• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜோதிட வகுப்பு 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
நீண்ட இடைவெளி விட்டதற்கு வருத்தங்கள் அன்பர்களே. ஜோதிட வகுப்பு மூன்றுக்கு போகலாமா? இந்த வகுப்பில், எனக்கு தெரிந்தவையோடு, பல்வேறு தளங்களிலிருந்து தொகுத்தும் தருகிறேன்.

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21

தசா புக்திகள்

(இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு முன் பதிவையும் படிக்க வேண்டும்!)

தசாபுத்தி என்றால் என்ன?

ஒவ்வொரு கிரகத்திற்கும் தசாபுக்திகள் (Own Periods) உண்டு. ஒவ்வொரு கிரகமும் அதனுடைய தசாபுக்தி நடக்கும்போதுதான் பலனைக் கொடுக்கும்.

(Awarding the benefits to the native of the horoscope) என்று முன் பதிவில் எழுதியிருந்தேன்.

தசா புக்திகளைபபற்றி மட்டும் இப்போது பார்ப்போம். ஒவ்வொரு தசாவிற்கும் (Major Periods)

புக்திக்கும் (Sub-periods) உள்ள பலன்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

எல்லோரும் 27 நட்சத்திரங்களுக்குள் ஒன்றில்தான் பிறந்திருப்போம்.

ஒவ்வொருவருக்கும் தான் பிறந்த நட்சத்திரம் எது?

அதன் அதிபதி(Owner) யார்? என்பது தெரிந்திருக்க வேண்டும். .

(கற்றுக் கொள்வதற்கும், நினைவில் வைத்துக்கொள்வதற்கும் ஒரு குறுக்கு வழி இருக்கிறது. அதைத்தான் இப்போது சொல்லித்தரப் போகிறேன்)

27 நட்சத்திரங்களில் முதலில் உள்ள ஒன்பது நட்சத்திரங்களை மட்டும் வரிசையாக எழுதுங்கள்.

எழுதிய பிறகு அடுத்துள்ள 18ல் 9 நட்சத்திரத்தில் முதலில் எழுதிய ஒன்பது நட்சத்திரங்களுக்கு பக்கத்திலேயே எழுதிக் கொண்டு வந்து அதற்கு அடுதத ஒன்பதையும் அதே வரிசையில் தொடர்ந்து கீழ்க் கணட மாதிரி எழுதிக் கொள்ளூங்கள்.

என்ன எழுதிக் கொண்டீர்களா? எழுதியது இப்படித்தான் இருக்கும்

அதோடு முதல் வரிசையில் உள்ள நட்சத்திரங்களுக்கு அதிபதி கேது என்று துவங்கி, ஒவ்வொரு வரிசையிலும் உள்ள நட்சத்திரங்களுக்கும் அதிபதி யார் யாரென்று அதே அட்டவணையில் குறிப்பிட்டுள்ளேன்.

=============================================

Table showing the 27 Stars and their owners

1588859387178.png

=======================================================

Tables showing the Major Periods (தசா) and Sub-Periods (புக்தி)









===================================================

இது மிக மிக முக்கியமான பாடம். ஆக்வே சோமபலை விடுத்து இதை மனனம் செய்து மனதில் ஏற்றிவைப்பது அவசியம்!

இந்த அட்டவனையின் உபயோகம் என்னவென்றால் ஒருவர் தன்னுடைய பிறந்த நட்சத்திரத்தைச் சொல்லியவுடன், அவருடைய நட்சத்திரத்திற்கு அதிபதி யாரோ அந்த அதிபதியின் தசாதான் அந்த ஜாதகரின் துவக்க தசா.

அதைத் தொடர்ந்து இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படியே அடுத்தடுத்த தசாக்களும் அவருக்கு வரும்.

அனைவருக்கும் இது அறுதியானது. நிச்சயமானது! இதில் மாற்றம் ஏதும் 100% இருக்காது. இதன்படியேதான் தசாக்கள் வரும். அந்தந்த தசாக்களின் படியேதான் பலன்களும் (நல்லதோ அல்லது தீயதோ) கிடைக்கும் அல்லது நடக்கும்!

---------------------------------------------------------------------------------

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு துவக்க தசா சந்திரனுடைய தசாதான். அதுபோல மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கேது தசாதான் துவக்க தசா!

----------------------------------------------------------------------------------------

தசா சரி, புக்தி என்றால் என்ன?

ஒரு கிரகத்தின் தசாவின் உட்பிரிவுதான் புக்தி!

உதாரணத்திற்கு ராகு தசாவின் காலம் 18 வருடங்கள் அந்த 18 வருடங்களுமே ராகுவின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தால் என்னா ஆகும்? மனிதனை வாட்டிப் பிழிந்து விடாதா?

அதனால் அந்த ராகுவின் தசாவே 9 பிரிவுகளாகப் பிரிக்கப் பெற்று ஒரு ஒழுங்கு முறையில் மற்ற கிரகங்களூக்கும் உட்பிரிவாக வழங்கப் பெற்றிருக்கிறது.

உட்பிரிவையும் அதற்குரிய மாதங்கள், நாட்களையும் அட்டவனையில் கொடுத்துள்ளேன். பார்க்க வேண்டுகிறேன். சனி தசா 19 வருடம், ராகு தசா 18 வருடம், கேது தசா 7 வருடம் மனிதனகப் பிறந்தவன் இந்த தீய கிரகங்களின் தசைகளில் ஒன்றிலாவது நுழைந்து, அடிபட்டு வெளியே வந்துதான் ஆகவேண்டும்.

ராகு தசை உள்ளவனுக்கு கேது தசை வாரது. ஆனால் அவனுடைய ஒவ்வொரு தசையிலுமே கேது புக்தி நிச்சயம் வரும். அதுபோல சூரிய தசையில் பிறந்தவனுக்கு சுக்கிர தசை வராது. ஆனால் அவனுடைய ஒவ்வொரு தசையிலும் சுக்கிர புக்தி கண்டிப்பாக வரும்.

எல்லாருக்குமே நன்மைகளும் தீமைகளும், தசைகளும் புக்திகளும் பாகுபாடின்றி சம்மாகவே வழங்கப்பட்டுள்ளன என்பதற்கு இந்த தசா பலன்களே ஒரு நல்ல உதாரணம் ஒரேயடியாக அடிபடாமல், நடுவில் அடிபட்ட இடங்களுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொள்ளவும், உடம்பைத்தேற்றிக் கொண்டு மீண்டும் அடிவாங்கவும் வசதியாக வருபவைதான் மற்ற புக்திகள். ராகு தசை கேது புக்தியில் அடிவாங்கியவன்

ராகுதசை சுக்கிரபுக்தியில் உடம்பைத் தேற்றிக் கொள்வான். அதற்கடுத்து வரும் ராகு தசை சூரிய புக்தி மறுபடியும் சுழற்றி அடிக்க ஆரம்பித்துவிடும். ராகுவுடன் சூரியனும் சேர்ந்து கொண்டு சாத்தும்!

பிறகு அடுத்து வரும் ராகு சந்திர தசையில் அப்பாடா என்று மூச்சு விடுவான். நிம்மதியாக் இரண்டு வேளை உணவாவது வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவான். மறுபடியும் ராகு தசை செவ்வாய் புக்தி அவனை ஓட ஓட விரட்டும் அவனுடைய துன்பங்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டு, அதற்கு அடுத்த தசையான் குரு தசையில் அவன் காலெடி எடுத்து வைப்பான் . அன்றிலிருந்து விடிவுகாலம் ஆரம்பிக்கும் இதுபோல நல்ல தசையிலும் நல்லது இரண்டு மடங்காக நடக்கும். குரு தசையில் புதன் புக்தி, குரு தசையில் சுக்கிர புக்தி, குரு தசையில் சந்திர புக்தியெல்லாம் நன்மைகளை வாரி வழங்கிவிட்டுப் போய்விடும் ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவன் ஹோண்டா சிட்டி ஏ.ஸி காரில்

போக ஆரம்பித்து விடுவான். கும்பகோணத்தில் ஓட்டு வீட்டில் குடியிருந்தவன், மும்பை நாரிமன் பாயிண்ட் பகுதியில் சொந்த பிளாட்டிற்கு குடி போய்விடுவான். காயல் பட்டிணத்தில் படகோட்டிக் கொண்டிருந்தவன்

கோயம்புத்தூரில் ஐம்பது லாரிகளுக்குச் சொந்தக்காரனாகிவிடுவான். இது போன்று பள்ளத்தில் விழுந்து கிடப்பதும் அல்லது மேட்டில் (ஊட்டியில்) தோட்டம் துறவுகள் வாங்குவது போன்ற மாற்றங்களேல்லாம் தசா புக்திகளின் மாற்றங்களால்தான்.

சனியை விட ராகு கடுமையான் கிரகம் (Merciless Planet) என்பார்கள். ஆனாலும் ஜாதகத்தில் ராகு உச்சமாகவோ அல்லது லக்கின அதிபதியுடன் அதுவும் அது அதனுடைய நட்புக்கிரகமாக இருந்து நல்ல நிலையில் இருந்தாலோ எதிர்மாறாக மிகவும் அற்புதமான நல்ல பலன்களைக் கொடுக்கும்.

சிவாஜி கணேசன் அவர்களுக்கு அந்த மாதிரியான அற்புதமான பலனை ராகுதான் தந்தது.

பராசக்தி - 1952ம் வருடம்

வீயட்நாம் வீடு - 1970ம் வருடம்

இந்த இடைப்பட்ட 18 வருட காலத்தில் வெளிவந்த அவருடைய படங்கள் அனனத்துமே அவருக்குப் பெரும் புகழையும், செல்வத்தையும் வாரிக் கொடுத்தன!

ஒரு தசா நாதன் ஜாதகத்தில் வலுவாக இருக்கும்போது அவனுடைய தசையில் எல்லாமே வெற்றியாக இருக்கும் புத்தி நாதர்களின் குறுக்கீட்டையும் முறியடுத்து அந்த

வெற்றியை அவன் கொடுப்பான். அதற்கு திரு.சிவாஜி

அவர்களின் ஜாதகமே உதாரணம். ஆனால் அதற்குப் பிற்கு

வந்த தசைகளில் அவர் பெரும் வெற்றி எதையும்

பெற்வில்லை. அரசியலில் நுழைந்தும் அவரால் சோபிக்க

முடியவில்லை

அதேபோல் ஒரு தீய கிரகத்தின் தசை நடக்கும்போது

ஜாதகனுடைய ஜாதகத்தில் புக்தி நாதருடைய கிரகங்கள்

வலுவாக இல்லாவிட்டால், அந்த தசை மொத்தமும்

ஜாதகனை அடித்துத் துவைத்துப் பிழிந்து காயப்போட்டு

விட்டுப் போய்விடும்.

ஒரு பெரிய மல்ட்டி மில்லியனர், ஒரு தசையில்

அவருடைய செல்வம் பத்து மடங்காகப் பெருகியது.

ஆனால் அடுத்த தசையின் துவக்கத்திலேயே அந்த

தசைக்குரிய கிரகம் அவருக்கு வாத நோயை

உண்டாக்கி படுத்த படுக்கையாக வீட்டில் உட்கார

வைத்துவிட்டது! (யாரென்று சொல்லவில்லை.

முடிந்தவர்கள் ஊகம் செய்து கொள்ளுங்கள்)

எந்த தசையாக அல்லது புத்தியாக இருந்தாலும் சரி

நல்லது கெட்டது மாறி மாறி வரும் அமைப்புத்தான்

நல்லது. அதுதான் நமக்கு வேண்டும்!

கர்ப்பச்செல் இருப்பு என்றால் என்ன?

ஒரு குழந்தை திருவோண நட்சத்திரம் நான்காம்

பாதத்தில் பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம்

முதல் மூன்று பாதம் அந்தக் குழந்தைக்கு, அதன் தாயின்

கர்ப்பப்பையிலே கழித்துவிட்டபடியால் அந்தக் கழிவிற்குரிய

தசாபலன் கணக்கில் வராது. பிறந்தவுடன் மீதமுள்ள

நட்சத்திர தசா பலன்களதான் அந்தக் குழந்தையின்

பிறப்புக் கணக்கில் வரும்

திருவோண நட்சத்திரத்தின் அதிபதியான் சந்திரனுக்குரிய

பத்து வருட சந்திரதசைதான் அந்தக் குழந்தையின் துவக்க

தசை.

அதில் கர்ப்பதில் இருந்த பகுதிக்கான் பகுதியைக் கழித்து

விட்டால் ( 10 வருடம் கழித்தல் 4ல் 3 பங்கு = 10.00 - 7.5 = 2.5 வருடம்)

அதாவது 2 வருடம் 6 மாதம் தான் அந்த்க் குழந்தையின் இருப்பு

தசை . அதுதான் கர்ப்பச்செல் இருப்பு எனப்படும்

இது போன்று ஒவ்வொரு பிறப்பிற்கும் கணக்கிடப் பட்டு

ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருக்கும்

-------------------------------------------------------------------------------------

சரி, பிறப்பிலிருந்து நம்து நடப்பு திசையை எப்படிக் கணக்கிடுவது?

சுலபமான வழி கண்ணியில் கணித்து விடலாம்

சூப்பராக இருக்கும்!

அதற்கான் விவரங்களை என் முன் பதிவில் கொடுத்துள்ளேன்

இருந்தாலும் இன்னுமொருமுறை தருகிறேன்

அந்த இணையதள முகவரி இதுதான்

அதில் உங்களூடைய Birth Details ஐக் கொடுத்து விட்டால் போதும்

உங்களூடைய ஜாதகம், கெர்ப்பச்செல் இருப்பு, Major Period & Sub - Periods

எல்லாம் ஒரே வினாடியில் கிடைத்துவிடும். பிரிண்ட் எடுத்து

சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். இனி அடிக்கடி

அது உங்களுக்குத் தேவைப்படும்

------------------------------------------------------------------------------

கணினியை விட்டுத் தள்ளுங்கள். நமக்கு அது

தெரிந்திருக்க வேண்டாமா?

உதாரணத்தைற்க்காக ஒன்றை எழுதிக் காட்டியுள்ளேன்

ஒருவர் 10.02.1975 அன்று மாலை 4 மணிக்குப் பிறந்திருக்கிறார்

அவருடைய நட்சத்திரம் திருவோணம். கர்ப்பசசெல் இருப்பு

3 வருடம் 8 மாத்ங்கள் 2 நாட்கள்

அவருடைய நடப்பு தசைக் கணக்கு

1975 - 02 - 10 பிறந்ததேதி

0003- 08 - 02 கெர்ப்பச்செல் இருப்பு

-------------------

1978- 10. 12 சந்திர தசை முடிந்த நாள்

000 7 - 00 - 00 செவ்வாய் தசை

------------------------

1985 -10. 12 செவ்வாய் தசை முடிந்த நாள்

0018 - 00- 00 ராகு தசை

--------------------

2003 - 10 -12 ராகு தசை முடிந்த நாள்

0002- 01 -18 நாட்கள் குரு தசை குரு புக்தியில்

------------------------

2005 -12 - 00 குரு தசை குரு புக்தி முடிந்த நாள்

0002- 06 -12 நாட்கள் கு தசையில் சனி புக்தி

-------------------------------

2008 - 06 -12 குரு தசையில் சனி புக்தி முடியும் நாள்

0002 - 03- 06 குரு தசை புதன் புக்தி காலம்

இந்தக் கால் கட்டத்தில் வேலையில் மாற்றம் ஏற்படும், முன்னேறறம் ஏற்படும்

குருவும், புதனும் சேரும்போது உயர்வான மாற்றங்களை ஏற்படுத்துவார்கள்

12.10.2003 ல் இருந்தே அதாவது ராகு தசை முடிந்த நாளில் இருந்தே அவருக்கு நல்ல காலம் என்றாலும் உயர்வான காலம் என்பது 12.06.2008ல் இருந்துதான் இதைக் கண்டு பிடிப்பதற்குத்தான் இத்தனை பாடு அதற்கு உதவுவதுதான் புக்திகள் (Sub Periods) என்ன புரியும்படியாக உங்களுக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேனா?
 




Attachments

Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 22
எம்.ஜி.ஆரின் ஜாதகம்

பிறந்த நாள்: 28 .01.1917
காலை மணி 6.30
இடம் கண்டி
இருப்பு : புதன் தசையில் 12 வருடம் 2 மாதம் 7 நாட்கள்

30.06.1977 ல் அவர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆனார்!
-----------------------------------------------------------------------
அவருடைய ஜாதகத்தின் சிறப்புக்கள்

1. Eleventh lord Mars is exalted and placed in the
first house - That is in his lagna
லாபாதிபதி செவ்வாய் உச்சமடைந்து லக்கினத்தில்
அமர்ந்தது பெரும் சிறப்பு. பணம், பதவி, புகழ்
மக்கள் செல்வாக்கு என்று எல்லாமே அவரைத்
தேடி வந்தன

2. Number one benefic planet Jupiter is in a
Kendra - 4th House (it is also his friendly house)
gave him all the comforts required in life
4ல் – சுக ஸதானத்தில் சுப கிரகமான் குரு
அமர்ந்தது அவருக்கு வீடு, வாசல், வாகனம் என்று
எல்லா வசதிகளையும் கொடுத்தது!

3. Lagna lord Saturn is in a kendra (7th House)
and also aspecting the lagna directly - gave him
an amazing standing power
லக்கினாதிபதி 7ல் அமர்ந்து தன்னுடைய சொந்த
வீட்டைப்பார்ப்பது அவருக்கு நின்று சாதிக்கும்
தன்மையைக் கொடுத்தது

4. Benefic Planet Moon (7th lord in his horoscope)
is aspecting the Bhagya House (House of Gains)
from the third house
பதவி, புகழ், எல்லாவற்றையும் பாக்கிய ஸ்தானத்தைப்
பார்க்கும் சந்திரன் வழங்கியது.

5. The planet for Arts - Venus is in his own
house in the Navamsa along with Rahu. It is
a good combination for Drama & Cinema
They are also associated in the rasi
அவருடைய ஜாதகத்தில் ராசியிலும் சரி, அம்சத்திலும்
சரி, சுக்கிரனும், ராகுவும் சேர்ந்திருப்பது அவருக்கு
திரை உலகில் பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தன

6. Venus & Mercury association gave him
expertise in all the fields which he under took

7. The placement of Ketu in the 6th house
gave him courage to face any situation

1917.01.28 பிறந்த தேதி
0012.02.07 புதன் தசா இருப்பு (குழந்தைப் பருவம்)
0007.00.00 கேது தசா (Period One - 7 Years)
---------------
1936.04.05 கேது தசா முடிவுற்ற நாள்
0020.00.00 சுக்கிர தசா (Period Two - 20 years)
------------------
1956.04.05 சுக்கிர தசா முடிவுற்ற நாள்
0006.00.00 சூரிய தசா (Period Three 6 yeras)
------------------
1962.04.00
0010.00.00 சந்திர தசா (Period Four - 10 years)
--------------------
1972.04.05
0007.00.00 செவ்வாய் தசா (Period Five - 7 Years)
--------------
1979.04.05
0002.08.12 ராகு தசா / ராகு புக்தி (Period 6 Part One)
0002.04.24 ராகு தசா / குரு புக்தி (Period 6 Part Two)
-------------------
1984.05.11
0002.10.06 ராகு தசா / சனி புக்தி (Period 6 Part Three)
---------------
1987,03,17 ராகு தசா புதன் புக்தி ஆரம்பம்
1987.12.24 காலமான நாள்

---------------------Period 1
அவர் தன்னுடைய பன்னிரெண்டு வயது முதல்,
19 வயது வரை அந்தக் காலத்தில் சிறுவர்களை
வைத்து நடத்தப் பெற்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து
(Boys Drama Groups) பல ஊரகளில் சுற்றித் திரிந்து
நாடகங்கள் நடக்கும் கீற்றுக் கொட்டகைகளிலே உண்டு,
உறங்கி வாழந்ததோடு பல சிரமங்களை அனுபவித்த
காலம் இது. - அதற்குக் காரணம் கேது தசை
--------------------------------------------------
M.N. நம்பியார் & M.R.ராதா எல்லாம் அவருடைய
நாடகக் காலத்து நண்பர்கள்தான்
---------------------------------------------------
Period 2
சுக்கிர தசைக் காலம்
சுக்கிர தசை ஆரம்பம் ஆனவுடனேயே அவருடைய
நல்ல காலமும் ஆரம்பம் ஆயிற்று.
கலைத்துறைக்கு (Cinema Industry) வந்து கால்
ஊன்றினார்.
1936 ல் அவருடைய முதல் படமான "சதிலீலாவதி'
வெளிவந்தது.அதிலிருந்து 1955 ல் குலேபகாவலி
என்னும் படம் வெளிவந்தவரை அந்த 20 வருட
காலத்தில் அவர் நடித்தது மொத்தம்
33 படங்கள்தான்.(அந்தக் காலத்தின் சினிமாவின்
வளர்ச்சியும், நிலைமையும் மந்தமாகத்தான் இருந்தது)
அவர் ஜாதகத்தில் ராசியிலும்
அம்சத்திலும் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து
இருப்பதைக் கவனிக்கவும். அதனால்தான்
கலைத்துறையில் பிரகாசித்தார்.. ஆனாலும் ராசியில்
சுக்கிரன் 12ல் (விரைய ஸ்தானத்தில்) மறைந்து
விட்டதால் அதிகமான ஏற்றம் இல்லை.
1953ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியில் இருந்த
அவர் அதற்குப் பிறகுதான் தி.மு.கவில் சேர்ந்தார்.
----------------------------------------
Part Three & Part Four
லக்கினத்தில் அமர்ந்த சூரியனின் தசை
(Sun is the eight lord - but placed in the first house and
also asapected by the lagna lord Saturn from the
seventh house gave him sudden popularity in
his career and also in his life)
1956 ஏப்ரல் முதல் ஆறு வருட காலம் சினிமா
உலகில் அவருக்கு மிகவும் ஏற்றமான காலம்
லெட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததும்
இந்தக் காலகட்டத்தில்தான்
1956ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படம்,
அதே வருடம் வந்த மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம்
ஆகிய படங்கள் பெரும் வெற்றியைக் கொடுத்தன!
அதற்குப் பிறகு இறக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்
வெற்றியைக் குவித்தார். அவருடைய படப் பாடல்கள்
அனைத்தும் தமிழகமெங்கும் ஒலித்தன

1958ல் நாடோடி மன்னன்
1961ல் தாய் சொல்லைத் தட்டாதே
1965ல் எங்க வீட்டுப் பிள்ளை
1966ல் அன்பே வா
1973ல் உலகம் சுற்றும் வாலிபன்
ஆகிய ஐந்து படங்களும் வசூலில் சாதனை
படைத்த படங்கள். மொத்தம் 133 படங்களில்
அவர் நடித்தார்.
சூரியனுடைய தசையைத் தொடர்ந்து வந்த சந்திர
தசையும் (10 வருடங்கள்) அவருக்குச் சாதகமாக
இருந்ததுதான் அவருடைய தொடர் வெற்றிக்குக்
காரணம் 7க்குரிய சந்திரன் 3ல் அமர்ந்து
9ம் இடமான பாக்கிய ஸதானத்தைப் பார்த்தது
(The seventh lord Moon who is placed in the
third house aspected the 9th house, house of
Bhagya - House of Gains and conferred him
continued success in his life)
--------------------------------------------------------------------------
அதற்குப் பிறகு வந்த செவ்வாய் தசை - சொல்லவே
வேண்டாம் - செவ்வாய் அவருடைய ஜாதகத்தில்
4 & 11ம் வீட்டிற்குரியன்.
(House of comforts & House of Profit - சுகாதிபதி & லாபாதிபதி)

இரண்டு முக்கியமான வீடுகளுக்கு உரியவன்.
அவன் உச்சம் பெற்றதோடு லக்கனத்திலும் அமர்ந்தது
அபரிதமான யோகத்தைக் கொடுத்தது.

அவரைத் தமிழ் நாட்டின் முதன்மந்திரிப் பதவிவரை
கொண்டுபோய் உட்கார வைத்தது!
அடுத்து வந்த பத்து ஆண்டுகளுக்கும்
ஏன் அவர் இறக்கும் வரையில் யாராலும் அசைக்க
முடியாத நிலையில் அந்தப் பதவியில் அவரை அது
உட்கார வைத்தது!
-----------------------------------------------------------
எல்லா தசைகளிலுமே ஆரம்ப புக்தி (அதைச் சுய புக்தி
என்பார்கள்) பெரிதாக ஒன்றும் செய்யாது. அதனால்
செவ்வாயை அடுத்து வந்த ராகு தசை ராகு புக்தியிலும்
அதற்கு அடுத்து வந்த ராகு தசை குரு புக்தியிலும்
அவருக்குத் தீங்கு ஏதும் நேரவில்லை.(குரு அவருடைய
ஜாதகத்தில் 4ல் - கேந்திரத்தில்)

ஆனால் 11.01.1984 ல் ஆரம்பித்த ராகு தசை சனி
புக்தி முதல் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்தது

இரண்டு தீய கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்?
பி.எஸ். வீரப்பாவும், எம்.என்.நம்பியாரும் அவர் நடித்த
படங்களில் செய்த வில்லத்தனங்களைப் போல அவைகள்
இரண்டும் சேர்ந்து கெடுதல்களைச் செய்ய ஆரம்பித்தன.

அவருக்குப் பல விதமான நோய்கள் (Multiple Diseases)
ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். அமெரிக்கா
விற்குச் சென்றும் சிகிச்சைகள் மேற்கொண்டார்.
எதுவும் பலனிக்கவில்லை. சற்றுத்தேறி வந்தவர்.
24.12.1987 அன்று காலமாகிவிட்டார்.
அவருடைய இறுதி ஊர்வலத்தில் பத்து லெட்சம் மக்கள்
கலந்து கொண்டார்கள் என்பது வியக்கத்தக்க செய்தி!
அவர் புரட்சித் தலைவர் என்று பெயர் பெற்றதும்
ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்றதும்
அவருடைய ஜாதக அமைப்பினால்தான்.
அவர் கொல்லூர் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தர்
அடிக்கடி அங்கு சென்று தேவியை வணங்கியும் வந்தார்.
இரண்டாம் இடத்திற்குரியவன் அல்லது ஏழாம் இடத்திற்
குரியவன் இவர்களில் எவன் வலுவாக இருக்கிறானோ
அவன்தான் மரணத்தைக் கொடுப்பான் என்பது விதி (Rule)
அவருடைய ஜாதகத்தில் 2ற்குரியவன் சனி ( The second
lord in his horoscope is Saturn who is the owner of
Kumba Rasi, that is the second house from his lagna)
அவன் 7லிலும் அமர்ந்து வலுவாக இருந்து, அவருடைய
மரணத்திற்குக் காரணமானான்.

அவருடைய ஆறாம் வீடான நோய் ஸதானத்திற்கு
(House of Diseases) அதிபதியான புதன் துணை வர
ராகுவும் புதனும் சேர்ந்து மரணத்தை நிறைவேற்றினார்கள்
இருவரும் ஒன்று சேர்ந்து அவருடைய ஜாதகத்தில்
12ம் வீட்டில் ஒன்றாக இருப்பதைப் பார்க்கவும்
அவர் மறைந்தது அவர்களுடைய தசா புக்தியில்தான்!
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
தசா புக்திகளின் கால அளவைத் தெரிந்து கொள்ள
உதவும் சூத்திரம் (Formula for assessing the
Sub-periods in Major Periods of Planets)

மகாதசை ஆண்டுகள் x புத்திநாதனின் ஆண்டுகள்
= புக்தியின் காலம்.

அப்படி வரும் விடையின் முதல் இரண்டு எண்கள்
மாதங்களையும், அடுத்த எண்ணை 3 ஆல் பெருக்க
வரும் விடை நாட்களையும் குறிக்கும்

Major Period x Sub Period = Number of Months
& Days of the Sub- Period (In the three digit
answer, first 2 digits are months and the last
digit multiplied by three is the days)
உதாரணம்: ராகு தசை குரு புக்தி
18 x 16 = 288
முதல் 2 டிஜிட் மாதங்கள் - ஆகவே
28 மாதங்கள்
அடுத்த டிஜிட்டான 8 x 3 நாட்கள் = 24 நாட்கள்
அதாவது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள்

இதைப் போன்று எந்தக் கிரகத்திற்கு வேண்டுமென்றாலும்
போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வரும் விடையை முன் பதிவிலுள்ள அட்டவணையுடன்
ஒத்துப் பார்த்துக்கொள்ளுன்கள். 100% சரியாக இருக்கும்

இதைப் பல பெரிய ஜோதிடர்கள் ரகசியமாக
வைத்திருப்பார்கள். பஞ்சாங்கம் இன்றி மனதிற்
குள்ளேயே கணக்குப் போட்டு காகிதத்தில் நடப்பு
தசையைக் குறித்துத் தந்து நம்மை அசத்துவார்கள்.

பெரிய வித்தை ஒன்றுமில்லை! உங்கள் அனைவருக்கும்
அது தெரியட்டும் என்றுதான் இன்று அதை நான்
உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
இந்த சூத்திரம் தெரிந்து விட்டால் பஞ்சாங்கம்
தேவையில்லை. நான் நேற்றுக்கொடுத்திருந்த
3 அட்டவணைகளும் தேவையில்லை!.

யாருடைய ஜாதகத்தையும் பார்த்து கண நேரத்தில்
நடப்பு தசையை கணக்கிட்டுச் சொல்லலாம்
நமது கணினியில் Calculator இருக்கிறது. கீழ்க்கண்ட
தாச புக்திகள் இந்த சூத்திரத்தின்படி சரியாக வருகிறதா
என்று பாருங்கள்
==================================================
==================================================
சூரிய தசையில் சந்திர புக்தி, சந்திர தசையில்
செவ்வாய் புக்தி, செவ்வயில் ராகு புக்தி, ராகுவில்
குரு புக்தி, குருவில் சனி புக்தி, சனியில் புதன்
புக்தி, புதனில் சுக்கிரன் புக்தி அல்லது உங்கள்
விருப்பப்படி எதற்கு வேண்டுமென்றாலும்
கணக்கிட்டுப் பார்த்து இந்த FORMULA வை
மனதில் ஏற்றி அங்கேயே அது காலத்திற்கும்
நிற்கும்படி செய்யுங்கள்
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 23
தசா புக்திப் பலன்கள்

மொத்தம் 9 கிரகங்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும்
9 புக்திகள். ஆக மொத்தம் 81 புக்திகள். அவற்றின்
மொத்தகாலம் 120 ஆண்டுகள்

நாம் ஆசைப்பட்டாலும் 120 ஆண்டுகள் வாழ்வோமா
என்றால் இல்லை!

முன்பெல்லாம், அதாவது 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட
காலத்தில் போதிய மருத்துவ வசதி இன்மையால்
ஒருவர் 60 வயதைத் தாண்டுவதே அதிசயம்.
ஆனால் இன்று 80 வயது வரை உள்ள மனிதர்களைச்
சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது

ஆகவே வாழும் வரை உள்ள காலத்திற்கு ஜாதகப்படி
நடக்கும் பொதுப் பலன்களைப் பழைய நூல் ஒன்றிலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கவலை
வேண்டாம். ஜோதிடம் நன்கு அறிந்த ஒரு பெரிய
முனிவரால் எழுதப் பெற்ற நூல் அது!

அவருடைய பெயர் 'புலிப்பாணி'.

ஆமாம் பழநி மலையிலுள்ள விக்கிரகத்தை
ஸ்தாபிதம் செய்த போகர் என்ற முனிவரின்
சீடர்தான் இந்த புலிப்பாணி

அதைப் படித்து நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.
யாரையும் கேட்க வேண்டாம். உங்களுக்கு நீங்களே
நல்லது கெட்டது எப்போது நடக்கும் என்று
தெரிந்து அதற்குத தகுந்த மாதிரி வாழ்க்கையின்
இன்பங்களையும், துன்பங்களையும் எதிர் கொள்ளலாம்

சுமார் 75% சதவிகிதம் பேர்களுக்கு தசா பலன்கள்
அதில் உள்ள மாதிரிதான் இருக்கும். மீதமுள்ள
25% பேர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்திலுள்ள
கிரக நிலைகளின் மேம்பாட்டைப் பொறுத்து
பலன் மாறுபடும். உதாரணம் முன் பதிவில்
நான் சிவாஜி கணேசன் அவர்களின் ராகு திசைக்குக்
கொடுத்திருந்த விளக்கத்தைப் படிக்க வேண்டுகிறேன்

ஒரு மூன்று வருடத்திற்கு நேரம் சரியில்லை
என்று தெரிந்தால், அன்றாடம் நடக்கும் சம்பவங்களை
வைத்து உணர்ந்தால், அதற்குப் பிறகு நல்ல காலம்
உள்ளது என்று தசா புத்தி சொல்லும் போது
எவ்வளவு மகிழ்வாக இருக்கும்?

வரப்போகிற அந்த நல்ல காலத்தை நினைத்து இந்த
மூன்று வருடத் துன்பங்களைத் தெம்புடன் ஏற்றுக்
கொள்வோமா - மாட்டோமா?

அதற்கு உதவுவதுதான் தசாபுத்திப் பலன்கள்.

ஒரு முக்கியமான விஷ்யம். " மனைவி தன்னை
நாசம் பண்ணும்" என்று போட்டிருந்தால் Don't jump to
any harsh conclusion. மனைவியுடன் கருத்து வேறுபாடு
ஏற்படலாம் என்று பொருள் கொள்ளவும். அதுபோல
களவு போகும் என்று போட்டிருந்தால் பயப்பட
வேண்டாம். இளைஞராக இருந்ததால் உங்கள்
உள்ளத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்
உடன் வேலை பார்க்கும் மெல்லியலாள் எடுத்துக்
கொண்டு போய் விடும் வாய்ப்பு உண்டு!


==========================================






 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 24
வாழ்க்கை என்பது ஒரு நெடும் பயணம்!

அந்தப் பயணத்திற்குப் பயன்படும் வாகனம்தான்
ஜாதகம். என்று வைத்துக் கொள்ளுங்களேன்

பயணிக்கும் சாலைதான் தசாபுக்தி.

நம்து வாகன ஓட்டுனர்தான் கோச்சாரம்
(கோள் சாரம் - கோள்களின் நிலமை -
Present Day Planetary Positions)

ந்ல்ல குளிசாதன வசதியுடைய பென்ஸ் கார்,
சென்னை - கன்னியாகுமரி நான்கு வழித் தேசிய
நெடுஞ்சாலை, அனுபவமும், பொறுமையும் மிக்க
வாகன் ஓட்டுனர் இம்மூன்றும் அமைந்தால்
பயணம் எப்படி இருக்கும்?

சுகமாகவும், சூப்பராகவும் இருக்காதா?

சரி, அதே பயணத்தை கொஞ்சம் மாற்றி
யோசித்துப் பாருங்கள்.

பழைய இரும்புக் கடைக்காரன்கூட வாங்க
யோசிக்கும் நிலையிலுள்ள ஒரு ஓட்டைக் கார்
ஹாரனைத் தவிர வண்டியின் அத்தனை
ப்குதிகளிலும் சத்தம் வரக்கூடிய கண்டிஷனிலுள்ள
வண்டி!

சாலையும் குண்டும் குழியும் நிறைந்த மோசமான
சாலை ஓட்டுனரும் புதிதாக வண்டி ஓட்டக் கற்றுக்
கோண்டு வந்து வேலைக்குச் சேர்ந்த ஓட்டுனர்
இப்படி இருந்தால் பயணம் எப்படி இருக்கும்?

யோசித்துப் பாருங்கள்!

ஒரு சமயம் சாலை நன்றாக இருக்கும் ஓட்டுனர்
சுமாரான ஆசாமியாக இருப்பார். ஓட்டுனர் கில்லாடியாக
இருப்பார்.சாலை மோசமாக இருக்கும்!

சில பேருக்கு மட்டும்தான் எல்லாமே அருமையாக
அமைந்து விடும். அவர்களுடைய காரும் (ஜாதகம்)
V- 8 Cylinder Engine உடன் கூடிய Cadillac காராக இருக்கும்.
தசா புத்தி கொஞ்சம் சுமாராக இருக்கும் போது
கோள்சாரம் கைக் கொடுக்கும். கோள்சாரம் அடிக்கும் போது
தசாபுத்தி வந்து குறுக்கே நின்று காக்கும்

அதெல்லாம் கொடுப்பினை!
ஜாதகத்தில் 1ம் வீடு, 9ம் வீடு, 10ஆம் வீடு, 11ம் வீடு
நன்றாக அமைந்திருந்தால் அதுதான் சிறப்பான ஜாதகம்.
மேலே சொன்ன் உவமைக்குரிய ஜாதகம்!

அதுதான் வாங்கி வந்த வரம். பிறக்கும் போது
வாங்கி வந்த வரம்.

அதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அதுதான்
கர்ம வினை! பற்றித் தொடரும் இரு வினைப்
பாவமும் புண்ணியமும் என்று பட்டினத்தார்
பாடினாரே அந்தப்பாவ புண்ணீயம்தான்.

அது ஜாதகத்திலும் தெரியும். அதற்குரிய வீடு
ஐந்தாம் வீடு. பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று
பெயர். அதற்குரிய பகுதி வரும் போது அதைப்
பற்றிப் பேசுவோம்!

சாதாரண மனிதனுக்கு பாவ புண்ணியம் எல்லாம்
தெரியாது. சொன்னாலும் ஒப்புக் கொள்ள மாட்டான்.
ரேசன் கார்டிற்கும், கட்சி உறுப்பினர் அட்டைக்கும்,
ஐநூறு ரூபாய் காந்தி படம் போட்ட ரூபாய்த்
தாளிற்கும் கொடுக்கும் மதிப்பில் நூற்றில்
ஒரு பங்கு மதிப்பைக்கூட அவன் பாவ புண்ணீய
த்திற்குக் கொடுக்கமட்டான்.

அவனுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. சொல்லித்
தரவும் ஆளில்லை. அவனுக்குக் கிடைக்கும் ஒரு சில
மணி ஓய்வு நேரத்தையும் டாஸ்மார்க் பாரில்
நண்பர்களுடன் கழிப்பதற்குச் சரியாக இருக்கும்.
மேலும் இதில் எல்லாம அவனுக்கு நம்பிக்கை இல்லை!

அவர்களில் பாதிப்பேர் சாமியாவது பூதமாவது என்பார்கள்
மீதிப் பேர் மனைவியின் வற்புறுத்தலுக்காக குலதெய்வக்
கோவிலுக்கு மட்டும் போய் வருவார்கள். அதுவும் ஒரு
உல்லாசப் பயணமாகத்தான் போய் வருவார்கள்.

ஐம்பது வயதிற்கு மேல்தான், சிலருக்கு அறுபது
வயதிற்குமேல் தான் சற்றுப் புரிய ஆரம்பிக்கும்.

அப்போது புரிந்து என்ன பயன்?
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

கடவுள் கருணை மிக்கவர். அவர்தான் Match Maker
(ஜோடி சேர்ப்பவர்)

வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம்
என்றாலும் (Arranged Marriage) அல்லது காதல்
திருமணம் (Love Marriage) என்றாலும் அதுவும்
ஜாதகத்திலேயே தெரிந்துவிடும்.

அவர் எந்தவிதமான திருமணமானாலும் சரி
ஜோடியை சரியாகத்தான் கொடுத்திருப்பார்.

கணவன் ரயில் என்றால் மனைவி
தண்டவாளமாக இருப்பாள்
மனைவி ரயில் என்றால் கணவன்
தண்டவாளமாக இருப்பான்


அவர் ஒரு போதும் ரயிலையும், ரயிலையும்
ஜோடி சேர்த்ததில்லை!

அது படு சுவாரசியமான விஷயம்.
அதற்குள்ள பகுதி வரும்போது
அதை சற்று விவரமாக அலசுவோம்
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
தசா புத்திப் பலன் இரண்டாம் பகுதி
கீழே உள்ளது.



==================================================




==================================================

==================================================

==================================================

==================================================

==================================================

==================================================

==================================================
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
நிமித்தக்காரன் (Soothsayer) ஜோதிடம் பகுதி 25

எதிர்காலத்தைக் கணித்துச் சொல்பவர்களை
நிமித்தக்காரர்கள் (Fortune Teller) என்பார்கள்

சில சரித்திரக்கதைகளில் படித்திருக்கிறேன்

இந்த நிமித்தக்காரர்கள் தங்களுடைய ESP
சக்தியால் நடக்க இருப்பதை உணர்ந்து
சம்பந்தப்பட்டவர்களை வரப்போகும் கேடு
குறித்துக் குறிப்பால் எசசரிப்பார்கள்.

அவர்கள் எச்சரிப்பதால் நடக்க இருப்பது
நடக்காமல் இருக்காது. அதுதான் விதி என்பது

கவியரசர் கண்ணதாசன் அவர்கள்கூடச்
சொல்வார்," எது உன்னைக் கேட்டு நடப்ப
தில்லையோ அதன் பெயர்தான் விதி.
ஆகவே விதிக்கப்பட்டது நடந்தே தீரும்.
அது உன் கையை மீறிய செயல் என்னும்
போது அதைப் பற்றி நீ கவலைப்பட்டு என்ன
பயன்? ஆகவே கவலையை விட்டொழி."

ஆனால் நம் பாழாய்ப்போன மனசு சும்மா
இருக்கிறதா?

தேவையில்லாத விஷயத்திற்குகூட
கவலைப் பட்டுக்கொண்டே இருக்கும்

அதுபோல நிமித்தக்காரன் ஒருவன்
BC 44ம் ஆண்டில் இருந்தான்.

அந்த நிமித்தக்காரனுக்கு தன் நாட்டு
மன்னர் ஜூலியஸ் சீசரின் வாழ்வில்
ஒரு மாதத்திற்குள் நடக்க இருக்கும்
அசம்பாவிதம் மனத்திரையில் தெரிந்தது.

ஜூலியஸ் சீசரைப் பற்றித் தெரியாதவர்கள்
இருக்கமுடியுமா என்ன?

சீசர் தான் வாழந்த காலத்தில் ரோமாபுரியைப்
பேரரசாக மாற்றியவர் அதாவது வல்லரசு
நாடாக மாற்றியவர். அவரின் புகழ் நாளுக்கு
நாள் பெருகியது.

எப்பொழுதுமே கால வித்தியாசங்கள் இன்றி,
பொறாமை, போட்டி ,நயவஞ்சகம், துரோகம்
என்று பல கீழ்த்தரமான வேலைகளைச்
செய்வதற்கு என்று ஒரு கூட்டம் காத்துக்
கொண்டு இருக்குமே - அப்படியொரு கூட்டம்,
சீசருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியது.

சீசரைப் போட்டுதள்ளுவது என்று முடிவு
செய்து அதற்குரிய இடத்தையும், நாளையும்
முடிவு செய்தது அந்தக் கூட்டம்.

அவர்கள் தேர்வு செய்தது நாட்டின்
பாராளுமன்ற வளாகம் (Senate) தேதி 15.3.44 BC

(44 years before the birth of Jujus Christ)

இதுவும் அந்த நிமித்தக்காரனின் மனத்திரையில்
அந்த பாதகச்செயல் நடக்குமுன்பே தெரிந்தது.

அது குறித்து சீசரிடம் எச்சரிக்கை செய்வது
என்று முடிவு செய்தான்.

அவனோ செருப்புத்தைக்கும் கூலித் தொழிலாளி.
சீசரின் மாளிகைக்கோ அல்லது செனேட்
வளாகத்திற்கோ சென்று அவன் எப்படி
அவரைப் பார்க்க முடியும்?

அதனால் சீசர் தினமும் செனேட்டிற்குக்
குதிரையில் செல்லும் வழியில் தன்னுடைய
சிறு கடையை விரித்து உட்கார்ந்து கொண்டான்

அன்று சீசர் எதிர்பட்டவுடன், ஓங்கிய குரலில்
அவரைப் பார்த்துக் கத்தினான்,
" மை டியர் சீசர்...!"

சீசர் குதிரையைச் சட்டென்று நிறுத்தி அவனைப்
பார்த்து என்ன என்று வினவுவதைப்போல பார்த்தார்.

அவன் சொன்னான்." சீசர் உங்களுக்கு ஒரு
பேராபத்துக் காத்திருக்கிறது. மார்ச் பதினைந்தாம்
தேதி அன்று ஜாக்கிரதையாக இருங்கள்!"

(Caesar, Beware the Ides of March - என்று அவன்
சொன்னான். ஐடெஸ் ஆஃப் மார்ச் என்பது மார்ச்
பதினைந்தாம் தேதி என்று பொருள்படும்)

ஆனால் சீசர் அதை ஸீரியஸாக எடுத்துக்
கொள்ளவில்லை. அந்த மாவீரன் சந்திக்காத
ஆபத்துக்களா? ஒரு புன்னகையை உதிர்த்து
விட்டு அவர் சென்று விட்டார்.

அவன் அடுத்த நாளும் அவரைத் தடுத்தி
நிறுத்திச் சொன்னான், அதோடு மட்டுமல்லாமல்
மார்ச் பதினாம்காம் தேதி வரை தொடர்ந்தும்
சொன்னான். அவனுக்குத் தினமும் ஒரு
புன்னகைதான் சீசரிடமிருந்து பதிலாகக்
கிடைத்ததேயன்றி, வேறு எந்த பதிலும்
கிடைக்கவில்லை.

மார்ச் பதினைந்தாம் தேதியும் வந்தது!

அன்றைய தேதியின் காலைப்பொழுது.

வழக்கம்போல குதிரைமீது அமர்ந்து வந்த
சீசர் பழக்கம் காரணமாக அவன் இருக்கும்
இடம் வந்ததும், தன் குதிரையை நிறுத்தினார்

ஆனால் அந்த நிமித்தக்காரன் வழக்கத்திற்கு
மாறாக ஒன்றும் பேசாததோடு, தலை
குனனிந்தவாறு அம்ர்ந்து கொண்டிருந்தான்.

சீசர்தான் அவனிடம் பேச்சுக்குக் கொடுத்தார்.

"Hey Soothsayer, to-day is March 15th. It has come!
"Yes Sir, It has come!"
என்று அவன் பதில் சொன்னான்!"

"What you say now?" சீசர் கேட்டார்

அவன் சொன்னான்." Yes Sir!, It has come : But not gone!"
("ஆமாம் அது வந்து விட்டது. ஆனால்
இன்னும் போகவில்லை!)

அவன் சொன்னபடியேதான் நடந்தது.
மார்ச் பதினைந்தாம் தேதி பகல் பொழுதிலேயே
சீசரை அந்தச் சதிகாரர்கள் அநியாயமாகக்
கொன்று விட்டார்கள்.

மொத்தம் அறுபது பேர்கள் சதிகாரர்கள்.
அந்த மாவீரனின் உடலில் விழுந்த கத்திக்
குத்துக்கள் மொத்தம் 23 என்று வரலாறு
சொல்கிறது!

===============================
அதுபோல நம் நாட்டிலும் ஒரு மகான் இருந்தார்.
அவர் தனது சக்தியால் நடக்கப்போவது ஒன்றைச்
சொல்லியதாகவும் அது அப்படியே நடந்ததாகவும்
படித்துள்ளேன்.

அவர் யார்?
அவர் யாரைப் பற்றி என்ன சொன்னார்?
அவர் அதை யாரிடம் சொன்னார்?
அதன்படி நடந்ததா?

எல்லா விவரமும் கீழே உள்ள Scanned Pageல்
உள்ளது!


 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 26

ஒரு குழந்தையின் ஜாதகம் அதனுடைய
12 வயது நிறையும் வரை எந்தவித தனிப்பட்ட
பலனையும் கொடுக்காது.

அந்தக் குழந்தைக்கு பன்னிரெண்டு வயது
நிறைந்தவுடன்தான் அதன் ஜாதகம் வேலை
செய்ய ஆரம்பிக்கும்.

அதுவரை அந்தக் குழந்தைக்கு அதனுடைய
பெற்றோர்கள் ஜாதகத்தை வைத்துத்தான் பலன்கள்.
அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் அவதிப்பட
வேண்டிய நேரம் என்றால் அந்தக் குழந்தையை
வைத்து அவர்கள் மேலும் அவதிப்பட நேரும்.

குழந்தை அடிக்கடி நோயவாய்ப்பட்டு அவர்களை
வீட்டிற்கும் மருத்து வமனைக்கும் அடிக்கடி
ஓடவைக்கும் அல்லது பயங்கர குறும்பு செய்து
அடிக்கடி கை,கால்களில் அடிபட்டுக் கொண்டு
வந்து அவர்களைக் கலங்க வைக்கும். துஷ்டனாக
இருக்கும்.எந்நேரமும் அவர்கள் குழந்தையை
நினைத்துக் கவலைப்படும்படி ஆகிவிடும்
இதெல்லாம் ஜாதகப் பலன்தான்.

இதற்கு மாறாக அவர்களுக்கு நல்லநேரம் என்றால்
குழந்தை பல அரிய காரியங்களைச் செய்து பத்திரிக்கை,
தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தலைகாட்டி
அவர்களை மகிழவைக்கும்!

பன்னிரெண்டு வயது ஆரம்பித்தவுடன் அந்தக் குழந்தைக்கு
சனி, ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் மகா
திசை வரக்கூடாது. அதுபோல அந்த வயதிலிருந்து
ஏழரை ஆண்டுச் சனியும் வரக்கூடாது. அப்படி வந்தால்
அந்தக் குழந்தையின் படிப்பு கெட்டுப் போகும்
ஜாதகத்தில் கல்விக்கு உரிய 4ம் வீட்டு அதிபதியும்,
வித்யாகாரகனான (அதாவது விததைகளுக்கு அதிபதியான)
புதனும் வலுவாக இல்லாவிட்டால், படிப்பு பாதியிலேயே
நின்று விடும். School Dropout என்பார்களே அப்படி
ஆகிவிடும்! மிகவும் வலுவிழந்து இருந்தால் பையன்
வீட்டைவிட்டு ஓடிவிடுவான். கெட்ட சகவாசங்கள்
ஏற்பட்டு விடும்

ஆகவே 12 முதல் 24 வயது வரை உள்ள காலகட்டத்தில்
நடக்கும் தசாபுத்திகளும், கோள்சாரமும் நன்றாக இருக்க
வேண்டும் அல்லது ஜாதகமாவது நன்றாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் சிரமம்தான். இன்னும் ஒரு சரியான
சொல் இருக்கிறது அவதிதான்!

24 வயதுவரை ஜாதகப்படி எல்லா அமைப்புக்களுமே
சிறப்பாக இருந்தால், அந்த ஜாதகனுக்கு கல்வி, வேலை,
வாழ்க்கைத்துணைவி என்று எல்லாமே ஒரே ஸ்ட்ரோக்கில்
கிடைத்துவிடும். இல்லையென்றால் துறைமுகங்களில்
கூட்ஸ் ரயில் ஷன்ட்டிங் அடிப்பதைப் போல அடித்துக்
கொண்டிருக்கவேண்டியதுதான்.

முப்பது பந்துகளில் சென்ச்சுரி அடிப்பது எப்படி?
நூறு பந்துகளில் முப்பது ரன்களுக்குத் தடவிக்
கொண்டிருப்பது எப்படி? நீங்களே யோசனை செய்து பாருங்கள்!

ஆனால் கடவுள் கருணை மிக்கவர். அவர் எல்லோரையும்
சமமாகத்தான் படைத்துள்ளார்.
ஜாதகத்தில் முன்யோகம், பின்யோகம் என்று உண்டு.
அதாவது 30 முதல் 35 வயதுவரை மிகவும்
கஷ்டப்படுபவர்கள் அதற்குப் பிறகு வரும்
வாழ்க்கையின் பின் பாதியில் வளத்தோடும்,
மகிழ்ச்சியோடும் இருப்பார்கள்.
அதேபோல 30 முதல் 35 வயதுவரை எல்லாவற்
றையுமே அடைந்து மகிழ்ந்தவர்களை வாழ்க்கையின்
பின்பாதி புரட்டிப்போட்டுச் சாத்தி விடும்

அதை உங்கள் மொழியில் விளக்குவதென்றால்
First Innings, Second Innings என்று வைத்துக் கொள்ளுங்கள்.
முதல் இன்னிங்ஸில் சென்ச்சுரி அடித்தவன், இரண்டாவது
இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி பெவிலியனுக்குத் திரும்பி
விடுவான். அதேபோல முதல் இன்னிங்ஸில் டக் அடித்து
அவுட் ஆகி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு
திரும்பியவன், அடுத்த இன்னிங்ஸில் டபுள் சென்ச்சுரி
அடிப்பான. அதுதான் வாழ்க்கையில் கிரகங்கள் நம்முடன்
விளையாடும் விளையாட்டு!

இதற்கு விதிவிலக்காக ராகுல் டிராவிட் மாதிரி இரண்டு
இன்னிங்ஸ்களிலுமே நிதானமாக ஆடி 50 அல்லது
60 ரன்களை எடுப்பவர்களும் உண்டு. சராசரியாக எல்லா
அமைப்புக்களுமே ந்ன்றாக இருக்ககூடிய ஜாதகக்காரர்களுக்கு
அவ்வாறு நடக்கும். அவர்கள் எண்ணிக்கையில் மிகவும்
குறைவாக இருப்பார்கள்.

அவர்களுடைய ஜாதகங்களில் லக்கினம், பூர்வபுண்ணியம்,
பாக்கியம், லாபஸ்தானம் ஆகிய நான்கு இடங்கள் வலுவாக இருக்கும்.

கிராமங்களில் உள்ள பெரியவர்கள் முப்பது வருடம்
வாழ்ந்தவனும் இல்லை, அதேபோல முப்பது வருடம்
கெட்டவனும் இல்லை என்பார்கள்!

அது சனியை வைத்துச் சொல்லப்படுவது! சனி ஒரு
சுற்று சுற்றி வருவதற்கு முப்பது ஆண்டுகாலம் அகும்.
முதல் சுற்றில்
தீமைகளையே அதிகமாகக் கொடுத்த சனீஸ்வரன்
அடுத்த சுற்றில் நன்மைகளைக் கொடுப்பார்.
சனிதான் கர்மகாரகன் (Authority for work)

அதானால்தான் சனி மாதிரிக் கொடுப்பரும் இல்லை;
சனி மாதிரிக் கெடுப்பாரும் இல்லை என்பார்கள்.

பத்தாம் வீட்டிற்கு உரியவன்தானே வேலைக்கு அதிகாரி,
சனி இங்கே எங்கு வருகிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு
வரலாம்.

மாவட்ட ஆட்சியாளருக்கும், உள்துறை செயலாளருக்கும்
உள்ள வேறுபாடு போலதான் இதுவும். இரண்டு பேர்களுமே
ஒரே துறையச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும் மாவட்ட
ஆட்சியாளரை விடப் பலமடங்கு அதிகாரம் படைத்தவர்
உள்துறை செயலாளர். பல சமயங்களில் அவர் சொல்படி
தான் மாவட்ட ஆட்சியாளர் நடக்க வேண்டியதிருக்கும்.

அதனால் நமது பணிகளூக்கெல்லாம் ultimate authority
சனீஸ்வரன்தான்!

அதன் முழு விபரத்தைப் பின்னால் வரும் அதிகாரங்களில்
பார்ப்போம்.
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 27
Super Star's Horoscope
சூப்பர் ஸ்டாரின் ஜாதகத்தில் பல சிறப்புக்கள்
உள்ளன

1. லக்கின அதிபதி சூரியன் 4ல் - அது கேந்திரம் + நட்பு வீடு

2. பூர்வ புண்ணியாதிபதி குரு 7ல் - அது கேந்திரம்
+ லக்கினத்தின் மீதுவிழும் அவருடைய நேரடிப் பார்வை

3. பாக்கிய ஸ்தான அதிபதி (House of gains) செவ்வாய்
உச்சம் அடைந்துள்ளார் + சந்திரனுடன் சேர்ந்து
சசி மங்கள யோகம்

4. லாபாதிபதி (House of Profit) புதன் 5ல் -
அது திரிகோண வீடு + 11ற்கு அவருடைய
நேரடிப்பார்வை

5. தொழில் ஸ்தான அதிபதி (House of Profession)
சுக்கிரன் 5ல் + லாபாதிபதியுடன் சேர்க்கை

6. புதனும் சுக்கிரனும் சேர்ந்து (By association)
நிபுண யோகத்தை வழங்கினார்கள்

7 இரண்டாம் வீட்டில் - அதாவது குடும்ப, தன
ஸ்தானத்தில் சனி - அது ஒன்றுதான் குறை
போன்று தோற்றளிக்கும் - ஆனால் குறை
நிவர்த்தியாகி விட்டிருக்கிறது.

எப்படி என்பதை அடுத்த பத்தியில் சொல்லியிருக்கிறேன்

சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் - 2ல் சனி
இருக்கிறதே அதற்கு என்ன பலன் என்று
அவருடைய ஜாதகத்தைக் காட்டிக் கேட்டால்,
சாதாரண ஜோதிடர் அவசரத்தில் இந்த ஜாதகன்
கையில் காசே தங்காது என்று சொல்லி விடுவார்.

சனி 2ல் இருந்தால் காசு கையில் தங்காதுதான்
(Expense oriented horoscope) ஆனால் அவரிடம்
தங்காத பணமா? சேராத சொத்துக்களா? அது எப்படி?

அதற்குக் காரணம் 2ம் வீட்டு அதிபதி புதன்
அம்சத்தில் உச்சமாகி இருப்பதைப் பாருங்கள்


எந்தக் கிரகம் என்றாலும் அது அம்சத்தில் உச்சம்
பெற்றால், உச்சமான பலனைக் கொடுத்து
விடுவார். அதுபோல அவருடைய ஜாதகத்தில்
பாக்கியாதிபதி செவ்வாய் ராசியில் உச்சம் குரு 7ல்
ஆக இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து அவருக்குப்
புகழையும், செல்வாக்கையும் வாரி வழங்கியுள்ளன.
அதனால் தான் அவருக்கு லெட்சக்காணக்கான
ரசிகர்கள். ஏன் ஜப்பான் வரைகூட அவருக்குப்
பரந்து விரிந்த ரசிகர்கள்.

தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திற்குரிய
சுக்கிரன் லாபாதிபதி புதனுடன் சேர்ந்து திரிகோண
வீட்டில் அமர்ந்ததால் அவர் நுழைந்த திரைத்
துறையில், அவருக்கு அவைகள் நம்பர் ஒன்
இடத்தைப் பிடித்துக் கொடுத்தன!

அம்சத்தில் மூன்று சுப கிரகங்கள் அருமையான
இடத்தில் அமர்ந்துள்ளன. குருவிற்கும், சுக்கிரனுக்கும்
ஆட்சி பலன் (Own House) சந்திரனுக்கோ உச்சமாகிய
பலன்(Exalted House)

அவர் 12.12.1950ஆம் ஆண்டு பிறந்தவர்.
திருவோணம் நட்சத்திரம் - பெருமாளின் நட்சத்திரம்
பிறந்த திசையில் 7 வருடம் - 18 நாட்கள் இருப்பு

அவருக்குக் கால சர்ப்பதோஷம். ராகு - கேது விற்குள்
மற்ற 7 கிரகங்களும் மாட்டிக்கொண்டுள்ளன பாருங்கள்.
(All the 7 planets are hemmed between Rahu and Ketu)
(காலசர்ப்ப தோசத்தைப் பற்றிய விரிவான் பதிவு
பின்னால் வரும்)

அதனால்தான் சிறிய வயதில் அவர் கஷ்டப்
பட்டிருக்கிறார். பேருந்தில் நடத்துனர் வேலையைச்
சிறிது காலம் பார்த்தவர். அவருடைய 25 வயதில்
தான் திரைக்குள் பிரவேசித்தார்.

15.8.1975ஆம் ஆண்டு வந்த 'அபூர்வ ராகங்கள்' என்ற
திரைப் படத்தில் சிறிய பாத்திரம். மூன்று நான்கு
காட்சிகளில் மட்டுமே வந்து போவார். அவரை
மக்களுக்கு நன்கு அறிமுகப் படுத்திய படம்
பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வந்த
'16 வயதினிலே' என்னும் படம்.

12ம் வீட்டிற்குரிய சந்திரன் 6ல் அமர்ந்து விபரீத
ராஜயோகத்தைத் தந்துள்ளது!

தன, குடும்ப ஸ்தானத்தில் (Second House) சனியும்,
கேதுவும் அமர்ந்ததோடு, அந்த ஸ்தானத்தின்மேல்
ராகுவின் பார்வையும் விழுவதால் அவருக்கு,
ஆன்மிகச் சிந்தனைகள், துறவறம் மீது அதிக
நாட்டம் ஏற்பட்டுள்ளது.

சிம்ம லக்கினம்தான் ஹீரோக்களின் லக்கினம்.
அதனால்தான் அந்த லக்கினத்திற்கு சிங்கம்
குறியீடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கத்தைவிட பெரிய ஹீரோ உண்டா?
அதேபோல சிங்கம் யாருடனும் கூட்டு வைக்காது.
தனித்துத்தான் செயல்படும்.
அதனால்தான் அவரால் அரசியலிற்கு வரமுடிய
வில்லை. அரசியல்வாதிகளின் லக்கினம் கடக
லக்கினம்.

அரசியல் என்றாலும், கட்சிகள் என்றாலும் கூட்டு
இல்லாமலா? அதனால்தான் சிம்ம லக்கினத்துக்
காரகள் 95% அரசியலில் ஈடுபடமாட்டார்கள்.
மீதமுள்ள அந்த 5% ஜாதகத்தில் உள்ள வேறு
அமைப்பினால வரலாம். அது விதி விலக்கு.

விதி விலக்குகளை உதாரண்மாக எடுத்துக்
கொள்ளக்கூடாது!
(Exemptions should not be taken as examples)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top