அத்தியாயம்-1
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்...
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா….
என்ற இனிமையான பாடல் தன் அருகில் ஓடிக் கொண்டிருப்பவரின் பாக்கெட்டில் இருந்த அலைபேசியில் இருந்து ஒலிக்க, அதை ரசித்த படியே தன் காலை ஓட்டத்தை ஓடிக் கொண்டிருந்தான் நம் பயணத்தின் நாயகன்...
அப்பொழுது தான் நினைவு வந்தது அவன் காதலி இன்னும் வந்திருக்க வில்லையே என்று... எப்பொழுதும் அவன் வருமுன்னே வந்து அவனுக்காக காத்திருப்பவள் இன்று இன்னும் வரவில்லையே... என்று ஏக்கமாக சுற்றிலும் பார்த்தான்....
அவனின் தேடலை கண்டு கொண்டாளோ என்னவோ.. அவனை மேலும் தேடி ஏங்க வைக்காமல் அடுத்த நொடி அவன் முன்னே வந்து நின்றாள்....
அவளின் வருகையை உணர்ந்தவன் முகத்தில் புன்னகை அரும்ப, தன் முகத்தை நிமிர்த்தி அவள் முன்னே நீட்ட, அவளும் அவனை ஏமாற்றாமல் சில்லிட்டிருந்த தன் கரங்களால் அவன் முகத்தில் கோலமிட்டு அவனுக்கு குறுகுறுப்பை மூட்ட அதில் மெல்ல வெட்கப்பட்டு அதை அனுபவித்து ரசித்தான்...
அவன் வெட்கப்படும் அழகை ரசித்த அவனின் காதலி மேலும் முன்னேறி அவன் முன்னுச்சி கேசத்தை செல்லமாக கலைக்க, அதில் இன்னும் கரைந்து தான் போனான்...
அவளின் அந்த மெல்லிய ஸ்பரிசத்தில் தன்னை மறந்து அவளிடம் முழுவதும் சரணடைந்திருந்தான் அவன்...
கொஞ்ச நேரம் தன் காதலனுடன் கொஞ்சி விளையாடிய அவள் தனக்கு நேரம் ஆவதை உணர்ந்து அவனை பிரிந்து செல்ல முயல, அவளை எப்பொழுதும் தன்னுடனே பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் அவளை ஏக்கமாக பார்க்க, அவளோ அவனிடம் பிரியா விடைபெற்று செல்ல காத்து நின்றாள் ...
“ஹ்ம்ம்ம்ம் மீண்டும் நாளைதான் உன் தரிசனம் கிடைக்கும்....நாளையும் மறக்காமல் வந்து விடு அன்பே...“ என்ற பெருமூச்சுடன் தன் வசீகர புன்னகையோடு தன் தென்றல் காதலியை விடை கொடுத்து அனுப்பி வைத்தான் வசி என்கிற வசீகரன்....
பெயருக்கேற்றார் போல யாரையும் எளிதில் வசீகரிப்பவன்.. ஆறடி உயரமும் அடர்ந்த கேசமும் தன்னுடைய பிசியான செட்யூலிலும் தன் காலை உடற் பயிற்சியை தவறாமல் செய்து வருவதால் முறுக்கேறிய, ஆண்மை ததும்பும் தோற்றம் கொண்டவன்....
எப்பொழுதும் இலகிய நிலையில் கனிவான முகமும் சிரித்த கண்களும் யாரும் எப்பொழுதும் அவனை அணுகும் வகையில் மிகவும் மென்மையான குணம் கொண்டவன்...
வசிக்கு இரு உயிர் நண்பர்கள். ஆதித்யா- ஆதித்யா க்ரூப் ஆப் கம்பெனிஸ் ன் எம்.டி. அடுத்தவன் நிகிலன். ஐ.பி.எஸ் முடித்துவிட்டு சென்னையில் அசிஸ்டென்ட் கமிஷ்னராக பணியாற்றுகிறான்...
(இவர்கள் இருவரும் கதாநாயகர்களாக உலாவரும் கதையை பிறகு பதிவிடுகிறேன்...)
வசிக்கு சிறுவயதில் இருந்தே மருத்துவ துறையில் ஆர்வம் அதிகமாக இருக்க, மற்ற நண்பர்கள் இருவரும் அவனை ஊக்குவித்தனர்.... 12 ஆம் வகுப்பில் கொஞ்சம் மதிப்பெண் குறைந்து விட, அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை...
அவர்கள் இருந்த நிலைக்கு பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்வது என்பது இயலாத ஒன்று
மருத்துவனாக அத்தனை தகுதி இருந்தும் தேர்வு நேரத்தில சரியாக பிரசன்ட் பண்ண முடியாமல் போக மதிப்பெண் குறைந்துவிட்டது...
நம் எஜுகேசன் சிஸ்டம் தான் மாணவர்களின் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து மருத்துவராக தகுதி உடையவனா இல்லையா என்று தீர்மானிப்பதால் மருத்துவனாக கனவு கொண்டிருந்த வசியால் அதில் சேர முடியவில்லை...
தன் சிறுவயது கனவான மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி கவலை கொண்டிருந்த நிலையில் ஆதிதான் தன் தந்தையிடம் சொல்லி அவனை தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்த்து விட்டான்...
அதோடு கல்லூரி கட்டணத்தை அவரே ஏற்று கொள்ள, வசீகரனுக்கு தன் நண்பனை நினைத்து பெருமையாக இருந்தது...
முதலில் வசியின் பெற்றோர்கள் மறுத்தனர்... வசியின் நண்பன் ஆதித்யாவின் தந்தை ராம், அவர்களை சந்தித்து உதவ முன் வந்தார்.
“நம்ம பசங்க கனவை நிறைவேற்றி வைக்கணும்.. அவனுக்கு மருத்துவத்தில் விருப்பம் இருக்கும் பொழுது அவனை அதை படிக்க விடாமல் வேற ஒரு படிப்பை படிக்க சொன்னால் அது அவன் மனதை நாமே கொலை செய்வதற்கு சமம்...
அப்படி ஒரு கொலையை செய்யாதிர்கள்.. அவனுக்கு பிடித்த படிப்பை படிக்கட்டும்.. என்னிடம் பணம் இருக்கு.. நான் தருகிறேன்.. அந்த பணத்தை நான் தொழிலில் முதலீடு செய்தால் இன்னும் பெருகும்தான்....
ஆனால் அதை விட அதே பணம் ஒரு நல்ல டாக்டரை உருவாக்கி பல பேர் உயிரை காப்பாற்ற போகிறது என்றால் எனக்கு அதுதான் மகிழ்ச்சி.. நீங்கள் இதில் தலையிடாதிர்கள்.. “ என்று கூறி அவர்களை கன்வின்ஸ் பண்ணி அவன் விரும்பிய அந்த மருத்துவ கல்லுரியிலயே சேர்த்து விட்டார்...
அவனும் தன் பொறுப்பை உணர்ந்து சின்சியராக படிக்க, இரண்டாவது வருடத்திலயே ஸ்காலர்ஷிப் கிடைக்க, அதை கொண்டு மேலும் நன்றாக படித்தான்...
MBBS முடித்ததும் அவன் மேற்படிப்பாக Cardiology எடுத்து படித்தான்...
ஏனோ சிறுவயதில் இருந்தே அந்த இதயத்தின் மீது தனியா காதல் அவனுக்கு...
ஒருவர் உடலில் எந்த உறுப்பு வேலை செய்யாவிட்டாலும் சமாளித்து விடலாம்... ஏன் மூளை வேலை செய்ய வில்லையென்றால் கூட கோமா ஸ்டேஜ் என்ற நிலைக்கு சென்று விடுவர்.. ஆனாலும் அவர்கள் இதயம் இயங்கி கொண்டுதான் இருக்கும்..
அதே போல இன்பத்திலும் துன்பத்திலும் அதிகம் துடிப்பது இதயம்தான்... அதனாலயே அந்த இதயத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும்.. என்பதாலயே அதை பற்றின படிப்பை எடுத்து படித்தான்...
அவனுடைய மேற்படிப்புக்கும் ராம்குமார் உதவ முன் வர, அதை மறுத்து விட்டான் வசி..
“இதுவரை எனக்கு நிழலாய் நின்று என்னை காத்ததற்கு நன்றி அங்கிள்.. இனிமேலும் நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பலை.. நானே இப்பொழுது சம்பாதிக்கிற நிலைக்கு வந்து விட்டேன்..
அதனால் நானே சமாளித்து கொள்வேன்... நீங்கள் எனக்கு இதுவரை செய்த உதவிக்கு ரொம்ப நன்றி.. நீங்கள் மட்டும் அன்று எனக்கு உதவியிருக்க வில்லையென்றால் என் கனவு கனவாகவே போயிருக்கும்...
இன்று ஒரு மருத்துவனாக உங்கள் முன்னால் நின்றிருக்க முடியாது...”
என்று உணர்ச்சி பொங்க மறுத்து விட, ராம்குமார் அவனை கட்டி அணைத்து கொண்டு
“God bless you my child…. உனக்கு எப்ப என்ன உதவி என்றாலும் தயங்காமல் என்னிடம் வா... நீ இந்த Cardiology துறையில் உலக புகழ் பெற்ற நிபுணனாக வேண்டும்.. உயிருக்கு போராடும் அனைவரையும் உன்னால் முடிந்தவரை காப்பாற்றனும்.. “என்று சிரித்தவாறு அவன் முன் உச்சி நெற்றியில் முத்தமிட்டு ஆசிர்வதித்தார்....
அவர் அன்று சொன்னது எப்பவுமே வசியின் மனதில் ஓடி கொண்டேஇருக்கும்.. அதையே ஒரு மந்திரமாக அடிக்கடி சொல்லி கொள்வான்..
அவன் சொன்ன மாதிரியே ஒரு தனியார் மருத்துவமனையில் பகுதி நேர மருத்துவராக பணியில் சேர்ந்தான்...
அந்த மருத்துவமனையின் MD ன் மகள் அவன் MBBS வகுப்பு தோழி....அதனாலயே தன் தந்தையிடம் சொல்லி அவனுக்கு அங்கு வேலை வாங்கி கொடுத்தாள்... அவருக்கும் இவனை பிடித்து விட,அவருமே அவனுடைய மேற்படிப்புக்கு உதவ, தன்னுடைய மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்து இன்று புகழ் பெற்ற ஒரு successful இதய அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்து வருகிறான்...
அவனின் குரு ராம்குமார் சொன்ன மாதிரி
இதுவரை இதய நோய் என்று தன்னிடம் வந்தவர்கள் அனைவரையும் எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவான்...அவனிடம் வந்து தோழ்வியுற்ற கேஸ் என்று இதுவரை எதுவும் இருந்ததில்லை....
அதனாலயே டாக்டர் வசி தான் வேண்டும் என்று அவனுக்காக காத்திருந்து அவனை சந்திப்பவர்கள் அதிகம்...ஒவ்வொருவரும் டிஸ்சார்ஜ் ஆகி வெளியேறும்பொழுது அவன் கைகளை பிடித்து நன்றி சொல்லி செல்வர்....
அதை எல்லாம் காணும்பொழுது தன் கனவு நிறைவேறி விட்டதை போல அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்..ஆனாலும் அவன் உள்ளுக்குள் சின்ன குறை அவனை எப்பொழுதும் அறித்து கொண்டே தான் இருக்கிறது..
அது தன்னை இந்த துறைக்கு கொண்டு வந்த தன் நண்பனின் தந்தை ராம் அங்கிளை தன்னால் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்பதே.. தான் ஒரு தலை சிறந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவனாக இருந்தும் அவரின் இக்கட்டான் நிலையில் இங்கு இல்லாமல் அப்பொழுது வெளிநாடு சென்றிருந்தான்...
“நான் மட்டும் இங்கு இருந்திருந்தால் எப்படியாவது அவர் உயிரை காப்பாற்றியிருப்பேன்.... “ என்று அடிக்கடி மனதுக்குள் புலம்புவான்
ஒவ்வொரு பேசன்ட் ஐயும் பார்க்கும்பொழுதும் அவர் நினைவு வர, எவ்வளவு கிரிட்டிகல் சிட்சுவேசனிலும் எப்படியாவது போராடி காப்பாற்றி விடுவான்..
அது மாதிரி காப்பாற்றியாக வேண்டும் என்பதாலயே இந்த துறையில் இன்னும் ஆராய்ச்சி செய்து வருகிறான்...