சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....
நாங்கலாம் அப்பவே அப்படி -- 5
"கோயமுத்தூர சுத்தி பார்க்க போறேன்; ஆழியாரில் வீடுகட்ட போறேன். வைதேகி ஃபால்ஸ் வாங்க போறேன். நான் கோவைக்கு ராஜாவாக வாரேன்."
ராகேஷ் குஷியாக பாடியபடி வர குட்டீஸ் அவனுக்கு கோரஸ் கொடுத்தபடி வந்தனர்.
"ஹா..ஹா.. ஃபால்ஸ் வாங்க போறிங்களா யாரு உங்களுக்கு விக்கறாங்களாம்! எதுக்கும் ஒரு நியாயம் வேண்டாம்." என அரசு நக்கலடிக்க,
" போடா இவனே போலி பட்டா ரெடி பண்ணிடலாம்"
"ஹான்..என்று வாயை பிளந்தவன் அப்படியெல்லாம் பண்ண முடியுமா?" அரசு ஆச்சர்யமாய் கேட்க.
"நீ இன்னும் வளரனும் தம்பி, இவ்வளவுஅப்பாவியா இருக்க, பொணத்துக்கே ஆதார் கார்டு அடிக்கறவங்க இருக்க ஊருடா இது. "
"எப்படிண்ணா இப்படி" அரசு வியந்தபடி வினவ, "முட்டைக்கு முன்னாடி கூ சேர்ந்து" இருக்கவங்க பொறுப்புல இருக்க ஊருல இதெல்லாம் சாத்தியம்தான்." என்றவாறு நடக்க, நாச்சியார் இவர்களுடன் சேர்ந்து சிரித்தபடி வந்தாள்.
கௌதம் தன் புகைப்பட கருவியில் காட்சிகளை பதிவு செய்தபடி பின்னால் மெதுவாக வந்தான். அதில் அனேகம் நாச்சியாரே நிரம்பி இருந்தாள்.
விதவிதமான போஸ்களில் எடுத்து தள்ளியிருந்தான் யாரும் அறியாமல் . காதலித்தால் கள்ளத்தனமும் தானாக வந்துவிடுமோ?
அவர்கள் இப்போது இருப்பது திருமூர்த்தி மலையில். காலை முதல் பரம்பிகுளம் ஆழியாறு அணை சென்று, வருடம் முழுதும் நீர் கொட்டும் வைதேகி நீர்வீழ்ச்சியில் ஆட்டம்போட்டு அங்கேயே மதியம் உண்டுவிட்டு,
ஆனைமலை என பல இடங்களில் சுற்றி விட்டு இப்போது திருமூர்த்தி மலை வந்துள்ளனர். இங்குதான் அனுசுயாதேவி மும்மூர்த்திகளை குழந்தைகளாக மாற்றியதாக கூறுவர்.
அங்குள்ள இறைவனை வணங்கிவிட்டு அருவிக்கு வந்தனர். மேலிருந்து கொட்டும் அருவி சிறிது தூரத்தில் பரந்து விரிந்து தேங்கும். கௌதம் அருவியில் நனைய கௌதம் இங்கும் இயற்கைக்கு போட்டியான அழகோடு, குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே நீராட்டிக்கொண்டிருந்தவளை வளைத்து வளைத்து படம் எடுத்தான்.
"கௌதமா இது மட்டும் உன் ப்யூட்டிக்கு தெரிஞ்சது நீ காலி மவனே!" என மனம் எக்காளமிட
"அதெல்லாம் தெரியாது, தெரிஞ்சாலும் குழந்தைங்களதான் எடுத்தேன்னு சமாளிச்சிடுவேனே!"
" இப்படி கவுந்திட்டியேடா" என மனசாட்சி நகைக்க, அதை புறம் தள்ளியவன் காமிரா கண்கள் மூலம் தன்னவளை விழுங்க தொடங்கினான்.
இவர்கள் இவ்வாறு இருக்க அங்கு ஒரு ஜோடி கண்கள் நாச்சியாரை வெறித்தபடி பார்த்தன
. அதுவரை குழந்தைகளோடு பாறையில் அமர்ந்து விளையாடியவள், ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி, "இந்த கௌ எங்க" என தேட கௌதம் ஒரு பாறையின் மேல் ஏறிக்கொண்டிருந்தான்.
அது வழுக்கும் பாசிகள் படர்ந்திருக்க மிகவும் அபாயகரமானதாக இருந்தது. கீழேயும் கரடுமுரடான பாறைகள் அதிகமாக இருந்தது. விழுந்தால் தலையில் எப்படி அடிபடும் என்று அறுதியிட்டு கூற இயலாது.
அவளுக்கு திக்கென்று இருந்தது "இந்த கௌ ஏன் அங்க போகனும்."
"அங்க போகாதீங்க அந்த பாறை வழுக்கும்" என இங்கிருந்தவாறு கத்தினாள். அவன் கேட்பதாயில்லை இதோ வந்துவிடுகிறேன் என சைகை செய்தவாறு சென்றான்.
நீருக்கு அடியில் நின்றிருந்த இருவருக்கும் இரைச்சலால் எதுவும் தெரியவில்லை. இவளுக்குதான் படபடப்பாக இருந்தது.சிறுவர்களை போதுமென அழைத்து அவர்களுக்கு தலையை துவட்டியவாறு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
தலையை துவட்டி முடித்து உடை மாற்றுமாறு அவர்களை காருக்கு அனுப்பி வைத்து விட்டு ,பிறகு அவனை பார்த்தவாறே அமர்ந்து கொண்டாள்.
அவன் ஒரு கட்டத்தில் தடுமாற, இவள் "பார்த்து" என இங்கிருந்தே கத்தினாள்.
அவளை அப்படி பதட்டமாக பார்த்தவனுக்கு சுவாரசியமாக, "இப்பதான் என்னை கண்டுக்கறா, இருடி கொஞ்ச நேரம் விளையாட்டு காட்றேன்" என எண்ணி அடுத்த அடி எடுத்து வைத்தவன் பாறை வழுக்கி கீழே நீரில் விழுந்துவிட்டான்.
இவளுக்கு ஒரு நிமிடம் உயிரே உறைந்துவிட்டது. அடுத்த நொடி மின்னலென பாய்ந்திருந்தாள் அவனை நோக்கி.
"கௌதம்" என கத்தியவாறு தலைதெறிக்க ஓடியவளை பார்த்த அரசுவும், ராகேஷும் சத்தத்தில் ஒன்றும் கேட்காமல் என்னவென அறியாமலேயே ஓடி வந்தனர். பிறகுதான் தெரிந்தது கௌதம் விழுந்தது.
"பாஸ்"
"அத்தான்"
என இருவரும் விரைந்து இறங்கி அவனை தூக்கியபடி வெளியே வந்தனர். அவன் உடலில் அசைவுகள் இல்லை.
கீழே அமர்ந்து அவன் தலையை மடிதாங்கியவள் நடுங்கும் விரல்களால் முகத்தை ஆட்டியவாறு "கௌதம், கௌதம்" என அழைக்க பதட்டத்தில் பேச்சே வரவில்லை.
கண்களில் நீர் அருவி போல கொட்டிக்கொண்டே இருந்தது. விழிநீர் அவனை மறைக்க புறங்கையால் கண்ணீரை துடைத்தவாறு முகம் முழுதும் தடவி தடவி பார்த்து "கௌதம், கௌதம் " என அரற்றிக்கொண்டே இருந்தாள்.
நாங்கலாம் அப்பவே அப்படி -- 5
"கோயமுத்தூர சுத்தி பார்க்க போறேன்; ஆழியாரில் வீடுகட்ட போறேன். வைதேகி ஃபால்ஸ் வாங்க போறேன். நான் கோவைக்கு ராஜாவாக வாரேன்."
ராகேஷ் குஷியாக பாடியபடி வர குட்டீஸ் அவனுக்கு கோரஸ் கொடுத்தபடி வந்தனர்.
"ஹா..ஹா.. ஃபால்ஸ் வாங்க போறிங்களா யாரு உங்களுக்கு விக்கறாங்களாம்! எதுக்கும் ஒரு நியாயம் வேண்டாம்." என அரசு நக்கலடிக்க,
" போடா இவனே போலி பட்டா ரெடி பண்ணிடலாம்"
"ஹான்..என்று வாயை பிளந்தவன் அப்படியெல்லாம் பண்ண முடியுமா?" அரசு ஆச்சர்யமாய் கேட்க.
"நீ இன்னும் வளரனும் தம்பி, இவ்வளவுஅப்பாவியா இருக்க, பொணத்துக்கே ஆதார் கார்டு அடிக்கறவங்க இருக்க ஊருடா இது. "
"எப்படிண்ணா இப்படி" அரசு வியந்தபடி வினவ, "முட்டைக்கு முன்னாடி கூ சேர்ந்து" இருக்கவங்க பொறுப்புல இருக்க ஊருல இதெல்லாம் சாத்தியம்தான்." என்றவாறு நடக்க, நாச்சியார் இவர்களுடன் சேர்ந்து சிரித்தபடி வந்தாள்.
கௌதம் தன் புகைப்பட கருவியில் காட்சிகளை பதிவு செய்தபடி பின்னால் மெதுவாக வந்தான். அதில் அனேகம் நாச்சியாரே நிரம்பி இருந்தாள்.
விதவிதமான போஸ்களில் எடுத்து தள்ளியிருந்தான் யாரும் அறியாமல் . காதலித்தால் கள்ளத்தனமும் தானாக வந்துவிடுமோ?
அவர்கள் இப்போது இருப்பது திருமூர்த்தி மலையில். காலை முதல் பரம்பிகுளம் ஆழியாறு அணை சென்று, வருடம் முழுதும் நீர் கொட்டும் வைதேகி நீர்வீழ்ச்சியில் ஆட்டம்போட்டு அங்கேயே மதியம் உண்டுவிட்டு,
ஆனைமலை என பல இடங்களில் சுற்றி விட்டு இப்போது திருமூர்த்தி மலை வந்துள்ளனர். இங்குதான் அனுசுயாதேவி மும்மூர்த்திகளை குழந்தைகளாக மாற்றியதாக கூறுவர்.
அங்குள்ள இறைவனை வணங்கிவிட்டு அருவிக்கு வந்தனர். மேலிருந்து கொட்டும் அருவி சிறிது தூரத்தில் பரந்து விரிந்து தேங்கும். கௌதம் அருவியில் நனைய கௌதம் இங்கும் இயற்கைக்கு போட்டியான அழகோடு, குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே நீராட்டிக்கொண்டிருந்தவளை வளைத்து வளைத்து படம் எடுத்தான்.
"கௌதமா இது மட்டும் உன் ப்யூட்டிக்கு தெரிஞ்சது நீ காலி மவனே!" என மனம் எக்காளமிட
"அதெல்லாம் தெரியாது, தெரிஞ்சாலும் குழந்தைங்களதான் எடுத்தேன்னு சமாளிச்சிடுவேனே!"
" இப்படி கவுந்திட்டியேடா" என மனசாட்சி நகைக்க, அதை புறம் தள்ளியவன் காமிரா கண்கள் மூலம் தன்னவளை விழுங்க தொடங்கினான்.
இவர்கள் இவ்வாறு இருக்க அங்கு ஒரு ஜோடி கண்கள் நாச்சியாரை வெறித்தபடி பார்த்தன
. அதுவரை குழந்தைகளோடு பாறையில் அமர்ந்து விளையாடியவள், ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி, "இந்த கௌ எங்க" என தேட கௌதம் ஒரு பாறையின் மேல் ஏறிக்கொண்டிருந்தான்.
அது வழுக்கும் பாசிகள் படர்ந்திருக்க மிகவும் அபாயகரமானதாக இருந்தது. கீழேயும் கரடுமுரடான பாறைகள் அதிகமாக இருந்தது. விழுந்தால் தலையில் எப்படி அடிபடும் என்று அறுதியிட்டு கூற இயலாது.
அவளுக்கு திக்கென்று இருந்தது "இந்த கௌ ஏன் அங்க போகனும்."
"அங்க போகாதீங்க அந்த பாறை வழுக்கும்" என இங்கிருந்தவாறு கத்தினாள். அவன் கேட்பதாயில்லை இதோ வந்துவிடுகிறேன் என சைகை செய்தவாறு சென்றான்.
நீருக்கு அடியில் நின்றிருந்த இருவருக்கும் இரைச்சலால் எதுவும் தெரியவில்லை. இவளுக்குதான் படபடப்பாக இருந்தது.சிறுவர்களை போதுமென அழைத்து அவர்களுக்கு தலையை துவட்டியவாறு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
தலையை துவட்டி முடித்து உடை மாற்றுமாறு அவர்களை காருக்கு அனுப்பி வைத்து விட்டு ,பிறகு அவனை பார்த்தவாறே அமர்ந்து கொண்டாள்.
அவன் ஒரு கட்டத்தில் தடுமாற, இவள் "பார்த்து" என இங்கிருந்தே கத்தினாள்.
அவளை அப்படி பதட்டமாக பார்த்தவனுக்கு சுவாரசியமாக, "இப்பதான் என்னை கண்டுக்கறா, இருடி கொஞ்ச நேரம் விளையாட்டு காட்றேன்" என எண்ணி அடுத்த அடி எடுத்து வைத்தவன் பாறை வழுக்கி கீழே நீரில் விழுந்துவிட்டான்.
இவளுக்கு ஒரு நிமிடம் உயிரே உறைந்துவிட்டது. அடுத்த நொடி மின்னலென பாய்ந்திருந்தாள் அவனை நோக்கி.
"கௌதம்" என கத்தியவாறு தலைதெறிக்க ஓடியவளை பார்த்த அரசுவும், ராகேஷும் சத்தத்தில் ஒன்றும் கேட்காமல் என்னவென அறியாமலேயே ஓடி வந்தனர். பிறகுதான் தெரிந்தது கௌதம் விழுந்தது.
"பாஸ்"
"அத்தான்"
என இருவரும் விரைந்து இறங்கி அவனை தூக்கியபடி வெளியே வந்தனர். அவன் உடலில் அசைவுகள் இல்லை.
கீழே அமர்ந்து அவன் தலையை மடிதாங்கியவள் நடுங்கும் விரல்களால் முகத்தை ஆட்டியவாறு "கௌதம், கௌதம்" என அழைக்க பதட்டத்தில் பேச்சே வரவில்லை.
கண்களில் நீர் அருவி போல கொட்டிக்கொண்டே இருந்தது. விழிநீர் அவனை மறைக்க புறங்கையால் கண்ணீரை துடைத்தவாறு முகம் முழுதும் தடவி தடவி பார்த்து "கௌதம், கௌதம் " என அரற்றிக்கொண்டே இருந்தாள்.
Last edited: