Priya kumar
SM Exclusive
View attachment 9835
அத்தியாயம் 7
தேர்வு எழுதிவிட்டு வரும்போது மகனுக்கும் மருமகளுக்குமிடையே சற்று இணக்கமான சூழல் உருவாகி இருக்கும் என்று எதிர் பார்த்திருநத்த அஞ்சுகத்திற்கு மதுமதியின் கோப முகமும் வேக நடையும் அதிருப்தியினைத் தந்தது...எனினும் அதனை அவர் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை…
மறுநாள் காலை தன் கல்லூரித் தோழியிடம்
செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள் மதுமதி.. திடீரென்று தொடர்பு துண்டிக்கப்படவே... மீண்டும் முயற்சித்தாள்..
“ஹலோ பவி…”
“ சொல்லு மது...என்ன கட்டாயிடுச்சு ….இப்ப கூட சரியா கேக்கல”
“சிக்னல் பிராப்ளம்னு நினைக்கிறேன்...இரு வெளியே வந்து பேசுறேன் ….”
பேசிக் கொண்டே பின் வாசலுக்கு வந்தாள் மதுமதி….வெகு நாட்களுக்கு பிறகு தன் தோழியிடம் பேசுவதால் பேச்சு சுவாரசியத்தில் சுற்றுப்புறம் மறந்து பேசிக் கொண்டிருந்தவளின் வலதுகரம் திடீர் என்று சுண்டி இழுக்கப்படவே … பற்றியிருந்த செல்பேசி எங்கோ போய் விழ... நிலை தடுமாறி போய் ஒரு கடினமான பாறையின் மீது மோதிக் கொண்டாள்... அதிர்வுடன் நிமிர்ந்து பார்த்தாள்..
வெற்றிவேல் தான் அவளை இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி இருந்தான்...சுறுசுறுவென்று கோபம் தலைக்கேற... அவனிடம் இருந்து திமிறி விலகியபடி ….
“விடுங்க….என்ன “
என்ற அவள் வாயை அழுத்தமாக மூடி இருந்தான் வெற்றிவேல் …
அதிர்ச்சியில் விழிவிரிய அவனை ஏறிட்டுப் பார்த்த அவளைத் தன் பார்வையாலேயே பின்னால் பார்க்கச் சொல்லி சைகை காட்டினான்...சரேலென்று பின்னால் திரும்பியவள் நடுநடுங்கிப் போனாள்…
அங்கே அவள் நின்றிருந்த இடத்திற்கு மேலே தென்னை மரத்தின் ஒரு கிளையில் தன் வாலை சுற்றிக்கொண்டு ஆனந்தமாய் ஊசலாடிக்கொண்டிருந்தது 5 அடி
நீளம் கொண்ட நாகப்பாம்பு….
மதுமதி சினிமா படங்களில் கூட பாம்புகளை பார்க்கவே மாட்டாள்... இன்று நிஜத்திலேயே படம் காட்டிக் கொண்டிருக்கும் பாம்பினை கண்டவள் அரண்டு போய் வெற்றிவேலைக் கட்டிக்கொண்டு அவன் மேல் முழுவதுமாக அப்பிக் கொண்டாள்…
வெற்றிவேலின் நிலையினை கேட்கவும் வேண்டுமோ…. அவன் எங்கே இங்கு இருந்தான் ….எங்கோ வான்வெளியில் சொர்க்கத்தில் மிதந்து கொண்டு இருந்தான்...சட்டென்று நாகத்தின் சீரான சுவாசம் கேட்கவும் சுயம் அடைந்தவன்... ‘ அவள் காதலினால் அல்ல... அளவுகடந்த பயத்தினாலேயே தன்னை தஞ்சமடைந்திருக்கிறாள்... என்று உணர்ந்தவன்.. மெல்ல மனமே இல்லாமல் தன்னிடமிருந்து மதுமதியினைப் பிரித்து எடுத்து வீட்டிற்குள் செல்ல சொல்லி ஜாடை செய்தான் ….
பாம்புகளுக்கு கேட்கும் திறன் இல்லாவிட்டாலும் அதிர்வுகளை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உண்டு... வேகமாக வீட்டிற்குள் சென்ற மதுமதி வீட்டில் அனைவருக்கும் பாம்பாரைப் பற்றிய விஷயத்தைக் கூறினாள்...
எல்லோரும் பரபரப்புடன் பின்கட்டிக்குச் செல்ல அதற்குள் வெற்றிவேல் ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு நாகத்தை நோக்கி முன்னேறி இருந்தான்…
மொத்தமாக அதிர்ந்த மதுமதி,
“ஐயோ...அது கிட்ட போக வேண்டாம்னு சொல்லுங்க அத்த….கடிச்சி... கிடிச்சு வச்சுரப் போகுது….”என்றாள்…
“ ஒன்னும் இல்லைம்மா மது…. நீ பயப்படாதே...இதை இப்படியே விட்டால் வீட்டுக்குள்ள வந்துரும் இல்லையா….என்று அவள் பயத்தை போக்கினார்அஞ்சுகம்…..
அப்படியும் கேட்காமல் …”வேண்டாம் அடிக்காதீங்க…
விட்டுருங்க... வந்துருங்க…”
என்று புலம்பிக் கொண்டே இருந்தாள் மதுமதி….
சத்தம் கேட்டு கதிரும் வந்துவிடவே இருவரும் அந்த நாகத்தை அடித்து விட்டிருந்தனர் ….கிராமத்தில் வயல்களிலும் புதர்களிலும் பாம்புகளை பார்த்து வளர்ந்த வெற்றிவேலுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை…
ஆனால் பொம்மைப்பாம்பினைக் கண்டாலே மிரண்டு போகும் மதுமதியை அவனது இந்த அஞ்சாத குணம் பிரமித்துப் போக வைத்தது…
-------------------------------
என்னதான் முகமது கஜினியைத் தோற்கடித்து விடும் பொறுமையுடன் விடாது படையெடுத்துக் கொண்டிருந்தாலும் விலகி விலகிச் செல்லும் கதிரை நினைத்து மனம் வேதனையுற்றாள் கயல்…..
அவள் பொறுமையும் பறந்து பத்ரகாளியாய் உருவெடுக்கும் நாளும் வந்தது ……
அன்று விடுமுறை நாள்……….
பெங்களூருவுக்கு குடி பெயர்ந்திருந்த அஞ்சுகத்தின் சகோதரி மரகதம் அஞ்சுகத்தைக் காண குடும்பத்துடன் வந்திருந்தார்…
வெகு நாட்கள் கழித்து காணும் தன் தங்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் அஞ்சுகம்….
ஆனால் கயலோ அவர்கள் வருகையில் தன் தாயைப் போல் மகிழ்ச்சி அடையவில்லை… அதற்கு காரணமும் இருந்தது...
தன்னைவிட நிறம் அதிகமாக... நவீன அழகுடன்... முக்கியமாக நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி கொண்டு வந்து நின்ற தன் சித்தி மகள் ஷாலினி…...கதிருடன் ஈஷிக் கொண்டே திரிந்தது ….. அவளால் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.
வந்து இறங்கிய அன்றே...கதிரின் அசாத்திய உயரத்தையும் …..உழைத்து உழைத்து…. முறுக்கேறியிருந்த உடலையும்... அதனால் கிடைத்த கம்பீரத்தையும் ….. அவனுடைய திருத்தமான முக வடிவையும் கண்டவுள்...
“வாட் அ ஹேண்ட்சம் பெர்சன்லிட்டி..”
என கூறி கயலின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள்...அவரிடம் சென்று ….”ஐ ஆம் ஷாலினி…. ஃப்ரம் பெங்களூர்….என்றாள்
தன் கையை நீட்டியபடி….
அதற்கு தலையசைத்தவன்….”வாங்க ஐ ஆம் கதிர் …..” என்று கூறி விட்டு நகர பார்த்தவனை விடாது.... “நீங்க அஞ்சுகம் பெரியம்மாவுக்கு ரிலேட்டிவா” என்றாள்ஆங்கிலத்தில்….
“ஆமாம் சொந்தமும் கூட …”என்றான் கதிர் அதே ஆங்கிலத்தில்….
என்ன வகையில் சொந்தம் ...அவனது படிப்பு, இன்னும் பிற விவரங்களை எல்லாம் கேட்டு அறிந்து கொண்டாள் ஷாலினி...இவர்களது அனைத்து உரையாடல்களும் ஆங்கிலத்திலேயே வேறு இருந்து தொலைத்ததால் அவர்கள் பேசிய ஒன்றும் புரியவில்லை கயலுக்கு... அது வேறு இன்னும் கடுப்பேற்ற பொறுக்கமாட்டாமல் அவர்களை நெருங்கிச் சென்றாள் கயல்….
அவள் தன்னை நோக்கி வருவதைக் கண்டதுமே...ஷாலினியிடம் தலையசைத்து விடைபெற்ற கதிரைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே….
“வந்ததும் வராததுமா இங்க என்ன செய்ற ஷாலினி என்றாள் கயல்….
“ கதிர் கூட பேசிகிட்டு இருந்தேன் கயல்….”
“கதிரா ..இவ தான் பெயர் வச்சாளா…” என்று கறுவியவள்…..
“அவர் நம்மை விட எட்டு வருஷம் பெரியவர் ஷாலினி….கதிர் அண்ணான்னு சொல்லு...
“அண்ணாவா அவர் கசின் முறையாகனு சொன்னாரே….. அப்படின்னா நான் அவரை மாமான்னுதான் கூப்பிடனும்….”
‘பாவி...பாவி...இவ்வளவு பேசி இருக்கீங்களா... மாமாவாம்ல... மாமா….
யாருக்கு யாருடி மாமா…. எல்லாம் இந்த கதிர் மாமாவ சொல்லனும்...இவ கிட்ட பல்ல காட்டி பேசக் கண்டுதானே…. இவ மாமாங்குறா... என்று பல்லைக் கடித்தாள்…’
“ சரி அப்புறமா அதைப் பேசிக்கலாம் வா…” என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்…
கயலுக்கு தலைவலியாக இருந்தது...ஷாலினியின் வரவு...தன் கைப் பொம்மையைக் காப்பாற்றிக் கொள்ள முனையும் சிறு குழந்தையாக தவித்தாள் …. யாரிடமும் அதைப்பகிர்ந்து கொள்ள முடியாத வேதனையும் சேர்ந்து அவளைக் கலங்கடித்திருந்தது..உண்ணவும் மறந்து அமர்ந்திருந்தவளை மதுமதிதான் அழைத்துச் சென்று உண்ண வைத்தாள்...
கதிர் அதன் பின்பு வெளியே சென்று விடவே அன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் கழிந்தது…
மறுநாள் விடிந்ததும் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர் கதிரும் வெற்றிவேலும்..
அந்த நேரத்தில் கதிரிடம் சென்ற ஷாலினி “குட்மார்னிங் கதிர் …. என்ன ஜாகிங்கா…”என்றாள்.
“ம்ம்... ஆமா..”
“மே ஐ ஜாயின் வித் யு”
“நானும் வெற்றியும் சேர்ந்து ஓடுவோம் உங்களால எங்களுக்கு இணையா சேர்ந்து ஓட முடியாது…”என்றவன் …
“சரி...கிளம்புறோம்... லேட்டாயிருச்சு…”என்று கூறி சென்றுவிட்டான்…
தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த கயல்... இவர்கள் பேசுவதை பார்த்து விட்டாள்...அதற்கு மேல் தூக்கமாவது.. கலக்கமாவது...அவள் அவர்களை நெருங்கும் முன் கதிர் கிளம்பி விட்டிருந்தான் …..
அன்றைய விடியலிலேயே அவளுக்கு சக்தி எல்லாம் வடிந்து விட்டது போல் உணர்ந்தாள்…
பயிற்சியை முடித்துவிட்டு வந்த கதிரிடம் பேச்சுக் கொடுத்தபடியே அவன் அருகே சென்று அமர்ந்தானள் ஷாலினி...
அவனுக்குக் கொடுக்கப்பட்ட காபியை உறிஞ்சியவன் முகம் எட்டு கோணத்தில் நெளிந்தது.. உப்புக்கரித்த காப்பியை அவன் வாழ்நாளில் சுவைத்ததே யில்லையே…
“காப்பி எப்படி இருக்கு ஷாலினி..”என்றாள் கயல்….கதிரைப் பார்த்துக் கொண்டே ...
“ஓ...மார்வலஸ் கயல்….சான்ஸே இல்ல … சூப்பரா இருக்கு..” என்றாள் ஷாலினி
உப்புக்கரிக்கும் காப்பியை வைத்து விழித்துக் கொண்டிருந்த கதிருக்கு இதைக் கேட்டதும் புரையேறியது விட்டது...
“வாட் ஹேப்பன்ட் கதிர் ..ஆர் யூ ஓகே..” என்று அவனை நெருங்கிய ஷாலினியின் தோள் பற்றி அழுத்தி அமர வைத்து விட்டு அவன் தலையில் தானே தட்டினாள்…
கயல்விழி ‘தட் தட்’ என்று அடித்த அடியில் மூளை கலங்கிப் போனான் கதிர்..
அவனுக்கு புரிந்துவிட்டது கயல் அவன் மீது கோபமாக இருக்கிறாள் என்று...ஆனால் ஏன்...அவன் அவள் கோபப் படும் விதமாக செய்தது தான் என்ன... அவனைப் பொறுத்தவரையில் அவனது பாப்புவைத் தவிர மற்ற பெண்கள் அனைவரும் அவர்கள் உலக அழகிகள் ஆகவே இருந்தாலும் அவனுக்கு சகோதரிகளே... அதனால் அவனுக்கு கயல் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று ஒன்றும் புரிபடவில்லை ….
ஏற்கனவே கடுப்பில் இருந்த கயல்விழியை கொதிகலனாக்கவே அடுத்த சம்பவம் நிகழ்ந்தது…
வெளியே செல்வதற்காக கிளம்பி வந்த ஷாலினியை அங்கு மேசையின் மேல் வைக்கப் பட்டிருந்த அந்த இரட்டை வண்ண ரோஜா வெகுவாக ஈர்த்தது.. ஆசையுடன் அதனால் அதை கையில் எடுக்கப் போன ஷாலினியை தடுத்தது கயலின் காட்டமான குரல்...
“ ஷாலினி அத வை”
“ஏன் கயல் ... ஐ லைக் திஸ் ரோஸ் வெரி மச்.
… நான் வசிக்கிறேன் ….
“அங்க பெங்களூர்ல இல்லாத ரோஜாவா... அத வை...அது என்னோடது….”
என்று ரோஜாவை ஷாலினியிடம் இருந்து பறிக்க முயன்றாள்…
கயலுக்கு எட்டாதவாறு ரோஜாவை தன் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஷாலினி,
“நோ கயல்…. இத நா வச்சிக்கிற போறேன்...என்று விளையாட்டாய் வம்பிழுத்தாள்...அவ்வளவுதான் கயலுக்கு கோபத்தின் உச்சத்தில் கண்கள் சிவந்து விட்டது.
கதிர் கொண்டு வந்து நட்டு வைத்த ரோஜா செடியில் பூத்த முதல் பூ அது...அவன் கொண்டு வந்து வைக்கும் செடிகளில் பூக்கும் பூவெல்லாம் தனது ஏகபோக உரிமையாக கருதி இருந்தவளுக்கு ஷாலினி அந்த ரோஜாவின் கையில் வைத்திருப்பதே தாங்கவொண்ணா வேதனையைக் கொடுத்தது….
“ ஷாலினி...விளையாடாத...அதை கொடுத்திரு…” என்று அவளை நெருங்கினாள்….
“நோ கயல்...நா அதக் கொடுக்க மாட்டேனே….”என்று கூறிக் கொண்டே வெளியே ஓட ஆரம்பித்தாள் ஷாலினி...அதை விரட்டிக்கொண்டே ஓடினாள் கயல் …
கயலைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடிய ஷாலினி எதிரே வந்த கதிரை கவனிக்காமல் அவன் மேல் மோதி விட்டாள்...எதிர்பாராமல் தன் மீது வந்து மோதி கீழே விழ இருந்த ஷாலினியை தோள் பற்றி நிறுத்தி வைத்தான் கதிர்.
பின்னோடு துரத்திக்கொண்டு வந்த கயல்...இந்த காட்சியை பார்த்து கொதிப்படைந்தாள்...அவள் காதுகளிலிருந்து புகை வந்தது...முழுவதுமாக சந்திரமுகியாக மாறி இருந்த கயலைக் கதிர் கவனிக்கவில்லை….அவன் பாட்டில் தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அறைக்கு சென்று விளக்கை போட்டவன் உச்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளானான்….
----தொடரும்..
சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புக்களுக்கும் பற்றபல நன்றிகள்...படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள்...தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்..
அத்தியாயம் 7
தேர்வு எழுதிவிட்டு வரும்போது மகனுக்கும் மருமகளுக்குமிடையே சற்று இணக்கமான சூழல் உருவாகி இருக்கும் என்று எதிர் பார்த்திருநத்த அஞ்சுகத்திற்கு மதுமதியின் கோப முகமும் வேக நடையும் அதிருப்தியினைத் தந்தது...எனினும் அதனை அவர் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை…
மறுநாள் காலை தன் கல்லூரித் தோழியிடம்
செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள் மதுமதி.. திடீரென்று தொடர்பு துண்டிக்கப்படவே... மீண்டும் முயற்சித்தாள்..
“ஹலோ பவி…”
“ சொல்லு மது...என்ன கட்டாயிடுச்சு ….இப்ப கூட சரியா கேக்கல”
“சிக்னல் பிராப்ளம்னு நினைக்கிறேன்...இரு வெளியே வந்து பேசுறேன் ….”
பேசிக் கொண்டே பின் வாசலுக்கு வந்தாள் மதுமதி….வெகு நாட்களுக்கு பிறகு தன் தோழியிடம் பேசுவதால் பேச்சு சுவாரசியத்தில் சுற்றுப்புறம் மறந்து பேசிக் கொண்டிருந்தவளின் வலதுகரம் திடீர் என்று சுண்டி இழுக்கப்படவே … பற்றியிருந்த செல்பேசி எங்கோ போய் விழ... நிலை தடுமாறி போய் ஒரு கடினமான பாறையின் மீது மோதிக் கொண்டாள்... அதிர்வுடன் நிமிர்ந்து பார்த்தாள்..
வெற்றிவேல் தான் அவளை இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி இருந்தான்...சுறுசுறுவென்று கோபம் தலைக்கேற... அவனிடம் இருந்து திமிறி விலகியபடி ….
“விடுங்க….என்ன “
என்ற அவள் வாயை அழுத்தமாக மூடி இருந்தான் வெற்றிவேல் …
அதிர்ச்சியில் விழிவிரிய அவனை ஏறிட்டுப் பார்த்த அவளைத் தன் பார்வையாலேயே பின்னால் பார்க்கச் சொல்லி சைகை காட்டினான்...சரேலென்று பின்னால் திரும்பியவள் நடுநடுங்கிப் போனாள்…
அங்கே அவள் நின்றிருந்த இடத்திற்கு மேலே தென்னை மரத்தின் ஒரு கிளையில் தன் வாலை சுற்றிக்கொண்டு ஆனந்தமாய் ஊசலாடிக்கொண்டிருந்தது 5 அடி
நீளம் கொண்ட நாகப்பாம்பு….
மதுமதி சினிமா படங்களில் கூட பாம்புகளை பார்க்கவே மாட்டாள்... இன்று நிஜத்திலேயே படம் காட்டிக் கொண்டிருக்கும் பாம்பினை கண்டவள் அரண்டு போய் வெற்றிவேலைக் கட்டிக்கொண்டு அவன் மேல் முழுவதுமாக அப்பிக் கொண்டாள்…
வெற்றிவேலின் நிலையினை கேட்கவும் வேண்டுமோ…. அவன் எங்கே இங்கு இருந்தான் ….எங்கோ வான்வெளியில் சொர்க்கத்தில் மிதந்து கொண்டு இருந்தான்...சட்டென்று நாகத்தின் சீரான சுவாசம் கேட்கவும் சுயம் அடைந்தவன்... ‘ அவள் காதலினால் அல்ல... அளவுகடந்த பயத்தினாலேயே தன்னை தஞ்சமடைந்திருக்கிறாள்... என்று உணர்ந்தவன்.. மெல்ல மனமே இல்லாமல் தன்னிடமிருந்து மதுமதியினைப் பிரித்து எடுத்து வீட்டிற்குள் செல்ல சொல்லி ஜாடை செய்தான் ….
பாம்புகளுக்கு கேட்கும் திறன் இல்லாவிட்டாலும் அதிர்வுகளை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உண்டு... வேகமாக வீட்டிற்குள் சென்ற மதுமதி வீட்டில் அனைவருக்கும் பாம்பாரைப் பற்றிய விஷயத்தைக் கூறினாள்...
எல்லோரும் பரபரப்புடன் பின்கட்டிக்குச் செல்ல அதற்குள் வெற்றிவேல் ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு நாகத்தை நோக்கி முன்னேறி இருந்தான்…
மொத்தமாக அதிர்ந்த மதுமதி,
“ஐயோ...அது கிட்ட போக வேண்டாம்னு சொல்லுங்க அத்த….கடிச்சி... கிடிச்சு வச்சுரப் போகுது….”என்றாள்…
“ ஒன்னும் இல்லைம்மா மது…. நீ பயப்படாதே...இதை இப்படியே விட்டால் வீட்டுக்குள்ள வந்துரும் இல்லையா….என்று அவள் பயத்தை போக்கினார்அஞ்சுகம்…..
அப்படியும் கேட்காமல் …”வேண்டாம் அடிக்காதீங்க…
விட்டுருங்க... வந்துருங்க…”
என்று புலம்பிக் கொண்டே இருந்தாள் மதுமதி….
சத்தம் கேட்டு கதிரும் வந்துவிடவே இருவரும் அந்த நாகத்தை அடித்து விட்டிருந்தனர் ….கிராமத்தில் வயல்களிலும் புதர்களிலும் பாம்புகளை பார்த்து வளர்ந்த வெற்றிவேலுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை…
ஆனால் பொம்மைப்பாம்பினைக் கண்டாலே மிரண்டு போகும் மதுமதியை அவனது இந்த அஞ்சாத குணம் பிரமித்துப் போக வைத்தது…
-------------------------------
என்னதான் முகமது கஜினியைத் தோற்கடித்து விடும் பொறுமையுடன் விடாது படையெடுத்துக் கொண்டிருந்தாலும் விலகி விலகிச் செல்லும் கதிரை நினைத்து மனம் வேதனையுற்றாள் கயல்…..
அவள் பொறுமையும் பறந்து பத்ரகாளியாய் உருவெடுக்கும் நாளும் வந்தது ……
அன்று விடுமுறை நாள்……….
பெங்களூருவுக்கு குடி பெயர்ந்திருந்த அஞ்சுகத்தின் சகோதரி மரகதம் அஞ்சுகத்தைக் காண குடும்பத்துடன் வந்திருந்தார்…
வெகு நாட்கள் கழித்து காணும் தன் தங்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் அஞ்சுகம்….
ஆனால் கயலோ அவர்கள் வருகையில் தன் தாயைப் போல் மகிழ்ச்சி அடையவில்லை… அதற்கு காரணமும் இருந்தது...
தன்னைவிட நிறம் அதிகமாக... நவீன அழகுடன்... முக்கியமாக நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி கொண்டு வந்து நின்ற தன் சித்தி மகள் ஷாலினி…...கதிருடன் ஈஷிக் கொண்டே திரிந்தது ….. அவளால் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.
வந்து இறங்கிய அன்றே...கதிரின் அசாத்திய உயரத்தையும் …..உழைத்து உழைத்து…. முறுக்கேறியிருந்த உடலையும்... அதனால் கிடைத்த கம்பீரத்தையும் ….. அவனுடைய திருத்தமான முக வடிவையும் கண்டவுள்...
“வாட் அ ஹேண்ட்சம் பெர்சன்லிட்டி..”
என கூறி கயலின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள்...அவரிடம் சென்று ….”ஐ ஆம் ஷாலினி…. ஃப்ரம் பெங்களூர்….என்றாள்
தன் கையை நீட்டியபடி….
அதற்கு தலையசைத்தவன்….”வாங்க ஐ ஆம் கதிர் …..” என்று கூறி விட்டு நகர பார்த்தவனை விடாது.... “நீங்க அஞ்சுகம் பெரியம்மாவுக்கு ரிலேட்டிவா” என்றாள்ஆங்கிலத்தில்….
“ஆமாம் சொந்தமும் கூட …”என்றான் கதிர் அதே ஆங்கிலத்தில்….
என்ன வகையில் சொந்தம் ...அவனது படிப்பு, இன்னும் பிற விவரங்களை எல்லாம் கேட்டு அறிந்து கொண்டாள் ஷாலினி...இவர்களது அனைத்து உரையாடல்களும் ஆங்கிலத்திலேயே வேறு இருந்து தொலைத்ததால் அவர்கள் பேசிய ஒன்றும் புரியவில்லை கயலுக்கு... அது வேறு இன்னும் கடுப்பேற்ற பொறுக்கமாட்டாமல் அவர்களை நெருங்கிச் சென்றாள் கயல்….
அவள் தன்னை நோக்கி வருவதைக் கண்டதுமே...ஷாலினியிடம் தலையசைத்து விடைபெற்ற கதிரைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே….
“வந்ததும் வராததுமா இங்க என்ன செய்ற ஷாலினி என்றாள் கயல்….
“ கதிர் கூட பேசிகிட்டு இருந்தேன் கயல்….”
“கதிரா ..இவ தான் பெயர் வச்சாளா…” என்று கறுவியவள்…..
“அவர் நம்மை விட எட்டு வருஷம் பெரியவர் ஷாலினி….கதிர் அண்ணான்னு சொல்லு...
“அண்ணாவா அவர் கசின் முறையாகனு சொன்னாரே….. அப்படின்னா நான் அவரை மாமான்னுதான் கூப்பிடனும்….”
‘பாவி...பாவி...இவ்வளவு பேசி இருக்கீங்களா... மாமாவாம்ல... மாமா….
யாருக்கு யாருடி மாமா…. எல்லாம் இந்த கதிர் மாமாவ சொல்லனும்...இவ கிட்ட பல்ல காட்டி பேசக் கண்டுதானே…. இவ மாமாங்குறா... என்று பல்லைக் கடித்தாள்…’
“ சரி அப்புறமா அதைப் பேசிக்கலாம் வா…” என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்…
கயலுக்கு தலைவலியாக இருந்தது...ஷாலினியின் வரவு...தன் கைப் பொம்மையைக் காப்பாற்றிக் கொள்ள முனையும் சிறு குழந்தையாக தவித்தாள் …. யாரிடமும் அதைப்பகிர்ந்து கொள்ள முடியாத வேதனையும் சேர்ந்து அவளைக் கலங்கடித்திருந்தது..உண்ணவும் மறந்து அமர்ந்திருந்தவளை மதுமதிதான் அழைத்துச் சென்று உண்ண வைத்தாள்...
கதிர் அதன் பின்பு வெளியே சென்று விடவே அன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் கழிந்தது…
மறுநாள் விடிந்ததும் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர் கதிரும் வெற்றிவேலும்..
அந்த நேரத்தில் கதிரிடம் சென்ற ஷாலினி “குட்மார்னிங் கதிர் …. என்ன ஜாகிங்கா…”என்றாள்.
“ம்ம்... ஆமா..”
“மே ஐ ஜாயின் வித் யு”
“நானும் வெற்றியும் சேர்ந்து ஓடுவோம் உங்களால எங்களுக்கு இணையா சேர்ந்து ஓட முடியாது…”என்றவன் …
“சரி...கிளம்புறோம்... லேட்டாயிருச்சு…”என்று கூறி சென்றுவிட்டான்…
தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த கயல்... இவர்கள் பேசுவதை பார்த்து விட்டாள்...அதற்கு மேல் தூக்கமாவது.. கலக்கமாவது...அவள் அவர்களை நெருங்கும் முன் கதிர் கிளம்பி விட்டிருந்தான் …..
அன்றைய விடியலிலேயே அவளுக்கு சக்தி எல்லாம் வடிந்து விட்டது போல் உணர்ந்தாள்…
பயிற்சியை முடித்துவிட்டு வந்த கதிரிடம் பேச்சுக் கொடுத்தபடியே அவன் அருகே சென்று அமர்ந்தானள் ஷாலினி...
அவனுக்குக் கொடுக்கப்பட்ட காபியை உறிஞ்சியவன் முகம் எட்டு கோணத்தில் நெளிந்தது.. உப்புக்கரித்த காப்பியை அவன் வாழ்நாளில் சுவைத்ததே யில்லையே…
“காப்பி எப்படி இருக்கு ஷாலினி..”என்றாள் கயல்….கதிரைப் பார்த்துக் கொண்டே ...
“ஓ...மார்வலஸ் கயல்….சான்ஸே இல்ல … சூப்பரா இருக்கு..” என்றாள் ஷாலினி
உப்புக்கரிக்கும் காப்பியை வைத்து விழித்துக் கொண்டிருந்த கதிருக்கு இதைக் கேட்டதும் புரையேறியது விட்டது...
“வாட் ஹேப்பன்ட் கதிர் ..ஆர் யூ ஓகே..” என்று அவனை நெருங்கிய ஷாலினியின் தோள் பற்றி அழுத்தி அமர வைத்து விட்டு அவன் தலையில் தானே தட்டினாள்…
கயல்விழி ‘தட் தட்’ என்று அடித்த அடியில் மூளை கலங்கிப் போனான் கதிர்..
அவனுக்கு புரிந்துவிட்டது கயல் அவன் மீது கோபமாக இருக்கிறாள் என்று...ஆனால் ஏன்...அவன் அவள் கோபப் படும் விதமாக செய்தது தான் என்ன... அவனைப் பொறுத்தவரையில் அவனது பாப்புவைத் தவிர மற்ற பெண்கள் அனைவரும் அவர்கள் உலக அழகிகள் ஆகவே இருந்தாலும் அவனுக்கு சகோதரிகளே... அதனால் அவனுக்கு கயல் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று ஒன்றும் புரிபடவில்லை ….
ஏற்கனவே கடுப்பில் இருந்த கயல்விழியை கொதிகலனாக்கவே அடுத்த சம்பவம் நிகழ்ந்தது…
வெளியே செல்வதற்காக கிளம்பி வந்த ஷாலினியை அங்கு மேசையின் மேல் வைக்கப் பட்டிருந்த அந்த இரட்டை வண்ண ரோஜா வெகுவாக ஈர்த்தது.. ஆசையுடன் அதனால் அதை கையில் எடுக்கப் போன ஷாலினியை தடுத்தது கயலின் காட்டமான குரல்...
“ ஷாலினி அத வை”
“ஏன் கயல் ... ஐ லைக் திஸ் ரோஸ் வெரி மச்.
… நான் வசிக்கிறேன் ….
“அங்க பெங்களூர்ல இல்லாத ரோஜாவா... அத வை...அது என்னோடது….”
என்று ரோஜாவை ஷாலினியிடம் இருந்து பறிக்க முயன்றாள்…
கயலுக்கு எட்டாதவாறு ரோஜாவை தன் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஷாலினி,
“நோ கயல்…. இத நா வச்சிக்கிற போறேன்...என்று விளையாட்டாய் வம்பிழுத்தாள்...அவ்வளவுதான் கயலுக்கு கோபத்தின் உச்சத்தில் கண்கள் சிவந்து விட்டது.
கதிர் கொண்டு வந்து நட்டு வைத்த ரோஜா செடியில் பூத்த முதல் பூ அது...அவன் கொண்டு வந்து வைக்கும் செடிகளில் பூக்கும் பூவெல்லாம் தனது ஏகபோக உரிமையாக கருதி இருந்தவளுக்கு ஷாலினி அந்த ரோஜாவின் கையில் வைத்திருப்பதே தாங்கவொண்ணா வேதனையைக் கொடுத்தது….
“ ஷாலினி...விளையாடாத...அதை கொடுத்திரு…” என்று அவளை நெருங்கினாள்….
“நோ கயல்...நா அதக் கொடுக்க மாட்டேனே….”என்று கூறிக் கொண்டே வெளியே ஓட ஆரம்பித்தாள் ஷாலினி...அதை விரட்டிக்கொண்டே ஓடினாள் கயல் …
கயலைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடிய ஷாலினி எதிரே வந்த கதிரை கவனிக்காமல் அவன் மேல் மோதி விட்டாள்...எதிர்பாராமல் தன் மீது வந்து மோதி கீழே விழ இருந்த ஷாலினியை தோள் பற்றி நிறுத்தி வைத்தான் கதிர்.
பின்னோடு துரத்திக்கொண்டு வந்த கயல்...இந்த காட்சியை பார்த்து கொதிப்படைந்தாள்...அவள் காதுகளிலிருந்து புகை வந்தது...முழுவதுமாக சந்திரமுகியாக மாறி இருந்த கயலைக் கதிர் கவனிக்கவில்லை….அவன் பாட்டில் தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அறைக்கு சென்று விளக்கை போட்டவன் உச்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளானான்….
----தொடரும்..
சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புக்களுக்கும் பற்றபல நன்றிகள்...படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள்...தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்..
Attachments
-
619.2 KB Views: 183
Last edited: