ஹாய் பிரெண்ட்ஸ் தேன்மழை மூன்றாம் அத்தியாயத்தோடு வந்துவிட்டேன்.அடுத்த அத்தியாயம் இறுதி அத்தியாயம்....இது கொஞ்சம் கசமுசா எபி...பிரியாணியா...தயிர்சாதமா... படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க...
Green sands கண்ண மூடிட்டு படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்...
காலை சூரியன் உதயமாகி சிறிது நாழிகையிலேயே வீர நாராயண ஏரியின் கரையிலிருந்த காட்டில் வேட்டையாட ஆதித்த கரிகாலன் தலைமையில் தேன்மொழி செங்கமலம் முத்தழகன் கந்தமாறன் மற்றும் ஐந்தாறு வேட்டைக்காரர்கள் கிளம்பி விட்டனர்.
குதிரை ஏற்றத்திற்காகவும் வேட்டைக்காகவும் என்றே வடிவமைக்கப்பட்டிருந்த உடையில் தயாராகி வந்த தேன்மொழியைக் கண்டு மூச்சு விட மறந்தான் ஆதித்தன்.அவளின் அழகிய உடல் வளைவை எடுத்துக் காட்டியது அந்த உடை.தமையனோடு எத்தனையோ முறை அதை அணிந்து வேட்டைக்குச் சென்றிருக்கிறாள் தேன்மொழி.ஆனால் ஆதித்தனின் ஊடுருவும் பார்வை அவளை செவ்வானமாக்கியது.இதுவரை வெறும் ரசிக பார்வையாக இருந்தது அன்று கிறங்கும் பார்வையாக இருந்தது.அவனை நிமிர்ந்தும் பாராமல் சென்று அவளின் குதிரையில் லாவகமாக ஏறி அமர்ந்துக் கொண்டாள்.அனைவரும் வந்ததும் ஏரிக்கரை காட்டை நோக்கி பயணம் தொடங்கியது.
காட்டை அடைந்தவர்கள் நான்கு கூடாரங்களை அங்கே அமைத்தனர்.
ஏரியை ஒட்டி அமைந்திருந்த அந்த காட்டில் பறவைகளின் இன்னிசை காதுகளுக்கு பரவசமூட்டியது.சுற்றிலும் இருந்த மாசில்லா பசுமை மூச்சுக் காற்றை சுத்தம் செய்தது.
மான் கூட்டமொன்று இவர்களைத் தாண்டிக் கொண்டு சென்றது.உடனே தன் வில்லைப் பூட்டி அதன் மேல் அம்பு விடத் தயாரானான் கந்தமாறன்... அப்போது
"அண்ணா....."என்ற தேன்மொழியின் குரலில்
"இல்லை இல்லை..தங்காய்..நான் அவைகளை ஏதும் செய்வதில்லை...நீ வந்ததை மறந்துவிட்டேன்.."
"கந்தமாறா! நீங்கள் என்ன பேசிக் கொள்கிறீர்கள்...எனக்கொன்றும் புரியவில்லையே?"
"இளவரசே!அதொன்றுமில்லை....இவள் வேட்டைக்கு வரும்போது மட்டும் மான் முயல் போன்ற சாது பிராணிகளை வேட்டையாடக் கூடாது என்பது என் அருமை தங்கையின் கட்டளை...அதை நான் மீறுவதில்லை..."என்றான் கந்தமாறன்.
"ஓ....அப்படியா...!அப்படியானால் நானும் இனி சாது பிராணிகளை வேட்டையாடுவதில்லை"என்று ஆதித்தன் கூறவும் அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்.அதிலும் தேன்மொழிக்கு அவன் வார்த்தை புரிந்தும் புரியாமல் போக்குக் காட்டியது.மற்றவர்களுக்கு அந்த குழப்பம் இல்லை...அவன் பேச்சின் உட்கரு அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக விளங்கியது.
அன்று மதியம் வரை முள்பன்றி கழுகு ஓநாய் என பலவகை பிராணிகளை வேட்டையாடித் தீர்த்தனர்.மதிய உணவிற்கு பின் அவர்கள் வேட்டைத் தொடர்ந்தது.ஆனால் இம்முறை எந்த பிராணியும் கிடைக்கவில்லை.காட்டில் வெகுதூரம் சென்றும் எதுவும் கிடைக்காததால் எல்லோரும் நிராசையுற்றனர்.
"இளவரசே!சூரியன் மறையும் நேரமாகிவிட்டது... இன்னும் ஏதாவது பிராணி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை... நான் கூறுவதானால் நாம் கூடாரத்துக்கு திரும்பி சென்று விடுவோம்... நாளைக்கு திரும்பவும் வேட்டையை ஆரம்பிக்கலாம்"என்றான் கந்தமாறன்.
"இல்லை கந்தமாறா! எனக்கு இன்னும் திருப்தியில்லை....நாம் இதுவரை வேட்டையாடியது சிறிய பிராணிகள்... இவைகளை வேட்டையாடி என்ன பெருமை இருக்கிறது?..... நான் ஒரு யோசனைக் கூறுகிறேன்... நாம் இரண்டிரண்டு பேராக பிரிந்து சென்று வேட்டையாடுவோம்... சூரியன் அஸ்தமனத்திற்குள் யாருக்கு என்ன கிடைக்கிறதோ..அது அவர்கள் அதிருஷ்டம்... என்ன சொல்கிறாய்?"
"அப்படியே ஆகட்டும்...யார் யார் இணை என்பதை தாங்களே கூறிவிடுங்கள் இளவரசே!"என்று அவன் புறமே தேர்ந்தெடுப்பை ஒப்படைத்தான் கந்தமாறன்.
அவர்கள் அனைவருமே எதிர்ப்பார்த்தாற் போல் இளவரசன் தன்னோடு வர தேன்மொழியை தேர்ந்தெடுத்தான்.முத்தழகனோடு கமலம் கந்தமாறனோடு வீரன் ஒருவன்...இப்படி இணைகள் முடிவு செய்யப்பட்ட பின் அவரவர் அவர்களின் வழியில் சென்றனர்.
சிறிது தூரம் வரை இருவரும் சுற்றுப்புறத்தை பார்த்தபடி பேசாமல் வந்தனர்.அவர்கள் மவுனத்தை கலைக்கவென்றே புதர் ஒன்றின் பின்னே சலசலப்பு சத்தம் கேட்டது.இவரும் சிறிது கவனமாயினர்.இவர்களை அதிகம் காக்க வைக்காமல் வெளியே வந்தது ஒரு சிறுத்தைப்புலி.
அதை கண்டவுடன் தன் வில்லைப் பூட்டி அதன் வயிற்றுக்கு குறிப் பார்த்து அம்பை விட்டான் ஆதித்தன்.தூரம் அதிகமானதால் அம்பு சிறுத்தைப்புலியின் வயிற்றில் சிறிதளவே சென்றது.அதனால் அந்த சிறுத்தைப்புலி வேகமாக ஓடிவிட்டது.அதன் பின்பற்ற எண்ணி குதிரையைத் திருப்பினான் ஆதித்தன்.
"இளவரசே!வேண்டாம் விட்டுவிடுங்கள்...அது செல்லும் வழி காடு இன்னும் அடர்ந்து விடும்...சூரிய அஸ்தமனத்திற்குள் நம்மால் திரும்பி வர முடியாது...வானம் வேறு கருமை நிறம் கொண்டிருக்கிறது...பெருமழை வருவதற்கான அறிகுறிகள் காண்கின்றன...நாம் கூடாத்திற்குத் திரும்பி விடுவோம்..."என்றாள் தேன்மொழி மன்றாடும் குரலில்.
"தேவி! இந்த கரிகாலன் ஒரு முறை எண்ணியதை சுலபத்தில் விடுபவனல்ல... அதிலும் வேட்டை அரைகுறை ஆகிவிட்டது... அந்த சிறுத்தைப்புலியை கொண்டு செல்லாமல் கூடாரத்திற்கு திரும்ப மாட்டேன்... தாங்கள் வேண்டுமானால் திரும்பிச் செல்லுங்கள்..."என்றான் தீர்மானக் குரலில்.
அவன் குணத்தை நன்கு அறிந்த தேன்மொழி மறுமொழிக் கூறாமல் அவனை பின்தொடர்ந்தாள்.ஆனால் அவன் கூறியதில் நினைத்ததை விட மாட்டேன் என்ற வரி அவள் இதயத்தைச் சுருக்கென்று தைத்தது.நந்தினி இன்னும் அவன் மனதில் இருப்பதால் தான் அப்படிக் கூறினானோ?அவளை விடப் போவதில்லை என்பது அவன் பேச்சின் பொருளோ? என்று வேண்டாத நினைவு அவள் இதயத்தை பிசைந்தது.
அதற்குள் காற்று பலமாக வீசத் தொடங்கியிருந்தது.சுழன்றடிக்கும் காற்றில் குதிரை மேலே செல்ல மிகவும் சிரமப்பட்டன.அவர்களை மேலும் சோதிக்காமல் நெடுந்துயர்ந்து கிளைகள் பரப்பிய பெரிய மரத்தின் தாழ்ந்த கிளையில் இருந்தது அந்த சிறுத்தைப்புலி.
இதில் தேன்மொழி மேலும் பயந்து நடுங்கும் வண்ணம் மரத்தின் கீழே கொடிகளில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது ஒரு மான்குட்டி.அந்த ரத்தம் வழியும் நிலையிலும் சிறுத்தைப்புலி அந்த மான்குட்டி மேல் பாயத் தயாராக இருந்தது.
ஆதித்தன் கண நேரமும் யோசிக்காமல் அம்பை சிறுத்தையை நோக்கி எய்த்தான்.ஆனால் அதற்குள் அது மான்குட்டி மேல் பாய்ந்திருந்தது.
கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு அதிசயத்தைக் கண்டான் கரிகாலன்.அவன் அம்பை விடும்போதே சிறுத்தை மான்குட்டி மேல் பாய்ந்துவிட்டதைக் கண்ட தேன்மொழி பாய்ந்து சென்று சிறுத்தைக்கும் மான்குட்டிக்கும் இடையில் சென்றுவிட்டிருந்தாள்.அதனால் சிறுத்தை மான்குட்டிக்கு பதிலாக தேன்மொழி மேல் பாய்ந்திருந்தது.அதே சரியான நேரமெனக் கண்ட ஆதித்தன் தன் கையிலிருந்த வேலை குறிப் பார்த்து சிறுத்தை மேல் எறிந்து விட்டான்.இதுவரை அவர்களுக்கு ஆட்டம் காட்டிய சிறுத்தைப்புலி கோர சத்தத்தோடு கீழே விழுந்து தன் கடைசி மூச்சை விட்டது.
விரைவாக தேன்மொழியின் அருகில் வந்த போது அவள் ஏற்கெனவே நினைவிழந்திருந்தாள்.பூமாலையென அவளைத் தூக்கி தன் தொடை மேல் வைத்துக் கொண்டு அவள் கன்னத்தை தட்டி சுயநினைவுக்கு கொண்டுவர முயன்றான்.
Green sands கண்ண மூடிட்டு படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்...
காலை சூரியன் உதயமாகி சிறிது நாழிகையிலேயே வீர நாராயண ஏரியின் கரையிலிருந்த காட்டில் வேட்டையாட ஆதித்த கரிகாலன் தலைமையில் தேன்மொழி செங்கமலம் முத்தழகன் கந்தமாறன் மற்றும் ஐந்தாறு வேட்டைக்காரர்கள் கிளம்பி விட்டனர்.
குதிரை ஏற்றத்திற்காகவும் வேட்டைக்காகவும் என்றே வடிவமைக்கப்பட்டிருந்த உடையில் தயாராகி வந்த தேன்மொழியைக் கண்டு மூச்சு விட மறந்தான் ஆதித்தன்.அவளின் அழகிய உடல் வளைவை எடுத்துக் காட்டியது அந்த உடை.தமையனோடு எத்தனையோ முறை அதை அணிந்து வேட்டைக்குச் சென்றிருக்கிறாள் தேன்மொழி.ஆனால் ஆதித்தனின் ஊடுருவும் பார்வை அவளை செவ்வானமாக்கியது.இதுவரை வெறும் ரசிக பார்வையாக இருந்தது அன்று கிறங்கும் பார்வையாக இருந்தது.அவனை நிமிர்ந்தும் பாராமல் சென்று அவளின் குதிரையில் லாவகமாக ஏறி அமர்ந்துக் கொண்டாள்.அனைவரும் வந்ததும் ஏரிக்கரை காட்டை நோக்கி பயணம் தொடங்கியது.
காட்டை அடைந்தவர்கள் நான்கு கூடாரங்களை அங்கே அமைத்தனர்.
ஏரியை ஒட்டி அமைந்திருந்த அந்த காட்டில் பறவைகளின் இன்னிசை காதுகளுக்கு பரவசமூட்டியது.சுற்றிலும் இருந்த மாசில்லா பசுமை மூச்சுக் காற்றை சுத்தம் செய்தது.
மான் கூட்டமொன்று இவர்களைத் தாண்டிக் கொண்டு சென்றது.உடனே தன் வில்லைப் பூட்டி அதன் மேல் அம்பு விடத் தயாரானான் கந்தமாறன்... அப்போது
"அண்ணா....."என்ற தேன்மொழியின் குரலில்
"இல்லை இல்லை..தங்காய்..நான் அவைகளை ஏதும் செய்வதில்லை...நீ வந்ததை மறந்துவிட்டேன்.."
"கந்தமாறா! நீங்கள் என்ன பேசிக் கொள்கிறீர்கள்...எனக்கொன்றும் புரியவில்லையே?"
"இளவரசே!அதொன்றுமில்லை....இவள் வேட்டைக்கு வரும்போது மட்டும் மான் முயல் போன்ற சாது பிராணிகளை வேட்டையாடக் கூடாது என்பது என் அருமை தங்கையின் கட்டளை...அதை நான் மீறுவதில்லை..."என்றான் கந்தமாறன்.
"ஓ....அப்படியா...!அப்படியானால் நானும் இனி சாது பிராணிகளை வேட்டையாடுவதில்லை"என்று ஆதித்தன் கூறவும் அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்.அதிலும் தேன்மொழிக்கு அவன் வார்த்தை புரிந்தும் புரியாமல் போக்குக் காட்டியது.மற்றவர்களுக்கு அந்த குழப்பம் இல்லை...அவன் பேச்சின் உட்கரு அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக விளங்கியது.
அன்று மதியம் வரை முள்பன்றி கழுகு ஓநாய் என பலவகை பிராணிகளை வேட்டையாடித் தீர்த்தனர்.மதிய உணவிற்கு பின் அவர்கள் வேட்டைத் தொடர்ந்தது.ஆனால் இம்முறை எந்த பிராணியும் கிடைக்கவில்லை.காட்டில் வெகுதூரம் சென்றும் எதுவும் கிடைக்காததால் எல்லோரும் நிராசையுற்றனர்.
"இளவரசே!சூரியன் மறையும் நேரமாகிவிட்டது... இன்னும் ஏதாவது பிராணி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை... நான் கூறுவதானால் நாம் கூடாரத்துக்கு திரும்பி சென்று விடுவோம்... நாளைக்கு திரும்பவும் வேட்டையை ஆரம்பிக்கலாம்"என்றான் கந்தமாறன்.
"இல்லை கந்தமாறா! எனக்கு இன்னும் திருப்தியில்லை....நாம் இதுவரை வேட்டையாடியது சிறிய பிராணிகள்... இவைகளை வேட்டையாடி என்ன பெருமை இருக்கிறது?..... நான் ஒரு யோசனைக் கூறுகிறேன்... நாம் இரண்டிரண்டு பேராக பிரிந்து சென்று வேட்டையாடுவோம்... சூரியன் அஸ்தமனத்திற்குள் யாருக்கு என்ன கிடைக்கிறதோ..அது அவர்கள் அதிருஷ்டம்... என்ன சொல்கிறாய்?"
"அப்படியே ஆகட்டும்...யார் யார் இணை என்பதை தாங்களே கூறிவிடுங்கள் இளவரசே!"என்று அவன் புறமே தேர்ந்தெடுப்பை ஒப்படைத்தான் கந்தமாறன்.
அவர்கள் அனைவருமே எதிர்ப்பார்த்தாற் போல் இளவரசன் தன்னோடு வர தேன்மொழியை தேர்ந்தெடுத்தான்.முத்தழகனோடு கமலம் கந்தமாறனோடு வீரன் ஒருவன்...இப்படி இணைகள் முடிவு செய்யப்பட்ட பின் அவரவர் அவர்களின் வழியில் சென்றனர்.
சிறிது தூரம் வரை இருவரும் சுற்றுப்புறத்தை பார்த்தபடி பேசாமல் வந்தனர்.அவர்கள் மவுனத்தை கலைக்கவென்றே புதர் ஒன்றின் பின்னே சலசலப்பு சத்தம் கேட்டது.இவரும் சிறிது கவனமாயினர்.இவர்களை அதிகம் காக்க வைக்காமல் வெளியே வந்தது ஒரு சிறுத்தைப்புலி.
அதை கண்டவுடன் தன் வில்லைப் பூட்டி அதன் வயிற்றுக்கு குறிப் பார்த்து அம்பை விட்டான் ஆதித்தன்.தூரம் அதிகமானதால் அம்பு சிறுத்தைப்புலியின் வயிற்றில் சிறிதளவே சென்றது.அதனால் அந்த சிறுத்தைப்புலி வேகமாக ஓடிவிட்டது.அதன் பின்பற்ற எண்ணி குதிரையைத் திருப்பினான் ஆதித்தன்.
"இளவரசே!வேண்டாம் விட்டுவிடுங்கள்...அது செல்லும் வழி காடு இன்னும் அடர்ந்து விடும்...சூரிய அஸ்தமனத்திற்குள் நம்மால் திரும்பி வர முடியாது...வானம் வேறு கருமை நிறம் கொண்டிருக்கிறது...பெருமழை வருவதற்கான அறிகுறிகள் காண்கின்றன...நாம் கூடாத்திற்குத் திரும்பி விடுவோம்..."என்றாள் தேன்மொழி மன்றாடும் குரலில்.
"தேவி! இந்த கரிகாலன் ஒரு முறை எண்ணியதை சுலபத்தில் விடுபவனல்ல... அதிலும் வேட்டை அரைகுறை ஆகிவிட்டது... அந்த சிறுத்தைப்புலியை கொண்டு செல்லாமல் கூடாரத்திற்கு திரும்ப மாட்டேன்... தாங்கள் வேண்டுமானால் திரும்பிச் செல்லுங்கள்..."என்றான் தீர்மானக் குரலில்.
அவன் குணத்தை நன்கு அறிந்த தேன்மொழி மறுமொழிக் கூறாமல் அவனை பின்தொடர்ந்தாள்.ஆனால் அவன் கூறியதில் நினைத்ததை விட மாட்டேன் என்ற வரி அவள் இதயத்தைச் சுருக்கென்று தைத்தது.நந்தினி இன்னும் அவன் மனதில் இருப்பதால் தான் அப்படிக் கூறினானோ?அவளை விடப் போவதில்லை என்பது அவன் பேச்சின் பொருளோ? என்று வேண்டாத நினைவு அவள் இதயத்தை பிசைந்தது.
அதற்குள் காற்று பலமாக வீசத் தொடங்கியிருந்தது.சுழன்றடிக்கும் காற்றில் குதிரை மேலே செல்ல மிகவும் சிரமப்பட்டன.அவர்களை மேலும் சோதிக்காமல் நெடுந்துயர்ந்து கிளைகள் பரப்பிய பெரிய மரத்தின் தாழ்ந்த கிளையில் இருந்தது அந்த சிறுத்தைப்புலி.
இதில் தேன்மொழி மேலும் பயந்து நடுங்கும் வண்ணம் மரத்தின் கீழே கொடிகளில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது ஒரு மான்குட்டி.அந்த ரத்தம் வழியும் நிலையிலும் சிறுத்தைப்புலி அந்த மான்குட்டி மேல் பாயத் தயாராக இருந்தது.
ஆதித்தன் கண நேரமும் யோசிக்காமல் அம்பை சிறுத்தையை நோக்கி எய்த்தான்.ஆனால் அதற்குள் அது மான்குட்டி மேல் பாய்ந்திருந்தது.
கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு அதிசயத்தைக் கண்டான் கரிகாலன்.அவன் அம்பை விடும்போதே சிறுத்தை மான்குட்டி மேல் பாய்ந்துவிட்டதைக் கண்ட தேன்மொழி பாய்ந்து சென்று சிறுத்தைக்கும் மான்குட்டிக்கும் இடையில் சென்றுவிட்டிருந்தாள்.அதனால் சிறுத்தை மான்குட்டிக்கு பதிலாக தேன்மொழி மேல் பாய்ந்திருந்தது.அதே சரியான நேரமெனக் கண்ட ஆதித்தன் தன் கையிலிருந்த வேலை குறிப் பார்த்து சிறுத்தை மேல் எறிந்து விட்டான்.இதுவரை அவர்களுக்கு ஆட்டம் காட்டிய சிறுத்தைப்புலி கோர சத்தத்தோடு கீழே விழுந்து தன் கடைசி மூச்சை விட்டது.
விரைவாக தேன்மொழியின் அருகில் வந்த போது அவள் ஏற்கெனவே நினைவிழந்திருந்தாள்.பூமாலையென அவளைத் தூக்கி தன் தொடை மேல் வைத்துக் கொண்டு அவள் கன்னத்தை தட்டி சுயநினைவுக்கு கொண்டுவர முயன்றான்.