kalpanaekambaram
அமைச்சர்
முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் தந்தவர்களுக்கு நன்றி!! அடுத்த பதிவு. வாசித்து விட்டு கருத்துக்களை பதிவிடுங்கள்.
~கல்பனா
12
தெலுங்கு சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்வதா? தமிழ் முறைப்படியா? கரிகாலன், மணிமேகலை இருவர் குடும்பத்திற்குள்ளும் சலசலப்பு. குழப்பம். சாதி கலப்பு திருமணங்களுக்கு உதவியாக இருந்துவிட்டு கரிகாலனே விட்டுக்கொடுக்கவில்லை என்றால் எப்படி?
தன் இல்லத்தினரை, கவின்ஸ் செய்து சம்மதிக்க வைத்தான் கரிகாலன். திருமணம் வெகு சாதரணமாக, ஆடம்பரமில்லாமல் இருக்க வேண்டும் என்பதில் இருவருமே தெளிவாக இருந்தனர்.குடும்ப உறுப்பினர்களுக்கு ஆடம்பரமாக செய்வதிலே விருப்பம். மிகவும் ஆடம்பரமும் இல்லாமல், வெகு சாதாரணமாகவும் இல்லாமல் மையமாக கொண்டாடினார் திருமணத்தை.
இரு கரத்திலும் பச்சை நிற இளநீரை தாங்கியவண்ணம், வெண்மையும், பிங்க், தங்க நிற இழைகள் கொண்டு பட்டுடுத்தி, ஆண்டிக் நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, வெட்கத்தில் முகம் செம்மையுற, மேடையேறி வந்தாள் மணிமேகலை.
தெலுங்கு மக்கள், வழக்கமாக நெற்றியில் இடும் பிந்தியின் கீழ், பிறை போல வளைந்த வடிவம், அவளுக்கு கூடுதல் அழகை தந்தது.அவளை தூக்கி சென்று, அந்த விண்மீன் கூட்டத்துக்கு நடுவில் பொருத்திவிட்டாலும் வேறுபாடு தெரியாது என்கிற அளவிற்கு மிளிர்ந்துகொண்டிருந்தாள். மூச்சுவிட மறந்தான் கரிகாலன், சில நிமிடங்களுக்கு. அவளை விடவும் இரட்டிப்பான கம்பீரத்துடன், கரிகாலன் வசீகரித்தான்.
அவர்கள் பாணியில் வேட்டியை இரு கால்களுக்கு இடையில் சுற்றிவிட்டிருக்க, அது மட்டும் அனீசியாக இருந்தது.இருவரையும் எதிரெதிரே அமரவைத்து, இடையில் ஒரு திரையை தொங்கவிட்டு சடங்குகள் தொடங்கியது. இருவர் கரத்திலும் தேங்காய் கொடுத்து அதற்கு பூஜை செய்து பின் அவர்கள் சம்பிரதாய முறைப்படி மணமகன், மணமகள் கழுத்தில் மங்கலநாணை பூட்ட வேண்டும்.
பூக்களும், அட்சதைகளும் தூவி ஆசிர்வாதம் செய்ய, கம்பீரமாக எழுந்து, அவள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே, அவள் சங்குகழுத்தில் நாணைப் பூட்டினான் கரிகாலன்.இருவர் வதனத்திலும் சிரிப்பு உறைந்தே இருந்தது, அழகாக!!
கலகலத்து சிரித்தபடி மணிமேகலை, அவன் தலையில் அரிசியை கொட்ட, அவன் மந்தகாசப்புன்னகையுடன் தட்டிவிட்டுக்கொண்டிருந்தான். அவனுலகம் அவளிலியே உறைந்துவிட்டது.
“கரிகாலா!! அரிசியை கொட்டுடா!!” சுற்றியிருந்தவர்கள் உலுக்கி விட, திடுமென விழித்தவன், “கேண்டிட் கிளிக் கேட்டான். அதற்காக..” கேஷுவலாக சமாளித்து விட்டு சடங்குகளில் கவனமானான்.ஹோஹோஓஓஓ!!!“சமாளிக்குறடா கரிகாலா!!” மெச்சிக்கொண்ட மாறனுடன், பலமாக சிரித்தபடி இணைந்துகொண்டான் AV.
அடுத்தடுத்த சடங்குகளில், அவளைப்பார்க்காமல் கூடுதல் கவனமாகவே இருந்தான் கரிகாலன்.
“அவ உன்னைத்தான் பார்க்கிறாள். அவள் முகத்தை தான் பாரேண்டா!!” என்றார் அவன் பாட்டி.
“எதுக்கு? உசுப்பி விட்டு, அவனை கலாயக்கவா?” என்ற மாறனை முறைத்து பார்த்தான் கரிகாலன்.
“ஹேய்!! மேண்டி.. அன்னைக்கு ஏதோ பிடிக்காத மாதிரி என்னை அடிச்ச.. இப்போ இப்படி வெறிக்க வெறிக்க அண்ணனை பாக்குற. தலை குனிஞ்சு வெட்கப்படு.. ஒரு ஷாட் க்ளிக்குறேன்.” நக்கலடித்த நந்தினியை, ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள் மணிமேகலை.
சம்பிரதாயங்கள், உணவு முடிந்து, தங்கள் இல்லத்திற்கும் திரும்பி, மீதமிருந்த சடங்குகளையும் நிறைவாக செய்து முடித்தனர்.
வீட்டின் ஹாலில் கரிகாலனும், மணிமேகலையும் அருகருகே அமர்ந்திருந்தனர். அடிக்கடி கரிகாலனின் போன் சப்தம் எழுப்பிக்கொண்டே இருந்தது. முன்னிலும் அதிக உரிமையுடன், அவன் போனை பறித்து வைத்துக்கொண்டவள், “இன்று மட்டுமாவது, இது இல்லாமல் இருக்கலாமில்லையா?” என்றாள் கெஞ்சலாக.
இணையவளின் சொல்லுக்கு, அப்பீல் செய்யாமல் கண்சிமிட்டி, தலையசைத்தான் கரிகாலன். பலரும் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு சென்றுகொண்டிருந்தனர். இன்முகமாக அனைத்து வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள்வதே அவர்கள் பணியாக இருந்தது.
மதிய வேளையில், மாறன் வந்து கரிகாலனின் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்தான். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவன், தன் அறைக்கு சென்று, வழக்கமாக உடைக்கு மாறிக்கொண்டு வெளிவந்தான்.
மணிமேகலையிடம் கண்களாலேயே அனுமதி கேட்க, அவள் பிடிவாதமாக மறுத்தாள். அவளை மட்டும் தனியே விட்டு செல்கிறான். அப்படி என்ன அவசர வேலை? எல்லோர் முன்னும் ஏதும் பேசமுடியாது, பார்வையால் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான் கரிகாலன்.
அவன் கூறியது போலவே, முதல் நாளே அவளை, அவனுக்கு பழகிக்கொள்ள வைத்துவிட்டான் AK. மனம் அவனோடு பிணங்கி கொண்டது. அவள் வயதையொத்த, வானதி மட்டுமே அளவலாவிக்கொண்டிருந்தாள், அவளோடு.
~கல்பனா
12
தெலுங்கு சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்வதா? தமிழ் முறைப்படியா? கரிகாலன், மணிமேகலை இருவர் குடும்பத்திற்குள்ளும் சலசலப்பு. குழப்பம். சாதி கலப்பு திருமணங்களுக்கு உதவியாக இருந்துவிட்டு கரிகாலனே விட்டுக்கொடுக்கவில்லை என்றால் எப்படி?
தன் இல்லத்தினரை, கவின்ஸ் செய்து சம்மதிக்க வைத்தான் கரிகாலன். திருமணம் வெகு சாதரணமாக, ஆடம்பரமில்லாமல் இருக்க வேண்டும் என்பதில் இருவருமே தெளிவாக இருந்தனர்.குடும்ப உறுப்பினர்களுக்கு ஆடம்பரமாக செய்வதிலே விருப்பம். மிகவும் ஆடம்பரமும் இல்லாமல், வெகு சாதாரணமாகவும் இல்லாமல் மையமாக கொண்டாடினார் திருமணத்தை.
இரு கரத்திலும் பச்சை நிற இளநீரை தாங்கியவண்ணம், வெண்மையும், பிங்க், தங்க நிற இழைகள் கொண்டு பட்டுடுத்தி, ஆண்டிக் நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, வெட்கத்தில் முகம் செம்மையுற, மேடையேறி வந்தாள் மணிமேகலை.
தெலுங்கு மக்கள், வழக்கமாக நெற்றியில் இடும் பிந்தியின் கீழ், பிறை போல வளைந்த வடிவம், அவளுக்கு கூடுதல் அழகை தந்தது.அவளை தூக்கி சென்று, அந்த விண்மீன் கூட்டத்துக்கு நடுவில் பொருத்திவிட்டாலும் வேறுபாடு தெரியாது என்கிற அளவிற்கு மிளிர்ந்துகொண்டிருந்தாள். மூச்சுவிட மறந்தான் கரிகாலன், சில நிமிடங்களுக்கு. அவளை விடவும் இரட்டிப்பான கம்பீரத்துடன், கரிகாலன் வசீகரித்தான்.
அவர்கள் பாணியில் வேட்டியை இரு கால்களுக்கு இடையில் சுற்றிவிட்டிருக்க, அது மட்டும் அனீசியாக இருந்தது.இருவரையும் எதிரெதிரே அமரவைத்து, இடையில் ஒரு திரையை தொங்கவிட்டு சடங்குகள் தொடங்கியது. இருவர் கரத்திலும் தேங்காய் கொடுத்து அதற்கு பூஜை செய்து பின் அவர்கள் சம்பிரதாய முறைப்படி மணமகன், மணமகள் கழுத்தில் மங்கலநாணை பூட்ட வேண்டும்.
பூக்களும், அட்சதைகளும் தூவி ஆசிர்வாதம் செய்ய, கம்பீரமாக எழுந்து, அவள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே, அவள் சங்குகழுத்தில் நாணைப் பூட்டினான் கரிகாலன்.இருவர் வதனத்திலும் சிரிப்பு உறைந்தே இருந்தது, அழகாக!!
கலகலத்து சிரித்தபடி மணிமேகலை, அவன் தலையில் அரிசியை கொட்ட, அவன் மந்தகாசப்புன்னகையுடன் தட்டிவிட்டுக்கொண்டிருந்தான். அவனுலகம் அவளிலியே உறைந்துவிட்டது.
“கரிகாலா!! அரிசியை கொட்டுடா!!” சுற்றியிருந்தவர்கள் உலுக்கி விட, திடுமென விழித்தவன், “கேண்டிட் கிளிக் கேட்டான். அதற்காக..” கேஷுவலாக சமாளித்து விட்டு சடங்குகளில் கவனமானான்.ஹோஹோஓஓஓ!!!“சமாளிக்குறடா கரிகாலா!!” மெச்சிக்கொண்ட மாறனுடன், பலமாக சிரித்தபடி இணைந்துகொண்டான் AV.
அடுத்தடுத்த சடங்குகளில், அவளைப்பார்க்காமல் கூடுதல் கவனமாகவே இருந்தான் கரிகாலன்.
“அவ உன்னைத்தான் பார்க்கிறாள். அவள் முகத்தை தான் பாரேண்டா!!” என்றார் அவன் பாட்டி.
“எதுக்கு? உசுப்பி விட்டு, அவனை கலாயக்கவா?” என்ற மாறனை முறைத்து பார்த்தான் கரிகாலன்.
“ஹேய்!! மேண்டி.. அன்னைக்கு ஏதோ பிடிக்காத மாதிரி என்னை அடிச்ச.. இப்போ இப்படி வெறிக்க வெறிக்க அண்ணனை பாக்குற. தலை குனிஞ்சு வெட்கப்படு.. ஒரு ஷாட் க்ளிக்குறேன்.” நக்கலடித்த நந்தினியை, ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள் மணிமேகலை.
சம்பிரதாயங்கள், உணவு முடிந்து, தங்கள் இல்லத்திற்கும் திரும்பி, மீதமிருந்த சடங்குகளையும் நிறைவாக செய்து முடித்தனர்.
வீட்டின் ஹாலில் கரிகாலனும், மணிமேகலையும் அருகருகே அமர்ந்திருந்தனர். அடிக்கடி கரிகாலனின் போன் சப்தம் எழுப்பிக்கொண்டே இருந்தது. முன்னிலும் அதிக உரிமையுடன், அவன் போனை பறித்து வைத்துக்கொண்டவள், “இன்று மட்டுமாவது, இது இல்லாமல் இருக்கலாமில்லையா?” என்றாள் கெஞ்சலாக.
இணையவளின் சொல்லுக்கு, அப்பீல் செய்யாமல் கண்சிமிட்டி, தலையசைத்தான் கரிகாலன். பலரும் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு சென்றுகொண்டிருந்தனர். இன்முகமாக அனைத்து வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள்வதே அவர்கள் பணியாக இருந்தது.
மதிய வேளையில், மாறன் வந்து கரிகாலனின் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்தான். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவன், தன் அறைக்கு சென்று, வழக்கமாக உடைக்கு மாறிக்கொண்டு வெளிவந்தான்.
மணிமேகலையிடம் கண்களாலேயே அனுமதி கேட்க, அவள் பிடிவாதமாக மறுத்தாள். அவளை மட்டும் தனியே விட்டு செல்கிறான். அப்படி என்ன அவசர வேலை? எல்லோர் முன்னும் ஏதும் பேசமுடியாது, பார்வையால் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான் கரிகாலன்.
அவன் கூறியது போலவே, முதல் நாளே அவளை, அவனுக்கு பழகிக்கொள்ள வைத்துவிட்டான் AK. மனம் அவனோடு பிணங்கி கொண்டது. அவள் வயதையொத்த, வானதி மட்டுமே அளவலாவிக்கொண்டிருந்தாள், அவளோடு.
Last edited: