kalpanaekambaram
அமைச்சர்
நனியுண்டு நனியுண்டு காதல்!
ஹாய் மக்களே!!
எல்லோரும் நலமா?? கன்யாதேவியை சாகடித்ததற்காக, ஏன் இப்படி பண்ணீங்க? ஆதன் பாவம்னு இன்னமும் குறைபட்டு கொள்கிறார்கள் சிலர். actually அந்த சூழ்ச்சிகளையும், அதில் அவள் சிக்கிகொண்ட விதத்தையும் depth ஆக சொல்ல நினைத்து, முடியாமல் விட்டு விட்டேன். ஆதன் அறனாளனும், கன்யாதேவியும் உங்கள் மனதில் இடம் பிடித்ததில் நான் ரொம்பவே ஹாப்பி.
காதலெனும் தீவினிலே!, எழுதி முடிச்ச பிறகு, நெக்ஸ்ட் ரெஸ்ட்ன்னு, ப்ரேக் எடுக்க முடிவு பண்ணிருந்தேன். இந்த பாடலை கேட்டுட்டு இருக்கும் போது, சட்டுன்னு ஒரு தீம் ஸ்பார்க் ஆச்சு. லைட்டான ஸ்டோரி லைன்.
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டுவர தெரியவில்லை.
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லியனுப்பு.
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு காதலிக்க அங்கு நேரமில்லையா?
நிஜத்திலும் பலருக்கு இது தெரிவதில்லை. சிலருக்கு நேரமில்லை.
எப்போதுமே ஸ்டோரி லைனை, இன்ட்ரோவில் சொல்வதில்லை நான். இந்த முறையும், அப்படியே. நீங்களே படிச்சு தெரிஞ்சுகோங்க. இந்த கதை முழுதும் கற்பனையே.. இப்படி தானே பலர் பொய் சொல்கிறார்கள். நானும் disclaimer கொடுத்து கடமையை முடித்துக்கொள்கிறேன். பனிமழையில் நனைவதைப்போல சில்லென்ற உணர்வைக்கொடுக்கும் காதலை சுற்றி தான் கதை நகரும்.
நனியுண்டு நனியுண்டு காதல்!! யாருக்கு யார் மீது? shall we start makkale?????