• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜோதிட வகுப்பு 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
தசாபுக்தி பலன்களின் மூன்றாவது பகுதியைக்
கீழே கொடுத்துள்ளேன்.

இத்துடன் தசாபுக்திப் பலன்கள் பகுதி நிறைவுறுகிறது!

1. கிரகங்கள் ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருக்கும்
ஜாதகர்களுக்கு திசைகளும், புத்திகளும் நல்ல
திசைகளில் அதிக நல்ல பலன்களையும்,
மோசமான திசைகளில் குறைவான தீய
பலன்களையும் மட்டுமே கொடுக்கும்


2. அதே கிரகங்கள் ஜாதகத்தில் பகை வீடுகளிலும்
அல்லது நீசம் பெற்றும் இருக்குமானால் நல்ல
திசைகளில் குறைவான நல்ல பலன்களையும்,
மோசமான திசைகளில் அதிகமான் தீய பலன்களையும்
கொடுக்கும்
3. கேந்திரம், திரிகோணங்களில் அமர்ந்திருக்கும்
கிரகங்கள் தங்களுடைய தசாபுக்திகளில் நன்மையான
பலன்களையும், ஆறாம் இடம், எட்டாம் இடம்,
பன்னிரெண்டாம் இடம் ஆகிய இடங்களில்
அமர்ந்திருக்கும் கிரகங்கள் தங்களுடைய
தசாபுக்திகளில் அதிகமான தீமைகளைத்தான்
கொடுக்கும்
வாசகர்கள் மேற்கூறியவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்
---------------------------------------------------------------------------

===================================================












அவரவர் தங்கள் ஜாதகத்திற்கு உரிய மகா
திசைகளையும், புக்திகளையும் யாருடைய உதவியும்
இன்றித் தாங்களே கணித்துப் பார்பதற்கும்,
உத்தேசமாக பலன்களை அறிந்து கொள்வதற்கும்
வகை செய்யும் விதமான பாடங்கள் இவை.

அடுத்தது கோச்சாரம் - கோள் சாரம் பற்றிய பாடம்.
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
மங்குசனியும் பொங்குசனியும்!

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 28

கோச்சாரம் (கோள்களின் சாரம்)

ஒரு குடும்பப் பெண்ணிற்குப் பல பணிகள் உள்ளன.
தாயாக, தாதியாக, தாரமாக, தோழியாக அவள்
அவ்வப் போது தன் கடமைகளைச் செய்யவேண்டும்.
பகல் முழுவதும் அவள் தாதியாகத் தன்வீட்டு வேலை
களைச் செய்ய வேண்டும், தன் குழந்தைகளுக்கு
நல்ல தாயாக இருந்து பணிவிடைகளைச் செய்ய
வேண்டும். தன் கணவனிற்குத் தோழியாக இருந்து
அரவணைப்பையும், தாரமாக இருந்து அவனுடைய
அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அவள் பன்முகம் காட்டிப் பணி
களைச் செய்ய வேண்டும். பெண்ணிற்கு என்றில்லை.
ஆணிற்கும் அதேபோல பல பணிகள் உண்டு.
தந்தையாக, பொருளீட்டிக் குடும்பத்தைக் காக்கும்
காவலனாக, தன் மனைவிமீது அன்பைப் பொழியும்
கணவனாக அவனுக்கும் பன்முகப் பணிகள் உள்ளன.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் கோள்
களுக்கும் அவ்வாறு பல பணிகள் உள்ளன!

Natal Chart எனப்படும் பிறந்த ஜாதக அமைப்பில்
உள்ள பலன்களை அவ்வப்போது அவைகள் கொடுத்துக்
கொண்டே இருக்கவேண்டும். அதேபோல தங்களுக்குரிய
திசைகள் (Main periods) அல்லது புக்திகள் (Sub
Periods) வரும்போது அதற்குரிய பலன்களையும்
ஜாதகனுக்குக் கொடுக்க வேண்டும். அதோடு சுழற்சியில்,
வான வெளியில் சுழன்று வரும்போது (That is in
transit) சுழற்சியில் ஒவ்வொரு ராசிக்கும் மாறும்போது
அதற்கென்று விதிக்கப்பெற்றுள்ள பலன்களையும்
வழங்கவேண்டும்.

சுழற்சியில் என்ன பலன் என்கிறீர்களா?

சனீஷ்வரனையே எடுத்துக்கொள்வோம் - அவர் ஒரு
சுற்றை முடிக்க சுமார் முப்பது ஆண்டுகள் ஆகும்.
ஒவ்வொரு ராசியிலும் அவர் இரண்டரை ஆண்டுகள்
சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில்,

1. 12ம் இடம், 1ம் இடம், 2ம் இடம் ஆகிய
இடங்களில் ஏழரை ஆண்டுச் சனியாகவும்
2. 8ம் இடத்தில் அஷ்டமச் சனியாகவும், நான்கு
ராசிகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆண்டுகள்
பெரும் அளவு தீயபலன்களையே கொடுப்பார்

ஏழரை ஆண்டுச் சனி (எழரை நாட்டுச் சனி அல்லது
சாடே சனி என்றும் சொல்வார்கள்) ஜாதகனின் சந்திரன்
அமர்ந்த ராசிக்குப் பன்னிரெண்டாம் இடத்தில் சனி
வந்த நாள் முதலே துவங்கி ஏழரை ஆண்டுகள் வரை
நீடிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் ஜாதகருக்குப்
பொதுவாக தீய பலன்களே நடைபெறும்.

அனைவருடனும் கருத்து வேறுபாடுகள்,சச்சரவுகள்,
வம்பு, வழக்குகள், தொழிலில் நஷ்டம் அல்லது பார்க்கும்
வேலையில் தொல்லைகள், இடமாற்றங்கள், குடும்பத்
தினருக்கு உடல் நலக் குறைவு, மனவேதனை, அமைதி
யின்மை போன்றவைகள் ஏற்பட்டு ஆட்டிப்படைக்கும்.
’சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' என்று
பாடும் அளவிற்குப் பாதகங்களை ஏற்படுத்தி விடுவார்.

சந்திர ராசியிலிருந்து 3ம்வீடு, 6ம்வீடு, 11ம் வீடு ஆகிய
மூன்று ராசிகளைத்தவிர மற்ற இடங்களில் அவர் நன்மை
களைச் செய்வதில்லை. இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு.
அவர் சஞ்சரிக்கும் ராசி அஷ்டவர்க்கத்தில் 30 பரல்களுக்கு
மேல் பெற்ற ராசியாக இருந்தால் அந்த இரண்டரை
ஆண்டுகள் ஜாதகனுக்குத் தீமையான பலன்கள் இருக்காது.
அதைப் பற்றிய விவரம் அஷ்டவர்க்கப் பாடம் நடத்தப்படும்
போது விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கப்படும்.

ஒருவர் 90 ஆண்டுகள் வரை வாழ்கின்றார் என்று வைத்துக்
கொண்டால், அவர் வாழ்க்கையில் மூன்று முறைகள் இந்த
ஏழரை நாட்டுச் சனி வந்து போய் விடும்.

அவற்றை முறையே மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி
என்பார்கள்.

முதலில் வரும் ஏழரை நாட்டுச் சனி மங்குசனி எனப்படும்.
அது அறிவு,கல்வி, வேலை வாய்ப்பு அனைத்தையும் மங்க
வைத்து விடும். மொத்தத்தில் வெறுத்து விடும்.(Defame
and detachment Period என்றும் சொல்லலாம்)

அடுத்த சுற்றில் வரும் சனி கஷ்டத்தைக்
கொடுக்கும், ஆனால் அதே நேரத்தில் பல
அனுபவங்களையும், வாய்ப்புக்களையும்
கொடுத்து உயர்த்தி விடும் (Elevation Period
எனச் சொல்லலாம்) அதனால்தான் அந்தக்
காலகட்டத்தைப் பொங்குசனி' என்பார்கள்.

மூன்றாவது சுற்றில் வரும் ஏழரை நாட்டுச் சனி
பொதுவாக ஜாதகனுக்கு, எட்டாம் வீட்டில் நிர்ணயிக்கப்
பெற்ற ஆயுள் அளவு (Span of Life) நிறைவு பெறும்
காலமென்றால், அவனுடைய கதையை முடித்துக்
கையோடு கூட்டிக் கொண்டுபோய் விடும்.

சிலர் விதிவிலக்காக மூன்றாவது சுற்றையும் தாக்குப்
பிடித்துக் கொண்டு உயிரோடு இருப்பார்கள். அவர்கள்
தீர்க்க ஆயுள் பெற்ற ஆசாமிகள். அவர்கள்,
அவர்களின் ஜாதகத்தின்படி (In the period of Second
Lord or Seventh Lord) அதற்குரிய நேரத்தில் இறைவனடி
சேர்வார்கள் அல்லது இயற்கை எய்துவார்கள்

இதுபோல குரு பகவானும் தனது சுழற்சியில் ஒவ்வொரு
ராசியிலும் தான் சஞ்சரிக்கும் காலத்தில் அததற்குரிய
பலன்களை வாரி வழங்குவார்.அவர் ஒரு சுற்றை முடிக்க
சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு
ராசியிலும் அவர் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார்.
அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில்,

7ம் வீடு, 11ம் வீடு, 5ம் வீடு, 9ம் வீடு ஆகிய
இடங்களில் சஞ்சரிக்கும் போது மிகவும்
நன்மையான பலன்களைக் கொடுப்பார்


வீட்டில் சுப காரியங்களை நடத்தி வைப்பார்,
திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம்
நடைபெறும். நல்ல வேலைக்காக ஏங்கிக்
கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். செல்வம் சேரும், வீடு, நில
புலன்கள் வாங்கும் வாய்ப்புக்களை
உண்டாக்குவார். வழக்குகள் வெற்றி பெரும்.
மழலைச் செல்வம் கிடைக்கும். வீட்டில்
சந்தோஷமான சூழ்நிலை இருக்கும்.
மொத்தத்தில் 'உலகம் பிறந்தது எனக்காக,
ஓடும் நதிகளும் எனக்காக’ என்று பாட
வைத்து விடுவார்
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 29
ராசி பலன்கள்

தினசரிப் பத்திரிக்கைகள் எல்லாம் போட்டி போட்டுக்
கொண்டு அன்றைய ராசிபலன்களை எழுதிப் பிரசுரிப்
பதைப் பார்த்திருப்பீர்கள். பலர் தலைப்புச் செய்தி
என்ன என்று பார்த்தவுடன் அடுத்து விரைந்து
பார்ப்பது அந்த ராசிபலன் பகுதியைத்தான்.

இளைஞர்கள் எல்லாம் விளையாட்டுச் செய்திகளுக்கு
அல்லது சினிமாச் செய்திகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் நடுத்தரவயதுக்
காரர்களும், வயதான பெரிசுகளும் ராசிபலன்
பகுதியைத்தான் முதலில் விரும்பிப் பார்ப்பார்கள்
அதற்குப் பிறகுதான் மற்ற பகுதிகள்

சரி, தினமும் ஒரு பத்திரிக்கைக்கு ராசிபலன்களை
எழுதிக் கொடுக்கும் ஜோதிடர் எந்த அடிப்படையில்
அதை எழுதுகின்றார்?

சந்திர, சூரிய சுழற்சியை வைத்து அதை அவர் எழுதுவார்!

சூரியன் மாதம் ஒரு ராசி, சந்திரன் இரண்டேகால்
நாளைக்கு ஒரு ராசி (தினமும் ஒரு நட்சத்திரம்) ஆகவே
ஒவ்வொரு ராசிக்கும் உரிய தினசரிப் பலனை இந்த
இரண்டு கோள்களின் நிலைமையை வைத்து எழுதிக்
கொடுத்து விடுவார்.

அது 100% சரியாக இருக்குமா?

அது பொதுப்பலன்தான். ஆகவே பொதுவில் சரியாக
இருக்கும். உதாரணத்திற்குப் பணச் சிக்கல் என்று ஒரு
ராசிக்குச் சொல்லப்பட்டிருந்தால், பணத்தை வைத்து
எத்தனை விதமான சிக்கல்கள் இருக்கின்றனவோ
அததனை விதமான சிக்கல்களில் ஏதாவது ஒன்று
அவரவர் சொந்த ஜாதகம், நடப்பு திசை, நடப்பு
புக்திகளை வைத்து அன்றைக்கு வரும்!

பணத்தைத் தேடுவதிலும் (சம்பாதிப்பதிலும்) சிக்கல்
இருக்கிறது. கடனாகக் கொடுத்த பணத்தைத் திருப்பி
வாங்குவதிலும் சிக்கல் இருக்கிறது. பணப் பற்றாக்
குறையும் சிக்கல்தான். பணம் அதிகமாக இருந்தால்
அதைப் பாதுகாப்பதில் - முதலீடு செய்வதில்- சிக்கல்
உள்ளது!

செலவிற்குப் பணம் இல்லாமல் இருப்பதும் சிக்கல்
தான், கொடுத்த இடத்தில் வாங்கிக் கொண்டு போனவர்
சொன்னபடி பணத்தைத் திருப்பித்தராமல்
இழுத்தடிப்பதும் சிக்கல்தான்.

காரிய தாமதம் என்றால், Routine Workஐத் தவிர்த்து
நாம் செய்வதற்கு முனைப்படுகின்ற காரியம்
அன்றைக்கு நிறைவேறாமல் போய்விடும்.

சூரியன் 11-3-10-6 ம் இடங்களில் இருக்கும் மாதங்களும்,
சந்திரன் 7-1-6-11-10-3 ம் இடங்களிலும் இருக்கும்
நாட்களும் பொதுவில் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.
சந்திரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்திலும்,
12ம் இடத்திலும் சஞ்சாரம் செய்யும் நாட்கள் மகிழ்ச்சி
யைத் தராது.

சரி அதை எப்படித் தெரிந்து கொள்வது?

வெரி சிம்ப்பிள். நீங்கள் திருவோண நட்சத்திரம்
என்றால், உங்களுடைய ராசி மகரம். அதிலிருந்து
எட்டாவது ராசி சிம்மம். சிம்மத்திற்குரிய நட்சத்
திரங்கள் -மகம் - பூரம் - உத்திரம் முதல் பாதம்
(First Six Hours of Uththiram Star). அந்த நட்சத்திரம்
உடைய நாட்கள் சிறப்பாக இராது.

அதுபோல அதே திருவோண நட்சத்திரத்திற்குப்
பன்னிரெண்டாம் இடம் என்னும்போது அது தனுசு
ராசி -அதற்குரிய நட்சத்திரங்கள் மூலம் - பூராடம்
- உத்தராடம் முதல் பாதம் (First Six Hours of
Uththiradam Star). அந்த நட்சத்திரம் உடைய நாட்களும்
சிறப்பாக இராது.

இதுபோல ஒவ்வொரு ராசிக்காரரும் தனக்குச்
சாதகமாக அல்லது பாதகமாக உள்ள நட்சத்திரங்களைக்
குறித்து வைத்துக் கொள்ளலாம்.

அந்த நாட்களில் என்ன செய்யலாம்?

கவுந்தடித்து வீட்டில் படுத்துக் கொண்டு விடலாமா?
கூடாது. அன்றாட வேலைகளைச் செய்யுங்கள்.
That is your routine work. அதற்கெல்லாம் ஆபிஸில்
லீவு கிடைக்குமா என்ன?

அன்றாட வேலைகளைச் (routine work) செய்வதற்கு
நாள், நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை!

விஷேசமாக அல்லது புதிதாகச் செய்யவுள்ள
வேலைகளை அன்று செய்யாமல் தவிர்க்கலாம்.
திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகிறீர்கள்
என்றால அந்த நாட்களைத் தவிர்க்கலாம். புதிதாகக்
கார் வாங்கப் போகிறீர்கள் என்றால அந்த நாட்களைத்
தவிர்க்கலாம். என்ன, நீங்கள் தேடிப்போகும் மாடல்
அல்லது கலர் கிடைக்காது!
(இரண்டிற்கும் தான்:))))

ஆண்டுப் பலன்களைச் சனி, மற்றும் குருவை வைத்தும்,
மாத பலன்களைச் சூரியனை வைத்தும், நாள் பலன்களைச்
சந்திரனை வைத்தும் பார்க்க வேண்டும்.
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 30
செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஜாதகம்
ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள்.


=======================================
1. அவர் மிதுன லக்கினக்காரர். மிதுன லக்கினக்காரர்கள்
அனைவருமே அழகிய தோற்றமுடையவர்களாக
இருப்பார்கள். (உதாரணம், - மறைந்த நடிகர்
திரு.ஜெமினி கணேசன் மற்றும் மத்திய நிதியமைச்சர்
திரு. ப. சிதம்பரம் போன்றவர்கள்)

2. லக்கினாதிபதி புதன் 9ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.
அது மிதுன லக்கினக்காரர்களுக்குத் திரிகோண வீடு.
பாக்கிய ஸ்தானம் (House of Gains)
புதனுக்கு முதல்தர நண்பனான் சனியின் வீடு.
ஆக்வே அங்கே சிறப்பாக அமர்ந்த புதன் அவருக்குச்
சிறிய வயதிலேயே பணம் புகழ், செல்வாக்கு
அனைத்தையும் பெற்றுத்தந்தார்.

3. ஐந்தாம் வீடான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு
அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். பத்தாம்
வீட்டில் அமர்ந்துள்ளார். அது மிதுன லக்கினக்காரர்
களுக்குக் கேந்திர ஸ்தானம். சுக்கிரன் வாழக்கை
வசதிகளுக்கெல்லாம் அதிபதி அவர் உச்சம் பெற்றதால்
எல்லா வசதிகளையும் கொடுத்திருக்கிறார்.

4. பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன்
உச்சம் பெற்று அமர்ந்த பத்தாம் வீட்டிற்கு அதிபதியான்
குரு பகவான் 7ம் வீட்டில் சிறப்பாக அமர்ந்து லக்கினத்
தைப் பார்வையில் வைத்திருப்பதோடு, தன்னுடைய
10ம் வீடான தொழில் ஸ்தானத்திற்குரிய பணியைச்
சிற்ப்பாகச் செய்து அம்மையாரை முதலமைச்சர் பத்விவரை
கொண்டுபோய் உட்காரவைத்தார்.

5. ஐந்தாம் வீட்டில் அமர்ந்த ஞானகாரகனான் கேது
அம்மையாருக்குப் பன்மொழித் திறமையையும், ஆழ்ந்த்
நுண்ணறிவையும் கொடுத்தார்.

6. பதினொன்றில் அமர்ந்த ராகு அவருக்குப் பெரும்
புகழையும், செல்வாக்கையும், ஏராளமான தொண்டர்களையும், விசுவாசிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

7. சூரியனும், புதனும் சேர்க்கை பெற்று (Association) 9ல்
அமர்ந்துள்ளதைக் கவனியுங்கள். அரசியலிலும், அரசிலும்
அம்மையாருக்கு அரும்பணிகளை ஏற்படுத்திக் கொடுத்தது
அவர்களின் சேர்க்கைதான்

8. செவ்வாயும், சந்திரனும் சிம்மத்தில் சேர்ந்து சசி மங்கள
யோகத்தை ஏற்படுத்தினார்கள். பெண்ணாகப் பிறந்தாலும்
பெண்களுக்குள் பிரபலமாகி நாட்டின் மிகப் பிரபல்மான பத்துப் பெண்மணிகளில் ஒருவராக அம்மையாரை
முன்னிறுத்தியது அந்த சேர்க்கைதான்

9. குறையில்லாத் ஜாதகமே இருக்காது என்ற நியதிக்கு
ஏற்ப அம்மையாரின் ஜாதகத்தில் லக்கினத்தில் மாந்தி
அமர்ந்தது குறைதான். அவருடைய அதீத
கோப உணர்வும், பிடிவாதமும் பிரசித்தமானது அல்லவா
அத்ற்குக் காரணம் லக்கினத்தில் அமர்ந்த மாந்திதான்.

10. அதுபோல இரண்டாம் வீடான் குடும்பஸ்தானத்தில்
(House of Family Affairs) வந்து அமர்ந்த சனியால் அவருக்குக்
குடும்ப வாழவு அமையாமல் போய்விட்டது.

11. தொழில் ஸ்தானமான் மீனத்தில் கலைகளுக்கு
அதிபதியான் சுக்கிரன் இருப்பதால்தான் அவர் திரைத்
துறையில் நுழைந்து பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டினார்.

12. பதினொன்றில் அமர்ந்த ராகு ராஜயோகத்தைக்
கொடுத்தார். அவர் அமர்ந்த இடத்திற்கு நாயகனான
செவ்வாயின் திசையில்தான் அவர் முதலமைச்சர் ஆனார்.
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
கோச்சார பலன்கள் ( தொடர்ச்சி)

சந்திரனின் கோச்சாரபலன்கள்
1ல் நல்ல பலன்கள் நடைபெறும்
2ல் தீய பலன்கள்
3ல் நல்ல பலன்கள் நடைபெறும்
4ல் சுமாரான் பலன்கள்
5ல் தீய பலன்கள்
6ல் நல்ல பலன்கள் நடைபெறும்
7ல் நல்ல பலன்கள் நடைபெறும்
8ல் மோசமான பலன்கள்
9ல் தீய பலன்கள்
10ல் நல்ல பலன்கள் நடைபெறும்
11ல் நல்ல பலன்கள் நடைபெறும்
12ல் தீய பலன்கள்

குறுக்கு வழியில் கணக்கிட்டால் சந்திரன் ஒரு சுற்றில்
அதாவது 27 நாட்களில் பாதி நாட்கள் நல்ல பலன்களையும்,
மீதி நாட்கள் தீய ப்லன்களையும் கொடுக்கும்.

அஷ்டவர்க்கத்தில் சந்திரன் சுற்றிவரும் வீடுகளில்
அதனுடைய சுயவர்க்க எண் 4ற்கு மேற்பட்டால்
மேற்கூறிய விதிகளை மீறி நல்ல பலன்களே நடைபெறும்!
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
இன்றைய வகுப்பு இத்துடன் முடிவு பெற்றது. உங்களது கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். மீண்டும் சந்திப்போம் அன்பர்களே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top