அன்புத் தோழமைகளே!.. மறுபடியும் என்னோட உளறலை இங்கே கொட்ட வந்துட்டேன்... silentaa படிச்ச என்னோட friends எல்லாம் violenta மாறி முகத்துல காறி துப்பிட்டாங்க......இளவரசர நாட்டை விட்டு போக வச்சதுக்கு.....
“ஒழுங்கா சோழ இளவரசர் ஊருக்கு போக ரூட்டை சொல்லு இல்லனா தீர்ந்தே நீ ப்ளாக்மெயில் பண்ணறாங்க... அதான் நல்ல பிள்ளையா இளவரசருக்கு வழிகாட்ட வந்துட்டேன்... நான் காட்டுன வழியும் அவர் ஊர் போய் சேர்ந்த விதமும் முழுக்க முழுக்க என்னோட கற்பனை.. கற்பனை... கற்பனை மட்டுமே... நீங்களும் படிச்சுட்டு இந்த வழி சரியா? இல்லையானு உங்க கருத்த இங்கே சொல்லிட்டு போங்க.... நல்லா இருக்குனு சொல்றவங்க comment boxleyum வேற ரூட் போட்டுகுடு இந்த வழி சரியில்லன்னு சொல்றவங்க இன்பாக்ஸ்லேயும் வந்து சொல்லிட்டு போங்க உங்க கருத்துக்களை கேட்க நான் ஆவலோட waiting friends....
அவ்வகையயாய் அமைந்த அடர்ந்த மழைகாட்டுக்குள் அடைமழையில் இருந்து தன் பெண்ணனங்கை காக்கும் பொருட்டு குகையினில் தஞ்சமடைந்த சோழ இளவரசனை விடிந்ததின் அடையாளமாய் பறவைகளின் கீச்சிடும் ஒலி எழுப்பியது........
விடியலில் பறவைகளின் பூபாளத்தில் கண் மலர்ந்தவனுக்கு தன் அருகே தன்னையே அணைவாய் பற்றிக்கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் தன் மனையாளைக் கண்டவுடன் மனம் எங்கும் ஆனந்த கூக்குரலிட்டு அவளைக் கொஞ்சிக் கொண்டது......
முன்னிரவில் தன் கூற்றிக்கு மறுப்பேதும் சொல்லாமல் தன்னைச் சரணடைந்தவளை காணக்காண தெவிட்டவில்லை அவனுக்கு.....மென்மையாய் தொடங்கிய அவனின் முற்றுகை நாழிகை செல்லச்செல்ல வன்மையாய் மாறி அவளின் பெண்மையை மொத்தமாய் களவாடி நிமிர்ந்தவனை ஏறெடுத்து பார்க்கவும் முடியா வண்ணம் அவளை நாணம் வந்து ஆட்கொண்டது.....
பேசாமடந்தையாய் தன் வதனத்தையும் மறைத்துக்கொண்ட வஞ்சியை கெஞ்சியும் கொஞ்சியும் தன்னிடம் பேசிய பின்பே அவன் மார்பில் துயிலவிட்டான்.....
தன்மேல் படர்கொடியாய் படர்ந்திருந்த மென்னிடையாளின் மெல்லிய கையை மென்மையாய் எடுத்து விட்டான்.....
மன்னனின் அசைவிலேயே மங்கையவளும் மலர்ச்சி பெற இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் தழுவி மீண்டது.....
வதனம் சிவந்து தாமரை நயனங்கள் தாழ்ந்தாலும் அவளின் அதரத்தின் மரு அவனுக்கு மீண்டும் அவளை நாடும் எண்ணத்தையே தோற்றுவித்தது......
தான் கலைத்ததால் வந்த அவளின் களைப்பிற்கு தன்னை தானே நொந்து கொண்டவன் மனதினில் ஏற்பட்ட கிளர்ச்சிற்கு தற்காலிக அணையை கட்டினான்.....
அவனின் கூர்ந்த பார்வையை உத்தேசித்தவள்.....” என் வதனத்தில் தங்களின் அடுத்த செயல் யாதென்று தெரிகின்றதா? அரசே!.....” என்று பரிகாசத்துடன் வினவினாள்......
அவளின் பரிகாச பேச்சு சினங்கொள்ள வைத்தது அவளின் முன்கோபக்காரனுக்கு......
“இங்கே எந்த அரசர் இருக்கிறார் என்று கூறினால் அவரிடமே நான் கேட்டுக் கொள்கிறேன் தேவி!....” என்று சினம் கட்டினான்.
“தங்களையன்றி வேறு எவரை நான் அரசே என்று விளிப்பேன்!....எம் அரசர்!... வேந்தருக்கு வேந்தர்!.... வருங்கால சோழச் சக்கரவர்த்தி!... என்றும் எந்தன் மஹானுபாவனர்!... தாங்கள் மட்டுமே!...” என்று கூறி
அவனை குளிர்விக்கும் வேலையை செவ்வென செய்து மனதிற்குள் நகைத்துக் கொண்டாள்....
மனதின் வெளிப்பாடு அவளின் முகத்திலும் தெரிய அவளின் முக வடிவை தன் கைகளில் ஏந்தியவன் “தன்னடக்கத்திலும் சிறந்தது நாவடக்கம் தேவி!.... அதை இக்கணம் தாங்கள் செய்தே ஆக வேண்டும்”.....
“உமதருமை தலைவன் இக்கணம் ஏதுமற்ற நாடோடியாய், பராரியாய் இருக்கின்றேன்!.... இன்றைய பொழுது தங்களின் பசியாற்ற வழிவகை செய்யாது தவிக்கின்றேன்!...” என்று நகைப்புடன் ஆரம்பித்து துயரத்துடன் முடித்தான்.
அவனின் இந்த பேச்சு பாவையவளின் உயிர் நாடி வரை சென்று பதற வைக்க கண்களில் கண்ணீரை சிதற விட்டாள்......
அதை காண சகியாதவனாய் “தங்களின் வேடிக்கை பேச்சிற்கு வேடிக்கையாகத் தான் விடை பகிர்ந்தேன் தேவி!.... ஏன் இந்த கலக்கம்!...”
“குடிமக்கள் கண்கலங்கினால் அரசன் மீது தான் பிழை சொல்வார்கள்....தங்களின் இந்த கலக்கமும் என்னையே குறை சொல்லும்...இந்த நாடோடி அரசனுக்கு தங்களின் சன்மானம் இவை தானா?....” என்று கூறி பெருங்குரல் எடுத்து நகைத்தான்.
“பரிகாசம் வேண்டாம்.... என்றும் தாங்கள் தான் எனக்கும் இந்நாட்டு மக்களுக்கும் அரசர்!...” என்று கோபத்துடன் முடித்தவளின் இடையினை தன்னை நோக்கி இழுத்து நெற்றி முட்டியவன் “தங்கள் சித்தம் என் பாக்கியம் தேவி!...” என்று கண் சிமிட்டினான்...
“ மகிழ்ந்தேன் பக்தரே! தற்சமயம் தங்களின் தேவிக்கு சிரமப்பரிகாரம் செய்தே ஆகவேண்டிய சமயம் இது.... அதற்கு வழிவகை செய்தால் இந்த அடியவளின் மனம் சாந்தி பெறும்...”
“அடியவளுக்கு பணி செய்து கிடப்பதே அடியேனின் கடமை...” என்றவனை முறைத்தவள்.... “ போதும் வேடிக்கைப் பேச்சு.... அரசருக்கு சித்தம் கலங்கி விட்டது போலும்!..... தேவி உபாசகராக மாறி விட்டார்....”
உனது வேல் விழியின் வீச்சும், செம்பவள அதரத்தின் சிவப்பும் நித்தமும் என்னை பித்தனாக்குகின்றன தேவி!....” என்று அணைப்பை இறுக்கி அவளை விடுவித்தவனின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.
அந்த குகையை சுற்றி தன் பார்வையை சுழல விட்டவன் அங்கே ஒரு மூலையில் கிடந்த உளி, கூர் கத்தி, சிறிய ஈட்டி, ஆகியவற்றை கூர் தீட்டி இடை கச்சையில் வைத்துக் கொண்டான்...
பின்பு வெளியே வந்தவன் “ தேவி! இங்கிருந்து முன்னே கிழக்கு நோக்கி சென்றால் பூம்புகார் துறைமுகத்தை நாம் அடையலாம்...ஆனால் இப்போதைய நம் நிலை அங்கே செல்வதற்கு உசிதமல்ல..... நேற்றைய சம்பவங்கள் நாட்டினில் கசிய தொடங்கியிருக்கும்..... தேடுதல் வேட்டையில் உள்ள பாண்டிய ஒற்றர்கள் எந்நேரமும் நம்மை தாக்க நாலா பக்கமும் சஞ்சாரித்திருப்பர்..... ஆகையால் நாம் காட்டினில் தஞ்சம் அடைவதை தவிர வேறு வழியில்லை....” என்று தன் முடிவை உரைத்தான்..
“நேற்றைய இரவு காட்டினில் நடந்தவைகள் அதற்குள் எப்படி நாட்டிற்குள் எப்படி தெரிய வரும்? அரசே!...” என்று கேட்டவளுக்கு
“ சோழ நாட்டில் வீசும் காற்றுக்கும் காது உண்டு தேவி!....நாம் தான் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்...” என்றுரைத்து அவளை அழைத்துக் கொண்டு குகையின் ஊடே செல்லும் பாதை வழியாக காட்டின் உள்ளே தன் பயணத்தை தொடங்கினான்.....
மழைபெய்து கொண்டே இருப்பதால் சிறு சிறு ஓடைகளாக நீர் சென்று கொண்டே இருந்தது.... அவ்விடத்திலேயே தங்களை சுத்தப்படுத்திக் கொண்டவர்கள் அங்குள்ள கனிகளை பறித்து பசியாற்றிக் கொண்டனர்....
சிறய ஓடைகள் ஒன்றாய் சேர்ந்து ஆறாக ஓடிய இடத்தில் மேற்கொண்டு செல்ல வழியில்லாமல் மரங்கள் அடர்ந்து காணப்பட்டன...
அந்த ஆற்றை கடக்கவென மரப்பாலம் ஒன்று தென்பட்டது. நீளமான நாணல் மற்றும் பல வகை நார்களைப் பயன்படுத்தி, பெரிய கயிறுகளை உருவாக்கி அதில் குச்சிகள் கட்டைகள் ஆகியவற்றைப் பினைத்து திண்மையாக இருந்த அந்த பாலத்தின் மேலே ஏறி எதிர் திசையை அடைந்தனர்....
அங்கே கொய்யா. மாதுளை மரங்கள் நிறைந்து பழ தோட்டமாக காட்சியளித்தது. அந்த மரங்களை கொடியாக பற்றி கோவைக்காய் தாவரம் படர்ந்திருந்தது... சுற்றிலும் கண்களை சுழற்றியவன் ஒரு வித சங்கேத ஒலி எழுப்பினான்..... கரிகாலன் ஒலி எழுப்பிய சில நொடிகளில் புறா ஒன்று அவன் தோளில் வந்தமர்ந்தது.....
பறவையை கரங்களில் ஏந்தியவன் கோவைக்காய் ஒன்றை பறித்து அதற்கு கொறிக்க கொடுத்தவன் கொய்யா இலையையும், மாதுளை இலையையும் நாரில் திரித்து அதன் இரு பக்க கால்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக கட்டி விட்டான்.....
“ஒழுங்கா சோழ இளவரசர் ஊருக்கு போக ரூட்டை சொல்லு இல்லனா தீர்ந்தே நீ ப்ளாக்மெயில் பண்ணறாங்க... அதான் நல்ல பிள்ளையா இளவரசருக்கு வழிகாட்ட வந்துட்டேன்... நான் காட்டுன வழியும் அவர் ஊர் போய் சேர்ந்த விதமும் முழுக்க முழுக்க என்னோட கற்பனை.. கற்பனை... கற்பனை மட்டுமே... நீங்களும் படிச்சுட்டு இந்த வழி சரியா? இல்லையானு உங்க கருத்த இங்கே சொல்லிட்டு போங்க.... நல்லா இருக்குனு சொல்றவங்க comment boxleyum வேற ரூட் போட்டுகுடு இந்த வழி சரியில்லன்னு சொல்றவங்க இன்பாக்ஸ்லேயும் வந்து சொல்லிட்டு போங்க உங்க கருத்துக்களை கேட்க நான் ஆவலோட waiting friends....
தேன்மழை--2
பொழில் (Rainforest, மழைக்காடு) என்பது அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள்ஆகும். பொழிதல் என்றால் மழை பெய்தல் என்னும் பொருள்வழி பொழில் என்றாயிற்று. இச்சொல் இன்றைய. அறிவியலில் மழைக்காடு என்று அழைக்கப்படுவதுதான். இது மனிதரும், விலங்குகளும் காட்டினூடாக இலகுவில் நடந்து செல்வதற்கு வசதியாக அமைகிறது.
அவ்வகையயாய் அமைந்த அடர்ந்த மழைகாட்டுக்குள் அடைமழையில் இருந்து தன் பெண்ணனங்கை காக்கும் பொருட்டு குகையினில் தஞ்சமடைந்த சோழ இளவரசனை விடிந்ததின் அடையாளமாய் பறவைகளின் கீச்சிடும் ஒலி எழுப்பியது........
விடியலில் பறவைகளின் பூபாளத்தில் கண் மலர்ந்தவனுக்கு தன் அருகே தன்னையே அணைவாய் பற்றிக்கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் தன் மனையாளைக் கண்டவுடன் மனம் எங்கும் ஆனந்த கூக்குரலிட்டு அவளைக் கொஞ்சிக் கொண்டது......
முன்னிரவில் தன் கூற்றிக்கு மறுப்பேதும் சொல்லாமல் தன்னைச் சரணடைந்தவளை காணக்காண தெவிட்டவில்லை அவனுக்கு.....மென்மையாய் தொடங்கிய அவனின் முற்றுகை நாழிகை செல்லச்செல்ல வன்மையாய் மாறி அவளின் பெண்மையை மொத்தமாய் களவாடி நிமிர்ந்தவனை ஏறெடுத்து பார்க்கவும் முடியா வண்ணம் அவளை நாணம் வந்து ஆட்கொண்டது.....
பேசாமடந்தையாய் தன் வதனத்தையும் மறைத்துக்கொண்ட வஞ்சியை கெஞ்சியும் கொஞ்சியும் தன்னிடம் பேசிய பின்பே அவன் மார்பில் துயிலவிட்டான்.....
தன்மேல் படர்கொடியாய் படர்ந்திருந்த மென்னிடையாளின் மெல்லிய கையை மென்மையாய் எடுத்து விட்டான்.....
மன்னனின் அசைவிலேயே மங்கையவளும் மலர்ச்சி பெற இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் தழுவி மீண்டது.....
வதனம் சிவந்து தாமரை நயனங்கள் தாழ்ந்தாலும் அவளின் அதரத்தின் மரு அவனுக்கு மீண்டும் அவளை நாடும் எண்ணத்தையே தோற்றுவித்தது......
தான் கலைத்ததால் வந்த அவளின் களைப்பிற்கு தன்னை தானே நொந்து கொண்டவன் மனதினில் ஏற்பட்ட கிளர்ச்சிற்கு தற்காலிக அணையை கட்டினான்.....
அவனின் கூர்ந்த பார்வையை உத்தேசித்தவள்.....” என் வதனத்தில் தங்களின் அடுத்த செயல் யாதென்று தெரிகின்றதா? அரசே!.....” என்று பரிகாசத்துடன் வினவினாள்......
அவளின் பரிகாச பேச்சு சினங்கொள்ள வைத்தது அவளின் முன்கோபக்காரனுக்கு......
“இங்கே எந்த அரசர் இருக்கிறார் என்று கூறினால் அவரிடமே நான் கேட்டுக் கொள்கிறேன் தேவி!....” என்று சினம் கட்டினான்.
“தங்களையன்றி வேறு எவரை நான் அரசே என்று விளிப்பேன்!....எம் அரசர்!... வேந்தருக்கு வேந்தர்!.... வருங்கால சோழச் சக்கரவர்த்தி!... என்றும் எந்தன் மஹானுபாவனர்!... தாங்கள் மட்டுமே!...” என்று கூறி
அவனை குளிர்விக்கும் வேலையை செவ்வென செய்து மனதிற்குள் நகைத்துக் கொண்டாள்....
மனதின் வெளிப்பாடு அவளின் முகத்திலும் தெரிய அவளின் முக வடிவை தன் கைகளில் ஏந்தியவன் “தன்னடக்கத்திலும் சிறந்தது நாவடக்கம் தேவி!.... அதை இக்கணம் தாங்கள் செய்தே ஆக வேண்டும்”.....
“உமதருமை தலைவன் இக்கணம் ஏதுமற்ற நாடோடியாய், பராரியாய் இருக்கின்றேன்!.... இன்றைய பொழுது தங்களின் பசியாற்ற வழிவகை செய்யாது தவிக்கின்றேன்!...” என்று நகைப்புடன் ஆரம்பித்து துயரத்துடன் முடித்தான்.
அவனின் இந்த பேச்சு பாவையவளின் உயிர் நாடி வரை சென்று பதற வைக்க கண்களில் கண்ணீரை சிதற விட்டாள்......
அதை காண சகியாதவனாய் “தங்களின் வேடிக்கை பேச்சிற்கு வேடிக்கையாகத் தான் விடை பகிர்ந்தேன் தேவி!.... ஏன் இந்த கலக்கம்!...”
“குடிமக்கள் கண்கலங்கினால் அரசன் மீது தான் பிழை சொல்வார்கள்....தங்களின் இந்த கலக்கமும் என்னையே குறை சொல்லும்...இந்த நாடோடி அரசனுக்கு தங்களின் சன்மானம் இவை தானா?....” என்று கூறி பெருங்குரல் எடுத்து நகைத்தான்.
“பரிகாசம் வேண்டாம்.... என்றும் தாங்கள் தான் எனக்கும் இந்நாட்டு மக்களுக்கும் அரசர்!...” என்று கோபத்துடன் முடித்தவளின் இடையினை தன்னை நோக்கி இழுத்து நெற்றி முட்டியவன் “தங்கள் சித்தம் என் பாக்கியம் தேவி!...” என்று கண் சிமிட்டினான்...
“ மகிழ்ந்தேன் பக்தரே! தற்சமயம் தங்களின் தேவிக்கு சிரமப்பரிகாரம் செய்தே ஆகவேண்டிய சமயம் இது.... அதற்கு வழிவகை செய்தால் இந்த அடியவளின் மனம் சாந்தி பெறும்...”
“அடியவளுக்கு பணி செய்து கிடப்பதே அடியேனின் கடமை...” என்றவனை முறைத்தவள்.... “ போதும் வேடிக்கைப் பேச்சு.... அரசருக்கு சித்தம் கலங்கி விட்டது போலும்!..... தேவி உபாசகராக மாறி விட்டார்....”
உனது வேல் விழியின் வீச்சும், செம்பவள அதரத்தின் சிவப்பும் நித்தமும் என்னை பித்தனாக்குகின்றன தேவி!....” என்று அணைப்பை இறுக்கி அவளை விடுவித்தவனின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.
அந்த குகையை சுற்றி தன் பார்வையை சுழல விட்டவன் அங்கே ஒரு மூலையில் கிடந்த உளி, கூர் கத்தி, சிறிய ஈட்டி, ஆகியவற்றை கூர் தீட்டி இடை கச்சையில் வைத்துக் கொண்டான்...
பின்பு வெளியே வந்தவன் “ தேவி! இங்கிருந்து முன்னே கிழக்கு நோக்கி சென்றால் பூம்புகார் துறைமுகத்தை நாம் அடையலாம்...ஆனால் இப்போதைய நம் நிலை அங்கே செல்வதற்கு உசிதமல்ல..... நேற்றைய சம்பவங்கள் நாட்டினில் கசிய தொடங்கியிருக்கும்..... தேடுதல் வேட்டையில் உள்ள பாண்டிய ஒற்றர்கள் எந்நேரமும் நம்மை தாக்க நாலா பக்கமும் சஞ்சாரித்திருப்பர்..... ஆகையால் நாம் காட்டினில் தஞ்சம் அடைவதை தவிர வேறு வழியில்லை....” என்று தன் முடிவை உரைத்தான்..
“நேற்றைய இரவு காட்டினில் நடந்தவைகள் அதற்குள் எப்படி நாட்டிற்குள் எப்படி தெரிய வரும்? அரசே!...” என்று கேட்டவளுக்கு
“ சோழ நாட்டில் வீசும் காற்றுக்கும் காது உண்டு தேவி!....நாம் தான் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்...” என்றுரைத்து அவளை அழைத்துக் கொண்டு குகையின் ஊடே செல்லும் பாதை வழியாக காட்டின் உள்ளே தன் பயணத்தை தொடங்கினான்.....
மழைபெய்து கொண்டே இருப்பதால் சிறு சிறு ஓடைகளாக நீர் சென்று கொண்டே இருந்தது.... அவ்விடத்திலேயே தங்களை சுத்தப்படுத்திக் கொண்டவர்கள் அங்குள்ள கனிகளை பறித்து பசியாற்றிக் கொண்டனர்....
சிறய ஓடைகள் ஒன்றாய் சேர்ந்து ஆறாக ஓடிய இடத்தில் மேற்கொண்டு செல்ல வழியில்லாமல் மரங்கள் அடர்ந்து காணப்பட்டன...
அந்த ஆற்றை கடக்கவென மரப்பாலம் ஒன்று தென்பட்டது. நீளமான நாணல் மற்றும் பல வகை நார்களைப் பயன்படுத்தி, பெரிய கயிறுகளை உருவாக்கி அதில் குச்சிகள் கட்டைகள் ஆகியவற்றைப் பினைத்து திண்மையாக இருந்த அந்த பாலத்தின் மேலே ஏறி எதிர் திசையை அடைந்தனர்....
அங்கே கொய்யா. மாதுளை மரங்கள் நிறைந்து பழ தோட்டமாக காட்சியளித்தது. அந்த மரங்களை கொடியாக பற்றி கோவைக்காய் தாவரம் படர்ந்திருந்தது... சுற்றிலும் கண்களை சுழற்றியவன் ஒரு வித சங்கேத ஒலி எழுப்பினான்..... கரிகாலன் ஒலி எழுப்பிய சில நொடிகளில் புறா ஒன்று அவன் தோளில் வந்தமர்ந்தது.....
பறவையை கரங்களில் ஏந்தியவன் கோவைக்காய் ஒன்றை பறித்து அதற்கு கொறிக்க கொடுத்தவன் கொய்யா இலையையும், மாதுளை இலையையும் நாரில் திரித்து அதன் இரு பக்க கால்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக கட்டி விட்டான்.....
Last edited: