"தூதில் பசலை நோய் கண்டதாய் இருந்து உண்மைதான் காதலியே.. உனது இடை மிகவும் சிறுத்து விட்டது.. பார் எனது ஒற்றை கையில் உனது மொத்த இடையும் அடங்குகிறது " என்ற மன்னவனின் கூற்றை கேட்ட நந்தினி
நொடி பொழுது மயக்கதில் நின்றவள் சுயம் திரும்பினாள்...
காதல் கொண்ட விழிகளில் கனல் வீச.. மன்னவனிடம் இருந்து விலகினாள் பெண்...
ஆதியோ யுத்த களத்தை விட காதல் களம் கடும் போர்களம் போலவே என்று எண்ணினான் மனதிற்குள் தான்...
" இளவரசே அந்தபுரத்திற்கு வழி தவறி வந்தீரா?.. போர் பயிற்சி களம்.. பக்கத்து களனியில் உள்ளது தடம் மாறி நுழைந்து விட்டீர் அரசே... "
"தடம் மாறவில்லை காதலியே.. பெண் மஞ்சத்தை தேடியே யாம் வந்தோம்.. ஆனால் மஞ்சம் தான் கை சேராமல் வதைக்கிறது.. "
"இத்தனை திங்கள் நீங்கள் என்னை பிரிவால் வதைத்தீரே.. எம்மை காண அவா இருந்திருந்தால் போர் முடிந்தும் நாடு திரும்பாமல் இருப்பீரா? "
"போர் முடிந்தாலும் போர்க்கு பிறகான இழப்பீடுகளை களைந்தால் தானே.. நான் நிம்மதியாக இல்லறம் கலக்க முடியும்" வாள் வீச்சு மன்னனின் சொல் வீச்சு விளையாட்டில் பெண்ணவள் நாணம் கொண்டு திரும்பி கொண்டாள்..
குளிர் காற்றால் உடல் சிலிர்த்தவளை தனதுபுறமாக திருப்பி கண்களை மூடிய வண்ணம் மயக்கத்தில் இருந்தவளை ரசித்தான் ஆதித்தன்..
பிறை போன்ற நெற்றியில் அடங்காமல் காற்றில் ஆடிய பூனை முடிகளும், எள்ளு பூவினை ஒத்த நாசியினையும்.. பார்த்தும் முத்தமிட அழைத்த துடிக்கும் இதழினையும் கண்டவன் உணர்ச்சிகள் கட்டுக்கடங்கா காளையாக திமிறியது... கைகளை கொண்டு மாசுமறுவற்ற கன்னத்தினை வருட அதில் சுயம் பெற்றவள் மயக்கத்தில் இருந்து தெளிந்தாள். ..
அல்லி விழிகளை மலர்த்தி மணாளனை கண்டவள் கோபத்தினை தத்தெடுத்து விலகும் முன் அந்த மாய கண்ணணோ.. மென்னியவளின் பவழ இதழில் தனது அழுத்தமான இதழை பதித்து இருந்தான்... போர் வீரனின் மீசை மயிர்கள்.. பெண்ணவளின்.. மேலுதட்டை பதம் பார்க்க.. மன்னவனின் காந்த கண்களோ.. மங்கையின் கண்களை நாணம் கொள்ள செய்தது... நிலவுமகள் நாணி மேகத்தில் மறைந்தாள்...
போர்கால பிரிவின் துயரை ஒற்றை இதழ் அணைப்பில் தீர்ப்பவன் போல் இதழ் தேன் மழை பருகியவன் பேரழகியின் மூச்சுகாற்றுக்கு ஏங்கிய திணறலில் விடுவித்தான்...
மன்னவனின் அதிரடியில் சிவந்த பெண்மயில்.. தன்னை மறைத்து கொள்ள ஆணவனின் தோகை போன்ற பரந்த மார்பையே நாடினாள்...
தஞ்சம் புகுந்தவளை அணைத்து கைகளில் ஏந்தி மஞ்சத்தினை அடைந்தவன்.. கன்னியவளில் காதில் "கோபம் துறந்து மோகம் கொள்ளலாமா காதலியே.. " என்று கண் சிமிட்டினான்..
தாமரை மொக்கு போன்ற கைகளினால் தனது முகத்தினை மூடி சம்மதம் அளித்தாள் காரிகை.. அக்காரிகையை தம் மேல் படர செய்து ஆட் கொள்ள ஆரம்பித்தான்..
போர் களத்தில் மட்டுமல்ல மஞ்சத்திலும் பெண் மனதை வென்றான்.. அவ் வெற்றி வீரன்