சர்க்க்க்க்..கார்
÷÷÷÷÷÷÷÷÷÷÷
ம்..இப்படித் தான அந்தப் படத்துல ஒரு காட்சில விஜய் சொல்றார்?
'சர்க்க்க்க்க்.............கார்'
படத்தப் பத்தின விமர்சனத்துக்குப் போறதுக்கு முந்தி ஒரு பிளாஸ் பேக்குல ரவுண்ட்ஸ் வரலாம்..
1973ல ரீலீஸ் ஆச்சு அந்தப் படம்..அது அவரோட சொந்த தயாரிப்பும் இயக்கமும் கூட !அப்பத் தான் ஆளும் கட்சில இருந்து விலக்கப் பட்டு தனிக் கட்சி ஆரம்பிச்சு வருசங் கூட ஆகாத வேளை..அப்ப ஆளுங் கட்சில செல்வாக்கா இருந்த மதுரை முத்துங்கறவர் 'இந்தப் படம் ரீலீஸானா சேலையக் கட்டிக்கறேன்'னு பகிரங்க சவால் விட்டார்..
ஏகப் பட்ட தடைகள்.. எதிர்ப்புகள்..சத்யா ஸ்டுடியோவுல எந்த நேரமும் ராட்சத ஜெனரேட்டர்கள வாடகைக்கு எடுத்து பெரும் பகுதி ஸ்டுடியோ காட்சிகளை எடுத்தார்.. ஏன்னா,பெரும் பாலான நேரம் அந்தப் பகுதில (மட்டும்)
பவர் கட்..படம் ரிலீஸாகறதுக்கு முந்தின நாளு சென்னை நகராட்சி சுவத்துல போஸ்டர் ஒட்டறதுக்கு உண்டான வரியப் பல மடங்கு உயர்த்த...
சில விசயங்களே வெளிய தெரியும்.. தெரியாத பல விசயங்கள ஆண்டவனே அறிவான்..ஆனா, அத்தனை எதிர்ப்புக்கும் அவர் அசரல..அசந்து கோபால புரத்துக்கு பொக்கே தூக்கிட்டு ஓடல..சென்னைல ஒத்த போஸ்டர் கூட ஒட்டாம ,1973ல வெளி வந்து அந்தப் படம் வெள்ளி விழா கண்டது..
அந்தப் படத்தின் பெயர்..
'உலகம் சுற்றும் வாலிபன்'
அதன் தயாரிப்பு..டைக்ரசன்..சென்னை விநியோகத்தோடு இரட்டை வேடங்களில் நடித்தவரின் பெயர்..
'எம்.ஜி.ராமச் சந்திரன்'
யெஸ்..அவர் ஆரம்பிச்சு வச்சது இத்தனையும்.. இரண்டு ஹீரோயின்கள்..கனவுக் காட்சிகள்.. பல வண்ண உடைகள்..இதோடு சினிமாவிலிருந்து அரசியல்..
ஆனா,அரசியல தனக்குச் சாதகமான காலம் பாத்து கைல எடுத்துக்கல..காங்கிரஸ் அசுர பலத்தோட ஆட்சில இருந்த போது ஐம்பதுகளின் இடையில் தான் பெருசா பிரபலமாகாத போது தி.மு.கவில் இணைந்தவர்..1957ல் வெளியான சக்கரவர்த்தி திருமகள் படத்தில் அவரின் கதா பாத்திரத்தின் பெயரே உதய சூரியன்..அடுத்த ஆண்டு வெளியான அவரது சொந்த தயாரிப்பு,டைரக்சனில் வெளி வந்த நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் அடையாளமாக தி.மு.க கொடியைக் காட்டியவர்..
நடிகன் நாடாளும் ஆசையை விதைத்தவர் மட்டுமல்ல.. அவரே சாதித்தும் காட்டியவர்.. ஆனால்,எதிர்ப்புக்கும் மிரட்டலுக்கும் அடி பணியாதவர்..அது அவர் மட்டுமல்ல.. அவர் ரசிகர்களும் கூட..!அவர் கட்சி ஆரம்பித்த போது அடி பட்டவர்களும் உயிரிழந்தவவர்களும் பலர்.. ஆனால், அவர் செல்வாக்கும்,கூடிய கூட்டமும் அதிகரித்ததே தவிர கொஞ்சமும் குறையல..
நேத்து திருப்பூர்ல சர்கார் ஓடின ஒரு தியேட்டரில் ஆளும் தரப்பால் ரகளை ஏற்பட்டு ரசிகர்கள் பயந்து அலறியடிச்சுக்கிட்டு ஓடினதா செய்தித் தாள் தகவல்.. எனக்கு மட்டுமல்ல.. விஜய்க்கும் அவர மாதிரியே முதல்வர் நாற்காலி கனவுல இருக்கற மத்த நடிகர்களுக்கும் அது வேற ஒரு செய்தியச் சொல்லுச்சு..
இதே அவர் படம் ஓடற தியேட்டர்ல யாரு ரகளை பண்ணி இருந்தாலும் ஒருத்தர் கூட மிச்சமாயிருக்க முடியாது.. செத்து மண்ணோட கலந்து முப்பது வருசத்துக்கு மேல ஆகியும் அவருக்கு இன்னும் அப்படிப் பட்ட ரசிகர்கள் உண்டு.. ஏன்னா,அவருக்கிருந்தது வெறும் ரசிகர்கள் பட்டாளமல்ல..ராஜ விசுவாசிகள்!உங்களுக்கு இருப்பது விசிலடிச்சான் குஞ்சுகள்..இத நம்பி எறங்காதீங்க..
÷÷÷÷÷÷÷÷÷÷÷
ம்..இப்படித் தான அந்தப் படத்துல ஒரு காட்சில விஜய் சொல்றார்?
'சர்க்க்க்க்க்.............கார்'
படத்தப் பத்தின விமர்சனத்துக்குப் போறதுக்கு முந்தி ஒரு பிளாஸ் பேக்குல ரவுண்ட்ஸ் வரலாம்..
1973ல ரீலீஸ் ஆச்சு அந்தப் படம்..அது அவரோட சொந்த தயாரிப்பும் இயக்கமும் கூட !அப்பத் தான் ஆளும் கட்சில இருந்து விலக்கப் பட்டு தனிக் கட்சி ஆரம்பிச்சு வருசங் கூட ஆகாத வேளை..அப்ப ஆளுங் கட்சில செல்வாக்கா இருந்த மதுரை முத்துங்கறவர் 'இந்தப் படம் ரீலீஸானா சேலையக் கட்டிக்கறேன்'னு பகிரங்க சவால் விட்டார்..
ஏகப் பட்ட தடைகள்.. எதிர்ப்புகள்..சத்யா ஸ்டுடியோவுல எந்த நேரமும் ராட்சத ஜெனரேட்டர்கள வாடகைக்கு எடுத்து பெரும் பகுதி ஸ்டுடியோ காட்சிகளை எடுத்தார்.. ஏன்னா,பெரும் பாலான நேரம் அந்தப் பகுதில (மட்டும்)
பவர் கட்..படம் ரிலீஸாகறதுக்கு முந்தின நாளு சென்னை நகராட்சி சுவத்துல போஸ்டர் ஒட்டறதுக்கு உண்டான வரியப் பல மடங்கு உயர்த்த...
சில விசயங்களே வெளிய தெரியும்.. தெரியாத பல விசயங்கள ஆண்டவனே அறிவான்..ஆனா, அத்தனை எதிர்ப்புக்கும் அவர் அசரல..அசந்து கோபால புரத்துக்கு பொக்கே தூக்கிட்டு ஓடல..சென்னைல ஒத்த போஸ்டர் கூட ஒட்டாம ,1973ல வெளி வந்து அந்தப் படம் வெள்ளி விழா கண்டது..
அந்தப் படத்தின் பெயர்..
'உலகம் சுற்றும் வாலிபன்'
அதன் தயாரிப்பு..டைக்ரசன்..சென்னை விநியோகத்தோடு இரட்டை வேடங்களில் நடித்தவரின் பெயர்..
'எம்.ஜி.ராமச் சந்திரன்'
யெஸ்..அவர் ஆரம்பிச்சு வச்சது இத்தனையும்.. இரண்டு ஹீரோயின்கள்..கனவுக் காட்சிகள்.. பல வண்ண உடைகள்..இதோடு சினிமாவிலிருந்து அரசியல்..
ஆனா,அரசியல தனக்குச் சாதகமான காலம் பாத்து கைல எடுத்துக்கல..காங்கிரஸ் அசுர பலத்தோட ஆட்சில இருந்த போது ஐம்பதுகளின் இடையில் தான் பெருசா பிரபலமாகாத போது தி.மு.கவில் இணைந்தவர்..1957ல் வெளியான சக்கரவர்த்தி திருமகள் படத்தில் அவரின் கதா பாத்திரத்தின் பெயரே உதய சூரியன்..அடுத்த ஆண்டு வெளியான அவரது சொந்த தயாரிப்பு,டைரக்சனில் வெளி வந்த நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் அடையாளமாக தி.மு.க கொடியைக் காட்டியவர்..
நடிகன் நாடாளும் ஆசையை விதைத்தவர் மட்டுமல்ல.. அவரே சாதித்தும் காட்டியவர்.. ஆனால்,எதிர்ப்புக்கும் மிரட்டலுக்கும் அடி பணியாதவர்..அது அவர் மட்டுமல்ல.. அவர் ரசிகர்களும் கூட..!அவர் கட்சி ஆரம்பித்த போது அடி பட்டவர்களும் உயிரிழந்தவவர்களும் பலர்.. ஆனால், அவர் செல்வாக்கும்,கூடிய கூட்டமும் அதிகரித்ததே தவிர கொஞ்சமும் குறையல..
நேத்து திருப்பூர்ல சர்கார் ஓடின ஒரு தியேட்டரில் ஆளும் தரப்பால் ரகளை ஏற்பட்டு ரசிகர்கள் பயந்து அலறியடிச்சுக்கிட்டு ஓடினதா செய்தித் தாள் தகவல்.. எனக்கு மட்டுமல்ல.. விஜய்க்கும் அவர மாதிரியே முதல்வர் நாற்காலி கனவுல இருக்கற மத்த நடிகர்களுக்கும் அது வேற ஒரு செய்தியச் சொல்லுச்சு..
இதே அவர் படம் ஓடற தியேட்டர்ல யாரு ரகளை பண்ணி இருந்தாலும் ஒருத்தர் கூட மிச்சமாயிருக்க முடியாது.. செத்து மண்ணோட கலந்து முப்பது வருசத்துக்கு மேல ஆகியும் அவருக்கு இன்னும் அப்படிப் பட்ட ரசிகர்கள் உண்டு.. ஏன்னா,அவருக்கிருந்தது வெறும் ரசிகர்கள் பட்டாளமல்ல..ராஜ விசுவாசிகள்!உங்களுக்கு இருப்பது விசிலடிச்சான் குஞ்சுகள்..இத நம்பி எறங்காதீங்க..