அவனும் அவளும் 1
______:_;__:_________:::_=_
இன்னிக்கு கெடைச்சிருக்கற அற்புதமான சான்ஸ யூஸ் பண்ணிக்க முடியலியேங்கற ஏக்கத்தோட அவளப் பாத்தான்.. அவ புரிஞ்சவளா குறுஞ் சிரிப்போட காபி டம்ளரக் குடுக்கற சாக்குல அவங் கைய கிள்ளிட்டுப் போனா.. அந்தப் பெரிய கண்ணுல மின்னின குறும்புச் சிரிப்பும் அந்த அலாதி அழகும்.. மளிகைக் கடை கல்லாவுல உக்காந்துக்கிட்டு என்னத்த பண்ணிட முடியும்..? பெருமூச்சு விடறதத் தவிர!
கூட்டுக் குடுபம்ங்கறது பல விதத்துல நல்லதுன்னாலும் புதுசாக் கண்ணாலமான இளஞ் சோடிகளுக்கு தொல்லை தான்.. அப்பா,அம்மா, தம்பின்னு யாரோ ஒருத்தர் வீட்ல இருந்துக்கிட்டுத் தான் இருக்காங்க.. தொழிலோ மளிகைக் கடை.. அங்க வச்சு பொண்டாட்டியோட ஏதோ கொஞ்சம் பேசலாமே தவிர எக்ஸ்ட்ராவா என்ன செஞ்சுட முடியும்?
ராத்திரிலயோ இவன் ரூமுக்கு அடுத்த ரூம்ல அப்பா, அம்மா,தம்பி படுத்திருக்காங்க.. பேச்சுல, சிரிப்புல கொஞ்சம் டெஸிபலக் கூட்டினாலும் எல்லாருக்குமே தர்ம சங்கடம்.. இவனோ சிரிக்கற விசயத்துக்கு வாய் விட்டு சிரிச்சுப் பழகினவன்.. துளியூண்டு சத்தமாச் சிரிச்சாலும் அத்த,மாமா காதுல பட்டுருமோன்னு அவசரமா வாயப் பொத்தற பொண்டாட்டியப் பாத்து வேதனைப் பட்டான்.. கலியாணமாயி மூணே மாசம் ஆயிருக்கற நெலைமைல பொண்டாட்டியோட அன்பா நாலு வார்த்தை பேசிச் சிரிக்க முடியாத இந்த வெங்காயக் கூட்டுக் குடும்பம் யாருக்கு வேணும்?
இப்ப ஒரு நல்ல சான்ஸ்.. அம்மாவோட அக்கா பொண்ணு ஊர்ல தோட்டத்துச் சாமிக்கு பொங்கல் வெக்கறாங்கன்னு இவங்க ரெண்டு பேரத் தவிர மூணு பேரும் காலைலயே கவுந்தப்பாடி போயிட்டாங்க.. மக்கா நாளு மத்தியானச் சோத்துக்குத் தான் வருவாங்க.. ஒரு நாள்.. முழுசா ஒரு நாள்.. அவனும் அவளும் வீட்ல தனியா.. எவ்வளவு பொன்னான சந்தர்ப்பம்.. இத விடலாமா? அவளோட ஆடணும்,பாடணும், கிண்டல் பண்ணி சத்தமா சிரிக்கணும்னு ஏகமா திட்டம் போட்டான்..
மளிகைக் கடைங்கறதால பகல்ல ஒண்ணும் பண்ண முடியாது.. வீடு பக்கத்துலன்னாலும் 'பப்பரக்கா"ன்னு அத்தன பண்டத்த வெளிய போட்டுட்டு ஊட்டுல போயி பொண்டாட்டிய கொஞ்சிட்டிருக்க முடியாது.. நோம்பி நாளுக்கு எல்லாரும் லீவு போட்டாலும் புதுசா கடை வச்ச இவன் போட முடியாது.. ஏன்னா, அந்தன்னிக்குத் தான் நாலு காசுக்கு ஏவாரமாகறதோட மத்த கடைங்க இல்லைன்னா புதுசா நாலு வாடிக்கையாளரையும் பேசிச் சிரிச்சு உண்டாக்கலாம்..
'சரி.. இப்ப என்ன கெட்டுப் போச்சு?சாயந்திரம் அஞ்சு மணிக்காட்டம் கடையச் சாத்திட்டுப் போனா விடிகாலை அஞ்சு மணி வரைக்கும்..12மணி நேரம்.. தனியா நானும் அவளும்.. அவளும் நானும்'னு கற்பனை பண்ணி உற்சாகமானான்.. 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம்..பாடலாம்' 'உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது..'... இப்படி எம்.ஜி.ஆரோட காதல் பாட்டா மனசுக்குள்ள ஓடுது.. அவளையும் பாடச் சொல்லணும்.. பி.சுசீலா பாட்டெல்லாம் அற்புதமா பாடுவா.. சலிக்கற வரைக்கும் பேசி,பாடி, சிரிச்சுட்டு அப்புறம்..அப்புறம்..
அதுக்கு மேல ஓடின கற்பனைக்கு பைத்திய காரனாட்டம் தன்னப் போல சிரிச்சுக்கிட்டு கையத் திருப்பி கெடியாரத்தப் பாத்தான்.. அஞ்சுக்கு அஞ்சே நிமிசம்.. கடை ஷட்டருக்கு வெளிய இருந்த பண்டங்களையெல்லாம் ஒவ்வொண்ணா எடுத்து வச்சான்.. நாலு மணிக்கே சாத்தினாலும் ஒருத்தரும் கேப்பாரில்ல தான்.. ஆனா,இன்னா வரைக்கும் யாரோ ஒருத்தர் ஏதோ ஒண்ணு வாங்க வந்துக்கிட்டே இருந்தாங்க.. பொண்டாட்டிய கொஞ்சறத விட பொழப்பு முக்கியமாச்சே?
இதோ வந்துருச்சு.. காலைல இருந்து அவன் எதிர் பார்த்த அந்த தங்கத் தருணம்..
______:_;__:_________:::_=_
இன்னிக்கு கெடைச்சிருக்கற அற்புதமான சான்ஸ யூஸ் பண்ணிக்க முடியலியேங்கற ஏக்கத்தோட அவளப் பாத்தான்.. அவ புரிஞ்சவளா குறுஞ் சிரிப்போட காபி டம்ளரக் குடுக்கற சாக்குல அவங் கைய கிள்ளிட்டுப் போனா.. அந்தப் பெரிய கண்ணுல மின்னின குறும்புச் சிரிப்பும் அந்த அலாதி அழகும்.. மளிகைக் கடை கல்லாவுல உக்காந்துக்கிட்டு என்னத்த பண்ணிட முடியும்..? பெருமூச்சு விடறதத் தவிர!
கூட்டுக் குடுபம்ங்கறது பல விதத்துல நல்லதுன்னாலும் புதுசாக் கண்ணாலமான இளஞ் சோடிகளுக்கு தொல்லை தான்.. அப்பா,அம்மா, தம்பின்னு யாரோ ஒருத்தர் வீட்ல இருந்துக்கிட்டுத் தான் இருக்காங்க.. தொழிலோ மளிகைக் கடை.. அங்க வச்சு பொண்டாட்டியோட ஏதோ கொஞ்சம் பேசலாமே தவிர எக்ஸ்ட்ராவா என்ன செஞ்சுட முடியும்?
ராத்திரிலயோ இவன் ரூமுக்கு அடுத்த ரூம்ல அப்பா, அம்மா,தம்பி படுத்திருக்காங்க.. பேச்சுல, சிரிப்புல கொஞ்சம் டெஸிபலக் கூட்டினாலும் எல்லாருக்குமே தர்ம சங்கடம்.. இவனோ சிரிக்கற விசயத்துக்கு வாய் விட்டு சிரிச்சுப் பழகினவன்.. துளியூண்டு சத்தமாச் சிரிச்சாலும் அத்த,மாமா காதுல பட்டுருமோன்னு அவசரமா வாயப் பொத்தற பொண்டாட்டியப் பாத்து வேதனைப் பட்டான்.. கலியாணமாயி மூணே மாசம் ஆயிருக்கற நெலைமைல பொண்டாட்டியோட அன்பா நாலு வார்த்தை பேசிச் சிரிக்க முடியாத இந்த வெங்காயக் கூட்டுக் குடும்பம் யாருக்கு வேணும்?
இப்ப ஒரு நல்ல சான்ஸ்.. அம்மாவோட அக்கா பொண்ணு ஊர்ல தோட்டத்துச் சாமிக்கு பொங்கல் வெக்கறாங்கன்னு இவங்க ரெண்டு பேரத் தவிர மூணு பேரும் காலைலயே கவுந்தப்பாடி போயிட்டாங்க.. மக்கா நாளு மத்தியானச் சோத்துக்குத் தான் வருவாங்க.. ஒரு நாள்.. முழுசா ஒரு நாள்.. அவனும் அவளும் வீட்ல தனியா.. எவ்வளவு பொன்னான சந்தர்ப்பம்.. இத விடலாமா? அவளோட ஆடணும்,பாடணும், கிண்டல் பண்ணி சத்தமா சிரிக்கணும்னு ஏகமா திட்டம் போட்டான்..
மளிகைக் கடைங்கறதால பகல்ல ஒண்ணும் பண்ண முடியாது.. வீடு பக்கத்துலன்னாலும் 'பப்பரக்கா"ன்னு அத்தன பண்டத்த வெளிய போட்டுட்டு ஊட்டுல போயி பொண்டாட்டிய கொஞ்சிட்டிருக்க முடியாது.. நோம்பி நாளுக்கு எல்லாரும் லீவு போட்டாலும் புதுசா கடை வச்ச இவன் போட முடியாது.. ஏன்னா, அந்தன்னிக்குத் தான் நாலு காசுக்கு ஏவாரமாகறதோட மத்த கடைங்க இல்லைன்னா புதுசா நாலு வாடிக்கையாளரையும் பேசிச் சிரிச்சு உண்டாக்கலாம்..
'சரி.. இப்ப என்ன கெட்டுப் போச்சு?சாயந்திரம் அஞ்சு மணிக்காட்டம் கடையச் சாத்திட்டுப் போனா விடிகாலை அஞ்சு மணி வரைக்கும்..12மணி நேரம்.. தனியா நானும் அவளும்.. அவளும் நானும்'னு கற்பனை பண்ணி உற்சாகமானான்.. 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம்..பாடலாம்' 'உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது..'... இப்படி எம்.ஜி.ஆரோட காதல் பாட்டா மனசுக்குள்ள ஓடுது.. அவளையும் பாடச் சொல்லணும்.. பி.சுசீலா பாட்டெல்லாம் அற்புதமா பாடுவா.. சலிக்கற வரைக்கும் பேசி,பாடி, சிரிச்சுட்டு அப்புறம்..அப்புறம்..
அதுக்கு மேல ஓடின கற்பனைக்கு பைத்திய காரனாட்டம் தன்னப் போல சிரிச்சுக்கிட்டு கையத் திருப்பி கெடியாரத்தப் பாத்தான்.. அஞ்சுக்கு அஞ்சே நிமிசம்.. கடை ஷட்டருக்கு வெளிய இருந்த பண்டங்களையெல்லாம் ஒவ்வொண்ணா எடுத்து வச்சான்.. நாலு மணிக்கே சாத்தினாலும் ஒருத்தரும் கேப்பாரில்ல தான்.. ஆனா,இன்னா வரைக்கும் யாரோ ஒருத்தர் ஏதோ ஒண்ணு வாங்க வந்துக்கிட்டே இருந்தாங்க.. பொண்டாட்டிய கொஞ்சறத விட பொழப்பு முக்கியமாச்சே?
இதோ வந்துருச்சு.. காலைல இருந்து அவன் எதிர் பார்த்த அந்த தங்கத் தருணம்..