கதையைப் படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...
குறிப்பாக ‘இது திகில் கதையா?’ என்று நேரடியாகக் கேட்ட நேர்மையான விமர்சனங்களுக்கு நன்றி நன்றி...
என் நோக்கம் ஒரு மெல்லியதாக (subtle) ஒரு திகிலைச் சொல்வதே... இழையோடும் / அடியோட்டமாகச் செல்லும் ஒரு திகில்... an undercurrent! தமிழ் சினிமா பேய்ப்படங்களைப் போல அகோர மேக்கப்பில் வரும் பேய்களைக் காட்டுவதல்ல... அது எழுத்திற்கு ஒத்துவராது என்பது என் கருத்து...
‘திகில்’ என்ற சொல் உங்களைக் குழப்பியிருக்கலாம்... ஒரு ஜான்ரே-வாகத்தான் இச்சொல்லை நான் கையாண்டேன்... paranormal encournters - அமானுஷ்ய சந்திப்புகள் என்றால் இன்னும் கொஞ்சம் பொருத்தமாக இருக்குமோ?
மேலும், இவை மர்மக் கதைகள் அல்ல... கடைசியில் நான் வைக்க விரும்பும் அந்த எதிர்பாராத திருப்பம் (suspense) என்பது உங்கள் மூளையில் அட்ரெலினினை அபரிமிதமாகச் சுரக்க வைக்கும் ஒரு வெளிப்பாடு அல்ல... மாறாக, ஒரு மெல்லிய அதிர்ச்சியை / அப்படியா என்று ஒரு சின்ன கேள்வி விதையை உங்கள் மனத்தில் நடுவதே என் நோக்கம்...
கதையைப் படித்த பின்னர் என்றேனும் ஒரு நாள் நீங்கள் தனியாக இருக்கையில் ஏதேனும் ஒரு சின்ன நிகழ்வு கதையை உங்களுக்கு நினைவூட்டும், அப்போது உங்கள் உடலில் ஒரு மெல்லிய அதிர்வலை படரும்... அப்போது இவை ‘திகில் கதை’ என்ற அந்தஸ்த்தைப் பெறும்... அதுவே என் நோக்கம் (அடக் கிராதகா! என்று நீங்கள் சொல்வது கேட்கிறது! ஹிஹி!)
நன்றி மக்களே...
???