- Joined
- Apr 7, 2019
- Messages
- 154
- Reaction score
- 950
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே 1-ந் தேதி, முதல் ரூ.300 டிக்கெட் பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை,
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12-ந் தேதியில் இருந்து இலவச தரிசன பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதேபோல் 300 ரூபாய் டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதன் காரணமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.300 தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து குறைத்து தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
பக்தர்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.