- Joined
- Apr 7, 2019
- Messages
- 154
- Reaction score
- 950
சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட நடிகை ராதா, தன்னை 2 ஆவது திருமணம் செய்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடித்து துன்புறுத்துவதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சுந்தரா டிராவல்ஸ், கேம் அடாவடி, மற்றும் காத்தவராயன் படங்களில் நடித்தவர் நடிகை ராதா சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை ராதா அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-
தனக்கு திருமணமாகி, 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த நிலையில், சாலிகிராமத்தில் உள்ள சொந்த வீட்டில் தாயாருடன் வசித்து வருகிறேன்.
தற்போது எண்ணூர் காவல்நிலையத்தில்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் வசந்தராஜ், திருவான்மியூர் காவல்நிலையத்தில் பணியாற்றியபோது, தம்முடன் பழகி, தன்னை தாலிக்கட்டி திருமணம் செய்துகொண்டார்.
வசந்தராஜ் தன் மீது சந்தேகம் அடைந்து, தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்புறுத்துவதாகவும், எஸ்.ஐ வசந்தராஜ் மீது நடிகை ராதா புகார் மனுவில் கூறியுள்ளார்.