• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜோதிட வகுப்பு 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
நாஸ்ட்ரடாமஸின் தீர்க்கதரிசனம்

நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம்!

1503ம் ஆண்டு - அதாவது இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு
முன்பு பிரஞ்சு நாட்டில் செயிந்த் ரெமி என்னும் ஊரில்
பிறந்தவர் மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்க
தரிசனம் பெற்ற மனிதர்.

யூத குடும்பத்தினரான அவருடைய பெற்றோர்கள்
கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.

நாஸ்ட்ரடாமஸ் மறைநூல்களும், மருத்துவமும்
கற்றார் மான்ட்பெல்லி பல்கலைக்கழகத்தில்
மருத்துவப் பட்டம் பெற்று, திருமணமும் செய்து
கொண்டு தன் வாழ்க்கையை இனிது
தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு
பிரஞ்சு நாட்டில் பரவிய பிளேக் நோய்க்குத்
தன் மனைவியைப் பறிகொடுத்தார்.

அதற்குப் பிற்கு அந்தத் தாக்கத்தில் ஏறக்குறையப்
பத்து ஆண்டுகள் மெளனமாகவே இருந்தார்.
அந்தக் காலகட்டதத்தில் அவருக்கு
அதிசயமான அந்த ESP சக்தி ஏற்பட்டது.
அவர் யாரை உற்று நோக்கினாலும் அவருடைய
எதிர்காலம் அவர் மனத்திரையில் ஓடியது.
பல நாடுகளின் வருங்கால நிகழ்ச்சிகள் அவர்
மனத் திரையில் தோன்றின. அவற்றையெல்லாம்
விவரித்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார்.

அவைகள் பெரும்பாலும் பிரஞ்சு நாட்டின் அரசியல்
மாற்றங்களை விவரித்து எழுதப்பெற்ற நூலாகும்.

பிரஞ்சு நாட்டு மன்னன் ஒரு விளையாட்டு விபத்தில்
இறந்து விடுவார் என்று அவர் குறிப்பிட்டு எழுதியி
ருந்தது உண்மையிலேயே நடந்துவிட பிரஞ்சு மக்கள்
அவருடைய கணிப்புக்களில் ஆர்வம் காட்டத் துவங்கினர்.

1550 ஆம் ஆண்டு முதல் 1555 ஆம் ஆண்டுவரை
வருங்காலத்தில் பல நாடுகளில் நடக்கவிருக்கும்
சம்பவங்களை எல்லாம் எழுதி
10 பாகங்கள் கொண்ட நூல்களாக வெளியிட்டார்.

1566 ஆம் ஆண்டு அவருடைய மறைவிற்குப்
பின்னரே அவருடைய நூல்கள் பல மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பெற்று வெளியாகி
ஐரோப்பா முழுவதும் அவர் பிரபலமானார்.

பிரஞ்சுப் புரட்சியில் 14ம் லூயி மன்னனுக்கு
ஏற்பட்ட முடிவை அது நடப்பதற்கு 200 ஆண்டு
களுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ்
துல்லியமாக எழுதிவைத்திருந்ததைப் பல
ஆராய்ச்சியாளர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.

அதுபோல நெப்போலியனின் திடீர் எழுச்சியையும்,
அவருடைய பல்வேறு படையெடுப்புக்களையும்,
ரஷ்யாவுடனான போரில் குளிரைத் தாக்குப்பிடிக்க
முடியாமல் தோல்வியுறுவதுவரை
ஒன்றையும் விடாமல் முன்பே விவரித்து எழுதி
வைத்திருந்ததும் விந்தையானதாகும்

ஹிட்லரின் பிறப்பு, வளர்ப்பு, ஜெர்மனியில் அவர்
அமைத்த ராணுவ அரசு, பிறகு உலகம் முழுவதையும்
பிடிப்பதற்காக 1939 ஆம் ஆண்டில் அவர் துவக்கிய
இரண்டாவது உலகமகாயுத்தம் ஆகியவற்றையும்
எழுதிவைத்திருந்தார். அவை அனைத்தும்
சரியாக நடந்தன.

ஹிட்லரின் பிரச்சார மந்திரியான கோயபல்ஸின்
மனைவி ஃப்ரைன் 1939ம் ஆண்டு அந்த நூலைப்
படித்துவிட்டு, ஹிட்லரின் சாகசங்கள்
அந்த நூலில் விவரிக்கப்பட்டு இருப்பதைக்
ஹிட்லரிடம் காண்பிக்க, ஹிட்லர் அந்தப் பக்கங்
களைப் பிரதி எடுத்து ஐரோப்பா முழுவதும்
தூவ விட்டார்.

அச்செய்தி இங்கிலாந்து மக்களைக் கவலையில்
ஆழ்த்த, அப்போது அங்கே பிரதமராக இருந்த
வின்ஸ்டன் சர்ச்சில், நாஸ்டர்டாமஸின்
நூலை வாங்கிப் படித்து, அதில் ஹிட்லரின்
வீழ்ச்சியைப் பற்றி நாஸ்டர்டாமஸ் எழுதியிருந்ததை
துண்டுப் பிரசுரமாக்கித் தன் தேசம் முழுவதும்
வெளியிட்டு அவநம்பிக்கையிலிருந்து தன்
தேசமக்களை மீட்டார்.

இதெல்லாம் வரலாறு!

அதுபோல் அமெரிக்காவின் விடுதலைப்போரைப்
பற்றியும், அமெரிக்க ஜனாதிபதிகள் அபிரகாம்
லிங்கன், கென்னடி போன்றவர்கள் சுட்டுக்
கொல்லப்படுவார்கள் என்பதையும் நாஸ்டர்டாமஸ்
தன் நூலில் குறிப்பிட்டுள்ளது மிகவும் ஆச்சரியமான
விஷயங்கள். ஏனென்றால் அந்தநாடு நாஸ்டர்டாமஸ்
காலத்தில் உருவாகக்கூட இல்லை என்பது
வியக்கத்தக்க உண்மை!

இந்தியாவைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறாரா?

ஏன் எழுதாமல் - பல விஷயங்க்ளை எழுதியுள்ளார்
அவற்றில் முக்கியமானது. 21 ஆம் நூற்றாண்டில்
உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத்
திகழும்!

நாஸ்டர்டாமஸின் தீர்க்கதரிசனங்கள் (தொடர்ச்சி)

ஒரு நாள் ப்ளோரன்ஸ் டி வில்லி எனும் செல்வந்தர்
வீட்டிற்கு விஷேச அழைப்பின் பெயரில் நாஸ்ட்ரடாமஸ்
விருந்திற்குச் சென்றிருந்தார்.

அன்றைய தினம் மாலையில் அந்த செல்வந்தர் வீட்டுத்
தோட்டத்தில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தனர்.

அங்கே அப்போது இரண்டு பன்றிக் குட்டிகள் விளையாடிக்
கொண்டிருந்தன.

அவற்றைச் சுட்டிக் காட்டிய , செல்வந்தர் நாஸ்ட்ரடாமஸிடம்
கேட்டார்.

"இந்தப் பன்றிக்குட்டிகளின் எதிர்காலத்தைப் பற்றி உங்களால்
ஏதாவது கூற முடியுமா?"

உடனே நாஸ்ட்ரடாமஸ் தயக்கமின்றிக் கூறினார்
" வெள்ளைப் பன்றிக்குட்டியை ஒரு நரி தின்றுவிடும். கருப்புப்
பன்றிக்குட்டியை இன்றிரவு நாம் தின்னப் போகிறோம்"

அதைப் பொய்யாக்க விரும்பிய செல்வந்தர், தன்னுடைய
வேலைக்காரர்களை ரகசியமாக அழைத்து, வெள்ளைப்
ப்ன்றிக்குட்டியைக் கொன்று இரவு உணவாக அதைச்
சமைக்கும்படி உத்தரவிட்டார்.

அன்று இரவு இருவரும் மேஜையில் அமர்ந்து உணவு
சாப்பிடும்பொழுது," நாஸ்ட்ரடாமஸ், இப்போது சொல்லுங்கள்
நாம், சாப்பிட்டுக்கொண்டிருப்பது,கருப்புப் பன்றியின்
இறைச்சியா அல்லது வெள்ளைப் பன்றியின்
இறைச்சியா?"

அதற்கு நாஸ்ட்ரடாமஸ் புன்னகையுடன் பதில் சொன்னார்,
“எனது வார்த்தைகள் தவறாது. மறுத்துச் சொல்வதும்
கிடையாது. நீங்கள் உங்கள் சமையல்காரரை அழைத்துத்
தெரிந்து கொள்ளுங்கள் - கருப்பா அல்லது வெள்ளையா என்று!"

உடனே அந்த வீட்டின் சமையல்காரர் அங்கே அழைத்து
வரப்பட்டார். வந்தவர் சொன்னார்.

"என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் சொன்னபடியே
வெள்ளைப் பன்றியைத்தான் முதலில் வெட்டிச் சிறு சிறு
துண்டுகளாக்கி மேஜை மேல் வைத்துவிட்டு உள்ளே சென்று
சமையலுக்கு வேண்டிய சேர்மானப் பொருட்களை எடுத்துக்
கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் உங்கள் மகன்
வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்திருந்த நரி ஒன்று
இந்தப் பன்றிக் கறியின் வாசனையை மோப்பம் பிடித்துத்
கொண்டு உள்ளே வந்து அவற்றைக் குதறித்தின்ன
ஆரம்பித்து விட்டது. நரி வாய்வைத்துக் குதறியதை
உங்களுக்குச் சமைக்க வேண்டாம் என்று அதை
அப்படியே நரிக்குப் போட்டு விட்டுப் பிறகு, கருப்புப்
பன்றியைக் கொன்று துண்டுகளாக்கி உங்கள்
இருவருக்கும் உணவாகச் செய்தேன்"

அசந்துபோன செல்வந்தர் நாஸ்ட்ரடாமஸிடம், அவரைச்
சோதனைகுட்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டதுடன்,
பெரும் வெகுமதிகளையும் கொடுத்து அவரை அனுப்பினார்
-------------------------------------------------------
நாஸ்டர்டாமஸ் இரவில்தான் எதிர்காலத்தில் நடக்க
விருப்பவைகளைக் கணித்து எழுதினார். ஆனால் மதத்
தலைவர்களுக்குப் போக்குக் காட்டவும், சிறை தண்டனை
யிலிருந்து தப்பவும் எகிப்திய நூல் ஒன்றின் ஆதாரத்தைக்
கொண்டு எழுதுவதாகச் சொல்லி வந்தார்.

பிரான்ஸில் ஒரு சிற்பி செய்த கன்னிமேரியின் சிலையைப்
பார்த்து, நாஸ்டர்டாமஸ் அது கன்னி மேரியின் சிலை
இல்லை. பேயின் சிலை என்றார். அது சிற்ப சாஸ்திரப்படி
இல்லையென்பதற்காகவே அப்படிச் சொன்னார்.

அரசாங்கம் அவரை நாத்திகன் என்று சொல்லிக் கைது
செய்ய உத்தரவிட்டது. அவர் அதிலிருந்து தப்பி
ஊரைவிட்டே ஓடினார். ஆறு ஆண்டுகாலம் நாடோடி
யாகப் பல ஊர்களில் சுற்றித் திரிந்துவிட்டுப் பின்
மறுபடியும் பிரான்ஸிற்கு வந்தார்.

1555 ஆம் ஆண்டுதான் தன்னுடைய முதல் நூலை எழுதி
முடித்தார்.நாஸ்டர்டாமஸின் நூல்கள் லத்தீன் பேச்சு
மொழியில் கவிதை நடையில் அமைந்திருந்தன.
பாட்டிற்கு எட்டு வரிகள் வீதம் தலா நூறு
பாடல்களைக் கொண்ட பத்து தொகுதிகளாக
அவைகள் அமைந்திருந்தன.

அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் யாராவது ஆரூடம்
சொன்னால் அவரை சூன்ய மந்திரவாதி என்று பட்டம் சூட்டி
உயிரோடு எரிக்கவே கிளம்பி விடுவார்கள். அதோடு அரசால்
மோசடி ஆசாமி என்று கைது செய்யப்படும் சூழ்நிலையும்
நிலவியது. அதனால்தான் அவர் பல எதிர்கால நிகழ்வுகளை
கணிப்புக்களை ச்ங்கேதக் குறிப்பாக எழுதிவைத்தார்.

அது விமானப் போக்குவரத்து தோன்றாத காலம். ஆனால்
நாஸ்டர்டாமஸ், வரப்போகும் விமானப் போக்குவரத்து,
இரண்டாவது உலகப்போர், ஹிட்லர், கென்னடியின் மரணம்
அதயதுல்லா கோமெனியின் அரசியல் எழுச்சி என்று பல
விந்தையான கணிப்புக்களைத் த்னது தீர்க்க தரிசனத்தால்
460 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவைத்துவிட்டுப்போனார்
அது நிதர்சனமான உண்மை என்பதை அவருடைய நூல்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன.

அவருடைய கையெழுத்துப் பிரதி இன்றும் பிரஞ்சு அருங்
காட்சியகத்தில் உள்ளது.

---------------------------------------
Nostradamus பற்றிய முழு விவரங்களுக்கான
இணைய தளம்:

----------------------------------
நாஸ்டர்டாமஸின் மொத்த புத்தகத்தின் வரிகளையும்
பார்ப்பதற்கான இணைய தளம் இங்கே உள்ளது:
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
அடியவள் ஜோதிடப் பாடங்களைப் படிக்கும்
காலங்களில் ஒன்றைக் கவனித்திருக்கிறேன்.
ஜோதிடத்தில் ஒரு புது விதியைப் படிக்கும்
போது அல்லது ஒரு புதுச்செய்தியைத் தெரிந்து
கொள்ளும்போது, முதலில் அது என்னுடைய
ஜாதத்திற்குப் பொருந்தி வருகிறதா என்றுதான்
என் மனம் நினைத்துப் பார்க்கும்.

இது அனைவருக்கும் பொருந்தும்

உதாரணத்திற்கு சனி இரண்டாம் வீட்டில் இருந்தால்
காசு த்ங்காது (Expense oriented horoscope) என்று
படித்தால் என் ஜாதகத்தில் சனி எங்கே உள்ளது
என்றுதான் மனம் ச்டாரென்று யோசிக்கும்

அதுபோல லக்கினாதிபதி (Owner of the first house
or Lagna) 11ம் வீடாகிய லாப ஸ்தானத்தில்
(That is in the 11th house) என்று படித்தால் என்னுடைய
சிம்ம லக்கின அதிபதியான சூரியன் 11ம் வீட்டில்
இருக்கின்றாரா? என்றுதான் மனம் அலை பாய்ந்து தேடும்

(If the lagna lord is in the 11th house, the native will
have less efforts and maximum benefits)
எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது பொருந்தும்

இனி வரும் பாடங்களில் பல விதிகளை
உதாரணத்துடன் சொல்ல உள்ளேன்

ஆகவே நீங்கள் உங்கள் ஜாதகத்தை மனனம் செய்து
விடுங்கள்.அல்லது ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அல்லது கணினியில் சேமித்து வையுங்கள்
அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்!
-------------------------------------------------
இன்றைய பாடம்: ஜாதகம் கணிப்பது எப்படி?

பத்து வருடங்களுக்கு முன் என்றால் யாராவது
ஜோதிடர் கணித்துக் கொடுத்தது இருக்க வேண்டும்
நாமே கணிப்பது என்றால் பஞ்சாங்கத்தை வைத்துக்
கொண்டு கணிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்

இப்போது கணினியில் பல மென்பொருள்கள் உள்ளதால்
அதெல்லாம் 'just like that' என்று படு சுலபமாகி
விட்டது. நாம் புத்தகத்தை வைத்துக் கணிக்கும் போது
தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கணினி முறையில் அந்தக் கஷ்டமெல்லாம் இல்லை
--------------------------------------------------------
தேவையானவை:
1. பெயர்
2. பிறந்த் ஊர்
3. பிறந்த நேரம் (அந்த நாட்டின் Standard Time)
4. அந்த நாட்டின் Standard Timeற்கும் GMTக்கும்
உள்ள நேர வித்தியாசம்
(இந்தியா என்றால் 5.Hours 30 Minutes East)
5. பிற்ந்த அட்ச ரேகை, மற்றும் தீர்க்க ரேகை
(Longitude and Lattitude)
Heavens above என்னும் இணைய தளத்தில்
20 லட்சம் ஊர்களுக்கு அட்ச ரேகை, மற்றும் தீர்க்க
ரேகைகள் கொடுக்கப்பட்டுள்ளன
--------------------------------------------
ஜாதகம் கணித்துத் தரும் தளத்தின் முகவரி
=================================

பதிய வேண்டிய முறை:
கீழே உள்ள Screen Shot படத்தில் உள்ளது
(அதில் உள்ள Window வில் இந்தத் தகவல்களை
நிரப்பி - உடன் Chart Type - என்றுள்ளதை
South Indian என்று டிக் செய்யவேண்டும்!)

===================================
==============================================
என்ன புரியும்படியாக சொல்லியிருக்கின்றேனா?
இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது
பின்னூட்டம் - வாருங்கள்
------------------------------------------------------

இன்று உதாரண ஜாதகமாக ந்மது தாய் நாட்டின்
ஜாதகத்தைக் கணித்துக் காட்டியுள்ளேன்
என்ன நாட்டிற்குச் ஜாதகமா என்கிறீர்களா?
ஆமாம் கண்மணிகளே நம் நாட்டிற்கும் ஜாதகம்
உண்டு! அதைப் பத்திரப்ப்டுத்தி வைத்துக் கொள்ளுங்கள்
அதை வைத்துப் பல சுவாரசியமான செய்திகள் உண்டு!
அவைகள் பின் பதிவுகளில் வரும்
--------------------------------------
பெயர்: India
பிறந்த தேதி: 15.08.1947 Friday
பிறந்த நேரம்: 00.01 Hours
அட்சரேகை: 28.39 North
தீர்க்க ரேகை: 77.13 East
Indian Standard Time (IST) ற்கும் GMTக்கும்
உள்ள நேர வித்தியாசம் 5.30 East
----------------------------------------

 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

மனிதனின்
இரத்தம் நான்கு வகைப்படும். அது பிறப்பு முதல்
இறப்புவரை மாறாது.

ஜோதிடத்திலும் மனிதன் நான்கு வகையில்
ஏதாவது ஒன்றில்தான் பிறப்பான். அது அவன்
காலம் முழுவதும் தொடர்ந்து அவன் காலமாவது
வரை மாறாமல் இருக்கும்

ஆமாம் ஜாதகங்கள் நான்கு வகைப்படும். நான்கு
வகையிற்குள் மட்டுமே ஏதாவ்து ஒன்றில் அடங்கி
விடும். எந்தக் கொம்பனாக இருந்தாலும் அந்த
வகையை விட்டு வெளியே வந்து வேறு வகைக்குக்
கட்சி மாறமுடியாது.

அவை என்ன என்கிறீர்களா?

சொல்கிறேன் கேளுங்கள்!

1. தர்ம ஜாதகம்
2. தன ஜாதகம்
3. காம ஜாதகம்
4. ஞான ஜாதகம்
என்பதுதான் அந்த நான்கு ஜாதிகள்!
-----------------------------------------------------
தர்ம ஜாதகம் என்பது Birth Chartல் 1ம் வீடு,
5ம் வீடு, 9 ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(First House - Lagna - it is the house of physical strength
Character, Influence and self control over the life
Fifth House- House of Poorva Punya - Keen Intelligence
Ninth House - House of Bhagya (Gains), Father, Ancestral
Properties & Charitable Deeds)

இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் பெயரும் புகழோடும்
இருப்பான்,நிறைய தர்ம காரியங்களைச் செய்வான்,
கோவில் குள்ங்களைக் கட்டுவான், பள்ளிக்கூடங்களைக்
கட்டுவான் பல சமூக சேவைகளைச் செய்வான்.
இறந்த பிறகும் அவன் பெயர் பூமியில் நிலைத்து நிற்கும்.
--------------------------------------------------------
தன ஜாதகம் என்பது Birth Chartல் 2ம் வீடு,
6ம் வீடு, 10ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Second house is the house of finance,
Sixth house is the house of servants
10th House is the house of profession / Business

இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் நிறைய
சம்பாதிப்பான், பணம் சேர்ப்பான், அபரிதமான
செல்வம் சேரும் - ஆனால் அவன் அதை
enjoy பண்ண மாட்டான்.He will earn money,
accumulate the money and leave the wealth to
someone, either it may be his children, relatives
or friends who will enjoy it

--------------------------------------------------------
காம ஜாதகம் என்பது Birth Chartல் 3ம் வீடு,
7ம் வீடு, 11ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Third House is the house of courage,
Seventh house is the house of women
Eleventh house is the house of fortune)

இந்த ஜாதகன்தான் உலகில் எல்லாவற்ரையும்
அனுபவிக்கப் பிறந்தவன். அவனுடைய பண்மோ,
அல்லது அவன் தந்தை வைத்துவிட்டுப்போன
பணமோ, அல்லது மாமனாரிடம் கொள்ளையாகக்
கிடைதத் பணமோ அல்லது நண்பர்களின் பண்மோ
அல்லது கடன் வாங்கி ஏமாற்றிய பணமோ அது
எதுவாக இருந்தாலும் அலட்சியமாக செலவுசெய்து
வாழ்க்கையின் எல்லா சிற்றின்பங்கள், பேரின்பங்கள்
என்று இன்பமாக அனுபவித்துவிட்டுப் போகக்
கூடியவன் இவன்தான்
---------------------------------------------------
ஞான ஜாதகம் என்பது Birth Chartல் 4ம் வீடு,
8ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகள் பலமாக
உள்ள ஜாதகம்
(4th House is the house of Comforts-சுக ஸ்தானம்
8th House is the house of difficulties and 12th house
is the house of Losses -
விரைய ஸ்தானம்
வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் இழந்து,
எல்லா கஷ்டங்களையும் பட்டுப் பரிதவித்து
சொத்துக்கள், கையிலிருந்த் காசு பணத்தையெல்லாம்
பரிகொடுத்து, அல்லது ஏமாந்துவிட்டுக் கடைசியில்
ஞானியாகி அல்லது நடு வயசிலேயே ஞானியாகி
"உலகே மாயம் - வாழ்வே மாயம்" என்று தத்துவம்
பேசும் நிலைக்கு வந்துவிடக்கூடிய ஞானி இந்த ஜாதகன்
இதே ஒன்று முதல் பன்னிரெண்டு வீடுகளுக்கும்
வேறு பணிகளும் உண்டு. மொத்தம் 12 x 3 = 36
பணிகள் உள்ளன. இவ்ற்றில் ஒரு ஜாதகனுக்கு
18 மட்டுமே இருக்கும் மீதி 18 இருக்காது. அதுதான்
அமைப்பு.

எதெது உள்ளது எதெது மறுக்கப்பட்டுள்ள்து
என்று தெரிந்து கொண்டு கிடைத்தைதைக் கொண்டு
சந்தோஷ்மாக வாழ்வதுதான் வாழ்க்கை!
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
லக்னம் என்றால் என்ன?

வானம் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, ஒவ்வொரு
பகுதிக்கும் ஒரு பெயர் தரப்பட்டுள்ளது என்று முன்பே
சொல்லியிருக்கிறேன. மேஷம் முதல் மீனம் வரை
அதற்குப் பெயர்களும் உண்டு

வானவட்டம் 360 வகுத்தல் 12 = 30 பாகைகள் = ஒரு ராசி
என்பது கணக்கு. ஆரம்ப ராசி மேஷம்தான்.

சித்திரை மாதம் மேஷம்தான் சூரியனின் உதய ராசி.
சூரியன் அந்த ராசியில்தான் உதிக்கும். வைகாசி மாதம்
ரிஷப ராசியில்தான் உதிக்கும், ஆனி மாதம் மிதுனம்
ஆடி மாதம் கடகம், ஆவணி மாதம் சிம்மம், புரட்டாசி மாதம்
கன்னி, ஐப்பசிமாதம் துலாம், கார்த்திகை மாதம் விருச்சிகம்,
மார்கழி மாதம் தனுசு, தை மாதம் மகரம், மாசி மாதம் கும்பம்
பங்குனி மாதம் மீனம் என்று ஒரு சுற்று முடிந்து விடும்
ஒரு வருடமும் முடிந்து விடும். மீண்டும் அடுத்த சுற்று
மறுபடியும் மேஷத்தில் தான் ஆர்ம்பமாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசியை
வைத்து அவர் எந்த மாதம் பிறந்தவர் என்று சொல்லிவிடலாம்
உதாரணத்திற்குச் சூரியன் சிம்ம வீட்டில் இருந்தால் அந்த
ஜாதகர் ஆவணி மாதம்தான் பிறந்தவர்.

ஆனால் லக்கினம் என்பது வேறு!.

ஒரு குழந்தை பிறந்த் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த
இடம், வானத்தை எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான்
அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும்!

லக்(கி)னம் . பெயர்ச்சொல்: சூரிய உதயத்தைப் பொறுத்து
ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் ராசி
Zodiacal sign influencing events at any given
time of the day with reference to the time of sunrise

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த
இடத்தைக்கட்டுப் படுத்தும் ராசிதான் லக்கினம்

லக்கினம் என்ப்து ஒரு ஜாதகத்தின் தலைப்பகுதி. அதுதான்
முதல் வீடு. அதிலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில்தான் மற்ற
வீடுகளைக் கணக்கில் கொள்வார்கள்

சித்திரை மாதம் முதல் தேதி சூரிய உதயம் முதல் அடுத்து
வரும் 2 மணி நேரம் வரை உள்ள காலத்தில் பிறந்த
குழந்தையின் லக்கினம் மேஷம்தான். அதற்குப் பிறகு
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அடுத்தடுதத ராசி
வரிசையில் லக்கினங்கள் அமையும்

ஆனால் சித்திரை மாதம் 16 ம் தேதி காலை சூரிய உதயத்தி
லிருந்து ஒரு மணி நேரம் வரை தான் மேஷ லக்கினம்
அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தை ரிஷப லக்கினக் குழந்தை
யாகும்.

இந்த வித்தியாசம் ஏன்?

ஒரு ராசி என்பது 30 பாகைகள் - ஒரு ராசியின் கால அளவு
24 மணிகள் வகுத்தல் 12 ராசி = 2 மணி நேரம் = 120 நிமிடங்கள்

ஆக்வே ஒவ்வொரு நாள் சுழற்சியிலும் சூரியன் ஒரு பாகை
யைத் தாண்டி வந்துவிடும் (4 நிமிடங்கள்) 15 நாட்களில்
15 பாகைகளைக் கடந்து விடும் ஆகவே 15 x 4 = 60 நிமிடங்கள்
அந்தத் தேதிக்குள் கழிந்துவிடும்

இப்படியே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
பாகை வீதம் 360 நாட்களில் 360 பாகைகள் வித்தியாசத்துடன்
பிறக்கும் குழந்தைகளுக்கு அது எந்தப் பாகையில் பிறந்ததோ
அந்தப் பாகையின் பகுதிதான் லக்கினம் ஆகும்.

உங்கள் மொழியில் சொன்னால் லக்கினம்தான் தலைமைச்
செயலகம்!
----------------------------------------------------------
லக்கினத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை,
தோற்றத்தை, அவனுடைய ஆளூமையைச் சொல்ல
முடியும்.

அழகான் தோற்றம், உடற்கட்டு, நல்ல குணம் குறிப்பாக
Heroவா? அல்லது Villainனா? என்பது போன்ற
கணிப்புக்களை, பெண்ணாக இருந்தால் நாயகியா அல்லது
வில்லியா என்று தெரிந்து கொள்வதற்கு லக்கினம்தான்
ஆதாரம்!

அறிவாளியா- முட்டாளா, திறமைசாலியா- சோம்பேறியா
ந்ல்லவனா- வக்கிரம் பிடித்தவனா, அப்பாவியா - கல்லுளி
மங்கனா, சமூகத்தோடு ஒத்துப் போகக்கூடியவனா அல்லது
விதண்டாவாதம் பேசி வீணாய்ப் போகிறவனா என்று
சொவதற்கும், தோற்றத்தில் அரவிந்தசாமியா அல்லது
பி.எஸ் வீரப்பாவா ஓமக்குச்சி நரசிம்மனா அல்லது
பயில்வான் ரங்கநாதனா பெண்ணாக இருந்தால் நயன்தாராவா
அல்லது காந்திமதியா (அவரேதான் 16 வயதினில் படத்தில்
மயிலின் அம்மாவாக வருவரே அதே காந்திமதிதான்)
என்று சொல்வதெல்லாம லக்கினத்தை வைத்துததான்
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
லக்கினத்தின் அடுத்த பகுதி!

1. லக்கினத்தில் மிகவும் முக்கியம் லக்கினநாதன்
என்னும் அந்த வீட்டு அதிபதி (Owner of the lagna
or lagna lord) உதாரணம் சிம்ம லக்கினத்தின்
அதிபதி சூரியன்.அவர் எங்கே போய் உட்கார்ந்திருக்
கிறார் என்பது முக்கியம்.
அவருடைய சிறப்பான அமர்விடம் லக்கினத்திலிருந்து
5ம் வீடு அல்லது 9ம் வீடு (திரிகோண வீடுகள்
எனப்படும்) அதுபோல 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது
11ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும்
வீடுகள்)

2. ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப்
பார்த்தால் மிகவும் சிறப்பு. 180 பாகையிலிருந்து
எல்லாகிரகஙகளும் எதிர்வீட்டைப் பார்க்கும்.
The lagna lord aspecting the lagna from the
7th place will confer standing power to the native!

3.லக்கினாதிபதி லக்கினத்திலிருந்து 6ம் வீடு, 8ம் வீடு
12ம் வீடு ஆகிய வீடுகளில் மறைந்து விடக்கூடாது!
These places are inimical places
(தீய இடங்கள்)
அப்படி அமர்ந்தால் வாழ்க்கை போராட்டமாக அமையும்.
(உடனே ஜாதகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக்
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து
விடாதீர்கள் - பல விதிவிலக்குகள் உள்ளன
- வரிசையாக அவைகளும் சொல்லித்தரப்படும்)
You should not jump to any conclusion
by seeing a single rule. The houses are to be
judged by various factors which will be taught
one by one

4. லக்கினாதிபதி 12ல் அமர்ந்தால் (அதாவ்து
விரைய ஸ்தானம் எனப்படும் - house of lossesல்
அமர்ந்தால், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப்
பயன் படாது. அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு
மட்டுமே பயன் படும்.

5. அதுபோல விரையாதிபதி that is the owner of
the 12th house லக்கினத்தில் வந்து அமர்ந்தால்
-உதாரணம் சிம்ம லக்கினத்தில் - அதற்குப் 12ம்
வீடான கடகத்தின் அதிபதி சந்திரன் வந்து
அமர்ந்தால் - ஜாதகன் வாழக்கை விரயமாகி விடும்
அவனுடைய வாழக்கை யாருக்கும் பயன் படாது
You should not jump to any conclusion
by seeing a single rule. The houses are to be
judged by various factors which will be taught
one by one

6. லக்கினாதிபதியும், விரையாதிபதியும் - ஒன்று
சேர்ந்து ஜாதகத்தில் எங்கு அமர்ந்தாலும் அது
ஜாதகனுக்குப் பயன் அளிக்காது.
Both the owner of the first house and owner of
the 12th associated together in any place in the
horoscope will not confer any auspicious things to
the native

7. லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் ந்ல்லது
example - சிம்மலக்கின ஜாதகத்தில் சூரியன் மேஷத்தில்
இருப்பது.

8. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது.
It is blessed horoscope

9. அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது
நல்லதல்ல!
இதற்கு மகர லக்கினமும், குமப லக்கினமும்
விதிவிலக்கு ஏனென்றால் அந்த இரண்டு லக்கினங்
களுக்கும் சனி அதிபதி.

10. லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலோ (7ம் பார்வை)
அல்லது லக்கினத்தில் சந்திரன் இருந்தாலோ, ஜாதகன்
அழகாக இருப்பான் - பெண் என்றால் ஜாதகி அழகாக
இருப்பாள்.

11. அதே போல சுக்கிரன் லக்கினத்தில் இருந்தாலும்,
அல்லது பார்த்தாலும் அழகான் தோற்றத்தை கொடுப்பான்

(சினிமா நடிகைகளின் ஜாதகத்தில் இந்தக் combination
இருக்கும். அதனால்தான் அவர்கள் அழ்கான் தோற்றத்தைப்
பெற்றுள்ளார்கள்)

12. அதே இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அல்லது
பார்த்தால் அபரிதமான திறமையைக் கொடுப்பான்

13. எல்லா லக்கினங்களும் சமம். ஆனால் ஒவ்வொன்
றிற்கும் ஒரு அதிகப்படியான சிறப்பு உண்டு. சிம்ம
லக்கினம் Heroக்களின் லக்கினம். அந்த லக்கினக்
காரர்கள் எல்லாம் நாயகர்கள்தான்
(உதாரணம் - கமல்ஹாசன், ரஜினிகாந்த ஆகிய
இருவரின் ஜாதகங்களைக் கொடுத்துள்ளேன்
பாருங்கள்)

=============================================




===========================================================

14. மகர, குமப லக்கினக்காரர்கள் கடின
உழைப்பாளிகள். சனீஸ்வரன் அந்த ல்க்கினங்களின்
அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையிலே கடும்
உழைப்பளிகள். எடுத்த காரியத்தை முடிக்காமல்
விட மாட்டார்கள்

15. கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே மிகவும்
நல்லவர்கள். அவர்களை நம்பி எந்தக் காரியத்திலும்
இறங்கலாம். அவர்கள் நிறைகுடம் போன்றவர்கள்
அதனால்தான் கும்ப ராசியின் சின்னமாக் குடம் வழங்கப்
பெற்றுள்ளது.

பெண்களுக்கு கும்ப லக்கினம்தான் சிறந்த லக்கினம்
கும்ப லக்கினப் பெண்களை மணந்தவர்கள்
அதிர்ஷ்டசாலிகள்.

16.கன்னி லக்கினக்காரர்கள் மற்ற எல்லா லக்கினக்
காரகளையும் சுலபமாக ஈர்த்து விடக்கூடியவர்கள்
They will attract or mix with any people or any
Society easily.

17.மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகாக
இருப்பார்கள் (உதாரணம் - திரு.ஜெமினி கணேசன்
செல்வி ஜெயலலிதா. திரு. ப. சிதம்பரம் போன்றவர்கள்)

18. கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல்
வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள். உதாரணம் -கலைஞர்
மு.க, திருமதி இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு
போன்றவர்கள்) அரசியல் இல்லையென்றாலும்
தலைமை தாங்கும் திறமையுடையவர்கள்
நாட்டமையாக இருப்பவர்கள்

19. ரிஷபம், துலாம் லக்கினக்காரர்கள் கலைத்துறையில்
பிரகாசிப்பார்கள் (அதிபதி சுக்கிரன்). அதுபோல வாழ்க்கையை
இயற்கையாகவே அனுபவிக்கக் கூடியவர்கள். ரசனை
உணர்வு மிக்கவர்கள். மெல்லிய உணர்வு மிக்கவர்கள்

20. மேஷம், விருச்சிக லக்கினக்காரர்க்ள் - செவ்வாய்
அதிபதி அதனால் போரர்டிப் பார்க்கும் மனப்பான்மை
உள்ளவர்கள். யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டர்கள்
ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் பரிண்மிப்ப
வர்கள் இவர்கள்தான்.

21. தனுசு, மீன் லக்கினக்காரர்கள் - குரு அதிபதி
யானதால், இயற்கையாகவே சிற்ந்த அறிவுடையவர்களாக்
இருப்பார்கள் (Keen Intelligence) Finance, stock market,
Banking, auditing, teaching, coaching போன்ற துறைகளில்
இவர்கள் பரிணமிக்கும் வாய்ப்பு இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்!

22.லக்கினாதிபதி சிறுவயது வாழ்க்கைக்கும், உடல்
நலத்திற்கும் உரியவர், அவர் பலமாக இருந்தால்
சிறுவயது வாழ்க்கை சிற்ப்பாக இருக்கும். உடல்
நலமும் ந்ன்றாக இருக்கும்

23. அவர் வலுவிழந்து இருந்தால் (உதாரணம்
லக்கினாதிபதி சனி அல்லது ராகு அல்லது கேது
போன்ற தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்
உடல் நலம் பாதிக்கப்படும்.

24.தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை
ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகமானால் வாழ்க்கை
துன்பம் மிகுந்ததாகிவிடும்

25. கடவுள் கருணை மிக்கவர். ஜாதகத்தில்
லக்கினத்தின் மூலம் உள்ள குறைகளுக்கு
அவர் நிவர்த்தியையும் கொடுத்துதான் அத்தனை
ஜீவ ராசிகளையும் பிறக்க வைக்கிறார்.
அதற்கு அதிரடியான சான்று - ஜாதகத்தின்
மொத்த மதிப்பெண் 337தான்.
அது என்ன 337 என்கிறீர்களா? அதுதான்
சுவாரசியம் மிக்க, மனதை வருடக்கூடிய
கடைசிப் பாடம். அப்போது விவரமாகச் சொல்கிறேன்
36ல் 18 என்று முன் பதிவில் சொன்னேன் இல்லையா
அந்தக் கணக்கு இதில்தான் (அந்த 337ல்) அடங்கும்
ஆட்டிற்கும், மாட்டிற்கும், மான்களுக்கும், கொம்பைக்
கொடுத்த இறைவன் ஏன் குதிரைக்குக் கொம்பைக்
கொடுக்க வில்லை?

இதைச் சொன்னவுடன் என் நண்பர் ஒருவர் சொன்னார்,
"கழுதைக்கும் கொம்பைக் கொடுக்கவில்லயே?"

நான் உடனே அவரிடம் சொன்னேன், "இல்லை
இறைவன் Strengthஐ கழுதைக்குக் கால்களில்
கொடுத்துள்ளார் உதை வாங்கியவர்களுக்குத் தெரியும்
கேட்டுப்பார்"

அதற்குப் பெயர் சமப்படுத்தும் முறை!(Balancing Theory)
Wealth இருக்கிறவனுக்கு Health இருக்காது.
Health இருக்கிறவனுக்கு Wealth இருக்காது
பயில்வானாக இருக்கிறவனுக்கு மூளை Sharpஆக
இருக்காது. Smart ஆக இருக்கிறவனுக்கு உடல்
பலம் மறுக்கப்பட்டிருக்கும்.

பிரதமருக்கும் 337தான், அம்பானிக்கும் 337தான்
அவர்களுடைய கார் டிரைவருக்கும் 337தான்
கார் டிரைவர் Duty Time முடிந்தவுடன் த்ன்னுடைய
இரண்டு சக்கர வாகனத்தில் ஜாலியாக எங்கு வேண்டு
மானலும் போவான். ஆனால் அவர்க்ள் Security
இல்லாமல் எங்கும் செல்ல முடியாது.
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
கிரகங்களின் சேர்க்கை (Association of Planets)

ஜாதகத்தில் கிரகங்கள் வீடுகளில் தனித்திருந்தால்
நல்லது. அல்லது ஒரு வீட்டில் (30 பாகைக்குள்)
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள்
சேர்ந்திருக்கும்போது அவை நன்மை செய்யக்கூடிய
கிரகங்களாகவோ அல்லது ஒன்றிற்கு ஒன்று நட்புடைய
கிரகங்களாகவோ இருந்தால் நல்லது.

இல்லையென்றால் தீயது!

அந்தத் தீமையும் வேறு ஒரு பிரதான நன்மை
பயக்கும் கிரகத்தின் பார்வை அந்த
வீட்டிற்குக் கிடைக்குமென்றால் தீமையின் அளவு
பெரும் அளவு குறைக்கப்பட்டுவிடும்
-----------------------------------------------------------------------
ஒரு அறையில் ஒருவர் மட்டும் அமர்ந்து வேலை
பார்க்கும் போது அவரது வேலை முழுக்கவனத்துடனும்
தனித்த்தன்மையுடனும் சிறப்பாக இருக்கும்.

அதே அறையில் இருவரை அமர்த்தி வேலை செய்யச்
சொல்லும்போது, ஒருவரால் மற்றவருடைய வேலை
அதிக சிறப்படையவும் வாய்ப்பு இருக்கிறது. அதே
நேரத்தில் கெட்டுச் சிதறிக் குறையவும் வாய்ப்பு
இருக்கிறது.

அது, அந்த இருவருடைய திறமை, குணம், ஒத்துப்
போகும் தன்மை இவற்றைப் பொருத்தது

அதே நேரத்தில் ஒரு புத்திசாலியையும், ஒரு மடைய
னையும், அல்லது ஒரு சோம்பேறியையும் அல்லது
ஒரு குஜால் பேர்வழியையும் அல்லது ஒரு கிரிமினலையும்
ஜோடி சேர்த்து அமரவைத்து வேலை செய்யச்
சொன்னால் வேலை எப்படி நடக்கும் ?
அல்லது எப்படி இருக்கும் ? என்று நீங்களே யோசித்துப்
பாருங்கள்!

அதானால்தான் பல நிறுவனங்களில் Cabin அமைத்து
அல்லது Partition பலகைகள் அமைத்துத் தங்கள்
ஊழியர்களை (staff) அமர்த்தி வேலை வாங்குவார்கள்
---------------------------------------------------------------
இரண்டு கிரகங்களின் சேர்க்கைக்கே இப்படியென்றால்
மூன்று அல்லது நான்கு கிரகங்கள் சேர்ந்து ஒரே
வீட்டில் இருந்தால் என்ன ஆகும்?

அதற்குப் பெயர் கிரக யுத்தம் (Planetary War)
அதைப் பற்றி விரிவாகப் பின் வரும் பகுதியில்
பார்ப்போம். இப்போது கிரக சேர்க்கையை
மட்டும் தெரிந்து கொள்வோம்.

இரண்டு கிரகங்கள் அப்படியே ஒரே வீட்டில்
இருந்தாலும் அவை ஒன்றை விட்டு ஒன்று தள்ளி
(at least 5 degree) இருக்கவேண்டும். அப்படி இல்லாமல்
5 பாகைக்குள் இரண்டும் இருந்தால் அது நல்லதல்ல!

அதைக் கிரக அஸ்தமனம் (Combust) என்பார்கள்.

அப்படி அஸ்தமனமானால் முதலில் நிற்கும்
கிரகம்தான் வலிமையுடம் இருக்கும். அதற்கு
5 பாகைக்குள் பின்னால் வந்து நிற்கும் கிரகம்
வலிமை இழந்து விடும்.

இதுவே சூரியனுக்கும் மட்டும் 10 பாகைகள் என்று
கணக்கு. ஜாதகத்தில் சூரியனுக்குப் பக்கத்தில் அமரும்
எந்தக் கிரகமும் 10 டிகிரி தள்ளியே இருந்தால்
நல்லது. இல்லையென்றால் வலிமை இழந்து விடும்

வலிமை இழந்தால் என்ன ஆகும்?

ஜாதகனுக்கு நன்மையைச் செய்யும் சக்தியை அது
இழந்து விடும்.

உதாரணத்திற்கு களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவன்
ஜாதகத்தில் வேறு ஒரு கிரகத்துடன் சேர்ந்து
அஸ்தமனகியிருந்தால் ஜாதகனுக்கு உரிய
பருவத்தில் திருமணம் ஆகாது! 21 முதல் 25 வயதிகுள்
ஆகவேண்டிய திருமணம் 35 முதல் 40 வயதில் நடக்கும்

மேலும் ஒரு உதாரணம்: ஏழில்(ஏழாம் வீட்டில்) இரண்டு
தீய கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஜாதகனுக்கு அலலது
பெண்ணாக இருந்தால் ஜாதகிக்குத் தீமை.

அது களத்திர ஸ்தானம். திருமண வாழ்க்கைக்கான
இடம் அங்கே பெண் ஜாதகத்தில் இரண்டு தீய
கிரகங்கள் இருந்தால் அவளுடைய மண வாழ்க்கை
போராட்டம் மிகுந்ததாக இருக்கும். நிம்மதியில்லாத
மண வாழ்க்கை அமைந்து விடும.

அந்த இடம் குருவின் பார்வை பெற்றிருந்தால் அந்தத்
தீமை குறைந்து விடும் அல்லது முற்றிலும் விலகி
விடும். குரு பார்ககக் கோடி தோஷம் நீங்கும் என்
கிறார்களே அதுதான் இது!

ஆண் ஜாதகமாக இருந்தால் இதே அமைப்பிற்கு
அவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு
ஏற்பட்டு விடும் ( தொடர்பு ஏற்பட்டால் சந்தோஷமா?
அல்ல!) ஆரம்பத்தில் அவனுக்கு அது சந்தோஷமாகத்தான்
இருக்கும். பின்னால் அவஸ்தையாக மாறிவிடும்

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற மூன்று
ஆசைகளில் மனிதன் அதிகமாக சிக்கித் தவிப்பது
இந்தப் பெண்ணாசையில்தான். அவர்களுடைய
ஜாதகங்களில் இந்த ஏழாம் வீடு கெட்டுப் போயிருக்கும்
அல்லது 7ம் வீட்டிற்குரியவன் கெட்டுப்போயிருப்பான்

ஏழாம் வீட்டிற்குரியவன் என்பது - உதாரணத்திற்கு
சிம்ம லக்கினம் என்றால் 7ம் வீடு கும்பம். அதன் அதிபதி
(Owner) சனி. அவர் லக்கினத்திற்கு 5, 9லோ அல்லது உச்சம்பெற்று
துலாம் வீட்டில் இருந்தாலோ நல்ல மனைவி அமைவாள்

அதில்லாமல் அந்த் வீட்டிற்குரிய சனி லக்கினத்திற்கு 8
அல்லது 12ம் வீட்டிலோ அமர்ந்தால் திருமண வாழ்க்கை
சந்தோஷம் தருவதாக இருக்காது!

அதே ஜாதகனுக்கு, கிரக சேர்க்கையில் அந்த ஏழாம்
வீட்டிற்குரிய சனி சந்திரனுடன் (He is the 12 th lord for that
horoscope) சேர்ந்து எங்கே இருந்தாலும் மண வாழ்க்கை
நிம்மதியில்லாமல் இருக்கும்

இந்த 7ம் வீட்டைப் ப்ற்றிப் பின் வரும் அத்தியாயங்
களில் விரிவாகப் பார்ப்போம். இப்போது சேர்க்கையைப்
பற்றி சொல்கிறேன்
-----------------------------------------------------------------------
1. சூரியனுக்கு: சந்திரன், செவ்வாய், குரு இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த நான்கும்
பகைக் கிரகங்கள்
புதன் மட்டும் சமக் கிரகம் (Neutral Planet)

2.சந்திரனுக்கு: சூரியனும் புதனும் நட்புக்
கிரகங்கள்
ராகுவும், கேதுவும் பகைக் கிரகங்கள்
செவ்வாய், குரு, சுக்கிரன், சனி இந்நான்கும் சமக்
கிரகங்கள்

3. செவ்வாய்க்கு: சூரியன், சந்திரன், குரு இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
புதன், ராகு, கேது இம்மூன்றும் பகைக்
கிரகங்கள்
சுக்கிரனும், சனியும் சம்க் கிரகங்கள்

4. புதனுக்கு: சூரியனும் சுக்கிரனும் நட்புக்
கிரகங்கள்
சந்திரன் மட்டுமே பகைக் கிரகம்
செவ்வாய், குரு, சனி, ராகு, கேது இவ்வைந்தும்
சமக் கிரகங்கள்

5. குருவுக்கு: சூரியன், சந்திரன், செவ்வாய் இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
புதனும், சுக்கிரனும் பகைக் கிரகங்கள்
சனி, ராகு, கேது இம்மூன்றும் சமக் கிரகங்கள்

6. சுக்கிரனுக்கு: புதன், சனி, ராகு, கேது இந்
நான்கும் நட்புக் கிரகங்கள்
சூரியனும், சந்திரனும் பகைக்கிரகங்கள்
செவ்வாயும், குருவும் சமக் கிரகங்கள்

7. சனிக்கு: புதன், சுக்கிரன், ராகு, கேது
இந்நான்கும் நட்புக் கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும்
பகைக் கிரகங்கள்
குரு மட்டும் சமக் கிரகம்

8. இராகுவுக்கும், கேதுவுக்கும்:
சுக்கிரனும், சனியும் நட்புக் கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும்
பகைக் கிரகங்கள்
புதனும், குருவும் சமக் கிரகங்கள்

கிரகங்கள் சேர்க்கையில் ஒரு கிரகம்
தன்னுடைய நட்பு அல்லது சமக்
கிரகத்துடன் சேர்வது நன்மை பயக்கும்

அதுவே பகைக் கிரகத்துடன் சேரும்
பொழுது நன்மை பயக்காது

பெரிய அதிகாரத்தில் இருப்பவருடன்
சேரும் பொழுது கிடைக்கும் நன்மை
ஒரு பேட்டை தாதாவுடன் சேரும்போது
கிடைக்குமா?

ஒரு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியின்
நட்பில் கிடைக்கும் சந்தோஷம், ஒரு
கிரிமினல் ஆசாமியுடன் சேரும்போது
கிடைக்குமா?

சேர்க்கையின் பலனும் அப்படித்தான்
-----------------------------------------------------------
இயற்கையாகவே நன்மை பயக்கக்கூடிய
சில கிரக சேர்க்கைகள்:

பல கிரக சேர்க்கைகள் உள்ளன. நான்
மாதிரிக்கு ஐந்தை மட்டும் கொடுத்துள்ளேன்

1. குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால்
அதைக் குருச்சந்திர யோகம் என்பார்கள்

2. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால்
சசிமங்கள யோகம் என்பார்கள்

3. புதனும், சூரியனும் சேர்ந்திருந்தால்
புத-ஆதித்ய யோகம் என்பார்கள்

4. புதனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால்
நிபுனத்துவ யோகம் என்பார்கள்

5. ஒரு நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு
உச்சம் பெற்ற கிரகம் சேர்ந்திருந்தால்
அது நீசபங்க ராஜயோகம் எனப்படும்
நீசபங்க ராஜயோகம் - அமைப்பு:

மேஷத்தில் சனியும், சூரியனும்
சேர்ந்திருப்பது

ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும்
சேர்ந்திருப்பது

கடகத்தில் செவ்வாயும், குருவும்
சேர்ந்திருப்பது

கன்னியில் சுக்கிரனும், புதனும்
சேர்ந்திருப்பது

துலாத்தில் சூரியனும், சனியும்
சேர்ந்திருப்பது

மகரத்தில் குருவும், செவ்வாயும்
சேர்ந்திருப்பது

மீனத்தில் புதனும், சுக்கிரனும்
சேர்ந்திருப்பது

நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள்
சம்பந்தப் பட்ட வீடுகளை வைத்து
மிகப் பெரிய - அளவிடமுடியாத
நன்மைகளைச் செய்துவிடும்

அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும்
தனித்தனியாக மாறுபடும்.
அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த
நீசபங்க ராஜயோக கிரகங்கள் சம்பந்தப்
பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டான
பலன்களை அள்ளித்தந்துவிடும்!

ஒரு சிம்ம லக்கின ஜாதகம். அந்த ஜாகத்தின்
பத்தாம் வீட்டிற்குரிய சுக்கிரன் நீசனாகி கன்னி
ராசியில் அம்ர்ந்துவிடும் போது அங்கே புதன்
இருந்தால் - அது புதனுக்கு சொந்த வீடும்
உச்ச வீடும் ஆனதால் புதனுடன் சுக்கிரன்
சேர்ந்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அந்த
ஜாதகன் பெரிய தொழில் அதிபர் ஆகிவிடுவான்

10க்குரிய சுக்கிரன் நீசமானதால் வேலையின்றி
ரோட்டில் திரிய வேண்டிய ஆசாமி, உச்ச புதன்
உடன் சேர்ந்ததால் பெரிய Business Magnet ஆகி
பணத்தில் புரளுவான். இதுதான் நீசபங்க ராஜ
யோகத்தின் பலன்

இதுவே 10ம் வீடாக இல்லாமல் 4ம் வீடான கல்வி
ஸ்தானமாக இருந்தால் ஜாதகன் பெரிய Scholar
ஆகி விடுவான். சாதாரண விரிவுரையாளராக
இருந்த அவனை இந்த ராஜயோகம் பல்கலைக்கழக
துணை வேந்தர் பதவிவரை கொண்டுபோய்ச்
சேர்த்துவிடும்!

இதுபோன்று வாழ்க்கையின் பலதுறைகளிலும்
பல நிலைப்பாடுகளிலும் இந்த நீசபங்க கிரக
சேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற
ஜாதகனுக்கு அற்புதமான நன்மையைச் செய்யும்

அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டு
மானலும் இருக்கலாம். அது அந்த ஜாதகனின்
ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்!

இந்த யோகங்களுக்குரிய பலன்களை
பின் வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்
100ற்கும் மேற்ப்ட்ட முக்கியமான யோகங்கள்
உள்ளன!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Laksha24 டியர்
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
நண்பர் ஒருவர் துணைக்குக் கூப்பிட்டார் என்பதற்காக
அவருடன் ஜோதிடர் வீட்டிற்கு, அவருடன் நானும்
சென்றிருந்தேன்.

என் நண்பனின் சகோதரி மகளுக்கு எப்போது திருமணம்
நடக்கும் என்று கேட்டு வருவதற்காகப் போயிருந்தோம்

ஜோதிடரின் வீடு கீழ்த்தளத்தில். முதல் மாடியில்தான்
அவரது அலுவலகம்.

11' x 15' அளவில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான்
உட்காருவதற்குப் பாய் போட்டு வைத்திருப்பார்கள்
ஏற்கனவே பத்துப் பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
நாங்களும் போய் உட்கார்ந்து கொண்டோம்.

நான் இதுபோன்ற இடங்களுக்கெல்லாம் போகும்போது
என்ன நடக்கிறது என்று முழுக்கவனத்துடன் பார்ப்பது
வழக்கம்.

எங்களுக்கு முன்னால் ஒரு வயதான தம்பதியர்
தங்கள் மகனுடைய ஜாதகத்தை அவரிடம் கொடுத்துப்
பார்க்கச் சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்திருந்தார்கள்

ஜோதிடர் நடப்பு தசாபுத்தியை ஒரு காகிதத்தில் அசுர
வேகத்தில் கணக்கெடுத்துக் குறித்துக் கொண்டவர்,
ஜாதகத்தையும் ஒரு கண்ணோட்டம் பார்த்தவாறு கேட்டார்

"உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?"

அந்தப் பெரியவர் சொன்னார்." சாமி, பையனுக்கு
25 வயசாச்சுங்க! வியாபாரம் எதாவது வச்சுக் கொடுக்கலாமா? அல்லது திருமணத்த நடத்திப் போடலாமா? கொஞ்சம் விவரனையா பாத்துச் சொல்லுங்க! வியாபாரம் வச்சுக் கொடுத்தா அஞ்சு வருசம் கழிச்சுத் தான் திருமணம் பண்ணோனும். இல்ல திருமணம் செஞ்சுவச்சோமின்னா வியாபாரம் பின்னாடித்தான் வைக்கோணும். சாதகப்படி எது நல்லதுன்னு சொல்லுங்க"

உடனே சட்டென்று ஜோதிடர் அவரைப் பார்த்துக் கேட்டார்.

"பையன் வீட்டிற்கு அடங்க மாட்டானே?"

"ஆமாம் சாமி!"

"ஒழுங்கா படிச்சு பட்டம் வாங்கியிருக்க மாட்டானே?"

"ஆமாம் சாமி!"

" அதுக்கெல்லாம் காரணம் பையன் மூல நட்சத்திரம்.
சின்ன வயசிலேயே சுக்கிர தசை வந்திருச்சு. சின்ன
வயசில சுக்கிர தசை வரக்கூடாது. குட்டிச் சுக்கிரன்
கூடிக் கெடுக்கும்.
அதோட பையனை சுகவாசியா
வச்சு - அவனைக் கெடுத்துவிட்டுப்போய் விடும்!
அவன் பிறந்ததிலிருந்து உங்களுக்குப் பணம் நிறைய
வந்திருக்கும். அதனால அவனைச் செல்லம் கொடுத்தும்
வளர்த்திருப்பீங்க! ஜாதகப்படி கர்ப்பச்செல் இருப்பு
கேதுல 3 வருஷம், சுக்கிரன் ஒரு 20 வருஷம், அதுக்க
ப்புறம் வரப்போகிற சூரிய தசை ஒரு ஆறு வருஷம்
ஆக மொத்தம் 29 வருஷம். பையனுக்கு 30 வயசுக்கு
மேலதான் நல்ல காலம். அதுக்கப்புறம் வியாபாரம்
வச்சுக்கொடுங்க. இப்ப கல்யாணத்தைப் பண்ணுங்க!
முடியப் போற சுக்கிரதசையும் கல்யாணத்தை
நடித்தி வச்சுட்டுத்தான் போகும். அதோட அவனுக்கு
வியாழ நோக்கமும் இருக்கு! ஜாதகப்படி இன்னும்
தொண்ணூறு நாள்ல கல்யாணம் ஜாம் ஜாம்னு
நடந்திரும்!"

என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டார்

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை

அவர் சொன்ன அந்த வாக்கியம் நெடு நாட்கள்
என் காதிலும் மனதிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."
"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."



அது உண்மை என்பதைப் பின்னால் தெரிந்து
கொண்டேன்


அதாவது எனக்குக் கிடைதத என் உறவினர்கள்
மற்றும் என் நண்பர்களின் ஜாதகங்களை (சுமார் 200)
வைத்து நான் ஆராய்ச்சி செய்தபோது அது
உண்மைதான் என்று தெரிந்து கொண்டேன்


-----------------------------------------------------------------------
அதுபோல பத்து வருடங்களுக்கு முன்பு, வேறு
ஒரு நண்பர் கூப்பிட்டார் என்பதற்காக அவருடன்
வேறு ஒரு பிரபல ஜோதிடரைப் பார்க்கப் போயி
ருந்தேன்.

அந்தக் கால கட்டத்தில் நான் ஜோதிட நூல்களை
யெல்லாம் ஓரளவிற்குக் கற்றுத் தெளிந்திருந்தேன்
ஆனாலும் இதுபோன்ற இடங்களுக்குப் போகும்
போது என்னுடைய திருவாயை மூடிக் கொண்டு
என்ன நடக்கிறது என்று கவனிப்பேனேயன்றி
ஒன்றும் பேச மாட்டேன். என் மேதாவித்தனத்தை
எல்லாம் ஸ்லைடு போட்டுக் காட்டமாட்டேன்

என் நண்பர் கொடுத்த அவருடைய ஜாதகத்தை
வாங்கி ஒரு காகிதத்தில் தேவையான விவரங்களைக்
குறிபெடுத்த ஜோதிடர் என் நண்பர் ஒன்றும் சொல்
லாமலேயே கேட்டார்.

"உங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த
பணக்கஷ்டம். சரியா?"

என் நண்பர் சற்றுத் திகைத்துப்போய், அரைப்
புன்னகையுடன் பதில் சொன்னார்

"ஆமாம்!"

" வியாபாரத்தில் சரக்குக் கொடுத்த இடத்திலெல்லாம்
சிக்கல். நம்பியவர்கள் எல்லாம ஏமாற்றுவார்கள்.
உங்கள் பாக்கியெல்லாம் ஒன்றும் வசூலாகாது. ஆனால்
உங்களுக்குப் பணம் கொடுத்தவன் நெருக்கடி கொடுப்பான்
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதா?"

" ஆமாம்!"

"அதற்குக் காரணம் உங்களுக்கு 2ம் வீட்டில் மாந்தி
மாந்தி அமர்ந்த வீட்டிற்குரியவனான புதனுடைய
புக்தி உங்களுக்கு இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.
மாந்தி அமர்ந்தவனுடைய புக்தி வாட்டி எடுத்துவிடும்.
மேலும் உங்களுக்கு சனிமகாதிசையில் புதன் புக்தி
சனியும் புதனும் வேறு அஷ்டம சஷ்டமத்தில்
(6th and 8th position to each other) இருக்கிறார்கள். அதுவும்
அனுகூலமாக இல்லை. இந்த தசாபுக்திக் காலம்
மொத்தம் 32 மாதத்தில் 24 மாதங்கள் கழிந்துவிட்டன
இன்னும் 8 மாத காலம் பாக்கி இருக்கிறது. அதற்குப்
பிறகு எல்லாம் சரியாகிவிடும். கவலையை விடுங்கள்
உங்கள் அடிப்படை ஜாதகம் நன்றாக இருக்கிறது
பழைய நிலைமை திரும்பி விடும்" என்று சொல்லி
அனுப்பி வைததார்.

அதன்படியே நடந்தது!

சரி, இதையெல்லாம் எப்படி சொல்கிறார்கள்?

தசாபுக்திகளை வைத்துத்தான் சொல்வார்கள்!

தசாபுத்தி என்றால் என்ன?

ஒவ்வொரு கிரகத்திற்கும் தசாபுக்திகள் (Own Periods)
உண்டு. ஒவ்வொரு கிரகமும் அதனுடைய தசாபுக்தி
நடக்கும்போதுதான் பலனைக் கொடுக்கும்.
(Awarding the benefits to the native of the horoscope)

அதுதான் அடுத்த பாடம்!

அடுத்த பாடம் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top