நாஸ்ட்ரடாமஸின் தீர்க்கதரிசனம்
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம்!
1503ம் ஆண்டு - அதாவது இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு
முன்பு பிரஞ்சு நாட்டில் செயிந்த் ரெமி என்னும் ஊரில்
பிறந்தவர் மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்க
தரிசனம் பெற்ற மனிதர்.
யூத குடும்பத்தினரான அவருடைய பெற்றோர்கள்
கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.
நாஸ்ட்ரடாமஸ் மறைநூல்களும், மருத்துவமும்
கற்றார் மான்ட்பெல்லி பல்கலைக்கழகத்தில்
மருத்துவப் பட்டம் பெற்று, திருமணமும் செய்து
கொண்டு தன் வாழ்க்கையை இனிது
தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு
பிரஞ்சு நாட்டில் பரவிய பிளேக் நோய்க்குத்
தன் மனைவியைப் பறிகொடுத்தார்.
அதற்குப் பிற்கு அந்தத் தாக்கத்தில் ஏறக்குறையப்
பத்து ஆண்டுகள் மெளனமாகவே இருந்தார்.
அந்தக் காலகட்டதத்தில் அவருக்கு
அதிசயமான அந்த ESP சக்தி ஏற்பட்டது.
அவர் யாரை உற்று நோக்கினாலும் அவருடைய
எதிர்காலம் அவர் மனத்திரையில் ஓடியது.
பல நாடுகளின் வருங்கால நிகழ்ச்சிகள் அவர்
மனத் திரையில் தோன்றின. அவற்றையெல்லாம்
விவரித்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார்.
அவைகள் பெரும்பாலும் பிரஞ்சு நாட்டின் அரசியல்
மாற்றங்களை விவரித்து எழுதப்பெற்ற நூலாகும்.
பிரஞ்சு நாட்டு மன்னன் ஒரு விளையாட்டு விபத்தில்
இறந்து விடுவார் என்று அவர் குறிப்பிட்டு எழுதியி
ருந்தது உண்மையிலேயே நடந்துவிட பிரஞ்சு மக்கள்
அவருடைய கணிப்புக்களில் ஆர்வம் காட்டத் துவங்கினர்.
1550 ஆம் ஆண்டு முதல் 1555 ஆம் ஆண்டுவரை
வருங்காலத்தில் பல நாடுகளில் நடக்கவிருக்கும்
சம்பவங்களை எல்லாம் எழுதி
10 பாகங்கள் கொண்ட நூல்களாக வெளியிட்டார்.
1566 ஆம் ஆண்டு அவருடைய மறைவிற்குப்
பின்னரே அவருடைய நூல்கள் பல மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பெற்று வெளியாகி
ஐரோப்பா முழுவதும் அவர் பிரபலமானார்.
பிரஞ்சுப் புரட்சியில் 14ம் லூயி மன்னனுக்கு
ஏற்பட்ட முடிவை அது நடப்பதற்கு 200 ஆண்டு
களுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ்
துல்லியமாக எழுதிவைத்திருந்ததைப் பல
ஆராய்ச்சியாளர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
அதுபோல நெப்போலியனின் திடீர் எழுச்சியையும்,
அவருடைய பல்வேறு படையெடுப்புக்களையும்,
ரஷ்யாவுடனான போரில் குளிரைத் தாக்குப்பிடிக்க
முடியாமல் தோல்வியுறுவதுவரை
ஒன்றையும் விடாமல் முன்பே விவரித்து எழுதி
வைத்திருந்ததும் விந்தையானதாகும்
ஹிட்லரின் பிறப்பு, வளர்ப்பு, ஜெர்மனியில் அவர்
அமைத்த ராணுவ அரசு, பிறகு உலகம் முழுவதையும்
பிடிப்பதற்காக 1939 ஆம் ஆண்டில் அவர் துவக்கிய
இரண்டாவது உலகமகாயுத்தம் ஆகியவற்றையும்
எழுதிவைத்திருந்தார். அவை அனைத்தும்
சரியாக நடந்தன.
ஹிட்லரின் பிரச்சார மந்திரியான கோயபல்ஸின்
மனைவி ஃப்ரைன் 1939ம் ஆண்டு அந்த நூலைப்
படித்துவிட்டு, ஹிட்லரின் சாகசங்கள்
அந்த நூலில் விவரிக்கப்பட்டு இருப்பதைக்
ஹிட்லரிடம் காண்பிக்க, ஹிட்லர் அந்தப் பக்கங்
களைப் பிரதி எடுத்து ஐரோப்பா முழுவதும்
தூவ விட்டார்.
அச்செய்தி இங்கிலாந்து மக்களைக் கவலையில்
ஆழ்த்த, அப்போது அங்கே பிரதமராக இருந்த
வின்ஸ்டன் சர்ச்சில், நாஸ்டர்டாமஸின்
நூலை வாங்கிப் படித்து, அதில் ஹிட்லரின்
வீழ்ச்சியைப் பற்றி நாஸ்டர்டாமஸ் எழுதியிருந்ததை
துண்டுப் பிரசுரமாக்கித் தன் தேசம் முழுவதும்
வெளியிட்டு அவநம்பிக்கையிலிருந்து தன்
தேசமக்களை மீட்டார்.
இதெல்லாம் வரலாறு!
அதுபோல் அமெரிக்காவின் விடுதலைப்போரைப்
பற்றியும், அமெரிக்க ஜனாதிபதிகள் அபிரகாம்
லிங்கன், கென்னடி போன்றவர்கள் சுட்டுக்
கொல்லப்படுவார்கள் என்பதையும் நாஸ்டர்டாமஸ்
தன் நூலில் குறிப்பிட்டுள்ளது மிகவும் ஆச்சரியமான
விஷயங்கள். ஏனென்றால் அந்தநாடு நாஸ்டர்டாமஸ்
காலத்தில் உருவாகக்கூட இல்லை என்பது
வியக்கத்தக்க உண்மை!
இந்தியாவைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறாரா?
ஏன் எழுதாமல் - பல விஷயங்க்ளை எழுதியுள்ளார்
அவற்றில் முக்கியமானது. 21 ஆம் நூற்றாண்டில்
உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத்
திகழும்!
நாஸ்டர்டாமஸின் தீர்க்கதரிசனங்கள் (தொடர்ச்சி)
ஒரு நாள் ப்ளோரன்ஸ் டி வில்லி எனும் செல்வந்தர்
வீட்டிற்கு விஷேச அழைப்பின் பெயரில் நாஸ்ட்ரடாமஸ்
விருந்திற்குச் சென்றிருந்தார்.
அன்றைய தினம் மாலையில் அந்த செல்வந்தர் வீட்டுத்
தோட்டத்தில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தனர்.
அங்கே அப்போது இரண்டு பன்றிக் குட்டிகள் விளையாடிக்
கொண்டிருந்தன.
அவற்றைச் சுட்டிக் காட்டிய , செல்வந்தர் நாஸ்ட்ரடாமஸிடம்
கேட்டார்.
"இந்தப் பன்றிக்குட்டிகளின் எதிர்காலத்தைப் பற்றி உங்களால்
ஏதாவது கூற முடியுமா?"
உடனே நாஸ்ட்ரடாமஸ் தயக்கமின்றிக் கூறினார்
" வெள்ளைப் பன்றிக்குட்டியை ஒரு நரி தின்றுவிடும். கருப்புப்
பன்றிக்குட்டியை இன்றிரவு நாம் தின்னப் போகிறோம்"
அதைப் பொய்யாக்க விரும்பிய செல்வந்தர், தன்னுடைய
வேலைக்காரர்களை ரகசியமாக அழைத்து, வெள்ளைப்
ப்ன்றிக்குட்டியைக் கொன்று இரவு உணவாக அதைச்
சமைக்கும்படி உத்தரவிட்டார்.
அன்று இரவு இருவரும் மேஜையில் அமர்ந்து உணவு
சாப்பிடும்பொழுது," நாஸ்ட்ரடாமஸ், இப்போது சொல்லுங்கள்
நாம், சாப்பிட்டுக்கொண்டிருப்பது,கருப்புப் பன்றியின்
இறைச்சியா அல்லது வெள்ளைப் பன்றியின்
இறைச்சியா?"
அதற்கு நாஸ்ட்ரடாமஸ் புன்னகையுடன் பதில் சொன்னார்,
“எனது வார்த்தைகள் தவறாது. மறுத்துச் சொல்வதும்
கிடையாது. நீங்கள் உங்கள் சமையல்காரரை அழைத்துத்
தெரிந்து கொள்ளுங்கள் - கருப்பா அல்லது வெள்ளையா என்று!"
உடனே அந்த வீட்டின் சமையல்காரர் அங்கே அழைத்து
வரப்பட்டார். வந்தவர் சொன்னார்.
"என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் சொன்னபடியே
வெள்ளைப் பன்றியைத்தான் முதலில் வெட்டிச் சிறு சிறு
துண்டுகளாக்கி மேஜை மேல் வைத்துவிட்டு உள்ளே சென்று
சமையலுக்கு வேண்டிய சேர்மானப் பொருட்களை எடுத்துக்
கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் உங்கள் மகன்
வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்திருந்த நரி ஒன்று
இந்தப் பன்றிக் கறியின் வாசனையை மோப்பம் பிடித்துத்
கொண்டு உள்ளே வந்து அவற்றைக் குதறித்தின்ன
ஆரம்பித்து விட்டது. நரி வாய்வைத்துக் குதறியதை
உங்களுக்குச் சமைக்க வேண்டாம் என்று அதை
அப்படியே நரிக்குப் போட்டு விட்டுப் பிறகு, கருப்புப்
பன்றியைக் கொன்று துண்டுகளாக்கி உங்கள்
இருவருக்கும் உணவாகச் செய்தேன்"
அசந்துபோன செல்வந்தர் நாஸ்ட்ரடாமஸிடம், அவரைச்
சோதனைகுட்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டதுடன்,
பெரும் வெகுமதிகளையும் கொடுத்து அவரை அனுப்பினார்
-------------------------------------------------------
நாஸ்டர்டாமஸ் இரவில்தான் எதிர்காலத்தில் நடக்க
விருப்பவைகளைக் கணித்து எழுதினார். ஆனால் மதத்
தலைவர்களுக்குப் போக்குக் காட்டவும், சிறை தண்டனை
யிலிருந்து தப்பவும் எகிப்திய நூல் ஒன்றின் ஆதாரத்தைக்
கொண்டு எழுதுவதாகச் சொல்லி வந்தார்.
பிரான்ஸில் ஒரு சிற்பி செய்த கன்னிமேரியின் சிலையைப்
பார்த்து, நாஸ்டர்டாமஸ் அது கன்னி மேரியின் சிலை
இல்லை. பேயின் சிலை என்றார். அது சிற்ப சாஸ்திரப்படி
இல்லையென்பதற்காகவே அப்படிச் சொன்னார்.
அரசாங்கம் அவரை நாத்திகன் என்று சொல்லிக் கைது
செய்ய உத்தரவிட்டது. அவர் அதிலிருந்து தப்பி
ஊரைவிட்டே ஓடினார். ஆறு ஆண்டுகாலம் நாடோடி
யாகப் பல ஊர்களில் சுற்றித் திரிந்துவிட்டுப் பின்
மறுபடியும் பிரான்ஸிற்கு வந்தார்.
1555 ஆம் ஆண்டுதான் தன்னுடைய முதல் நூலை எழுதி
முடித்தார்.நாஸ்டர்டாமஸின் நூல்கள் லத்தீன் பேச்சு
மொழியில் கவிதை நடையில் அமைந்திருந்தன.
பாட்டிற்கு எட்டு வரிகள் வீதம் தலா நூறு
பாடல்களைக் கொண்ட பத்து தொகுதிகளாக
அவைகள் அமைந்திருந்தன.
அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் யாராவது ஆரூடம்
சொன்னால் அவரை சூன்ய மந்திரவாதி என்று பட்டம் சூட்டி
உயிரோடு எரிக்கவே கிளம்பி விடுவார்கள். அதோடு அரசால்
மோசடி ஆசாமி என்று கைது செய்யப்படும் சூழ்நிலையும்
நிலவியது. அதனால்தான் அவர் பல எதிர்கால நிகழ்வுகளை
கணிப்புக்களை ச்ங்கேதக் குறிப்பாக எழுதிவைத்தார்.
அது விமானப் போக்குவரத்து தோன்றாத காலம். ஆனால்
நாஸ்டர்டாமஸ், வரப்போகும் விமானப் போக்குவரத்து,
இரண்டாவது உலகப்போர், ஹிட்லர், கென்னடியின் மரணம்
அதயதுல்லா கோமெனியின் அரசியல் எழுச்சி என்று பல
விந்தையான கணிப்புக்களைத் த்னது தீர்க்க தரிசனத்தால்
460 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவைத்துவிட்டுப்போனார்
அது நிதர்சனமான உண்மை என்பதை அவருடைய நூல்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன.
அவருடைய கையெழுத்துப் பிரதி இன்றும் பிரஞ்சு அருங்
காட்சியகத்தில் உள்ளது.
---------------------------------------
Nostradamus பற்றிய முழு விவரங்களுக்கான
இணைய தளம்:
----------------------------------
நாஸ்டர்டாமஸின் மொத்த புத்தகத்தின் வரிகளையும்
பார்ப்பதற்கான இணைய தளம் இங்கே உள்ளது:
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம்!
1503ம் ஆண்டு - அதாவது இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு
முன்பு பிரஞ்சு நாட்டில் செயிந்த் ரெமி என்னும் ஊரில்
பிறந்தவர் மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்க
தரிசனம் பெற்ற மனிதர்.
யூத குடும்பத்தினரான அவருடைய பெற்றோர்கள்
கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.
நாஸ்ட்ரடாமஸ் மறைநூல்களும், மருத்துவமும்
கற்றார் மான்ட்பெல்லி பல்கலைக்கழகத்தில்
மருத்துவப் பட்டம் பெற்று, திருமணமும் செய்து
கொண்டு தன் வாழ்க்கையை இனிது
தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு
பிரஞ்சு நாட்டில் பரவிய பிளேக் நோய்க்குத்
தன் மனைவியைப் பறிகொடுத்தார்.
அதற்குப் பிற்கு அந்தத் தாக்கத்தில் ஏறக்குறையப்
பத்து ஆண்டுகள் மெளனமாகவே இருந்தார்.
அந்தக் காலகட்டதத்தில் அவருக்கு
அதிசயமான அந்த ESP சக்தி ஏற்பட்டது.
அவர் யாரை உற்று நோக்கினாலும் அவருடைய
எதிர்காலம் அவர் மனத்திரையில் ஓடியது.
பல நாடுகளின் வருங்கால நிகழ்ச்சிகள் அவர்
மனத் திரையில் தோன்றின. அவற்றையெல்லாம்
விவரித்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார்.
அவைகள் பெரும்பாலும் பிரஞ்சு நாட்டின் அரசியல்
மாற்றங்களை விவரித்து எழுதப்பெற்ற நூலாகும்.
பிரஞ்சு நாட்டு மன்னன் ஒரு விளையாட்டு விபத்தில்
இறந்து விடுவார் என்று அவர் குறிப்பிட்டு எழுதியி
ருந்தது உண்மையிலேயே நடந்துவிட பிரஞ்சு மக்கள்
அவருடைய கணிப்புக்களில் ஆர்வம் காட்டத் துவங்கினர்.
1550 ஆம் ஆண்டு முதல் 1555 ஆம் ஆண்டுவரை
வருங்காலத்தில் பல நாடுகளில் நடக்கவிருக்கும்
சம்பவங்களை எல்லாம் எழுதி
10 பாகங்கள் கொண்ட நூல்களாக வெளியிட்டார்.
1566 ஆம் ஆண்டு அவருடைய மறைவிற்குப்
பின்னரே அவருடைய நூல்கள் பல மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பெற்று வெளியாகி
ஐரோப்பா முழுவதும் அவர் பிரபலமானார்.
பிரஞ்சுப் புரட்சியில் 14ம் லூயி மன்னனுக்கு
ஏற்பட்ட முடிவை அது நடப்பதற்கு 200 ஆண்டு
களுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ்
துல்லியமாக எழுதிவைத்திருந்ததைப் பல
ஆராய்ச்சியாளர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
அதுபோல நெப்போலியனின் திடீர் எழுச்சியையும்,
அவருடைய பல்வேறு படையெடுப்புக்களையும்,
ரஷ்யாவுடனான போரில் குளிரைத் தாக்குப்பிடிக்க
முடியாமல் தோல்வியுறுவதுவரை
ஒன்றையும் விடாமல் முன்பே விவரித்து எழுதி
வைத்திருந்ததும் விந்தையானதாகும்
ஹிட்லரின் பிறப்பு, வளர்ப்பு, ஜெர்மனியில் அவர்
அமைத்த ராணுவ அரசு, பிறகு உலகம் முழுவதையும்
பிடிப்பதற்காக 1939 ஆம் ஆண்டில் அவர் துவக்கிய
இரண்டாவது உலகமகாயுத்தம் ஆகியவற்றையும்
எழுதிவைத்திருந்தார். அவை அனைத்தும்
சரியாக நடந்தன.
ஹிட்லரின் பிரச்சார மந்திரியான கோயபல்ஸின்
மனைவி ஃப்ரைன் 1939ம் ஆண்டு அந்த நூலைப்
படித்துவிட்டு, ஹிட்லரின் சாகசங்கள்
அந்த நூலில் விவரிக்கப்பட்டு இருப்பதைக்
ஹிட்லரிடம் காண்பிக்க, ஹிட்லர் அந்தப் பக்கங்
களைப் பிரதி எடுத்து ஐரோப்பா முழுவதும்
தூவ விட்டார்.
அச்செய்தி இங்கிலாந்து மக்களைக் கவலையில்
ஆழ்த்த, அப்போது அங்கே பிரதமராக இருந்த
வின்ஸ்டன் சர்ச்சில், நாஸ்டர்டாமஸின்
நூலை வாங்கிப் படித்து, அதில் ஹிட்லரின்
வீழ்ச்சியைப் பற்றி நாஸ்டர்டாமஸ் எழுதியிருந்ததை
துண்டுப் பிரசுரமாக்கித் தன் தேசம் முழுவதும்
வெளியிட்டு அவநம்பிக்கையிலிருந்து தன்
தேசமக்களை மீட்டார்.
இதெல்லாம் வரலாறு!
அதுபோல் அமெரிக்காவின் விடுதலைப்போரைப்
பற்றியும், அமெரிக்க ஜனாதிபதிகள் அபிரகாம்
லிங்கன், கென்னடி போன்றவர்கள் சுட்டுக்
கொல்லப்படுவார்கள் என்பதையும் நாஸ்டர்டாமஸ்
தன் நூலில் குறிப்பிட்டுள்ளது மிகவும் ஆச்சரியமான
விஷயங்கள். ஏனென்றால் அந்தநாடு நாஸ்டர்டாமஸ்
காலத்தில் உருவாகக்கூட இல்லை என்பது
வியக்கத்தக்க உண்மை!
இந்தியாவைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறாரா?
ஏன் எழுதாமல் - பல விஷயங்க்ளை எழுதியுள்ளார்
அவற்றில் முக்கியமானது. 21 ஆம் நூற்றாண்டில்
உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத்
திகழும்!
நாஸ்டர்டாமஸின் தீர்க்கதரிசனங்கள் (தொடர்ச்சி)
ஒரு நாள் ப்ளோரன்ஸ் டி வில்லி எனும் செல்வந்தர்
வீட்டிற்கு விஷேச அழைப்பின் பெயரில் நாஸ்ட்ரடாமஸ்
விருந்திற்குச் சென்றிருந்தார்.
அன்றைய தினம் மாலையில் அந்த செல்வந்தர் வீட்டுத்
தோட்டத்தில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தனர்.
அங்கே அப்போது இரண்டு பன்றிக் குட்டிகள் விளையாடிக்
கொண்டிருந்தன.
அவற்றைச் சுட்டிக் காட்டிய , செல்வந்தர் நாஸ்ட்ரடாமஸிடம்
கேட்டார்.
"இந்தப் பன்றிக்குட்டிகளின் எதிர்காலத்தைப் பற்றி உங்களால்
ஏதாவது கூற முடியுமா?"
உடனே நாஸ்ட்ரடாமஸ் தயக்கமின்றிக் கூறினார்
" வெள்ளைப் பன்றிக்குட்டியை ஒரு நரி தின்றுவிடும். கருப்புப்
பன்றிக்குட்டியை இன்றிரவு நாம் தின்னப் போகிறோம்"
அதைப் பொய்யாக்க விரும்பிய செல்வந்தர், தன்னுடைய
வேலைக்காரர்களை ரகசியமாக அழைத்து, வெள்ளைப்
ப்ன்றிக்குட்டியைக் கொன்று இரவு உணவாக அதைச்
சமைக்கும்படி உத்தரவிட்டார்.
அன்று இரவு இருவரும் மேஜையில் அமர்ந்து உணவு
சாப்பிடும்பொழுது," நாஸ்ட்ரடாமஸ், இப்போது சொல்லுங்கள்
நாம், சாப்பிட்டுக்கொண்டிருப்பது,கருப்புப் பன்றியின்
இறைச்சியா அல்லது வெள்ளைப் பன்றியின்
இறைச்சியா?"
அதற்கு நாஸ்ட்ரடாமஸ் புன்னகையுடன் பதில் சொன்னார்,
“எனது வார்த்தைகள் தவறாது. மறுத்துச் சொல்வதும்
கிடையாது. நீங்கள் உங்கள் சமையல்காரரை அழைத்துத்
தெரிந்து கொள்ளுங்கள் - கருப்பா அல்லது வெள்ளையா என்று!"
உடனே அந்த வீட்டின் சமையல்காரர் அங்கே அழைத்து
வரப்பட்டார். வந்தவர் சொன்னார்.
"என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் சொன்னபடியே
வெள்ளைப் பன்றியைத்தான் முதலில் வெட்டிச் சிறு சிறு
துண்டுகளாக்கி மேஜை மேல் வைத்துவிட்டு உள்ளே சென்று
சமையலுக்கு வேண்டிய சேர்மானப் பொருட்களை எடுத்துக்
கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் உங்கள் மகன்
வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்திருந்த நரி ஒன்று
இந்தப் பன்றிக் கறியின் வாசனையை மோப்பம் பிடித்துத்
கொண்டு உள்ளே வந்து அவற்றைக் குதறித்தின்ன
ஆரம்பித்து விட்டது. நரி வாய்வைத்துக் குதறியதை
உங்களுக்குச் சமைக்க வேண்டாம் என்று அதை
அப்படியே நரிக்குப் போட்டு விட்டுப் பிறகு, கருப்புப்
பன்றியைக் கொன்று துண்டுகளாக்கி உங்கள்
இருவருக்கும் உணவாகச் செய்தேன்"
அசந்துபோன செல்வந்தர் நாஸ்ட்ரடாமஸிடம், அவரைச்
சோதனைகுட்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டதுடன்,
பெரும் வெகுமதிகளையும் கொடுத்து அவரை அனுப்பினார்
-------------------------------------------------------
நாஸ்டர்டாமஸ் இரவில்தான் எதிர்காலத்தில் நடக்க
விருப்பவைகளைக் கணித்து எழுதினார். ஆனால் மதத்
தலைவர்களுக்குப் போக்குக் காட்டவும், சிறை தண்டனை
யிலிருந்து தப்பவும் எகிப்திய நூல் ஒன்றின் ஆதாரத்தைக்
கொண்டு எழுதுவதாகச் சொல்லி வந்தார்.
பிரான்ஸில் ஒரு சிற்பி செய்த கன்னிமேரியின் சிலையைப்
பார்த்து, நாஸ்டர்டாமஸ் அது கன்னி மேரியின் சிலை
இல்லை. பேயின் சிலை என்றார். அது சிற்ப சாஸ்திரப்படி
இல்லையென்பதற்காகவே அப்படிச் சொன்னார்.
அரசாங்கம் அவரை நாத்திகன் என்று சொல்லிக் கைது
செய்ய உத்தரவிட்டது. அவர் அதிலிருந்து தப்பி
ஊரைவிட்டே ஓடினார். ஆறு ஆண்டுகாலம் நாடோடி
யாகப் பல ஊர்களில் சுற்றித் திரிந்துவிட்டுப் பின்
மறுபடியும் பிரான்ஸிற்கு வந்தார்.
1555 ஆம் ஆண்டுதான் தன்னுடைய முதல் நூலை எழுதி
முடித்தார்.நாஸ்டர்டாமஸின் நூல்கள் லத்தீன் பேச்சு
மொழியில் கவிதை நடையில் அமைந்திருந்தன.
பாட்டிற்கு எட்டு வரிகள் வீதம் தலா நூறு
பாடல்களைக் கொண்ட பத்து தொகுதிகளாக
அவைகள் அமைந்திருந்தன.
அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் யாராவது ஆரூடம்
சொன்னால் அவரை சூன்ய மந்திரவாதி என்று பட்டம் சூட்டி
உயிரோடு எரிக்கவே கிளம்பி விடுவார்கள். அதோடு அரசால்
மோசடி ஆசாமி என்று கைது செய்யப்படும் சூழ்நிலையும்
நிலவியது. அதனால்தான் அவர் பல எதிர்கால நிகழ்வுகளை
கணிப்புக்களை ச்ங்கேதக் குறிப்பாக எழுதிவைத்தார்.
அது விமானப் போக்குவரத்து தோன்றாத காலம். ஆனால்
நாஸ்டர்டாமஸ், வரப்போகும் விமானப் போக்குவரத்து,
இரண்டாவது உலகப்போர், ஹிட்லர், கென்னடியின் மரணம்
அதயதுல்லா கோமெனியின் அரசியல் எழுச்சி என்று பல
விந்தையான கணிப்புக்களைத் த்னது தீர்க்க தரிசனத்தால்
460 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவைத்துவிட்டுப்போனார்
அது நிதர்சனமான உண்மை என்பதை அவருடைய நூல்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன.
அவருடைய கையெழுத்துப் பிரதி இன்றும் பிரஞ்சு அருங்
காட்சியகத்தில் உள்ளது.
---------------------------------------
Nostradamus பற்றிய முழு விவரங்களுக்கான
இணைய தளம்:
----------------------------------
நாஸ்டர்டாமஸின் மொத்த புத்தகத்தின் வரிகளையும்
பார்ப்பதற்கான இணைய தளம் இங்கே உள்ளது: