- Joined
- Apr 7, 2019
- Messages
- 154
- Reaction score
- 950
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் உயிரிழப்பு என்பது ஏற்படாது என தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் அறிவுறுத்தி உள்ளார்.
நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்தார்.