என்னோட மொதோ பதிவு..
++++++++++++++××+
பிச்சை புகினும்…- தா.க.தங்கவேல்
May 22, 2014 at 11:24pm
என் வாசிப்பு, எழுத்து அனைத்துக்கும் முன்னோடி என் அண்ணன். கணினி, இணையம் குறித்து இதுவரை எதுவும் தெரியாவிட்டாலும் நன்றாக எழுதுவார். கடந்த ஒரு மாதத்தில் கணினி கற்று தானாகவே தட்டுத் தடுமாறி தட்டச்சி தன் அனுபவத்தையே நீண்ட கட்டுரை ஆக்கி அனுப்பி இருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன். உங்கள் பின்னூட்டம் அவரை மேலும் ஊக்கப்படுத்தும். .(இப்படி ஒரு அறிமுகத்தோட எந் தம்பி குடுத்தது தான் என்னோட முக நூல் வாழ்க்கை.. அவனில்லேன்னா இந்த நானில்ல)
# பிச்சை புகினும்…- தா.க.தங்கவேல் #
நா ஒரு காட்டாளு.. பின்ன என்னங்க? இந்த 2014ல் கம்ப்யூட்டர் தெரியாதவன்… கடைசிக்கு அலைபேசில கூட இணையம் இல்லாதவன வேற என்னன்னு சொல்றது?
தமிழ் நாடு சரித்திரத்துல களப்பிரர் காலத்த இருண்ட காலம்னு சொல்லுவாங்க..அந்த மாதிரி என் வாழ்க்கைலயும் அஞ்சு வருச இருண்ட காலமுண்டு..ஒரு தேவதையால மீண்டு வெளிச்சத்துக்கு வந்தப்ப ..தொடுதிரை, ஆண்ட்ராய்டு, மடிக்கணிணின்னு காலம் என்ன விட்டுட்டு ரொம்ப வேகமா முன்னால போயிடுச்சு..
இயலாமை ஏமாற்றத்தையும் ஏமாற்றம் கோவத்தையும் தருமில்லையா? காலம் போற வேகத்துக்கு என்னால ஓட முடியாத போது எல்லாத்தையும் திட்ட வேண்டியதா போச்சு... அவனவன் போற வேகத்துக்கு என்னோட ஊளைச் சத்தம் காதுல விழுமா? தொண்டத் தண்ணி காஞ்சு பேசவே முடியாத கட்டம் வந்த போது உடனடியா ஒரு முடிவுக்கு வந்தேன். ”இனி எவனாவது கணிணி இணையம் பத்தி பேச்செடுத்தா கொரவளையக் கடிச்சுடணும்”.
அதுக்குள்ள நம்ம புகழ் ஊரு முழுசும் பரவ… எவனும் அதப் பத்தி பேசல... விசயம் தெரியாதவன் கிட்ட என்ன பேசுவான்? ஆனா உள்ளுக்குள்ள இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ரொம்பவே ஆசை.. அப்ப இருந்த பொருளாதார நெருக்கடில ‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்’.
எனக்கொரு தம்பி… சென்னைல வேலை… ஊருக்கு வரும் போதெல்லாம மடிக்கணிணிய எடுத்துட்டு வந்து ராப்பகல்னு இல்லாம எந்த நேரமும் லொட்டு லொட்டுனு அடிக்கறதும் படிக்கறதுமா இருந்தான்... போகைல வரைல எல்லாம் எட்டிப பாத்து பெருமூச்சு விடறத பயல் கவனிச்சுட்டான் போலிருக்கு…
‘"கத்துக்கலாமே பிரதர்...ஈசி தான்’"
சின்னதா ஒரு புழுவக் குத்தி மொதத் தூண்டி போட்டான்
"‘எனக்கும் இங்கிலீசுக்கும் மாற்றாந்தாய் மகன் உறவுங்கறது உனக்கே தெரியும்’."
மீன் நைசா நழுவுச்சு..
"பேஸிக் தெரிஞ்சுகிட்டா அப்புறம் தமிழ்லயே பூந்து வெளையாடலாம்..நெறைய படிக்கலாம் எழுதலாம்"..’
இந்தப் புழுவுக்கும் மீனு சிக்கலை.(.அவன் சைக்கிள் ஓட்டிப் பழகுன காலத்துல.."’இந்தக் கால அந்தப் பெடல்ல வெச்சு அந்தக் காலால ரெண்டு உந்து உந்தி …சொய்ங்..ரொம்ப ஈஸிடா”"ன்னு சொல்லி ஓட்டிக் காண்பிச்சேன்.அவனும் அதே மாதிரி உந்தி ‘சொய்ங்’னு ஏறி முட்டி மொகரையெகல்லாம் பேத்துட்டு வந்து மொறைச்சான். பழச மனசுல வச்சுட்டு பழி வாங்கறானோ?)
‘"சரி தான்.. இனிமேக் கொண்டு பள்ளிக் கூடத்துப் பையனாட்டம் நோட்டும் பேனாவும் எடுத்துக்கிட்டு கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போகச் சொல்றியா?’
‘'கத்துக்கறதுக்கு வயசேது பிரதர்?"’
++++++++++++++××+
பிச்சை புகினும்…- தா.க.தங்கவேல்
May 22, 2014 at 11:24pm
என் வாசிப்பு, எழுத்து அனைத்துக்கும் முன்னோடி என் அண்ணன். கணினி, இணையம் குறித்து இதுவரை எதுவும் தெரியாவிட்டாலும் நன்றாக எழுதுவார். கடந்த ஒரு மாதத்தில் கணினி கற்று தானாகவே தட்டுத் தடுமாறி தட்டச்சி தன் அனுபவத்தையே நீண்ட கட்டுரை ஆக்கி அனுப்பி இருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன். உங்கள் பின்னூட்டம் அவரை மேலும் ஊக்கப்படுத்தும். .(இப்படி ஒரு அறிமுகத்தோட எந் தம்பி குடுத்தது தான் என்னோட முக நூல் வாழ்க்கை.. அவனில்லேன்னா இந்த நானில்ல)
# பிச்சை புகினும்…- தா.க.தங்கவேல் #
நா ஒரு காட்டாளு.. பின்ன என்னங்க? இந்த 2014ல் கம்ப்யூட்டர் தெரியாதவன்… கடைசிக்கு அலைபேசில கூட இணையம் இல்லாதவன வேற என்னன்னு சொல்றது?
தமிழ் நாடு சரித்திரத்துல களப்பிரர் காலத்த இருண்ட காலம்னு சொல்லுவாங்க..அந்த மாதிரி என் வாழ்க்கைலயும் அஞ்சு வருச இருண்ட காலமுண்டு..ஒரு தேவதையால மீண்டு வெளிச்சத்துக்கு வந்தப்ப ..தொடுதிரை, ஆண்ட்ராய்டு, மடிக்கணிணின்னு காலம் என்ன விட்டுட்டு ரொம்ப வேகமா முன்னால போயிடுச்சு..
இயலாமை ஏமாற்றத்தையும் ஏமாற்றம் கோவத்தையும் தருமில்லையா? காலம் போற வேகத்துக்கு என்னால ஓட முடியாத போது எல்லாத்தையும் திட்ட வேண்டியதா போச்சு... அவனவன் போற வேகத்துக்கு என்னோட ஊளைச் சத்தம் காதுல விழுமா? தொண்டத் தண்ணி காஞ்சு பேசவே முடியாத கட்டம் வந்த போது உடனடியா ஒரு முடிவுக்கு வந்தேன். ”இனி எவனாவது கணிணி இணையம் பத்தி பேச்செடுத்தா கொரவளையக் கடிச்சுடணும்”.
அதுக்குள்ள நம்ம புகழ் ஊரு முழுசும் பரவ… எவனும் அதப் பத்தி பேசல... விசயம் தெரியாதவன் கிட்ட என்ன பேசுவான்? ஆனா உள்ளுக்குள்ள இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ரொம்பவே ஆசை.. அப்ப இருந்த பொருளாதார நெருக்கடில ‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்’.
எனக்கொரு தம்பி… சென்னைல வேலை… ஊருக்கு வரும் போதெல்லாம மடிக்கணிணிய எடுத்துட்டு வந்து ராப்பகல்னு இல்லாம எந்த நேரமும் லொட்டு லொட்டுனு அடிக்கறதும் படிக்கறதுமா இருந்தான்... போகைல வரைல எல்லாம் எட்டிப பாத்து பெருமூச்சு விடறத பயல் கவனிச்சுட்டான் போலிருக்கு…
‘"கத்துக்கலாமே பிரதர்...ஈசி தான்’"
சின்னதா ஒரு புழுவக் குத்தி மொதத் தூண்டி போட்டான்
"‘எனக்கும் இங்கிலீசுக்கும் மாற்றாந்தாய் மகன் உறவுங்கறது உனக்கே தெரியும்’."
மீன் நைசா நழுவுச்சு..
"பேஸிக் தெரிஞ்சுகிட்டா அப்புறம் தமிழ்லயே பூந்து வெளையாடலாம்..நெறைய படிக்கலாம் எழுதலாம்"..’
இந்தப் புழுவுக்கும் மீனு சிக்கலை.(.அவன் சைக்கிள் ஓட்டிப் பழகுன காலத்துல.."’இந்தக் கால அந்தப் பெடல்ல வெச்சு அந்தக் காலால ரெண்டு உந்து உந்தி …சொய்ங்..ரொம்ப ஈஸிடா”"ன்னு சொல்லி ஓட்டிக் காண்பிச்சேன்.அவனும் அதே மாதிரி உந்தி ‘சொய்ங்’னு ஏறி முட்டி மொகரையெகல்லாம் பேத்துட்டு வந்து மொறைச்சான். பழச மனசுல வச்சுட்டு பழி வாங்கறானோ?)
‘"சரி தான்.. இனிமேக் கொண்டு பள்ளிக் கூடத்துப் பையனாட்டம் நோட்டும் பேனாவும் எடுத்துக்கிட்டு கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போகச் சொல்றியா?’
‘'கத்துக்கறதுக்கு வயசேது பிரதர்?"’