- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
20
புடவை கடைக்குள் நுழைந்து டிசைனர் சாரீஸ் இருக்கும் தளத்தை ஜிஷ்னா கேட்கவும் "பட்டு புடவை எந்த ப்ளோர்?" என்று வேகமாக கேட்டான் ஜேஷ்.
"இரண்டாவது ப்ளோர்" என்று கடை சிப்பந்தி கூறியதும் லிப்டின் அருகில் சென்றான். அவன் பின்னே சென்ற ஜிஷ்னா "இப்போ யாருக்கு பட்டு புடவை எடுக்கப் போறோம்?" என்றுக் கேட்டாள்.
"முதல் தடவ புடவை எடுக்குற... பட்டு புடவை எடு ஜிஷ்னா... பட்டு புடவைலயே எவ்வளவோ சிம்பிள் சாரீஸ் இருக்கு... சிம்போசியம்கும் கட்ட நல்லா இருக்கும்... எதுக்கு நெறைய செலவு பண்ணி டிசைனர் சாரீ எடுக்கப் போற?" என்று கேட்டு லிப்டினுள் நுழைந்தான் ஜேஷ்.
"ம்ம் அதுவும் சரிதான்..."
ஜிஷ்னா புடவை பார்க்க ஆரம்பித்ததும் ஜேஷ் அங்குள்ள அனைத்து புடவைகளையும் நடந்து சென்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். பல வண்ணங்களில் பல டிசைன்களில் அழகழகாய் நிறையப் புடவைகள் இருந்தன.
அவற்றுள் ஒன்று அவனுக்கு மிகவும் பிடித்துவிட டிஸ்ப்ளேயில் இருந்த புடவையை காண்பித்து "அந்த புடவை எவ்வளவு வரும்?" என்று கேட்டான். "அது கல்யாண பட்டு தம்பி... 22 ஆயிரம் ஆகும்..." என்றார் கடை சிப்பந்தி.
ஜிஷ்னா 3 புடவைகளை தேர்வு செய்து ஜேஷை அழைத்தாள். அவன் அருகில் வந்ததும் "இது மூணும் எனக்குப் பிடிச்சுருக்கு... ஆனா இதுல எது எடுக்கன்னு தெரியல. நீ சொல்லு எது எடுக்கட்டும்..." என்றுக் கேட்டாள்.
“எப்போ பாரு இதையே சொல்லு...” என்றவன் வேறு ஒரு புடவையை காட்டி "இது நல்லா இருக்கு. இது பில் போடுங்க..." என்று எடுத்து கொடுத்தான்.
"என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல ஜேஷ்... அந்தப் புடவை கொஞ்சம் விலை கூட... நீ இந்த மூணுல எதாவது ஒண்ணு எடு..."
"உன்கிட்ட யாரும் காசு கேக்கல. பேசாம இருக்கியா?" என்று கூறி திரும்பினான் ஜேஷ். ஜிஷ்னா ஏதோ கூற வாயை திறக்கும் முன் அவளுக்கு புடவைகள் எடுத்து காண்பித்தவர் "நீங்க அங்கப் பார்த்த புடவையும் எடுத்து காமிக்க சொல்லவா? கல்யாண பட்டு... கட்டிக்க போறவங்க பாக்கட்டுமே...” என்றுக் கேட்டார்.
அவர் கேட்டதில் அதிர்ச்சியாகி அவரை திரும்பிப் பார்த்தாள் ஜிஷ்னா. "ம்ம் எடுத்துட்டு வந்துக் காமிங்க..." என்றான் ஜேஷ்.
"என்ன பண்ணுற ஜேஷ்? அவங்கக்கிட்ட என்ன சொல்லி வெச்சிருக்க?"
அதற்குள் அந்த புடவையை அவர் பிரித்து காண்பிக்கவும் ஜிஷ்ணாவிற்கு பதில் சொல்லுவதை விடுத்து அதை பார்ப்பதில் மும்முரமானான் ஜேஷ்.
அந்த புடவையை பார்த்த ஜிஷ்னாவிற்கும் அது பிடித்து தான் இருந்தது. "இது உனக்கு ஓகே தான? இந்த சாரீ பார்த்து வெச்சுக்கோ" என்று அவளிடம் கூறியவன் “இது எல்லாம் வீட்டுல தான் வந்து பார்த்து டிசைட் பண்ணணும். நீங்க அந்த புடவைக்கு மட்டும் பில் போடுங்க" என்றுக் கூறி எழுந்தான் ஜேஷ்.
பில் போட போகும்போதும் "என்கிட்ட இவ்வளவு காசு இல்ல ஜேஷ்..." என்று ஜிஷ்னா கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவள் கையிலிருந்த பணத்தை வாங்கி மீதி பணத்தை அவன் எடுத்துக் கட்டினான்.
பைக்கில் செல்லும்போது அவனிடம் பொரியத் துவங்கினாள் ஜிஷ்னா. "உன் மனசுல என்ன தான் நெனச்சுட்டு இருக்க? கடைல என்ன சொல்லி அந்த புடவை பார்த்த?"
"நான் ஏதோ சும்மா அந்த சைட் போய் பார்த்தேன்... புடவை நல்லா இருந்துது… எவ்வளவுன்னுக் கேட்டேன்... அது கல்யாணத்துக்கு கட்டுறதுன்னு கூட எனக்கு தெரியாது... அவரா உன்ன என் வுட்பீ நு நெனச்சா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்...
நான் ‘இல்ல அவ என் பிரண்ட்’ னு சொன்னா ஒரு மாதிரி பார்க்க மாட்டாங்க? அதான் நான் எதுவும் சொல்லல... இதுக்கு தான் நான் உன் கூட வரலன்னு சொன்னேன். எதுக்கெடுத்தாலும் கோவப்பட வேண்டியது" என்று பதிலுக்கு பொரிந்து தள்ளினான் ஜேஷ்.
அவன் இவ்வாறு கோபம் கொள்வான் என்று எதிர்ப்பார்க்காத ஜிஷ்னா அமைதியானாள். அவள் வீடு வந்ததும் "சாரி" என்றுக் கூறி இறங்கி சென்றாள் ஜிஷ்னா. அவள் சென்று கேட்டை மூடும் வரைப் பொறுமையாகக் காத்திருந்தான் ஜேஷ்.
"ஓகே நான் கெளம்பறேன்" என்றான். அவள் சரி என்று தலையை ஆட்டி உள்ளே செல்ல திரும்பவும் "ஜிஷ்னா" என்று அழைத்தான் ஜேஷ்.
அவள் திரும்பியதும் "அந்த சாரீ புடிச்சுருந்தா சொல்லு... வாங்கி தரேன்..." என்றுக் கூறியவன் வேகமாக சென்று விட்டான்.
அவன் கூறியதைக் கேட்டவளுக்கு கோபம் வந்தாலும் சிரிப்பும் வந்தது. அங்கேயே சிறிது நேரம் நின்றவள் பின் வீட்டினுள் சென்றாள். ஸ்வப்னாவிடம் புடவையை காண்பித்தாள் ஜிஷ்னா.
"உன்ன 4000கு புடவை எடுன்னு அனுப்பினா 5700கு எடுத்துட்டு வந்திருக்க? காசு யாரு அவன் குடுத்தானா?"
"ஆமா... சும்மா கத்தாதம்மா... அங்க இது தான் நல்லா இருந்துது... மீதி காச குடு அவன்கிட்ட குடுத்துடறேன்... அவன் ஒண்ணும் எனக்கு புடவை வாங்கித் தரல..." என்று கூறி விட்டு வேகமாக புடவையை அவர் கையிலிருந்து பிடுங்கி தன் அறைக்குள் சென்றாள் ஜிஷ்னா.
"இவ்வளவு நாள் நல்லா இருந்தாங்க... இப்போ திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க..." என்று நினைத்து நொந்துப் போனாள்.
அன்று இரவு வீட்டிற்கு வந்த பிரேம் "ஜேஷ் வா எங்கயாவது ஹோட்டல் போய் சாப்பிட்டு வரலாம்... அம்மாவ கிளம்ப சொல்லுறேன்... ரொம்ப நாள் ஆச்சு...” என்று அவனை அழைத்தார். “வேணாம் பா...” என்றவனின் முகம் சோர்ந்துக் காணப்பட்டது.
"ஏன்டா என்னாச்சு?"
"இல்ல பா... ஒரே டென்ஷனா இருக்கு... ஜாலியா இருக்கப்போ ஒரு நாள் போவோம்... இப்போ வேணாம்" என்றுக் கூறி அமைதியாக அமர்ந்திருந்தான். அதற்கு மேல் பிரேமும் எதுவும் கேட்கவில்லை.
சிம்போசியம் அன்று காலை எப்போதும் போல் ஜிஷ்னாவின் வீட்டு முன் ஜேஷ் வந்து நிற்க வீட்டினுள் இருந்து புடவையில் வந்தவளைப் பார்த்தவன் விழி விரித்து அவளையே பார்த்தான்.
"சிரிச்சே கொல்லுறாளே... ஏற்கனவே கன்னத்துல குழி... இதுல சாரீ வேற... ஷப்பா..."
அருகில் வந்த ஜிஷ்னா "ஜேஷ் என்ன இப்படிப் பார்க்குற? நல்லா இருக்கா? நல்லா இல்லையா?" ஒரு முறை குனிந்து புடவையை பார்த்தாள் ஜிஷ்னா.
"நல்லா தான் இருக்கு. உக்காரு. இன்னைக்கு எத்தன பேர நான் சமாளிக்கணுமோ?" பைக்கை ஸ்டார்ட் செய்தான் ஜேஷ்.
கல்லூரி வரை அமைதியாக வந்தவன் ஜிஷ்னா இறங்கியதும் "சொல்லக் கூடாதுன்னு தான் நெனச்சேன். ஆனா உன்ன இப்படி பார்த்ததுக்கு அப்பறம் என்னால சொல்லாம இருக்க முடியல...
நீ அடிச்சாலும், திட்டுனாலும், கத்துனாலும், கோவப்பட்டாலும் பரவாயில்ல... ஐ லவ் யூ..." என்றுக் கூறி வண்டியை வேகமாக ரெயிஸ் செய்து பார்க் செய்ய சென்றான் ஜேஷ்.
சிறிது தூரம் சென்றதும் கண்ணாடியில் அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டான். “இத தான்டி எதிர்ப்பார்த்தேன்...”
ஜேஷ் இவ்வாறு கூறியதும் அன்று அவன் கூறிய "அந்தப் புடவை பிடிச்சுருந்தா சொல்லு வாங்கி தரேன்" என்ற வார்த்தைகள் ஞாபகம் வந்து அவளின் கோபம் இரட்டிப்பானது.
அங்கு வந்த பெண்ணொருத்தி "ஹே சாரீ சூப்பரா இருக்கு டி... யாரு செலெக்ஷன்?" என்றுக் கேட்டாள்.
"சொல்லுறேன் சொல்லுறேன் வா..." என்று அவளை இழுத்து சென்றாள் ஜிஷ்னா. அன்று முழுவதும் பல காரணங்களை சொல்லி ஜிஷ்னாவையே சுத்தி வந்தான் ஜேஷ்.
அவள் ரிஜிஸ்ட்ரேஷன் கமிட்டியில் அமர்ந்திருக்க “ஜிஷ்னா பென் இருக்கா?” “ஜிஷ்னா பேப்பர் தீந்துடுச்சுன்னு சொன்னியே... இந்தா பேப்பர்” “ஜிஷ்னா என் எரேசர் அழிக்கவே மாட்டேங்குது... உன்னோடது குடேன்...”
“ஜிஷ்னா இவங்க பேப்பர் ப்ரெசண்ட் பண்ணணுமாம்... பேரு ரிஜிஸ்டர் பண்ணிக்கோ...” “ஜிஷ்னா நீ இன்னும் சாப்பிடலல்ல... வா சாப்பிடலாம்...” என்று ஆயிரம் ஜிஷ்னா போட்டான்.
அருகில் பலர் இருக்க, அனைவர் முன்னிலையிலும் கோபத்தை காட்ட முடியாமல் முறைத்துக் கொண்டே இருந்தாள் ஜிஷ்னா. அவள் படும் அவஸ்தையை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தான் ஜேஷ்.
மாலை பைக் ஸ்டாண்ட் அருகில் வந்த ஜிஷ்னா ஜேஷிடம் "நான் என் பிரண்ட்ஸ்கூட கெளம்பறேன். நீ போ" என்றுக் கோபமாக கூறினான்.
அவள் கூறுவதை சிரிப்புடன் பைக் பெட்ரோல் டாங்கில் தாளம் போட்டுக் கொண்டே கேட்ட ஜேஷ் சிறிது நேரம் முன்பு அவன் செய்து வைத்த ஏற்பாட்டை எண்ணிப் பார்த்தான்.
தங்கள் கிளாஸ் பெண்கள் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றான் ஜேஷ். "ஹாய் நான் கொஞ்சம் வெளியில போகணும். எனக்கு சில திங்க்ஸ் வாங்கணும்.
அதனால ஊர் சுத்துற பிளான் இருந்தா அத நாளைக்கு வெச்சுக்கோங்க ப்ளீஸ். அப்பறம் நீங்களும் கூப்பிட்டா ஜிஷ்னா யாருக்கூட போறதுன்னு கன்ப்யூஸ் ஆவா..." இப்படி சொன்னால் ஜிஷ்னாவை எப்படியும் பேசி அவர்களே தன்னுடன் அனுப்பி வைத்து விடுவார்கள் என்று நன்கு அறிவான் ஜேஷ்.
ஜேஷிடம் பேசிய ஜிஷ்னா திரும்பி தன் தோழிகளிடம் சென்றாள். அவர்களோ "நீ ஜேஷ் கூடவே போடி... நம்ம நாளைக்கு வெளியிலப் போகலாம்" என்றனர். அவர்கள் அவ்வாறு கூறியதும் திரும்பி ஜேஷை பார்த்தாள்.
அவன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தான். அவனை முறைத்துவிட்டு தன் தோழிகளிடம் திரும்பியவள் "சரி நான் கெளம்பறேன்" என்றாள்.
"ஜேஷ் சொன்னது சரி தான்டி. இப்போ நம்ம இவள கூப்பிட்டிருந்தா பாவம் ரொம்ப யோசிச்சுருப்பா... நல்லா தான் புரிஞ்சு வெச்சிருக்கான் இவள..." என்று ஆளுக்கு ஒன்றை கூறி தங்களுக்குள் சிரித்தனர். அதை கண்ட ஜிஷ்னா இன்னும் கடுப்பாகி வேகமாக சென்று பைக்கில் அமர்ந்தாள்.
"டேய் அவங்க எதுக்கு இப்போ சிரிச்சாங்க? அவங்கக்கிட்ட என்ன சொன்ன? நீ ஏன் இப்படி பண்ணுற? பேச மாட்டேன்னு சொல்லிட்டு எதுக்கு அத பத்தியேப் பேசுற? உனகெல்லாம் ஒரு தடவ சொன்னாப் புரியாதா?”
"அப்படி எதாவது சொல்லணும்ணா உன்கிட்ட நேரடியா சொல்லிடுவேன் ஜிஷ்னா. காலையில சொன்ன மாதிரி... அடுத்தவங்கள்ட சொல்லணும்னு எந்த அவசியமும் எனக்கில்ல"
ஜிஷ்னாவின் வீடு வந்ததும் ஜேஷும் இறங்கி அவள் பின்னால் வீட்டினுள் வந்தான். "இனி நான் உன்கிட்ட பேச மாட்டேன்... எதுவா இருந்தாலும் நான் ஸ்வப்னாகிட்ட டீல் பண்ணிக்குறேன்"
"டேய் டேய் என்ன விளையாடுறியா?" அவன் பின்னால் சென்றாள் ஜிஷ்னா. ஹால் சோபாவில் அமர்ந்து "ஆன்ட்டி" என்றுக் கத்தி கூப்பிட்டான்.
கையில் ஜூஸுடன் வந்தவரை பார்த்ததும் "அடியேய்... உங்கம்மா என்ன... என் வண்டி சத்தம் கேட்டதும் ஜூஸ் கலக்க ஆரம்பிச்சுடுவாங்களா? கூப்பிட்ட வேகத்துல ஜூஸோட வராங்க?" என்று அருகில் பதட்டத்துடன் அமர்ந்திருந்த ஜிஷ்னாவின் காதை கடித்தான்.
ஜூஸை நீட்டிய ஸ்வப்னாவின் கையிலிருந்து அதை வாங்கி எதிரில் இருந்த டேபிளில் வைத்த ஜேஷ் "என்ன ஆன்ட்டி பேசவே மாட்டேங்குறீங்க... அங்கிள் தான் எப்பவும் எனக்கிட்ட பேசுறாங்க. நீங்க ஜூஸ் மட்டும் குடுத்துட்டு உள்ள போயிடுறீங்க... உக்காருங்க ஆன்ட்டி பேசுவோம்" என்றான் உற்சாகமாக.
"நான் என்னப்பா பேச? நீ ஜூஸ் குடி" என்றுக் கூறி கிச்செனுள் சென்றார் ஸ்வப்னா. "இவனுக்கு என்ன வந்துது இப்போ? வந்தோமா ஜூஸ் குடிச்சோமான்னு இல்லாம... இப்போ எதுக்கு என்ன வேற உக்கார வெச்சு பேச சொல்லுறான்... எல்லாம் ஜிஷ்னா அப்பா குடுக்குற இடம்... ச்சை..."
ஸ்வப்னா உள்ளே சென்றதும் "இந்த வாட்டி தப்பிச்சுட்ட... அடுத்த தடவ ஸ்வப்னாவ உக்கார வெச்சுப் பேசுறேனா இல்லையாப் பாரு..." என்று ஜிஷ்னாவிடம் மிரட்டி விட்டு எழுந்து சென்றான் ஜேஷ்.