தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு - 1 கப்
சௌ சௌ - 1
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 2
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தக்காளி - 2
தேங்காய் - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
பூண்டு - 7 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கடுகு - 1/2
உளுந்து - 1/4
செய்முறை :
பத்து சின்னவெங்காயத்தை தோலுரித்து இரண்டிரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்..
தக்காளியை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
பூண்டு தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
பச்சைப்பயிரை முதல் நாள் இரவே ஊற வைத்துக்கொள்ளவும்...
சௌ சௌ - ஐ தோலுரித்து சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மிளகு சேர்த்து பொரிந்ததும், அதில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் (நறுக்காமல் முழுதாக), கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை இவையனைத்தையும் போட்டு வதக்கி விடுங்கள். சிறிது பொன்னிறமாக வந்ததும் இதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விடவும்..
இரண்டு நிமிடத்திற்கு பிறகு, இந்த கலவையுடன் தேங்காய் மற்றும் நறுக்கி வைத்த காய் மற்றும் ஊற வைத்த பச்சைப்பயிரை இதனுடன் சேர்த்து கிளறவும். நன்றாக இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு காய் மற்றும் பச்சைப்பயிர் மூழ்கும் அளவிற்கு மட்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து (sim 1 ah sim 2 ah னு கேக்க கூடாது) ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்கு வேக வைக்கவும். இரவு முழுவதும் ஊறியதால் பச்சைப்பயிரை தனியாக வேக வைக்க தேவையில்லை....
ஏழு நிமிடத்திற்கு பிறகு, அடுப்பை அணைத்துவிட்டு இந்த காய், பயிர் கலவையை தண்ணியின்றி எடுத்து வேறொரு தட்டு அல்லது பாத்திரத்தில் மாற்றி வைத்து ஆற விடவும். நன்கு ஆறியதும், மிக்சியில் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும், அதாவது pulse mode ல போட்டு எடுத்துக்கோங்க, ரொம்ப நைசா அரைச்சுடாதீங்க., இல்லனா மத்து வச்சு கூட கடைஞ்சுக்கலாம்.. நம்ம விருப்பம் தான்..
அரைச்சு எடுத்த பிறகு தாளிப்பு கரண்டி அல்லது வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்ததும், மீதமுள்ள ஐந்து வெங்காயத்தை தோலுரித்து இரண்டிரண்டாக நறுக்கி சேர்க்கவும், இதனுடன் கறிவேப்பிலை மற்றும் இரண்டு வரமிளகாயை கிள்ளி போட்டு வதக்கி விடவும், லேசாக வதங்கியதும், இதை அரைத்து வைத்துள்ளதில் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்... (மிளகாய் மற்றும் மிளகு உங்கள் காரத்திற்கேற்ப அதிகமாகவோ, குறைவாகவோ சேர்த்துக்கோங்க)
பச்சைப்பயறு - 1 கப்
சௌ சௌ - 1
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 2
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தக்காளி - 2
தேங்காய் - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
பூண்டு - 7 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கடுகு - 1/2
உளுந்து - 1/4
செய்முறை :
பத்து சின்னவெங்காயத்தை தோலுரித்து இரண்டிரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்..
தக்காளியை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
பூண்டு தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
பச்சைப்பயிரை முதல் நாள் இரவே ஊற வைத்துக்கொள்ளவும்...
சௌ சௌ - ஐ தோலுரித்து சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மிளகு சேர்த்து பொரிந்ததும், அதில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் (நறுக்காமல் முழுதாக), கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை இவையனைத்தையும் போட்டு வதக்கி விடுங்கள். சிறிது பொன்னிறமாக வந்ததும் இதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விடவும்..
இரண்டு நிமிடத்திற்கு பிறகு, இந்த கலவையுடன் தேங்காய் மற்றும் நறுக்கி வைத்த காய் மற்றும் ஊற வைத்த பச்சைப்பயிரை இதனுடன் சேர்த்து கிளறவும். நன்றாக இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு காய் மற்றும் பச்சைப்பயிர் மூழ்கும் அளவிற்கு மட்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து (sim 1 ah sim 2 ah னு கேக்க கூடாது) ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்கு வேக வைக்கவும். இரவு முழுவதும் ஊறியதால் பச்சைப்பயிரை தனியாக வேக வைக்க தேவையில்லை....
ஏழு நிமிடத்திற்கு பிறகு, அடுப்பை அணைத்துவிட்டு இந்த காய், பயிர் கலவையை தண்ணியின்றி எடுத்து வேறொரு தட்டு அல்லது பாத்திரத்தில் மாற்றி வைத்து ஆற விடவும். நன்கு ஆறியதும், மிக்சியில் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும், அதாவது pulse mode ல போட்டு எடுத்துக்கோங்க, ரொம்ப நைசா அரைச்சுடாதீங்க., இல்லனா மத்து வச்சு கூட கடைஞ்சுக்கலாம்.. நம்ம விருப்பம் தான்..
அரைச்சு எடுத்த பிறகு தாளிப்பு கரண்டி அல்லது வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்ததும், மீதமுள்ள ஐந்து வெங்காயத்தை தோலுரித்து இரண்டிரண்டாக நறுக்கி சேர்க்கவும், இதனுடன் கறிவேப்பிலை மற்றும் இரண்டு வரமிளகாயை கிள்ளி போட்டு வதக்கி விடவும், லேசாக வதங்கியதும், இதை அரைத்து வைத்துள்ளதில் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்... (மிளகாய் மற்றும் மிளகு உங்கள் காரத்திற்கேற்ப அதிகமாகவோ, குறைவாகவோ சேர்த்துக்கோங்க)
Last edited: