ஹாய் பிரிண்ட்ஸ்,
தேன் மழை முடியும் நேரத்தில் இருக்கிறோம்.. போட்டியில் கலந்து கொண்டேன்.. அது முடிந்துவிட்டாலும் கூட இதற்க்கான தொடர்ச்சி கொடுக்க வந்திருக்கிறேன்.. தேன்மழை படித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்..
சந்தியா ஸ்ரீ
அவன் ஹாஸ்பிட்டல் உள்ளே நுழைய அன்றைக்கு என்று ரொம்பவே கிரிட்டிகல் ஆப்ரேஷன் ஒன்றை அவன் முடித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் ஆதித்யா..
அவன் தன்னுடைய ஸீட்டில் சென்றவன் அமர்ந்து கண்ணை மூடினான்.. அடுத்த சிலநொடியில் அவனின் அறைக்குள் வேகமாக நுழைந்த பெண்ணொருத்தி,
“உங்களுக்கு என்ன தைரியம் இருந்தால் என்னை காதலிக்கிறேன் என்று லெட்டர் அனுப்புவீங்க..” என்றவள் அவனைப் பொரிந்து தள்ளினாள்..
அவளின் குரல்கேட்டு விழிதிறந்தவன் அவளின் முகம் பார்த்தும் திகைத்தான்.. அவன் முன்னே நந்தினிதான் நின்றிருந்தாள்.. ‘அவள் தன் கண்ணில் விழுவாள்..’ என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை..!
ஆனால் அவள் கண்முன்னே நின்றிருக்க, ‘இவளா..?’ என்றவனின் விழிகள் வியப்பில் விரிந்தது.. அவளின் முகம் சிவப்பதைக் கவனித்த ஆதியின் மனதில் செங்காந்தாள் மலர்களின் நினைவே வந்து சென்றது..
“மலர் போன்ற பெண்ணே
நீ கோபத்தில் முகம் சிவக்கும்
நேரத்தில் செங்காந்தாள் மலர்கள்
உன்னிடம் தோற்றுப் போகிறதடி..!
உன் முகசிவப்பிற்கு போட்டியிட
முடியாமல் தோல்வியைத் தழுவியது..
தன தோல்வியை ஒப்புகொள்ள
மறுக்கும் மலரினம் தன்னுயிர்
காதலனான வண்டினத்தின் மூலமாக
எனக்கொரு தூது அனுப்பியதடி!
அடிக்கடி முகம் சிவக்கிறேனென்று
என்னை தோற்கடிப்பதே மட்டுமே
வேலையாக வைத்திருக்க வேண்டாமென்று
உன் காதலியிடம் சொல்லிவிடு என்று
எனக்கொரு தூது வந்ததடி பெண்ணே
மலரினம் அனுப்பிய தூது
பொய்யென்று நினைத்தேன்..
இந்தநொடி நீ கோபத்தில்
முகம் சிவப்பதைக் கண்டதும்
மலரினம் தூது அனுப்பியதில்
தவறில்லை என்று
உணர்கிறேன் பெண்ணே..!” என்றவன் அவளின் கோபத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்..
“என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க..” என்றவள் அவனை அதிகாரம் செய்ய, “ஆமா நான்தான் எழுதினேன்.. நீ என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ..” என்றவன் குறுஞ்சிரிப்புடன்.. அவனின் பேச்சில் இப்பொழுது திகைப்பது நந்தினியின் முறையானது..
அவள் திகைத்து நிற்பதைப் பார்த்த ஆதித்யா, “ஐ லவ் யூ நந்தினி..” என்றவன் அவளின் விழியைப் பார்த்து நேருக்கு நேர் சொல்ல, “யூ டமிட்..” என்றவள் கத்தினாள்..
“ஏய் கத்தாதே.. ஐ லவ் யூ சொன்ன எனக்கு உன்னோட வாயை அடைக்க ரொம்ப நேரம் ஆகாது..” என்றவன் அதிகாரமாகச் சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்தான்..
அவனின் பேச்சு ஒரு மாதிரியாக இருப்பதைப் பார்த்தவள், “உங்களை இருங்க கவனிச்சிக்கிறேன்..” என்றவள் அவனை மிரட்டினாள்..
“நீ கவனிம்மா.. நான் காத்திருக்கிறேன்..” அவன் இருபொருள்பட சொல்ல அவளின் முகம் மாறிவிட அவளின் பின்னோடு இருந்து கதவைத் திறந்து உள்ளே வந்த அவளின் தோழி,
“ஏய் இங்கே என்ன பண்ற.. உனக்கு லவ் லெட்டர் கொடுத்தவன் அடுத்த அறையில் இருக்கிறேன்.. அவன் டாக்டர் இல்லடி.. கை உடைந்து பேசண்டாக சேர்த்திருக்காங்க..” என்றவள் விவரம் கூறினாள்..
அவள் சொன்னதைக் கேட்டு மேலும் அதிர்ந்த நந்தினி, “ஏய் என்னடி சொல்ற..” என்றவள் ஆதியின் பக்கம் திரும்பினாள்..
அவளின் தோழி சொன்னதை எல்லாம் கேட்டுகொண்டிருந்த ஆதி, “என்ன நந்தினி மேடம் ஆள் மாறிப்போச்சா.. அதுக்கு எல்லாம் கவலைபடாதே.. உன்னோட கழுத்தில் நான்தான் தாலிக்கட்ட போறேன்..” என்றவன் குறுஞ்சிரிப்புடன்..!
அவன் சொன்னதில் அதிர்ந்து நின்ற நந்தினியை இழுத்துக்கொண்டு சென்றாள் அவளின் தோழி. அவள் செல்லும் முன்னே அவளுக்கு வந்த போஸ்ட் லெட்டர் பேப்பரை அங்கே தவறவிட்டாள்..
அது தவறாமல் அவனின் கண்ணில் விழ அதை கையில் எடுத்தவன் அதிலிருந்த முகவரியைப் படித்துவிட்டு விழிமூடி சிரித்தவன், ‘நீ எனக்குதான் நந்தினி.. இந்த ஆதியின் தேடல் தோற்று போகாது.. என்னோட காதல் என்று தோற்காது..’ என்று மனதிற்குள் கூறினான்..
அவனின் அறையில் இருந்து வெளியே வந்த நந்தினி நேராக வீட்டிற்கு சென்றுவிட்டாள்.. அவனின் பேச்சு அவளுக்குள் மாற்றத்தை ஏற்ப்படுத்த, ‘ஏண்டா அங்கே போனோம்..’ என்ற அளவிற்கு நொந்து போனாள்..
அவள் ரூமின் உள்ளேயே அடைந்து கிடைப்பதை பார்த்த அவரின் அப்பா விஸ்வநாதன், ‘நந்தினிக்கு என்ன ஆச்சு..’ என்று மனதிற்குள் புலம்பியபடியே இருந்தார்..
அன்றுமாலை வீட்டிற்கு சென்ற ஆதி தாய் கலையரசியிடம் தன்னுடைய சந்தோசத்தைப் பகிரந்தான்.. அடுத்த ஒரு மாதமும் மின்னல் வேகத்தில் சென்று மறந்தது..
ஆதித்யா தன் குடும்பத்துடன் நந்தினியைப் பெண்பார்க்க அவளின் வீட்டிற்கு சென்றான்.. அவர்களின் குடும்பத்தை விஸ்வநாதன் வரவேற்று ஹாலில் அமரவைத்து பேசிகொண்டிருந்தார்.. அப்பொழுது மகள் காபி கப்புடன் வருவதைப் பார்த்தவர்,
“நந்தினி உன்னை முதல் பார்வையிலேயே மாப்பிள்ளை பிடித்துவிட்டதாம்..” என்றவர் வெகுளியாக சொல்லிவிட்டு சிரிக்க, ‘யார் அந்த கொம்பேறி மூக்கன்..’ என்று நிமிர்ந்து பார்த்த நந்தினி ஆதியைக் கண்டதும் அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றாள்..
அவன் அவளைப் பார்த்து குறும்புடன் கண்ணடிக்க அதிர்ச்சியில் இருந்து மீண்டு வெளியே வந்தவள் வேகமாக அவனுக்கு காபிகொடுத்துவிட்டு சென்றாள்..
அவள் மெளனமாக அறையின் உள்ளே செல்வதைக் கவனித்த அறிவு, “அண்ணா இப்படியொரு அமைதியான அண்ணி எனக்கு கிடைப்பாங்க என்று நான் கனவிலும் நினைக்கல..” என்றறவன் மெல்லிய குரலில்..
“யாரு அவளா அமைதியான பொண்ணு.. அடராமா..” என்ற பெரியமகனின் முதுகில் ஒரு அடிபோட்ட கலையரசி, “கல்யாணத்தை எப்பொழுது வெச்சுக்கலாம்..” என்று கேட்டார்..
“என்னோட மகளின் படிப்பிற்குதான் இங்கே வந்து இருக்கிறோம்.. நந்தினியின் படிப்பும் முடிந்தது.. இங்கே நிச்சதார்த்தம் செய்ய வேண்டாம்.. நீங்க நேராக இந்தியா வந்துவிடுங்கள்..” என்றார்..
“சரிங்க..” என்று புன்னகைக்க, “அம்மா அண்ணிகிட்ட அண்ணா பேசவேண்டும் என்று சொன்னான்..” என்று தமையனை வம்பில் மாட்டிவிட்டான் அறிவு..
“நீங்க போயி பேசிட்டு வாங்க மாப்பிள்ளை..” என்று விஸ்வநாதன் இயல்பாக சொல்ல அவளின் அறைக்குள் சென்றான் ஆதி..
அவள் ஜன்னலின் ஓரம் நின்றிருப்பதைப் பார்த்த ஆதியின் ஆழ்மனதில் இருந்து உயிர் பெற்றது.. கடந்த யுகத்தில் அவனின் மனதோடு தேக்கி வைத்திருந்த அவனின் உயிர்க்காதல் அவனின் மன கண்ணில் படமென விரிந்தது..
கடைசிவரை அவளை கரம்பிடிக்க நினைத்த ஆதியின் ஆசை கடைசி ஆசை நிறைவேறாமல் இருக்க நந்தினி திரும்பி அவனின் முகம் பார்த்தாள்..
அவளின் விழிகள் கலங்கி சிவந்திருப்பதைப் பார்த்தவன், “நந்தினி..” என்று அழைக்க, “அழகா..” என்று ஓடிவந்து அவனின் மார்பில் சாய்ந்து அழுதாள்..
“என்னை மன்னிச்சிருங்க.. போன ஜென்மத்தில் நீங்க என்னை உயிராக விரும்பினீங்க.. ஆனால் நான் உங்களோட உயிரை எடுக்கவே காதலிப்பது போல நடித்தேன்.. உங்களோட காதலை வைத்து உங்களை பளிவாங்கினேன்..” என்றவள் தொடர்ந்து,
“இப்பொழுது நான் உங்களை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்.. ஆனால் அதை சொல்ல கூட என்னால முடியல.. என்னை நினைத்து எனக்கே அருவருப்பாக இருக்கு..” என்று கதறினாள்..
அவள் மனம் திறந்து பேசிக் கொண்டிருக்க ஆதி அசையாமல் நின்றிருப்பதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள்.. அவனின் பார்வை அவளின் மீது இருக்க, “என்னை வெறுத்து விடுவீங்களா..” என்று தயக்கத்துடன் கேட்டாள்..
“காதல் மட்டும் மனசில் இருக்கணும்.. என்னோட மனசில் அது மட்டும்தான் இருக்குடி.. இன்றும் என்றும் நீ மட்டும்தாண்டி என்னோட காதலி..” என்று அவளை இறுக்கியணைத்தான் ஆதித்யா..
அவனின் காதல் யுகங்களை கடந்தும் வென்றுவிட, போன ஜென்மத்தில் செய்த தவறுக்கு இந்த ஜென்மத்தில் வருந்தினாள் நந்தினி.. இருவரின் காதலும் இணைத்துவிட வீட்டில் பெரியவர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது..
அடுத்தமாதமே ஆதியின் குடும்பம் இந்தியாவிற்கு வர காஞ்சிபுரத்தில் இருக்கும் காஞ்சிகாமாட்சி அம்மன் கோவிலில் ஆதித்யா – நந்தினியின் திருமணம் சீரோடும் சிறப்போடும் நடந்தது..
அன்று இரவு தனியறையில் ஆதி அவளுக்காக காத்திருந்தான்.. நந்தினியும் பால் சொம்புடன் அறைக்குள் நுழைந்தாள்.. அவளைப் பாரதத் ஆதியின் விழிகள் இமைக்க மறைந்தது..
அவன் கனவில் கண்ட நந்தினி இப்பொழுது நேரிலும் அதே அரச குளத்து பெண்களின் உடைய அன்றைய பெண்களை போலவே அணிதிருப்பதைக் கவனித்தவனின் கண்கள் மோகம் குடிகொண்டது..
“எனக்கு இந்த துணி பிடிக்கவே இல்ல..” என்றவள் சினுன்கிகொண்டே அவனின் அருகில் செல்ல அவளின் கவனம் எல்லாம் அவள் அணிந்திருந்த உடையின் மீதே இருக்க அவனின் பார்வை அவளின் மீதே இருந்தது..
அவள் மெளனமாக நின்றிருக்க, “ரொம்ப அழகாக இருக்கிற அழகி..” என்று அவளை அணைத்து அவாளின் இதழில் முத்தமிட்டான்..
அதில் அவளின் கவனம் எல்லாம் திசை திருப்பிவிட அவனின் காதல் உள்ளம் அவளுக்குள் மூழ்கி முத்தெடுத்தது.. அவனும் அவளுக்குள் கரைந்து தொலைந்து போனான் அவனின் காதலால்..!
தேன் மழை முடியும் நேரத்தில் இருக்கிறோம்.. போட்டியில் கலந்து கொண்டேன்.. அது முடிந்துவிட்டாலும் கூட இதற்க்கான தொடர்ச்சி கொடுக்க வந்திருக்கிறேன்.. தேன்மழை படித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்..
சந்தியா ஸ்ரீ
அவன் ஹாஸ்பிட்டல் உள்ளே நுழைய அன்றைக்கு என்று ரொம்பவே கிரிட்டிகல் ஆப்ரேஷன் ஒன்றை அவன் முடித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் ஆதித்யா..
அவன் தன்னுடைய ஸீட்டில் சென்றவன் அமர்ந்து கண்ணை மூடினான்.. அடுத்த சிலநொடியில் அவனின் அறைக்குள் வேகமாக நுழைந்த பெண்ணொருத்தி,
“உங்களுக்கு என்ன தைரியம் இருந்தால் என்னை காதலிக்கிறேன் என்று லெட்டர் அனுப்புவீங்க..” என்றவள் அவனைப் பொரிந்து தள்ளினாள்..
அவளின் குரல்கேட்டு விழிதிறந்தவன் அவளின் முகம் பார்த்தும் திகைத்தான்.. அவன் முன்னே நந்தினிதான் நின்றிருந்தாள்.. ‘அவள் தன் கண்ணில் விழுவாள்..’ என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை..!
ஆனால் அவள் கண்முன்னே நின்றிருக்க, ‘இவளா..?’ என்றவனின் விழிகள் வியப்பில் விரிந்தது.. அவளின் முகம் சிவப்பதைக் கவனித்த ஆதியின் மனதில் செங்காந்தாள் மலர்களின் நினைவே வந்து சென்றது..
“மலர் போன்ற பெண்ணே
நீ கோபத்தில் முகம் சிவக்கும்
நேரத்தில் செங்காந்தாள் மலர்கள்
உன்னிடம் தோற்றுப் போகிறதடி..!
உன் முகசிவப்பிற்கு போட்டியிட
முடியாமல் தோல்வியைத் தழுவியது..
தன தோல்வியை ஒப்புகொள்ள
மறுக்கும் மலரினம் தன்னுயிர்
காதலனான வண்டினத்தின் மூலமாக
எனக்கொரு தூது அனுப்பியதடி!
அடிக்கடி முகம் சிவக்கிறேனென்று
என்னை தோற்கடிப்பதே மட்டுமே
வேலையாக வைத்திருக்க வேண்டாமென்று
உன் காதலியிடம் சொல்லிவிடு என்று
எனக்கொரு தூது வந்ததடி பெண்ணே
மலரினம் அனுப்பிய தூது
பொய்யென்று நினைத்தேன்..
இந்தநொடி நீ கோபத்தில்
முகம் சிவப்பதைக் கண்டதும்
மலரினம் தூது அனுப்பியதில்
தவறில்லை என்று
உணர்கிறேன் பெண்ணே..!” என்றவன் அவளின் கோபத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்..
“என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க..” என்றவள் அவனை அதிகாரம் செய்ய, “ஆமா நான்தான் எழுதினேன்.. நீ என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ..” என்றவன் குறுஞ்சிரிப்புடன்.. அவனின் பேச்சில் இப்பொழுது திகைப்பது நந்தினியின் முறையானது..
அவள் திகைத்து நிற்பதைப் பார்த்த ஆதித்யா, “ஐ லவ் யூ நந்தினி..” என்றவன் அவளின் விழியைப் பார்த்து நேருக்கு நேர் சொல்ல, “யூ டமிட்..” என்றவள் கத்தினாள்..
“ஏய் கத்தாதே.. ஐ லவ் யூ சொன்ன எனக்கு உன்னோட வாயை அடைக்க ரொம்ப நேரம் ஆகாது..” என்றவன் அதிகாரமாகச் சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்தான்..
அவனின் பேச்சு ஒரு மாதிரியாக இருப்பதைப் பார்த்தவள், “உங்களை இருங்க கவனிச்சிக்கிறேன்..” என்றவள் அவனை மிரட்டினாள்..
“நீ கவனிம்மா.. நான் காத்திருக்கிறேன்..” அவன் இருபொருள்பட சொல்ல அவளின் முகம் மாறிவிட அவளின் பின்னோடு இருந்து கதவைத் திறந்து உள்ளே வந்த அவளின் தோழி,
“ஏய் இங்கே என்ன பண்ற.. உனக்கு லவ் லெட்டர் கொடுத்தவன் அடுத்த அறையில் இருக்கிறேன்.. அவன் டாக்டர் இல்லடி.. கை உடைந்து பேசண்டாக சேர்த்திருக்காங்க..” என்றவள் விவரம் கூறினாள்..
அவள் சொன்னதைக் கேட்டு மேலும் அதிர்ந்த நந்தினி, “ஏய் என்னடி சொல்ற..” என்றவள் ஆதியின் பக்கம் திரும்பினாள்..
அவளின் தோழி சொன்னதை எல்லாம் கேட்டுகொண்டிருந்த ஆதி, “என்ன நந்தினி மேடம் ஆள் மாறிப்போச்சா.. அதுக்கு எல்லாம் கவலைபடாதே.. உன்னோட கழுத்தில் நான்தான் தாலிக்கட்ட போறேன்..” என்றவன் குறுஞ்சிரிப்புடன்..!
அவன் சொன்னதில் அதிர்ந்து நின்ற நந்தினியை இழுத்துக்கொண்டு சென்றாள் அவளின் தோழி. அவள் செல்லும் முன்னே அவளுக்கு வந்த போஸ்ட் லெட்டர் பேப்பரை அங்கே தவறவிட்டாள்..
அது தவறாமல் அவனின் கண்ணில் விழ அதை கையில் எடுத்தவன் அதிலிருந்த முகவரியைப் படித்துவிட்டு விழிமூடி சிரித்தவன், ‘நீ எனக்குதான் நந்தினி.. இந்த ஆதியின் தேடல் தோற்று போகாது.. என்னோட காதல் என்று தோற்காது..’ என்று மனதிற்குள் கூறினான்..
அவனின் அறையில் இருந்து வெளியே வந்த நந்தினி நேராக வீட்டிற்கு சென்றுவிட்டாள்.. அவனின் பேச்சு அவளுக்குள் மாற்றத்தை ஏற்ப்படுத்த, ‘ஏண்டா அங்கே போனோம்..’ என்ற அளவிற்கு நொந்து போனாள்..
அவள் ரூமின் உள்ளேயே அடைந்து கிடைப்பதை பார்த்த அவரின் அப்பா விஸ்வநாதன், ‘நந்தினிக்கு என்ன ஆச்சு..’ என்று மனதிற்குள் புலம்பியபடியே இருந்தார்..
அன்றுமாலை வீட்டிற்கு சென்ற ஆதி தாய் கலையரசியிடம் தன்னுடைய சந்தோசத்தைப் பகிரந்தான்.. அடுத்த ஒரு மாதமும் மின்னல் வேகத்தில் சென்று மறந்தது..
ஆதித்யா தன் குடும்பத்துடன் நந்தினியைப் பெண்பார்க்க அவளின் வீட்டிற்கு சென்றான்.. அவர்களின் குடும்பத்தை விஸ்வநாதன் வரவேற்று ஹாலில் அமரவைத்து பேசிகொண்டிருந்தார்.. அப்பொழுது மகள் காபி கப்புடன் வருவதைப் பார்த்தவர்,
“நந்தினி உன்னை முதல் பார்வையிலேயே மாப்பிள்ளை பிடித்துவிட்டதாம்..” என்றவர் வெகுளியாக சொல்லிவிட்டு சிரிக்க, ‘யார் அந்த கொம்பேறி மூக்கன்..’ என்று நிமிர்ந்து பார்த்த நந்தினி ஆதியைக் கண்டதும் அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றாள்..
அவன் அவளைப் பார்த்து குறும்புடன் கண்ணடிக்க அதிர்ச்சியில் இருந்து மீண்டு வெளியே வந்தவள் வேகமாக அவனுக்கு காபிகொடுத்துவிட்டு சென்றாள்..
அவள் மெளனமாக அறையின் உள்ளே செல்வதைக் கவனித்த அறிவு, “அண்ணா இப்படியொரு அமைதியான அண்ணி எனக்கு கிடைப்பாங்க என்று நான் கனவிலும் நினைக்கல..” என்றறவன் மெல்லிய குரலில்..
“யாரு அவளா அமைதியான பொண்ணு.. அடராமா..” என்ற பெரியமகனின் முதுகில் ஒரு அடிபோட்ட கலையரசி, “கல்யாணத்தை எப்பொழுது வெச்சுக்கலாம்..” என்று கேட்டார்..
“என்னோட மகளின் படிப்பிற்குதான் இங்கே வந்து இருக்கிறோம்.. நந்தினியின் படிப்பும் முடிந்தது.. இங்கே நிச்சதார்த்தம் செய்ய வேண்டாம்.. நீங்க நேராக இந்தியா வந்துவிடுங்கள்..” என்றார்..
“சரிங்க..” என்று புன்னகைக்க, “அம்மா அண்ணிகிட்ட அண்ணா பேசவேண்டும் என்று சொன்னான்..” என்று தமையனை வம்பில் மாட்டிவிட்டான் அறிவு..
“நீங்க போயி பேசிட்டு வாங்க மாப்பிள்ளை..” என்று விஸ்வநாதன் இயல்பாக சொல்ல அவளின் அறைக்குள் சென்றான் ஆதி..
அவள் ஜன்னலின் ஓரம் நின்றிருப்பதைப் பார்த்த ஆதியின் ஆழ்மனதில் இருந்து உயிர் பெற்றது.. கடந்த யுகத்தில் அவனின் மனதோடு தேக்கி வைத்திருந்த அவனின் உயிர்க்காதல் அவனின் மன கண்ணில் படமென விரிந்தது..
கடைசிவரை அவளை கரம்பிடிக்க நினைத்த ஆதியின் ஆசை கடைசி ஆசை நிறைவேறாமல் இருக்க நந்தினி திரும்பி அவனின் முகம் பார்த்தாள்..
அவளின் விழிகள் கலங்கி சிவந்திருப்பதைப் பார்த்தவன், “நந்தினி..” என்று அழைக்க, “அழகா..” என்று ஓடிவந்து அவனின் மார்பில் சாய்ந்து அழுதாள்..
“என்னை மன்னிச்சிருங்க.. போன ஜென்மத்தில் நீங்க என்னை உயிராக விரும்பினீங்க.. ஆனால் நான் உங்களோட உயிரை எடுக்கவே காதலிப்பது போல நடித்தேன்.. உங்களோட காதலை வைத்து உங்களை பளிவாங்கினேன்..” என்றவள் தொடர்ந்து,
“இப்பொழுது நான் உங்களை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்.. ஆனால் அதை சொல்ல கூட என்னால முடியல.. என்னை நினைத்து எனக்கே அருவருப்பாக இருக்கு..” என்று கதறினாள்..
அவள் மனம் திறந்து பேசிக் கொண்டிருக்க ஆதி அசையாமல் நின்றிருப்பதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள்.. அவனின் பார்வை அவளின் மீது இருக்க, “என்னை வெறுத்து விடுவீங்களா..” என்று தயக்கத்துடன் கேட்டாள்..
“காதல் மட்டும் மனசில் இருக்கணும்.. என்னோட மனசில் அது மட்டும்தான் இருக்குடி.. இன்றும் என்றும் நீ மட்டும்தாண்டி என்னோட காதலி..” என்று அவளை இறுக்கியணைத்தான் ஆதித்யா..
அவனின் காதல் யுகங்களை கடந்தும் வென்றுவிட, போன ஜென்மத்தில் செய்த தவறுக்கு இந்த ஜென்மத்தில் வருந்தினாள் நந்தினி.. இருவரின் காதலும் இணைத்துவிட வீட்டில் பெரியவர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது..
அடுத்தமாதமே ஆதியின் குடும்பம் இந்தியாவிற்கு வர காஞ்சிபுரத்தில் இருக்கும் காஞ்சிகாமாட்சி அம்மன் கோவிலில் ஆதித்யா – நந்தினியின் திருமணம் சீரோடும் சிறப்போடும் நடந்தது..
அன்று இரவு தனியறையில் ஆதி அவளுக்காக காத்திருந்தான்.. நந்தினியும் பால் சொம்புடன் அறைக்குள் நுழைந்தாள்.. அவளைப் பாரதத் ஆதியின் விழிகள் இமைக்க மறைந்தது..
அவன் கனவில் கண்ட நந்தினி இப்பொழுது நேரிலும் அதே அரச குளத்து பெண்களின் உடைய அன்றைய பெண்களை போலவே அணிதிருப்பதைக் கவனித்தவனின் கண்கள் மோகம் குடிகொண்டது..
“எனக்கு இந்த துணி பிடிக்கவே இல்ல..” என்றவள் சினுன்கிகொண்டே அவனின் அருகில் செல்ல அவளின் கவனம் எல்லாம் அவள் அணிந்திருந்த உடையின் மீதே இருக்க அவனின் பார்வை அவளின் மீதே இருந்தது..
அவள் மெளனமாக நின்றிருக்க, “ரொம்ப அழகாக இருக்கிற அழகி..” என்று அவளை அணைத்து அவாளின் இதழில் முத்தமிட்டான்..
அதில் அவளின் கவனம் எல்லாம் திசை திருப்பிவிட அவனின் காதல் உள்ளம் அவளுக்குள் மூழ்கி முத்தெடுத்தது.. அவனும் அவளுக்குள் கரைந்து தொலைந்து போனான் அவனின் காதலால்..!