* கற்ற நல்ல விஷயங்களை மறப்பது கூடாது. அதை அடிக்கடி நினைவுபடுத்துவது அவசியம்.
* தர்மம் தலை காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்வில் கடைசி மூச்சு வரை தர்ம சிந்தனையுடன் வாழுங்கள்.
* பிறரிடம் இலவசமாக எதையும் பெற முயல்வது கூடாது. உழைப்பால் கிடைத்த பொருளே நிலைக்கும்.
* பிறருக்கு அடிமையாக வாழ்வதை விடக் கொடிய நரகம் வேறேதுவும் இல்லை.
* ரகசியமாகச் செய்த பாவம் மரணம் நேரும் வரை துன்பத்தை உண்டாக்கும்.