ஹாய் பிரெண்ட்ஸ்
இறுதி அத்தியாயத்தோடு வந்துவிட்டேன்....மாவீரனான ஆதித்த கரிகாலனின் முடிவு இதயத்தை கனக்க வைக்கும் ஒன்று...அவனின் வாழ்வு இப்படியிருந்திருந்தால் என்றதே இந்த சிறிய கதை....எத்தனையோ சாதனைகள் புரிந்து சோழ சக்கரவர்த்தியாக வாழாமல் அகால மரணமடைந்த மாவீரன் ஆதித்த கரிகாலனுக்கு இந்த தேன்மழை சமர்ப்பணம்.....
தன் எதிரில் நின்றிருந்த முத்தழகனை நிமிர்ந்துப் பார்த்தான் ஆதித்தன்.
"முத்தழகா!போன காரியம் என்னவாயிற்று?அவர் நாம் கூறியதற்கு ஒப்புக் கொண்டாரா?"
"ஆம் இளவரசே!அவர் நாம் கூறிய அனைத்திற்கும் ஒப்புக் கொண்டார்...அவருக்கே சில நாட்களாக சந்தேகம் தோன்றியிருக்கிறது என்பது அவர் பேச்சிலிருந்து அறிய முடிந்தது..."
"சரி நீ நான் முன்பு கூறியது போல் அவர்களை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும்...அதில் சிறு பிழையும் நேர்ந்து விடக் கூடாது... இந்த சந்தர்ப்பம் மறுமுறை கிடைப்பது அரிது..."
"அப்படியே இளவரசே!"என்றவன் ஆதித்தனைப் பார்த்து ஒரு விதமாக சிரித்தான்.
"முத்தழகா! சிரிக்கும் விதமாக என்ன ஆயிற்று இப்போது?"
"இளவரசர் வேட்டைக்கு சென்று திரும்பியதன் மேல் முகத்தில் ஜொலிப்பு அதிகமாகியிருக்கிறது... பேச்சிலும் நடத்தையிலும் நிதானமும் தெளிவும் கூடியிருக்கிறது.... எல்லாம் தேன்மொழி தேவியின் காதல் செய்த மாயம் என்று தோன்றுகிறது"என்று கூறிச் சிரித்தான்.
"போதும் என் மாற்றங்களை பட்டியலிட்டது...போ.... ஆக வேண்டிய வேலைகளை தலைக்கு மேல் இருக்கிறது..."குரலில் கண்டிப்பு இருந்தாலும் கண்கள் சிரிப்பைக் காட்டியது.
நந்தினியின் துரோகத்தால் எங்கே பெண்களையே வெறுத்துவிடுவாரோ என்று கவலைக் கொண்டிருந்த முத்தழகனுக்கு தேன்மொழியால் வாழ்வில் பிடிப்பும் சந்தோஷமும் அடையப் பெற்ற ஆதித்தன் அவளோடு நெடுங்காலம் சுகமாக வாழ வேண்டுமென இறைவனிடம் வேண்டியது அந்த உண்மைத் தோழனின் மனம்.
அன்று காலை கடம்பூர் அரண்மனை பரபரப்பாக புதிய விருந்தாளிகளை எதிர் நோக்கிக் காத்திருந்தது.மதிய உணவிற்கு அவர்கள் வருவதால் அறுசுவை விருந்து வேகமாக தயாரானது.அரண்மனையே விழாக் கோலம் பூண்டிருந்தாலும் அந்தபுர அறையில் சாளரத்தின் அருகே நின்றிருந்த தேன்மொழி மட்டும் சோக சிலையாக நின்றிருந்தாள்.
அவள் மனதில் பயமும் கலக்கமும் சூழ்ந்திருந்தது.ஏதேதோ கற்பனைகள் தோன்றி அவளை வதைத்தது.வர இருக்கும் சூழற் காற்று அவளின் வாழ்வை சர்வநாசம் செய்துவிடுமோ என எண்ணி அவள் தளிர் மேனி நடுங்கியது.
மெதுவாக அறைக்குள் வந்த கமலம் அவள் தோளில் கைவைத்தாள்.அதில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் தேன்மொழி.
"இளவரசி!ஏன் இந்த கலக்கம்...?"
"கமலம்!தெரிந்து தான் கேட்கிறாயா?இன்று வரப் போவது யார் என்று தெரிந்தும் நீ இந்த கேள்வியைக் கேட்கிறாயா?"
"தெரியும் இளவரசி!பெரிய பழுவேட்டரையரும் அவரின் இளையராணி நந்தினி தேவியும்"
"அந்த நந்தினி இளவரசரின் காதலுக்கு பாத்திரமானவள் என்பதை மறந்துவிட்டாயா?"
"காதலுக்கு அல்ல கவர்ச்சிக்கு பாத்திரமாக இருந்தாள்"என்று கம்பீரமாக ஒலித்தது ஆதித்தனின் குரல்.
அறை வாயிலை சிறியதாகிக் கொண்டு நின்றிருந்த ஆதித்தன் உள்ளே நுழையவும் அவனை தலைத் தாழ்த்தி வணங்கிய கமலம் வேகமாக அங்கிருந்து அகன்றாள்.
இதயத்தை ஊடுருவும் பார்வையோடு அவளை நெருங்கினான் ஆதித்தன்.அவனின் ஒவ்வொரு அடியும் அவளை சிலிர்க்க வைத்தது.அவன் பார்வையைத் தாள முடியாமல் நாணித் தலைக் குனிந்தாள் மங்கை.முச்சுக் காற்று முகத்தில் வீசும் நெருக்கத்தில் நின்றவன் தன் நெடுந்துயர்ந்த கையால் அவள் பூமுகத்தை நிமிர்த்தினான்.
"தேவி!என்னை பூரணமாக நம்புகிறாயா?"
அவன் கேள்வியில் திகைத்து அவனை நோக்கியவள்,
"இளவரசே!இது என்ன கேள்வி?!என்னைவிட அதிகமாக உங்களைத் தான் நம்புகிறேன்.."
"அது உண்மை என்றால் நந்தினியை நினைத்து ஏன் இந்த கலக்கம்?"
"அது....அது...நீங்கள் அவரை....காத...."
"இல்லை....அந்த வார்த்தை சொல்லாதே!காதல் புனிதமானது... இருவர் கருத்தொருமித்து கலப்பது...கஷ்டத்திலும் சுகத்திலும் துணையிருப்பது...ஆனால் வேகம் நிரம்பிய அந்த இளமைப் பருவத்தில் நான் நந்தினியிடம் கண்டது...வெறும் உடல் கவர்ச்சி...அழகான பெண்ணை எப்போதும் அருகே கண்டதும் தடுமாறியது என் மனம்.... ஆனால் அவளோ அந்த தடுமாற்றத்தை தன் சுயநலத்திற்காக நன்றாக உபயோக்கித்துக் கொண்டாள்....சோழ ராஜ்யத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சாமர்த்தியமாக என்னிடம் அறிந்துக் கொண்டாள்...அவள் வேலையானதும் உடையை மாற்றுவதுப் போல் உள்ளத்தையும் மாற்றிக் கொண்டாள்...அடுத்து அவள் குறி பழுவேட்டரையர்....பாவம் சோழர் சேவையே உயிர் மூச்சாக வாழ்ந்தவர்...இவள் மாயவலையில் எப்படியோ விழுந்துவிட்டார்....அவள் போதனையில் அவரேயறியாமல் சோழருக்கு எதிராக சதி செய்ய துணிந்து விட்டார்...ஆனால் சில நாட்களாக அந்த சதிகாரியின் உண்மை முகம் அவருக்கு சிறிதளவு தெரியத் தொடங்கியிருக்கிறது....அதை அவருக்கு முழுமையாக புரிய வைக்கத் தான் இங்கு வரவழிக்கிறேன்....இந்த திட்டத்தில் உன் உதவி எனக்கு முக்கியமாகத் தேவை...செய்வாயா?"
"இளவரசே!இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது! உங்களுக்காக உயிரைக் கூட சந்தோஷமாக கொடுக்க சித்தமாக இருப்பவள் உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்ய மாட்டேனா!கட்டளையிடுங்கள்!"
சில முக்கியமான பொறுப்புகளை அவளிடம் ஒப்படைத்தான் ஆதித்தன்.அவளும் அதையெல்லாம் கவனமாக கேட்டவள் அதை சரிவரச் செய்வதாக வாக்களித்தாள்.
கடம்பூர் அரண்மனைக்கு பழுவேட்டரையரும் அவரின் இளையராணி நந்தினியும் வந்துவிட்டனர்.அறையில் ஓய்வாக இருந்த நந்தினியை அந்தபுர பெண்கள் அனைவரும் சென்று பேசிவிட்டு வந்தனர்.
நந்தினியின் எழிலில் தேன்மொழியே ஒரு நிமிடம் மயங்கிவிட்டாள்.அவளை பற்றி இளவரசர் ஏற்கெனவே சொல்லி எச்சரிக்காது விட்டிருந்தால் அவளின் இனிப்பானப் பேச்சில் தேன்மொழி கண்டிப்பாக ஏமாந்துவிட்டிருப்பாள்.பட்டும்படாமல் அவளிடம் பேசிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டாள்.
மறுநாள் நெடுநிலக்கிழாரைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்களில் வருவதாக கூறி பழுவேட்டரையர் தம் இளையராணியை கடம்பூரிலேயே விட்டுச் சென்று விட்டார்.அவர் போனப் பின் நந்தினி தன் அறையை விட்டு வெளிவரவேயில்லை.இளவரசன் கூறியபடி அவள் மேல் ஒரு கண்ணை வைத்தபடி இருந்தாள் தேன்மொழி.
நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் இரவு முதல் ஜாமம் முடியும் நேரம்.அந்த காரிருளில் தீபந்த ஒளியில் செல்பவர்களை பின்பற்றி சென்றுக் கொண்டிருந்தான் முத்தழகன்.முதலில் ஒருவனாக மாலையில் ஆரம்பித்த அந்த பயணம் இப்போது ஐந்து பேராகச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்கள் பயணம் முடிந்த இடம் மூங்கில் காட்டின் மத்தியிலிருந்த ஐய்யனார் கோவில்.
அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தவர்களில் ஒருவன்,
"ரவிதாஸரே!நாம் இந்த ஐய்யனார் கோவிலுக்கு இந்த சமயத்தில் எதற்காக கூடியிருக்கிறோம்....நம் தேவி இங்கே வரப் போகிறாரா?"
அந்த கூட்டத்தின் தலைவனாகப்பட்டவன்,
"சோமா!தேவி இங்கே வரப் போவதில்லை...நாம் தான் அவர் இருக்குமிடம் செல்லப் போகிறோம்...காரி...பெரிய பழுவேட்டரையர் இன்று காலை கிளம்பி விட்டார் என்று நீ கூறியது நிச்சயம் தானே?அதில் சந்தேகம் ஏதுமில்லையே?"
"இல்லை ரவிதாஸரே!அதில் சந்தேகமேயில்லை....அவர் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சென்றதை நான் என் கண்ணால் கண்டேன்...தேவியும் உங்களையெல்லாம் அழைதத்துக் கொண்டு ரகசிய வழியில் அழைத்து வரச் சொன்னார்..."
"நல்லது....நம் தேவியின் மேல் அந்த கிழவனாரின் மோகம் நமக்கு பல விதத்திலும் உதவியாக இருக்கிறது.... இரண்டாம் ஜாமம் தொடங்கிவிட்டது..."
அவர்கள் பேச்சை ஒன்றுவிடாமல் கேட்ட முத்தழகனின் ரத்தம் கொதித்தது... அவர்களை அந்த இடத்திலேயே கொன்று குவிக்கும் ஆத்திரம் கிளம்பியது.ஆனால் இளவரசரின் திட்டம் கெட்டுவிடும் என்பதால் பொறுமை காத்தான்.
ரவிதாஸன் அங்கிருந்த சூலத்தைத் திருப்பியதும் மண் யானையும் குதிரையும் இடம்பெயர்ந்தன...அதில் ஒவ்வொருவராக இறங்கியதும் அது மூடிக் கொண்டு விட்டது.சிறிது இடைவெளி விட்டு அந்த துவாரம் இருந்த இடத்திற்கு சென்ற முத்தழகன் அதை திறக்க நினைத்து சூலத்தை திருப்பினான்.ஆனால் என்ன முயன்றும் அது திறக்கவில்லை.சதிகாரர்கள் உள்ளே பூட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றுத் தோன்றியது.நிராசையுற்ற முத்தழகன் அரண்மனை நோக்கி விரைந்தான்.
அரண்மனை அருகே இருந்த நந்தவனத்தில் முக்காடிட்ட உருவம் ஒன்றோடு தேன்மொழிக்காக காத்திருந்தான் ஆதித்தன்.சிறிது நேரத்தில் சுற்றிலும் கண்களை ஒட்டியபடி வந்தாள் தேன்மொழி.இளவரசனோடு நின்றிருந்த உருவத்தைக் கண்டு தயங்கி நின்றாள் அவள்.
"தேன்மொழி என்ன தயக்கம்...வா இங்கே!"
"சம்பூவரையரின் மகள் அல்லவா..."என்றது அந்த உருவம்.
"மூன்று நாட்களுக்கு முன்பு வரை..."
"அப்படியென்றால்...இப்போது?"
"என் மனைவி...."என்றான் ஆதித்தன் பெருமை பொங்கும் குரலில்.
"மனைவி.....?"
"ஆம்.... காந்தர்வ மணம்.... விரைவில் ஊரறிய திருமணம் நடைபெறும்..."
தேன்மொழி அந்த உருவத்தின் அருகில் சென்று நமஸ்கரித்தாள்.
"தீர்க்க சுமங்கலியாக கணவனோடு பல்லாண்டு வாழ் மகளே!"என்று ஆசிர்வதித்தது அந்த உருவம்.
அப்போது அந்த இருளில் இருந்து வெளிப்பட்டான் முத்தழகன்.
"வா முத்தழகா!போன வேலை என்னவாயிற்று?"
அவன் தான் கண்டது கேட்டவைகளை விவரித்தான்.
இறுதி அத்தியாயத்தோடு வந்துவிட்டேன்....மாவீரனான ஆதித்த கரிகாலனின் முடிவு இதயத்தை கனக்க வைக்கும் ஒன்று...அவனின் வாழ்வு இப்படியிருந்திருந்தால் என்றதே இந்த சிறிய கதை....எத்தனையோ சாதனைகள் புரிந்து சோழ சக்கரவர்த்தியாக வாழாமல் அகால மரணமடைந்த மாவீரன் ஆதித்த கரிகாலனுக்கு இந்த தேன்மழை சமர்ப்பணம்.....
தன் எதிரில் நின்றிருந்த முத்தழகனை நிமிர்ந்துப் பார்த்தான் ஆதித்தன்.
"முத்தழகா!போன காரியம் என்னவாயிற்று?அவர் நாம் கூறியதற்கு ஒப்புக் கொண்டாரா?"
"ஆம் இளவரசே!அவர் நாம் கூறிய அனைத்திற்கும் ஒப்புக் கொண்டார்...அவருக்கே சில நாட்களாக சந்தேகம் தோன்றியிருக்கிறது என்பது அவர் பேச்சிலிருந்து அறிய முடிந்தது..."
"சரி நீ நான் முன்பு கூறியது போல் அவர்களை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும்...அதில் சிறு பிழையும் நேர்ந்து விடக் கூடாது... இந்த சந்தர்ப்பம் மறுமுறை கிடைப்பது அரிது..."
"அப்படியே இளவரசே!"என்றவன் ஆதித்தனைப் பார்த்து ஒரு விதமாக சிரித்தான்.
"முத்தழகா! சிரிக்கும் விதமாக என்ன ஆயிற்று இப்போது?"
"இளவரசர் வேட்டைக்கு சென்று திரும்பியதன் மேல் முகத்தில் ஜொலிப்பு அதிகமாகியிருக்கிறது... பேச்சிலும் நடத்தையிலும் நிதானமும் தெளிவும் கூடியிருக்கிறது.... எல்லாம் தேன்மொழி தேவியின் காதல் செய்த மாயம் என்று தோன்றுகிறது"என்று கூறிச் சிரித்தான்.
"போதும் என் மாற்றங்களை பட்டியலிட்டது...போ.... ஆக வேண்டிய வேலைகளை தலைக்கு மேல் இருக்கிறது..."குரலில் கண்டிப்பு இருந்தாலும் கண்கள் சிரிப்பைக் காட்டியது.
நந்தினியின் துரோகத்தால் எங்கே பெண்களையே வெறுத்துவிடுவாரோ என்று கவலைக் கொண்டிருந்த முத்தழகனுக்கு தேன்மொழியால் வாழ்வில் பிடிப்பும் சந்தோஷமும் அடையப் பெற்ற ஆதித்தன் அவளோடு நெடுங்காலம் சுகமாக வாழ வேண்டுமென இறைவனிடம் வேண்டியது அந்த உண்மைத் தோழனின் மனம்.
அன்று காலை கடம்பூர் அரண்மனை பரபரப்பாக புதிய விருந்தாளிகளை எதிர் நோக்கிக் காத்திருந்தது.மதிய உணவிற்கு அவர்கள் வருவதால் அறுசுவை விருந்து வேகமாக தயாரானது.அரண்மனையே விழாக் கோலம் பூண்டிருந்தாலும் அந்தபுர அறையில் சாளரத்தின் அருகே நின்றிருந்த தேன்மொழி மட்டும் சோக சிலையாக நின்றிருந்தாள்.
அவள் மனதில் பயமும் கலக்கமும் சூழ்ந்திருந்தது.ஏதேதோ கற்பனைகள் தோன்றி அவளை வதைத்தது.வர இருக்கும் சூழற் காற்று அவளின் வாழ்வை சர்வநாசம் செய்துவிடுமோ என எண்ணி அவள் தளிர் மேனி நடுங்கியது.
மெதுவாக அறைக்குள் வந்த கமலம் அவள் தோளில் கைவைத்தாள்.அதில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் தேன்மொழி.
"இளவரசி!ஏன் இந்த கலக்கம்...?"
"கமலம்!தெரிந்து தான் கேட்கிறாயா?இன்று வரப் போவது யார் என்று தெரிந்தும் நீ இந்த கேள்வியைக் கேட்கிறாயா?"
"தெரியும் இளவரசி!பெரிய பழுவேட்டரையரும் அவரின் இளையராணி நந்தினி தேவியும்"
"அந்த நந்தினி இளவரசரின் காதலுக்கு பாத்திரமானவள் என்பதை மறந்துவிட்டாயா?"
"காதலுக்கு அல்ல கவர்ச்சிக்கு பாத்திரமாக இருந்தாள்"என்று கம்பீரமாக ஒலித்தது ஆதித்தனின் குரல்.
அறை வாயிலை சிறியதாகிக் கொண்டு நின்றிருந்த ஆதித்தன் உள்ளே நுழையவும் அவனை தலைத் தாழ்த்தி வணங்கிய கமலம் வேகமாக அங்கிருந்து அகன்றாள்.
இதயத்தை ஊடுருவும் பார்வையோடு அவளை நெருங்கினான் ஆதித்தன்.அவனின் ஒவ்வொரு அடியும் அவளை சிலிர்க்க வைத்தது.அவன் பார்வையைத் தாள முடியாமல் நாணித் தலைக் குனிந்தாள் மங்கை.முச்சுக் காற்று முகத்தில் வீசும் நெருக்கத்தில் நின்றவன் தன் நெடுந்துயர்ந்த கையால் அவள் பூமுகத்தை நிமிர்த்தினான்.
"தேவி!என்னை பூரணமாக நம்புகிறாயா?"
அவன் கேள்வியில் திகைத்து அவனை நோக்கியவள்,
"இளவரசே!இது என்ன கேள்வி?!என்னைவிட அதிகமாக உங்களைத் தான் நம்புகிறேன்.."
"அது உண்மை என்றால் நந்தினியை நினைத்து ஏன் இந்த கலக்கம்?"
"அது....அது...நீங்கள் அவரை....காத...."
"இல்லை....அந்த வார்த்தை சொல்லாதே!காதல் புனிதமானது... இருவர் கருத்தொருமித்து கலப்பது...கஷ்டத்திலும் சுகத்திலும் துணையிருப்பது...ஆனால் வேகம் நிரம்பிய அந்த இளமைப் பருவத்தில் நான் நந்தினியிடம் கண்டது...வெறும் உடல் கவர்ச்சி...அழகான பெண்ணை எப்போதும் அருகே கண்டதும் தடுமாறியது என் மனம்.... ஆனால் அவளோ அந்த தடுமாற்றத்தை தன் சுயநலத்திற்காக நன்றாக உபயோக்கித்துக் கொண்டாள்....சோழ ராஜ்யத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சாமர்த்தியமாக என்னிடம் அறிந்துக் கொண்டாள்...அவள் வேலையானதும் உடையை மாற்றுவதுப் போல் உள்ளத்தையும் மாற்றிக் கொண்டாள்...அடுத்து அவள் குறி பழுவேட்டரையர்....பாவம் சோழர் சேவையே உயிர் மூச்சாக வாழ்ந்தவர்...இவள் மாயவலையில் எப்படியோ விழுந்துவிட்டார்....அவள் போதனையில் அவரேயறியாமல் சோழருக்கு எதிராக சதி செய்ய துணிந்து விட்டார்...ஆனால் சில நாட்களாக அந்த சதிகாரியின் உண்மை முகம் அவருக்கு சிறிதளவு தெரியத் தொடங்கியிருக்கிறது....அதை அவருக்கு முழுமையாக புரிய வைக்கத் தான் இங்கு வரவழிக்கிறேன்....இந்த திட்டத்தில் உன் உதவி எனக்கு முக்கியமாகத் தேவை...செய்வாயா?"
"இளவரசே!இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது! உங்களுக்காக உயிரைக் கூட சந்தோஷமாக கொடுக்க சித்தமாக இருப்பவள் உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்ய மாட்டேனா!கட்டளையிடுங்கள்!"
சில முக்கியமான பொறுப்புகளை அவளிடம் ஒப்படைத்தான் ஆதித்தன்.அவளும் அதையெல்லாம் கவனமாக கேட்டவள் அதை சரிவரச் செய்வதாக வாக்களித்தாள்.
கடம்பூர் அரண்மனைக்கு பழுவேட்டரையரும் அவரின் இளையராணி நந்தினியும் வந்துவிட்டனர்.அறையில் ஓய்வாக இருந்த நந்தினியை அந்தபுர பெண்கள் அனைவரும் சென்று பேசிவிட்டு வந்தனர்.
நந்தினியின் எழிலில் தேன்மொழியே ஒரு நிமிடம் மயங்கிவிட்டாள்.அவளை பற்றி இளவரசர் ஏற்கெனவே சொல்லி எச்சரிக்காது விட்டிருந்தால் அவளின் இனிப்பானப் பேச்சில் தேன்மொழி கண்டிப்பாக ஏமாந்துவிட்டிருப்பாள்.பட்டும்படாமல் அவளிடம் பேசிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டாள்.
மறுநாள் நெடுநிலக்கிழாரைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்களில் வருவதாக கூறி பழுவேட்டரையர் தம் இளையராணியை கடம்பூரிலேயே விட்டுச் சென்று விட்டார்.அவர் போனப் பின் நந்தினி தன் அறையை விட்டு வெளிவரவேயில்லை.இளவரசன் கூறியபடி அவள் மேல் ஒரு கண்ணை வைத்தபடி இருந்தாள் தேன்மொழி.
நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் இரவு முதல் ஜாமம் முடியும் நேரம்.அந்த காரிருளில் தீபந்த ஒளியில் செல்பவர்களை பின்பற்றி சென்றுக் கொண்டிருந்தான் முத்தழகன்.முதலில் ஒருவனாக மாலையில் ஆரம்பித்த அந்த பயணம் இப்போது ஐந்து பேராகச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்கள் பயணம் முடிந்த இடம் மூங்கில் காட்டின் மத்தியிலிருந்த ஐய்யனார் கோவில்.
அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தவர்களில் ஒருவன்,
"ரவிதாஸரே!நாம் இந்த ஐய்யனார் கோவிலுக்கு இந்த சமயத்தில் எதற்காக கூடியிருக்கிறோம்....நம் தேவி இங்கே வரப் போகிறாரா?"
அந்த கூட்டத்தின் தலைவனாகப்பட்டவன்,
"சோமா!தேவி இங்கே வரப் போவதில்லை...நாம் தான் அவர் இருக்குமிடம் செல்லப் போகிறோம்...காரி...பெரிய பழுவேட்டரையர் இன்று காலை கிளம்பி விட்டார் என்று நீ கூறியது நிச்சயம் தானே?அதில் சந்தேகம் ஏதுமில்லையே?"
"இல்லை ரவிதாஸரே!அதில் சந்தேகமேயில்லை....அவர் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சென்றதை நான் என் கண்ணால் கண்டேன்...தேவியும் உங்களையெல்லாம் அழைதத்துக் கொண்டு ரகசிய வழியில் அழைத்து வரச் சொன்னார்..."
"நல்லது....நம் தேவியின் மேல் அந்த கிழவனாரின் மோகம் நமக்கு பல விதத்திலும் உதவியாக இருக்கிறது.... இரண்டாம் ஜாமம் தொடங்கிவிட்டது..."
அவர்கள் பேச்சை ஒன்றுவிடாமல் கேட்ட முத்தழகனின் ரத்தம் கொதித்தது... அவர்களை அந்த இடத்திலேயே கொன்று குவிக்கும் ஆத்திரம் கிளம்பியது.ஆனால் இளவரசரின் திட்டம் கெட்டுவிடும் என்பதால் பொறுமை காத்தான்.
ரவிதாஸன் அங்கிருந்த சூலத்தைத் திருப்பியதும் மண் யானையும் குதிரையும் இடம்பெயர்ந்தன...அதில் ஒவ்வொருவராக இறங்கியதும் அது மூடிக் கொண்டு விட்டது.சிறிது இடைவெளி விட்டு அந்த துவாரம் இருந்த இடத்திற்கு சென்ற முத்தழகன் அதை திறக்க நினைத்து சூலத்தை திருப்பினான்.ஆனால் என்ன முயன்றும் அது திறக்கவில்லை.சதிகாரர்கள் உள்ளே பூட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றுத் தோன்றியது.நிராசையுற்ற முத்தழகன் அரண்மனை நோக்கி விரைந்தான்.
அரண்மனை அருகே இருந்த நந்தவனத்தில் முக்காடிட்ட உருவம் ஒன்றோடு தேன்மொழிக்காக காத்திருந்தான் ஆதித்தன்.சிறிது நேரத்தில் சுற்றிலும் கண்களை ஒட்டியபடி வந்தாள் தேன்மொழி.இளவரசனோடு நின்றிருந்த உருவத்தைக் கண்டு தயங்கி நின்றாள் அவள்.
"தேன்மொழி என்ன தயக்கம்...வா இங்கே!"
"சம்பூவரையரின் மகள் அல்லவா..."என்றது அந்த உருவம்.
"மூன்று நாட்களுக்கு முன்பு வரை..."
"அப்படியென்றால்...இப்போது?"
"என் மனைவி...."என்றான் ஆதித்தன் பெருமை பொங்கும் குரலில்.
"மனைவி.....?"
"ஆம்.... காந்தர்வ மணம்.... விரைவில் ஊரறிய திருமணம் நடைபெறும்..."
தேன்மொழி அந்த உருவத்தின் அருகில் சென்று நமஸ்கரித்தாள்.
"தீர்க்க சுமங்கலியாக கணவனோடு பல்லாண்டு வாழ் மகளே!"என்று ஆசிர்வதித்தது அந்த உருவம்.
அப்போது அந்த இருளில் இருந்து வெளிப்பட்டான் முத்தழகன்.
"வா முத்தழகா!போன வேலை என்னவாயிற்று?"
அவன் தான் கண்டது கேட்டவைகளை விவரித்தான்.