Nachuannam
அமைச்சர்
??Intha padichiruren4 epi poiruchuuu
??Intha padichiruren4 epi poiruchuuu
, ???அந்த இடம் மிகுந்த நிசப்தமாக இருந்தது... கும்மிருட்டில் நிழல்கூட தெரியாத அந்த அமாவாசை இரவில் யாருமற்ற அனாதையாக நின்றிருந்தாள் பெண்ணவள் யாமினி.. டப்..டப்..டப்... மற்றும் ஸ்ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்... சத்தங்களோ திகிலூட்டியது அவளுக்கு.... அந்த குளிர்ந்த வாடைகாற்றில்கூட வியர்த்தது அவள் நெற்றி..
எதற்கு இங்கு வந்தாள் என்று அவளே அறியவில்லை... யாரோ அவளை கைபிடித்து இழுத்து வந்ததுபோல் ஓர் உணர்வு.. ஹ்ம்ம்... பயத்தில் நாவுலர்ந்தது.. எச்சில் விழுங்கினால்... திடீரென்று ஒரு எண்ணம்.. தனக்கு நெருங்கிய யாரோ அருகில் இருப்பது போன்ற ஓர் மாயை.
அதுதான்... தன்னை இங்கு இழுத்துவந்திருக்க வேண்டும்.. அவர்களுக்கு தன்னால் ஏதோ காரியமாக வேண்டும்போல் அதனால் தான் தன்னை இங்கு வரவைத்திருக்கிறார்கள்... அவள் சிந்தனையோட்டம் தடைபட்டது.. அவள் நாசியை தீண்டிய வாசனையால்... ஏதோ ஓர் பொருள் எரிந்து கருகும் வாசனை...
பயம் மனதில் மட்டுமல்ல.. தலையில் இருந்து கால் வரை சுரந்தது. அவ்விடம்விட்டு ஓட நினைத்தாள்.. முயன்றாள்.. முடியவில்லை.. காலை ஏதோ ஒன்று இருக்க பற்றிய உணர்வு.. மிரட்சியுடன் அதிலிருந்து விடுபட போராடினாள்... தன் முயற்சியை கைவிட்டாள் பயத்துடன் அவள் பின்னால் ஏதோ ஒன்று நிற்பதை உணர்ந்தவுடன்... திரும்பி பார்க்க மனதில் தைரியமில்லை.. வாய்தானாக ஷண்முக கவசத்தை ஓதியது....
தொடரும்....???
, ???