ஹாய் நட்பூஸ்
நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதத் தொடங்கியதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன்.எழுதத் தொடங்கியிருந்த இரு கதைகளைத்(தேடாமல் வந்த பூந்தென்றல் நீயோ,லவ் கெமிஸ்ட்ரி) தற்சமயம் தொடர இயலவில்லை.அவைகள் தளத்தில் சிலநாட்கள் கழித்து நீங்கள் படிக்கலாம்.
இப்போது என் நீண்ட நாள் கனவான சரித்திர கதையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.கதையின் பெயர் சேரன் தலைவி.
சங்க காலத்தில் சோழர் பாண்டியரைப் போலவே சேரரும் வீரமும் கொடையும் தமிழும் கொண்டு சிறப்பாட்சிப் புரிந்திருக்கின்றனர்.
அவர்களில் புகழ்பெற்ற இளையவரம்பனின் மகனான களங்காய்க்கண்ணி நார்முடி சேரலே(நமக்கு இளங்கோ) இக்கதையின் கதாநாயகன்.நிகரில்லா ஆண்மை படைத்தவன்.எளியருக்கு இரங்குபுவன் பகைவர்க்கு காலனாவான்.குமரி முதல் இமயம் வரை இளவரசிகள் இவனுக்கு மாலையிட காத்திருக்க மன்னவனின் மனமோ நிகரில்லா பேரழகுப் பெட்டகமாம் ஏந்திழையிடம்.
நம் கதையின் கதாநாயகி வண்டார்குழலி.பெண்மையின் மென்மையோடு வீரமும் தன்னம்பிக்கையும் மிக்கவள்.தாய்நாட்டுக்காக உயிரையும் கொடுப்பதற்கு சித்தமாக இருப்பவள்.
ஒவ்வொரு மனிதனின் வெற்றியின் பின் ஒரு பெண்ணின் காதல் இருக்கும் என்பதற்கிணங்க நம் இளவரசரின் வெற்றிக்கு குழலியின் அர்ப்பணிப்பு என்ன என்பதே இந்த கதை.
சங்க கால தமிழிரின் அறம் வீரம் காதல் வாழ்க்கை முறைகளை விரிவாக கூற முயற்சிக்கிறேன்.உங்களின் அன்பான கருத்துக்கள் தான் என் எழுத்து நில்லாமல் தொடர ஊக்குவிக்கும்... உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும்
உங்கள்
பவ்யா
நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதத் தொடங்கியதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன்.எழுதத் தொடங்கியிருந்த இரு கதைகளைத்(தேடாமல் வந்த பூந்தென்றல் நீயோ,லவ் கெமிஸ்ட்ரி) தற்சமயம் தொடர இயலவில்லை.அவைகள் தளத்தில் சிலநாட்கள் கழித்து நீங்கள் படிக்கலாம்.
இப்போது என் நீண்ட நாள் கனவான சரித்திர கதையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.கதையின் பெயர் சேரன் தலைவி.
சங்க காலத்தில் சோழர் பாண்டியரைப் போலவே சேரரும் வீரமும் கொடையும் தமிழும் கொண்டு சிறப்பாட்சிப் புரிந்திருக்கின்றனர்.
அவர்களில் புகழ்பெற்ற இளையவரம்பனின் மகனான களங்காய்க்கண்ணி நார்முடி சேரலே(நமக்கு இளங்கோ) இக்கதையின் கதாநாயகன்.நிகரில்லா ஆண்மை படைத்தவன்.எளியருக்கு இரங்குபுவன் பகைவர்க்கு காலனாவான்.குமரி முதல் இமயம் வரை இளவரசிகள் இவனுக்கு மாலையிட காத்திருக்க மன்னவனின் மனமோ நிகரில்லா பேரழகுப் பெட்டகமாம் ஏந்திழையிடம்.
நம் கதையின் கதாநாயகி வண்டார்குழலி.பெண்மையின் மென்மையோடு வீரமும் தன்னம்பிக்கையும் மிக்கவள்.தாய்நாட்டுக்காக உயிரையும் கொடுப்பதற்கு சித்தமாக இருப்பவள்.
ஒவ்வொரு மனிதனின் வெற்றியின் பின் ஒரு பெண்ணின் காதல் இருக்கும் என்பதற்கிணங்க நம் இளவரசரின் வெற்றிக்கு குழலியின் அர்ப்பணிப்பு என்ன என்பதே இந்த கதை.
சங்க கால தமிழிரின் அறம் வீரம் காதல் வாழ்க்கை முறைகளை விரிவாக கூற முயற்சிக்கிறேன்.உங்களின் அன்பான கருத்துக்கள் தான் என் எழுத்து நில்லாமல் தொடர ஊக்குவிக்கும்... உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும்
உங்கள்
பவ்யா
Last edited: