• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews தீங்கனியோ தீஞ்சுவையோ எனது பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
❤❤
மீனாட்சி அத்தை அருமை.

ப்ரணவ் 💞 உத்ரா காதல் - நடப்பின் நகல் :p

வினய் புதிராய் :cool:, நண்பனாய்... பகுதி நட்பு, விகுதி காதல் என..

ஆரம்பத்தில் அருமையாகக் சென்றது காதல் களம். இடையில் எதிர்பாரா திருப்பங்களின் காரணமாக, உத்ராவைப்போலவே கலங்கிப்போன தருணங்கள் வாசித்தவர்களுக்கும் நேர்ந்தது என்னவோ உண்மை.

இன்றைய தொழில்நுட்பத்தை புகுத்தி இறுதியாக நிறைவு செய்திருந்தது நன்றாக இருந்தது.

காதலின் ஒவ்வொரு நிமிடமும் அழகானது. அதனை சுவாசித்து, நேசித்து வாழ்ந்தவளால், அந்த நினைவிலிருந்து மீண்டு வருவது எத்தனை வலி மிகுந்தது என்பதை அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார் ஆசிரியர்.

நிதர்சனங்கள் புரிந்தாலும், காதலின் நிஜம் புரியாத நிலையில் காதலர்கள்.

சீண்டல்கள், தீண்டல்கள், உணர்வுத் தூண்டல்கள் காதலின் அச்சாரமாய்.

தாயின் மரணம், அடுத்து காதலனின் மரணம். அடுத்தடுத்த மரணங்களின் சுவடு வீரியம் நிறைந்ததாய். அதனால் நிலைகுலைந்துபோன பெண்ணிடம் நிமிர்வு எவ்வாறு உண்டானது என்பதை அறிய படியுங்கள்.

நேசிக்கும் நெஞ்சிருக்கும்வரை யாரும் அனாதைகள் கிடையாது என்பதை முடிவில் கூறி நிறைவு செய்திருக்கிறார்.

அனைத்தும் மாயை என்பது புரிந்தாலும், காதல் எனும் மாயத்தைக் கட்டிக் கொண்டு நோவது என்பது என்றுமே நடக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது.

காதலர்கள் மறைந்து மாயமானாலும், காதல் நிலைத்திருக்கிறது இறுதிவரை. அதற்கு தொழில் நுட்பமும் பெரிதும் உதவியிருக்கிறது.

வாழ்த்துகள் உமாமகேஸ்வரி @உமாமகேஸ்வரி சுமிரவன் 💐💐💐💐💐💐

படித்துப் பாருங்கள் தோழமைகளே(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top