- Joined
- Apr 7, 2019
- Messages
- 154
- Reaction score
- 950
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு குழுக்கூடம் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்து 681 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 84 ஆயிரத்து 361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 7 ஆயிரத்து 71 பேர் குணமடைந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 27 ஆயிரத்து 440 ஆக் அதிகரித்துள்ளது.
ஆனாலும், தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரேநாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
கொரோனா பணிகளை ஒருங்கிணைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதற்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 11 குழுக்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தற்போது தொடங்கியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது