Eswari kasirajan
முதலமைச்சர்
சமைக்க தேவையானவை
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் மாவு - 4 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - 5 ஸ்பூன்
உணவு செய்முறை : தட்டை
Step 1.
முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
Step 2.
பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
Step 3.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தட்டை தயார்.
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் மாவு - 4 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - 5 ஸ்பூன்
உணவு செய்முறை : தட்டை
Step 1.
முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
Step 2.
பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
Step 3.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தட்டை தயார்.