான் காது
கொடுத்துக் கேட்க மாட்டேன். அந்த
அளவு எனக்கு நம்பிக்கை இருக்கு
உங்க மேல.. அது கூட நமக்கு
கல்யாணம் ஆன புதிதில் நீங்கள்
நடந்து கொண்டதை வைத்துத்
தெரிந்து கொண்டது தான்" என்று தன்
கரங்களை அவன் கழுத்தில்
மாலையாகச் சுற்றியவள் "என்ன வம்பு இழுக்க தான் அப்படிக் கேட்டிங்க-ன்னு
தெரியும்.. அப்படி ஒருத்தி இருந்தால்
கூட்டிட்டு கூட வாங்க.. ஓட ஓட விரட்டி
அடிக்கலைன்னா பாருங்க" என்று மது
புருவத்தைத் தூக்கி சிரிக்க... அவளின்
தலையில் தன் தலையை
மென்மையாக முட்டிச் சிரித்தான்.
பிறகு அவனை அனுப்பி விட்டு உள்ளே நுழைந்தவளால் சும்மா இருக்க
முடியவில்லை.. மாமியாரிடம் சிறிது
நேரம் பேசிவிட்டு வேலையை
முடித்துக் கொண்டு மேலே வந்தவள்,
போர் அடிக்க ஒரு புத்தகத்தை
எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
இருவருமே இந்தப் பத்து நாள் பிரிவில் தவித்துத் தான் போயினர்.
கார்த்திக்கிற்கு தான் எப்போதுமே
அவளிடம் வம்பிழுத்து விளையாடி
விட்டு இப்போது இந்த 10 நாட்களைக்
கடத்துவது கடினமாக இருந்தது.
வேலை நேரத்திலும் அவ்வப்போது
அவளது நினைப்பு வந்து அவனை
இம்சித்து உண்மைதான்.
மாலை ஹோட்டல் அறைக்கு வந்ததும்
அவளிடம் போன் செய்து பேசுவான்.
மதுவிற்குமே அவனது பிரிவு
வாட்டினாலும் வேலையாகச் சென்று
இருப்பவனிடம் எதையும் காட்டக்
கூடாது என்று இருந்தாள். ஒருநாள்
பேசிக் கொண்டு இருக்கும் போது "ஐ
மிஸ் யூ" என்றாள் மது.
"என்ன மது கேக்கல" என்றான்
கார்த்திக்.. மது சொன்னது
நன்றாகவே அவன் காதில் விழுந்தது.
ஏனோ மறுபடியும் கேட்க ஆசை..
அதான் கேட்கவில்லை என்று
சொல்கிறான்.
"ஐ மிஸ் யூ" என்றாள் மது. இப்போது
சிக்னல் ப்ராப்ளத்தில் மெய்யாகவே
கார்த்திக்கிற்குக் கேட்கவில்லை...
மறுபடியும் "ஆ... கேக்கல" என்று
கார்த்திக் கத்த "முருகா.. இவன்கிட்ட
போன்ல பேசறதே வேஸ்ட்... 'ஐ லவ் யூ'
சொன்னப்பவும் ரெஸ்பான்ஸ் இல்ல...
இப்போ 'ஐ மிஸ் யூ' சொல்றப்பவும்
ரெஸ்பான்ஸ் இல்ல... உனக்கு tube
light-ன்னு பேரு வச்சதில்ல தப்பே
இல்ல" என்று நினைத்தவள் "ஒன்னும்
இல்லைங்க... சென்னை எப்படி
இருக்குன்னு கேட்டேன்" என்றாள் மது.
"அதெல்லாம் சூப்பர்.... மது உன்கிட்ட
கேட்கனும் என்று நினைத்தேன். உன்
ஹிப் சைஸ் என்ன?" என்று
வினவினான்.
"என்ன... ட்ரெஸ் எடுக்கப்
போறீங்களா?" என்று வினவ.. "நோ..
இது வேற.. சொல்லு ஹிப் சைஸ்
என்ன?" என்று கேட்டான். மது சொல்ல
மண்டையில் ஏற்றிக் கொண்டவன்
"ஓகே ஒரு வித்தியாசமான ஒன்று..
அதான்" என்றான்.. பிறகு இருவரும்
சிறிது நேரம் பேசிவிட்டுப் போனை
வைத்தனர்.
இந்த ஒரு வாரத்தில் மாமியாருடம்
அதிக நேரம் செலவழித்தாள் மது..
அவரும் இல்லை என்றால் மதுவிற்கு
போர் அடிக்கும். ஒரு நாள் ஜானகி
"இப்போது தான் எனக்கு ரொம்ப
சந்தோஷமா இருக்கு மதுமா..
கார்த்திக்கிடம் நிறைய மாற்றங்கள்"
என்று மதுவிடம் புன்னகைத்தார்.
"என்ன கல்யாணம் ஆகி பையன்
மாறிவிட்டால் எந்த அம்மாவும்
சந்தோஷப்பட மாட்டார்களே.. இவர்
என்ன சந்தோஷமாகச்
சொல்லுகிறார்" என்று யோசித்தவள்
"புரியவில்லையே அத்தை" என்றாள்
மது.