Allivisalatchi
முதலமைச்சர்
View attachment 25515
தேவையான பொருட்கள்:-
சௌசௌ - 1
பா. பருப்பு -100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 15
ப.மிளகாய் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க - கடுகு, உ.பருப்பு
செய்முறை:-
பா. பருப்பை முதலில் நன்றாக வேகவைத்து கொள்ளவும். வேறு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய சௌசௌ, சின்ன வெங்காயம்,ப.மிளகாய் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது நேரம் வேக விடவும். பின்னர் சீரகம் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் பருப்பை சேர்த்து கிளறவும் . பின்னர் சிறிது பால் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு ஒரு சின்ன கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உ. பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அந்த கூட்டில் போடவும்.
தேவையான பொருட்கள்:-
சௌசௌ - 1
பா. பருப்பு -100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 15
ப.மிளகாய் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க - கடுகு, உ.பருப்பு
செய்முறை:-
பா. பருப்பை முதலில் நன்றாக வேகவைத்து கொள்ளவும். வேறு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய சௌசௌ, சின்ன வெங்காயம்,ப.மிளகாய் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது நேரம் வேக விடவும். பின்னர் சீரகம் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் பருப்பை சேர்த்து கிளறவும் . பின்னர் சிறிது பால் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு ஒரு சின்ன கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உ. பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அந்த கூட்டில் போடவும்.