• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நாங்கலாம் அப்பவே அப்படி -- 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....



நாங்கலாம் அப்பவே அப்படி -- 5


"கோயமுத்தூர சுத்தி பார்க்க போறேன்; ஆழியாரில் வீடுகட்ட போறேன். வைதேகி ஃபால்ஸ் வாங்க போறேன். நான் கோவைக்கு ராஜாவாக வாரேன்."


ராகேஷ் குஷியாக பாடியபடி வர குட்டீஸ் அவனுக்கு கோரஸ் கொடுத்தபடி வந்தனர்.


"ஹா..ஹா.. ஃபால்ஸ் வாங்க போறிங்களா யாரு உங்களுக்கு விக்கறாங்களாம்! எதுக்கும் ஒரு நியாயம் வேண்டாம்." என அரசு நக்கலடிக்க,


" போடா இவனே போலி பட்டா ரெடி பண்ணிடலாம்"


"ஹான்..என்று வாயை பிளந்தவன் அப்படியெல்லாம் பண்ண முடியுமா?" அரசு ஆச்சர்யமாய் கேட்க.


"நீ இன்னும் வளரனும் தம்பி, இவ்வளவுஅப்பாவியா இருக்க, பொணத்துக்கே ஆதார் கார்டு அடிக்கறவங்க இருக்க ஊருடா இது. "


"எப்படிண்ணா இப்படி" அரசு வியந்தபடி வினவ, "முட்டைக்கு முன்னாடி கூ சேர்ந்து" இருக்கவங்க பொறுப்புல இருக்க ஊருல இதெல்லாம் சாத்தியம்தான்." என்றவாறு நடக்க, நாச்சியார் இவர்களுடன் சேர்ந்து சிரித்தபடி வந்தாள்.


கௌதம் தன் புகைப்பட கருவியில் காட்சிகளை பதிவு செய்தபடி பின்னால் மெதுவாக வந்தான். அதில் அனேகம் நாச்சியாரே நிரம்பி இருந்தாள்.


விதவிதமான போஸ்களில் எடுத்து தள்ளியிருந்தான் யாரும் அறியாமல் . காதலித்தால் கள்ளத்தனமும் தானாக வந்துவிடுமோ?


அவர்கள் இப்போது இருப்பது திருமூர்த்தி மலையில். காலை முதல் பரம்பிகுளம் ஆழியாறு அணை சென்று, வருடம் முழுதும் நீர் கொட்டும் வைதேகி நீர்வீழ்ச்சியில் ஆட்டம்போட்டு அங்கேயே மதியம் உண்டுவிட்டு,


ஆனைமலை என பல இடங்களில் சுற்றி விட்டு இப்போது திருமூர்த்தி மலை வந்துள்ளனர். இங்குதான் அனுசுயாதேவி மும்மூர்த்திகளை குழந்தைகளாக மாற்றியதாக கூறுவர்.


அங்குள்ள இறைவனை வணங்கிவிட்டு அருவிக்கு வந்தனர். மேலிருந்து கொட்டும் அருவி சிறிது தூரத்தில் பரந்து விரிந்து தேங்கும். கௌதம் அருவியில் நனைய கௌதம் இங்கும் இயற்கைக்கு போட்டியான அழகோடு, குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே நீராட்டிக்கொண்டிருந்தவளை வளைத்து வளைத்து படம் எடுத்தான்.


"கௌதமா இது மட்டும் உன் ப்யூட்டிக்கு தெரிஞ்சது நீ காலி மவனே!" என மனம் எக்காளமிட


"அதெல்லாம் தெரியாது, தெரிஞ்சாலும் குழந்தைங்களதான் எடுத்தேன்னு சமாளிச்சிடுவேனே!"


" இப்படி கவுந்திட்டியேடா" என மனசாட்சி நகைக்க, அதை புறம் தள்ளியவன் காமிரா கண்கள் மூலம் தன்னவளை விழுங்க தொடங்கினான்.


இவர்கள் இவ்வாறு இருக்க அங்கு ஒரு ஜோடி கண்கள் நாச்சியாரை வெறித்தபடி பார்த்தன


. அதுவரை குழந்தைகளோடு பாறையில் அமர்ந்து விளையாடியவள், ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி, "இந்த கௌ எங்க" என தேட கௌதம் ஒரு பாறையின் மேல் ஏறிக்கொண்டிருந்தான்.


அது வழுக்கும் பாசிகள் படர்ந்திருக்க மிகவும் அபாயகரமானதாக இருந்தது. கீழேயும் கரடுமுரடான பாறைகள் அதிகமாக இருந்தது. விழுந்தால் தலையில் எப்படி அடிபடும் என்று அறுதியிட்டு கூற இயலாது.


அவளுக்கு திக்கென்று இருந்தது "இந்த கௌ ஏன் அங்க போகனும்."


"அங்க போகாதீங்க அந்த பாறை வழுக்கும்" என இங்கிருந்தவாறு கத்தினாள். அவன் கேட்பதாயில்லை இதோ வந்துவிடுகிறேன் என சைகை செய்தவாறு சென்றான்.


நீருக்கு அடியில் நின்றிருந்த இருவருக்கும் இரைச்சலால் எதுவும் தெரியவில்லை. இவளுக்குதான் படபடப்பாக இருந்தது.சிறுவர்களை போதுமென அழைத்து அவர்களுக்கு தலையை துவட்டியவாறு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.


தலையை துவட்டி முடித்து உடை மாற்றுமாறு அவர்களை காருக்கு அனுப்பி வைத்து விட்டு ,பிறகு அவனை பார்த்தவாறே அமர்ந்து கொண்டாள்.


அவன் ஒரு கட்டத்தில் தடுமாற, இவள் "பார்த்து" என இங்கிருந்தே கத்தினாள்.


அவளை அப்படி பதட்டமாக பார்த்தவனுக்கு சுவாரசியமாக, "இப்பதான் என்னை கண்டுக்கறா, இருடி கொஞ்ச நேரம் விளையாட்டு காட்றேன்" என எண்ணி அடுத்த அடி எடுத்து வைத்தவன் பாறை வழுக்கி கீழே நீரில் விழுந்துவிட்டான்.


இவளுக்கு ஒரு நிமிடம் உயிரே உறைந்துவிட்டது. அடுத்த நொடி மின்னலென பாய்ந்திருந்தாள் அவனை நோக்கி.


"கௌதம்" என கத்தியவாறு தலைதெறிக்க ஓடியவளை பார்த்த அரசுவும், ராகேஷும் சத்தத்தில் ஒன்றும் கேட்காமல் என்னவென அறியாமலேயே ஓடி வந்தனர். பிறகுதான் தெரிந்தது கௌதம் விழுந்தது.


"பாஸ்"

"அத்தான்"

என இருவரும் விரைந்து இறங்கி அவனை தூக்கியபடி வெளியே வந்தனர். அவன் உடலில் அசைவுகள் இல்லை.


கீழே அமர்ந்து அவன் தலையை மடிதாங்கியவள் நடுங்கும் விரல்களால் முகத்தை ஆட்டியவாறு "கௌதம், கௌதம்" என அழைக்க பதட்டத்தில் பேச்சே வரவில்லை.


கண்களில் நீர் அருவி போல கொட்டிக்கொண்டே இருந்தது. விழிநீர் அவனை மறைக்க புறங்கையால் கண்ணீரை துடைத்தவாறு முகம் முழுதும் தடவி தடவி பார்த்து "கௌதம், கௌதம் " என அரற்றிக்கொண்டே இருந்தாள்.
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
அரசுவும் பதட்டமாகஆராய்ந்தான் எங்கேயும் அடிப்பட்டது போல தெரியவில்லை!


"அக்கா அழாத ஒண்ணுமில்லை தோ எங்கயும் அடிபடலை பாரு"


ராகேஷுக்கும் அதிர்ச்சியே உடன்பிறந்தவனை போல அல்லவா அவன்!


இருப்பினும் விடாமல் அரற்றிக்கொண்டிருந்த இவளை தேற்றும் பொருட்டு "ஆமாம்மா அடி எதுவும் படல, விழுந்த அதிர்ச்சியில மயங்கியிருப்பார்"


ஒரு நிமிடம் ஆசுவாசமடைந்தாலும், அடுத்த நொடி "கடவுளே உள்காயம் மாதிரி பட்டிருந்தா" என மனம் கண்டதையும் தூபம் போட ஆரம்பித்தது.


இவளின் தவிப்புகளை கண்மூடி ரசித்தவன் போதும் விளையாண்டது என கண்களை திறக்க, அவளுக்கு இப்போதுதான் மூச்சே வந்தது.


"கௌதம் உங்களுக்கு அடிபடலயே " என பதட்டத்துடன் வினவ மெல்ல எழுந்தவன்

" ஒண்ணுமில்லை"
என தலையை ஆட்ட,


ராகேஷ் "ஊஃப் பாஸ் ஒரு நிமிசம் கொன்னுட்டீங்க" என அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.


தானும் அவனை அணைத்துக்கொண்டவன் "டேய் ஒண்ணுமில்லடா" என சமாதானம் செய்ய ஒரு வாறு அவனை விட்டவன்,


பார்த்து இருக்கலாம்ல என்று மீண்டும் தொடங்க ஒருவாறு இவனையும் அரசுவையும் சமாதானப்படுத்தியவன், காமிரா மேலேயே இருக்கிறது அதனை எடுத்துக்கொண்டு, உடைமாற்றி வர சொல்ல, இருவரும் அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.


தனிமையில், இன்னும் அவன் மேனியில் எதாவது அடிபட்டிருக்கிறதா என ஆராய்ந்தவளை பார்த்தவன்

"ஹேய் பம்ப்கின் எனக்கு ஒண்ணுமில்லடி" என தன்னை சுற்றி காட்டியவனை பார்த்தவள் தன் கோட்பாடுகளை கலைந்து, அவன் விழுந்ததால் தவிப்புகள் மட்டுமே எஞ்சியிருக்க ,


"கௌதம்" என்றவாறு பாய்ந்து அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். முகத்தை பற்றி முகம் முழுதும் முத்தங்களால் அர்ச்சித்தவள், மீண்டும் அணைத்துக்கொண்டு


"எருமமாடே என்னை சாகடிக்கனும்னே இருக்கியா?" என்று சரமாறியாக அவன் முதுகில் மொத்த,


அவனுக்குள் இன்ப அதிர்வு . மெதுவாக மேல் எழும்பிய கை அவளை இறுக்கமாக அணைத்து, காதோரம் மீசை முடிகள் உரச

"ஹேய் பம்ப்கின் என்னடி"


என கிசுகிசுப்பாக வினவ, அவன் நெஞ்சில் மேலும் புதைந்தவாறு, இல்லை என தலையசைக்க அவனுக்கோ கட்டுப்பாடுகளை களையும் உணர்வு. அதை அணைப்பின் இறுக்கத்தில் காட்டினான்.இன்னும் சிறுபிள்ளை போல தேம்பியவளை சமாதானப்படுத்த,

"ஹேய் ப்யூட்டி இங்க பாரு ஒன்னும் ஆகிருக்காதுடி, பாறை இல்லாத நல்ல இடமா பாத்துதான் குதிச்சேன்" என வாயை விட,


அதில் தன் தலையை அவனிலிருந்து பிரித்து புரியாமல் பார்க்க, அவனுக்கு சந்திராஷ்டமம் உச்சத்தில் இருந்ததோ என்னவோ!


"ஆமாண்டி , வேணும்னேதான் குதிச்சேன். அதனாலதான நீ இப்படி இருக்கற" என அவர்களிருக்கும் நிலையை சுட்டிக்காட்ட,


உடனே அவனை விட்டு விலகியவள் கண்ணீரை துடைத்தவாறு "அப்ப வேணும்னேதான் விழுந்தீங்களா?" சீற்றத்தை அடக்கியபடி வினவ,


அவன் "ம்ம்ம்" என்ற நொடி அவள் கை அவன் கன்னத்தில் பதிந்திருந்தது. ஆழமாய் ,அழுத்தமாய் ஐந்து விரல்களின் ரேகை பதியுமளவு.


என்னுடைய பரிதவிப்பு இவனுக்கு விளையாட்டாமா என எண்ணிய நொடி இதனை செய்து விட்டாள்.


அவன் அதிர்ந்தது ஒரு நொடியே, அவனது அகங்காரம் தலைதூக்க அவள் பின்னந்தலைமுடியை வலிக்க பற்றியவன் தன் முகத்திற்க்கு அருகில் கொண்டு வந்து

"என்னடி ஆம்பிளைய கைநீட்டுற பழக்கம்"


வலி இருந்தாலும் அதை காட்டாமல் அவன் கையை தட்டிவிட முயல அதை எளிதாக தடுத்தவன்

"என்னை அடிச்ச உன்னை திருப்பி அடிக்க வேணாம்?" எனக் கூறியவன்,


அவள் உணரும் முன் அவள் வயிற்றில் கை வைத்து தள்ளி அருகில் இருந்த பாறையின் மேல் சாய்த்தவன் அவள் இதழ்களை வன்மையாக சிறைபிடித்தான்.


அவள் எதிர்க்க, எதிர்க்க அவள் மேல் தன் மொத்த உடலும் உரச பரவி நின்றவன் அவள் அசையாதவாறு பிடித்திருக்க, இடது கை பின்னந்தலையில் அழுத்தத்தை கூட்டி மேலும் தன் முகத்தோடு அழுத்த, வலது கையோ கொடியிடையை கன்றி போகும் அளவிற்க்கு இறுக்கியது.


முதலில் கோபத்தில் வன்மையை கையிலெடுத்தவன் அவள் மென்மையில் உருகி குழைந்து பின் மென்மையாய் ஒற்றை முத்தத்தில் உயிரை உறிஞ்சும் அரக்கனாய் மாறினான்.
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
:oops::oops:o_Oo_Oo_O?????
கார்த்தீதீதீ.......... என்ன இது????
இப்படி அடிச்சிக்கிறாங்க ரெண்டு பேரும். ????
அந்த புள்ள அடிச்சுதுன்னு வேணா சொல்லுங்க, இவன்"எங்க அடிச்சான் ஃப்ராடு பய...;)
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அந்த புள்ள அடிச்சுதுன்னு வேணா சொல்லுங்க, இவன்"எங்க அடிச்சான் ஃப்ராடு பய...;)
அதத்தான நானும் சொன்னேன். ;););)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top