சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....
நாங்கலாம் அப்பவே அப்படி-- 7"
யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்" மனதுக்குள் மெல்லிய சாரலாய் கீதம் இசைக்க முகம் முழுவதும் விகசித்த புண்ணகையோடு மண்டபத்திற்க்குள் நுழைந்தாள் காரிகை.
சிறுவாண்டுகள் கூட இவளை அழைத்து பார்க்க, இவள் கலையவில்லை. மனம் மொத்தமும் கௌதம் மட்டுமே.
அன்று அருவிக்கரையில் முதலில் முத்தமிட்ட போது அதிர்ச்சிதான், விலக்கவும் முயன்றாள். ஆனால் காதல் கொண்ட மனம் ஒரு கட்டத்திற்க்கு மேல் ரசிக்க தொடங்கியது.
ஆனால் அதை அடுத்த நிலைக்கு கௌதம் எடுத்து செல்ல முயன்ற போது, இவள் சுதாரித்து அவனை தள்ளிவிட்டிருந்தாள். அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள். அவனுக்கு காட்டவும் தவிர்த்தாள்.
அப்போது அவள் மனதில் கோபம், தவிப்பு போன்ற எந்த உணர்ச்சிகளும் இல்லை. மனம் வெற்றுத்தாளாய்; அதில் கௌதமனின் எண்ணங்கள் மட்டும் தூரிகையாய் வானவில்லை தீட்ட தொடங்கின.அது சரியோ? தவறோ? மனம் ஒருவித போதையில் மூழ்க தொடங்கியது.
அதிலிருந்து தெளிவு பெறாமல் அவனை பார்க்க முடியாது, எனவேதான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம். அது இன்று நிறைவுபெற்று விட்டது.
மண்டபம் முழுவதும் ஆட்கள் நிரம்பியிருக்க புடவைக்கு போட்டியாய் மின்னும் இவள் முகத்தை கவனிப்பார் யாருமில்லை. மற்றவர் கவனித்தாலும் அதை கருத்தில் கொள்ளும் நிலையில் இவளும் இல்லை. அதனால் தன்னை ஒருவன் பின்தொடர்வதையும் கவனிக்க தவறினாள்.
இத்தனை நாள் கேள்விக்கு இன்று கிடைத்த பதிலில் மனம் இறகை போல லேசாக, மயிலிறகால் வருடுவது போல உடலில் சிலிர்ப்பு ஓடி மறைய, மயக்கும் புன்னகையை சிந்தியவாறே தலையை கோதியபடி கௌதமும் மண்டபத்திற்க்குள் நுழைந்தான்.
கண்களால் அவளை தேடி , அவள் மேடைக்கு கீழே இருந்த உறவினர் கூட்டத்தில் இருப்பதை கண்டவன்
"மேடைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்கிறாள்" என எண்ணியவாறு கூட்டத்தில் கலந்து அவளை,நோக்கி முன்னேறினான்.
அப்போதுதான் அந்த முகத்தை கண்டான் அவ்வளவு குரோதம் அதனில் , யாரைக் கண்டு? அவனவளை கண்டா! கூர்ந்து கவனித்தான். அவளை நோக்கிதான்.
கையில் எதையோ மறைத்தபடி. கௌதமுக்கும் அவனவளுக்கும் இருக்கும் தூரம் பதினைந்து அடி; நாச்சியாருக்கும் அந்த கோர முகத்துக்காரனுக்கும் இருக்கும் தூரம் ஐந்தே அடிகள். எதுவோ சரியில்லை மனம் அடித்து கூறியது. அவன் கனிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை.
அவளிடம் செல்ல உறவினர்களை விலக்கியபடி எட்டிநடைபோட அதற்குள் அவன் அருகில் சென்றுவிட்டிருந்தான்.
மற்ற நாளாய் இருந்தால் சுற்றுபுரத்தை தன் கவனத்தில் வைத்திருப்பாள். இது அவளது வழக்கம். பெண்களுக்கு இந்த கவனம் அவசியம் என நினைப்பவள். ஆனால் இன்று அதைகூட அவள் கவனிக்க வில்லை காரணம் கௌதம்.
கௌதமுக்கு புரிந்தது அது ஆசிட் என்னும் திராவகம். மனம் பதறியது. "ஏய் "என்ற கூவலுடன் கௌதம் செல்வதற்க்கும் அவன் பாட்டிலை திறந்து ஊற்ற வரவும் சரியாக இருந்தது.
கூட்டத்தில் சலசலப்பு. யாருக்கும் என்ன நடந்தது தெரியவில்லை. நாச்சியாருக்கோ அதிர்ச்சி. கௌதம் விரைந்து வந்தவன் நாச்சியாரை இழுத்து தன் பின்னால் இருத்திக் கொண்டான்.
அவளை முழுதும் ஆராய்ந்தான் ஒன்றும் ஆகவில்லை. மனம் இப்போதுதான் அமைதியடைந்தது. எங்கே அவன்? என்று கோபத்தோடு திரும்ப அங்கு ஒரு கரம் அவனை வளைத்து திராவகம் இருந்த கரத்தை பற்றியிருந்தது.
"யார் இவன்? "கௌதம் ஒரு முகச்சுருக்கத்துடன் புதியவனை நோட்டம்விட்டான்.
"கௌதம் வந்து கொஞ்சம் உதவி பண்ணுங்க" அந்த புதியவன் அழைக்க, அதுவரை நாச்சியாரை கைவளைவில் வைத்திருந்தவன் அவளை மெதுவாக விலக்கி அவன் அருகில் வந்தான்.
திராவகம் இருந்த கையை பிடித்த கௌதம் , லாவகமாக அதை அவனிடம் இருந்து பறித்தவன் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான்.
கௌதம் "யார்றா நீ? எதுக்கு இப்படி பண்ண?
இருவரின் கைப்பிடியில் இருந்தும் அவன் அடங்கவில்லை. "ஏய் நாச்சியா தப்பிச்சிட்டன்னு நினைக்காத அழிப்பேன்டி உன்ன!!! என்னோட காதல அழிச்ச நீ மட்டும்......." அதற்கு மேல் அவன் பேசவில்லை. வாயிலேயே ஒரு குத்து விட ரத்தம் பொலபொலவென்று கொட்டியது.
அந்த அடிக்கு சொந்தகாரன் கௌதம் அல்ல, அந்த இன்னொருவன். அவன் "வெற்றி வேலன்" வீரபாண்டியின் தங்கை சகுந்தலாவின் மைந்தன். ரத்ன பாண்டி, காமாட்சியின் மகள் வயிற்று பேரன். நெடுநெடுவென்ற உயரத்தில், விவசாயம் செய்து உரமேறிய உடற்கட்டுடன், மாநிறத்தில் இருக்கும் கிராமத்து அழகன்.
அதற்குள் அனைவரும் இவர்கள் அருகில், மணமக்கள் கோலத்தில் இருந்த தம்பதிகளும் வந்துவிட தெய்வானை ஓடி மகள் அருகில் நின்று கொண்டார்.
வீரபாண்டி தங்கையின் மகனை கண்டவர் "வேலா, என்னப்பா இது? " அவருக்கு அதிர்ச்சி அவரது செல்ல மகளின் மேல் ஒருவன் வஞ்சம் கொண்டு இத்தனை தூரம் செல்வான் என்று நினைக்கமுடியவில்லை.
"மாமா அன்னைக்கு பஞ்சாயத்துல இவன அவமானபடுத்தினதால நம்ம பொண்ண பழிவாங்கனும்னு சுத்தியிருக்கான். எனக்கு தெரிஞ்சு நானும் எச்சரிச்சு விட்டேன். ஆனா அப்பவும் திருந்தாம இந்த வேல பாத்திருக்கான்" என்றவாறு மீண்டும் ஒரு அறை விட்டான்.
"ஏலேய் முத்தா! " "ஐயா!" நம்ம ஆளுங்களை கூப்பிட்டு இந்த பயல நம்ம குடோனுக்கு கொண்டு போங்க, நம்ம பொண்ணு மேல கை வைக்க நினைச்சா என்னாகும்னு தெரியனும்.ம் .. இழுத்துட்டு போங்க" என்று கர்ஜிக்க, தன் முதலாளியிடம் இவ்வளவு கோபத்தை முதன் முறையாக கண்ட தொழிலாளர்களும் அவனை இழுத்துகொண்டு சென்றனர்.
கௌதம் "மாமா ஒரு நிமிஷம்" வேலையாட்களின் பிடியில் இருந்தவனை காட்டி "ஆசிட் அடிக்கற அளவுக்கு என்ன வெறி இவனுக்கு? அப்பறம்" இது யாரு எனக்கு பதில் சொல்லுங்க மாமா?" என வேலனை சுட்டிகாட்டி கூறினான்.
வேலனை காட்டி "இவன் என்ற மருமவன் கௌதம்"
"அப்ப நான் யாரு?" என்ற பாவனையுடன் வேலனை பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன் அழகாய் புன்னகைத்தான்.
"தங்கச்சி மவன கூட மருமவன்னு கூப்பிடலாம் கௌதம்"
"ஓ." ஒரு சிறு ஆறுதல்.
"சரி சொல்லுங்க இவனுக்கும் அழகிக்கும் என்ன பிரச்சனை?"
அதற்கு கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் "இந்த பய ஒரு பொண்ண விரும்பினான் தம்பி, அந்த புள்ளையும் இவன விரும்பிச்சு...அந்த புள்ளைக்கு அம்மா மட்டுந்தான், அப்பா அந்த புள்ள கருவுல இருக்கையிலயே தவறிட்டாரு.
இவன் பொண்ணு கேட்க, அந்தம்மா ஊருக்குள்ள பொறுக்கிதனம் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கான் இவனுக்கு பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிடுச்சு.
இவன் அந்த பொண்ண ஏவிவிட்டு அம்மா மேல பஞ்சாயத்துல பிராது கொடுக்க வச்சுட்டான் படுபாவி. பஞ்சாயத்தில் ஊர் மக்கள் கூடியிருக்க (ஆலமரம், சொம்பு இதெல்லாம் மிஸ்ஸிங். ஹா.ஹா..ஏனா இது நவீன பஞ்சாயத்து கிராமசபை மண்டபத்தில் நடைபெற்றது. )
பஞ்சாயத்து தலைவராக வீரபாண்டி , உடன் கனக வேலுவும்
சில பெரியவர்களும். ஊர் மக்கள் முக்கால்வாசி பேர் அங்கிருக்க தெய்வானை, நாச்சியார் கூட அங்கிருந்தனர்.
"சொல்லுங்கப்பா என்ன பிராது"
"ஐயா இந்த பொண்ணு வான்மதி நாலாவது தெரு கண்ணம்மா பொண்ணுங்க, அது இந்த பையனதான் கண்ணாலம் கட்டிக்குவேன்னு சொல்லுதுங்க, ஆனா இந்த பொண்ணோட அம்மா இதுக்கு சம்மதிக்கலன்னு பஞ்சாயத்த கூட்டி நிக்குதுங்க" என்று ஒரு பெருசு வழக்கை சுருக்கமாக உரைக்க விசாரணை ஆரம்பித்தது.
கண்ணம்மா அழுதபடி நிற்க, அவருக்கு சில பெண்கள் ஆறுதல் அளித்தபடி உடன் நின்றிருந்தனர். வீரபாண்டி,
"உங்க தரப்ப சொல்லுங்க கண்ணம்மா."
அந்த ஊரில்இது ஒருவழக்கம் தன் வீட்டு பெண்களை தவிர மற்ற பெண்களை மரியாதையோடு வாங்க , போங்க என்றே அழைப்பர் . சிறிய பெண்ணாக இருந்தாலும் .
"ஐயா! எனக்கிருக்கறது ஒரே மவங்க, அது நல்லபடி கட்டிக் கொடுக்கனும்னு நினைச்சேன், பாவிமக இப்படி பண்ணிட்டாங்க" என்றவாறு அழுதவாறு தன் வாதத்தை முன் வைத்தார்.
வயிற்றில் ஆறுமாத கருவுடன் கணவனை இழந்தவர். அதன்பின் எவ்வளவு பாடுபட்டு மகளை வளர்த்தார் என்பது இந்த ஊருக்கே தெரியும். இப்போது வான்மதியிடம்
"நீங்க சொல்லுங்காத்தா" என்று கூற,
"ஐயா! எனக்கு இவர புடிச்சிருக்குங்க, அதனால இவரதான் கட்டிக்குவேங்க"
"ம்" சிறிது நேரம் யோசித்தவர்
"ஏன்பா நீ மாரி மவன் இளங்கோதான"
"ஆமாங்க"
"வேலைக்கு போறியா" "இல்லைங்கய்யா"
"பொறவு எப்படி நீ உன்ன நம்பி வர பொண்ண காப்பாத்துவ"
"சூப்பர்!! அப்பா பாய்ண்ட புடிச்சிட்டாரு" ஒருவித குதூகலத்துடன் ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் நாச்சியார். அவளுக்கு இதெல்லாம் கவனிப்பதில் ஒரு சுவாரசியம்.
"அதெல்லாம் பாத்துக்குவேங்க"
"நீ உலகம் புரியாம பேசறப்பா.. காதல் மட்டும் வாழ்க்கை இல்ல, அதையும் தாண்டி நிறைய இருக்கு, நிதர்சனத்த புரிஞ்சிக்கனும்" வீரபாண்டியும் பொறுமையாக எடுத்து சொன்னார்.
"ஏன் அப்படி கஸ்டப்பட்டா அவங்க நிலத்த கொடுக்க சொல்லுங்க அத வச்சு வாழறேன்" இப்போது அங்கிருந்த எல்லோரும் முகத்தை சுழித்தனர்.
நாச்சியார் "என்ன திண்ணக்கம் இவனுக்கு" என்று பல்லை கடித்தாள். வீரபாண்டி ஒரு முடிவுடன்
"நீங்க என்ன சொல்றீங்க கண்ணம்மா"
நாங்கலாம் அப்பவே அப்படி-- 7"
யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்" மனதுக்குள் மெல்லிய சாரலாய் கீதம் இசைக்க முகம் முழுவதும் விகசித்த புண்ணகையோடு மண்டபத்திற்க்குள் நுழைந்தாள் காரிகை.
சிறுவாண்டுகள் கூட இவளை அழைத்து பார்க்க, இவள் கலையவில்லை. மனம் மொத்தமும் கௌதம் மட்டுமே.
அன்று அருவிக்கரையில் முதலில் முத்தமிட்ட போது அதிர்ச்சிதான், விலக்கவும் முயன்றாள். ஆனால் காதல் கொண்ட மனம் ஒரு கட்டத்திற்க்கு மேல் ரசிக்க தொடங்கியது.
ஆனால் அதை அடுத்த நிலைக்கு கௌதம் எடுத்து செல்ல முயன்ற போது, இவள் சுதாரித்து அவனை தள்ளிவிட்டிருந்தாள். அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள். அவனுக்கு காட்டவும் தவிர்த்தாள்.
அப்போது அவள் மனதில் கோபம், தவிப்பு போன்ற எந்த உணர்ச்சிகளும் இல்லை. மனம் வெற்றுத்தாளாய்; அதில் கௌதமனின் எண்ணங்கள் மட்டும் தூரிகையாய் வானவில்லை தீட்ட தொடங்கின.அது சரியோ? தவறோ? மனம் ஒருவித போதையில் மூழ்க தொடங்கியது.
அதிலிருந்து தெளிவு பெறாமல் அவனை பார்க்க முடியாது, எனவேதான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம். அது இன்று நிறைவுபெற்று விட்டது.
மண்டபம் முழுவதும் ஆட்கள் நிரம்பியிருக்க புடவைக்கு போட்டியாய் மின்னும் இவள் முகத்தை கவனிப்பார் யாருமில்லை. மற்றவர் கவனித்தாலும் அதை கருத்தில் கொள்ளும் நிலையில் இவளும் இல்லை. அதனால் தன்னை ஒருவன் பின்தொடர்வதையும் கவனிக்க தவறினாள்.
இத்தனை நாள் கேள்விக்கு இன்று கிடைத்த பதிலில் மனம் இறகை போல லேசாக, மயிலிறகால் வருடுவது போல உடலில் சிலிர்ப்பு ஓடி மறைய, மயக்கும் புன்னகையை சிந்தியவாறே தலையை கோதியபடி கௌதமும் மண்டபத்திற்க்குள் நுழைந்தான்.
கண்களால் அவளை தேடி , அவள் மேடைக்கு கீழே இருந்த உறவினர் கூட்டத்தில் இருப்பதை கண்டவன்
"மேடைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்கிறாள்" என எண்ணியவாறு கூட்டத்தில் கலந்து அவளை,நோக்கி முன்னேறினான்.
அப்போதுதான் அந்த முகத்தை கண்டான் அவ்வளவு குரோதம் அதனில் , யாரைக் கண்டு? அவனவளை கண்டா! கூர்ந்து கவனித்தான். அவளை நோக்கிதான்.
கையில் எதையோ மறைத்தபடி. கௌதமுக்கும் அவனவளுக்கும் இருக்கும் தூரம் பதினைந்து அடி; நாச்சியாருக்கும் அந்த கோர முகத்துக்காரனுக்கும் இருக்கும் தூரம் ஐந்தே அடிகள். எதுவோ சரியில்லை மனம் அடித்து கூறியது. அவன் கனிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை.
அவளிடம் செல்ல உறவினர்களை விலக்கியபடி எட்டிநடைபோட அதற்குள் அவன் அருகில் சென்றுவிட்டிருந்தான்.
மற்ற நாளாய் இருந்தால் சுற்றுபுரத்தை தன் கவனத்தில் வைத்திருப்பாள். இது அவளது வழக்கம். பெண்களுக்கு இந்த கவனம் அவசியம் என நினைப்பவள். ஆனால் இன்று அதைகூட அவள் கவனிக்க வில்லை காரணம் கௌதம்.
கௌதமுக்கு புரிந்தது அது ஆசிட் என்னும் திராவகம். மனம் பதறியது. "ஏய் "என்ற கூவலுடன் கௌதம் செல்வதற்க்கும் அவன் பாட்டிலை திறந்து ஊற்ற வரவும் சரியாக இருந்தது.
கூட்டத்தில் சலசலப்பு. யாருக்கும் என்ன நடந்தது தெரியவில்லை. நாச்சியாருக்கோ அதிர்ச்சி. கௌதம் விரைந்து வந்தவன் நாச்சியாரை இழுத்து தன் பின்னால் இருத்திக் கொண்டான்.
அவளை முழுதும் ஆராய்ந்தான் ஒன்றும் ஆகவில்லை. மனம் இப்போதுதான் அமைதியடைந்தது. எங்கே அவன்? என்று கோபத்தோடு திரும்ப அங்கு ஒரு கரம் அவனை வளைத்து திராவகம் இருந்த கரத்தை பற்றியிருந்தது.
"யார் இவன்? "கௌதம் ஒரு முகச்சுருக்கத்துடன் புதியவனை நோட்டம்விட்டான்.
"கௌதம் வந்து கொஞ்சம் உதவி பண்ணுங்க" அந்த புதியவன் அழைக்க, அதுவரை நாச்சியாரை கைவளைவில் வைத்திருந்தவன் அவளை மெதுவாக விலக்கி அவன் அருகில் வந்தான்.
திராவகம் இருந்த கையை பிடித்த கௌதம் , லாவகமாக அதை அவனிடம் இருந்து பறித்தவன் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான்.
கௌதம் "யார்றா நீ? எதுக்கு இப்படி பண்ண?
இருவரின் கைப்பிடியில் இருந்தும் அவன் அடங்கவில்லை. "ஏய் நாச்சியா தப்பிச்சிட்டன்னு நினைக்காத அழிப்பேன்டி உன்ன!!! என்னோட காதல அழிச்ச நீ மட்டும்......." அதற்கு மேல் அவன் பேசவில்லை. வாயிலேயே ஒரு குத்து விட ரத்தம் பொலபொலவென்று கொட்டியது.
அந்த அடிக்கு சொந்தகாரன் கௌதம் அல்ல, அந்த இன்னொருவன். அவன் "வெற்றி வேலன்" வீரபாண்டியின் தங்கை சகுந்தலாவின் மைந்தன். ரத்ன பாண்டி, காமாட்சியின் மகள் வயிற்று பேரன். நெடுநெடுவென்ற உயரத்தில், விவசாயம் செய்து உரமேறிய உடற்கட்டுடன், மாநிறத்தில் இருக்கும் கிராமத்து அழகன்.
அதற்குள் அனைவரும் இவர்கள் அருகில், மணமக்கள் கோலத்தில் இருந்த தம்பதிகளும் வந்துவிட தெய்வானை ஓடி மகள் அருகில் நின்று கொண்டார்.
வீரபாண்டி தங்கையின் மகனை கண்டவர் "வேலா, என்னப்பா இது? " அவருக்கு அதிர்ச்சி அவரது செல்ல மகளின் மேல் ஒருவன் வஞ்சம் கொண்டு இத்தனை தூரம் செல்வான் என்று நினைக்கமுடியவில்லை.
"மாமா அன்னைக்கு பஞ்சாயத்துல இவன அவமானபடுத்தினதால நம்ம பொண்ண பழிவாங்கனும்னு சுத்தியிருக்கான். எனக்கு தெரிஞ்சு நானும் எச்சரிச்சு விட்டேன். ஆனா அப்பவும் திருந்தாம இந்த வேல பாத்திருக்கான்" என்றவாறு மீண்டும் ஒரு அறை விட்டான்.
"ஏலேய் முத்தா! " "ஐயா!" நம்ம ஆளுங்களை கூப்பிட்டு இந்த பயல நம்ம குடோனுக்கு கொண்டு போங்க, நம்ம பொண்ணு மேல கை வைக்க நினைச்சா என்னாகும்னு தெரியனும்.ம் .. இழுத்துட்டு போங்க" என்று கர்ஜிக்க, தன் முதலாளியிடம் இவ்வளவு கோபத்தை முதன் முறையாக கண்ட தொழிலாளர்களும் அவனை இழுத்துகொண்டு சென்றனர்.
கௌதம் "மாமா ஒரு நிமிஷம்" வேலையாட்களின் பிடியில் இருந்தவனை காட்டி "ஆசிட் அடிக்கற அளவுக்கு என்ன வெறி இவனுக்கு? அப்பறம்" இது யாரு எனக்கு பதில் சொல்லுங்க மாமா?" என வேலனை சுட்டிகாட்டி கூறினான்.
வேலனை காட்டி "இவன் என்ற மருமவன் கௌதம்"
"அப்ப நான் யாரு?" என்ற பாவனையுடன் வேலனை பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன் அழகாய் புன்னகைத்தான்.
"தங்கச்சி மவன கூட மருமவன்னு கூப்பிடலாம் கௌதம்"
"ஓ." ஒரு சிறு ஆறுதல்.
"சரி சொல்லுங்க இவனுக்கும் அழகிக்கும் என்ன பிரச்சனை?"
அதற்கு கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் "இந்த பய ஒரு பொண்ண விரும்பினான் தம்பி, அந்த புள்ளையும் இவன விரும்பிச்சு...அந்த புள்ளைக்கு அம்மா மட்டுந்தான், அப்பா அந்த புள்ள கருவுல இருக்கையிலயே தவறிட்டாரு.
இவன் பொண்ணு கேட்க, அந்தம்மா ஊருக்குள்ள பொறுக்கிதனம் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கான் இவனுக்கு பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிடுச்சு.
இவன் அந்த பொண்ண ஏவிவிட்டு அம்மா மேல பஞ்சாயத்துல பிராது கொடுக்க வச்சுட்டான் படுபாவி. பஞ்சாயத்தில் ஊர் மக்கள் கூடியிருக்க (ஆலமரம், சொம்பு இதெல்லாம் மிஸ்ஸிங். ஹா.ஹா..ஏனா இது நவீன பஞ்சாயத்து கிராமசபை மண்டபத்தில் நடைபெற்றது. )
பஞ்சாயத்து தலைவராக வீரபாண்டி , உடன் கனக வேலுவும்
சில பெரியவர்களும். ஊர் மக்கள் முக்கால்வாசி பேர் அங்கிருக்க தெய்வானை, நாச்சியார் கூட அங்கிருந்தனர்.
"சொல்லுங்கப்பா என்ன பிராது"
"ஐயா இந்த பொண்ணு வான்மதி நாலாவது தெரு கண்ணம்மா பொண்ணுங்க, அது இந்த பையனதான் கண்ணாலம் கட்டிக்குவேன்னு சொல்லுதுங்க, ஆனா இந்த பொண்ணோட அம்மா இதுக்கு சம்மதிக்கலன்னு பஞ்சாயத்த கூட்டி நிக்குதுங்க" என்று ஒரு பெருசு வழக்கை சுருக்கமாக உரைக்க விசாரணை ஆரம்பித்தது.
கண்ணம்மா அழுதபடி நிற்க, அவருக்கு சில பெண்கள் ஆறுதல் அளித்தபடி உடன் நின்றிருந்தனர். வீரபாண்டி,
"உங்க தரப்ப சொல்லுங்க கண்ணம்மா."
அந்த ஊரில்இது ஒருவழக்கம் தன் வீட்டு பெண்களை தவிர மற்ற பெண்களை மரியாதையோடு வாங்க , போங்க என்றே அழைப்பர் . சிறிய பெண்ணாக இருந்தாலும் .
"ஐயா! எனக்கிருக்கறது ஒரே மவங்க, அது நல்லபடி கட்டிக் கொடுக்கனும்னு நினைச்சேன், பாவிமக இப்படி பண்ணிட்டாங்க" என்றவாறு அழுதவாறு தன் வாதத்தை முன் வைத்தார்.
வயிற்றில் ஆறுமாத கருவுடன் கணவனை இழந்தவர். அதன்பின் எவ்வளவு பாடுபட்டு மகளை வளர்த்தார் என்பது இந்த ஊருக்கே தெரியும். இப்போது வான்மதியிடம்
"நீங்க சொல்லுங்காத்தா" என்று கூற,
"ஐயா! எனக்கு இவர புடிச்சிருக்குங்க, அதனால இவரதான் கட்டிக்குவேங்க"
"ம்" சிறிது நேரம் யோசித்தவர்
"ஏன்பா நீ மாரி மவன் இளங்கோதான"
"ஆமாங்க"
"வேலைக்கு போறியா" "இல்லைங்கய்யா"
"பொறவு எப்படி நீ உன்ன நம்பி வர பொண்ண காப்பாத்துவ"
"சூப்பர்!! அப்பா பாய்ண்ட புடிச்சிட்டாரு" ஒருவித குதூகலத்துடன் ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் நாச்சியார். அவளுக்கு இதெல்லாம் கவனிப்பதில் ஒரு சுவாரசியம்.
"அதெல்லாம் பாத்துக்குவேங்க"
"நீ உலகம் புரியாம பேசறப்பா.. காதல் மட்டும் வாழ்க்கை இல்ல, அதையும் தாண்டி நிறைய இருக்கு, நிதர்சனத்த புரிஞ்சிக்கனும்" வீரபாண்டியும் பொறுமையாக எடுத்து சொன்னார்.
"ஏன் அப்படி கஸ்டப்பட்டா அவங்க நிலத்த கொடுக்க சொல்லுங்க அத வச்சு வாழறேன்" இப்போது அங்கிருந்த எல்லோரும் முகத்தை சுழித்தனர்.
நாச்சியார் "என்ன திண்ணக்கம் இவனுக்கு" என்று பல்லை கடித்தாள். வீரபாண்டி ஒரு முடிவுடன்
"நீங்க என்ன சொல்றீங்க கண்ணம்மா"
Last edited: