சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....
நாங்கலாம் அப்பவே அப்படி-- 8
திருமணம் நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்க்கு வந்து விட்டிருந்தனர். தம்பதியர் இருவரும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, வீரபாண்டி , கனக வேலு இருவரும் இத்தனை வருடம் விட்டதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.
நாச்சியார் மாடிக்கு சென்றுவிட மற்ற இளவட்டங்கள் கீழேயே தங்கிவிட்டனர். அரசு, வேலன், ராகேஷ் மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்க, கௌதம் தனித்திருந்தான்.
அவனுக்கு வேலனோடு ஒன்ற மனமில்லை. ஏதோ அவனுக்கு போட்டியாய் வந்தது போலவே பாவித்தான். எல்லோரும் அவனையே தாங்கி பேச இவன் அந்நியமாய் உணர தொடங்கினான்.
ஏன் நாச்சியாரும் கூட இவனிடம் பேசவில்லை என்ற சுணக்கம் வேறு. இத்தனை எண்ணங்கள் மனதில் சுழன்றாலும் வெளியில் ஒன்றும் காண்பிக்காமல் போனில் ஏதோ பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
நாச்சியார் மேலே வந்தவளுக்கோ கண்மண் தெரியாத கோபம். ஆசிட் ஊற்ற வந்தவன் மேல் , அவன் கூற வந்து பாதியில் விட்ட காரணத்தின் மேல், அதற்கு காரணமான கௌதம் மேல், அதற்கு துணை போன தன்மேல் என பல கோபங்கள். மாற்றுத்துணி எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டாள்.
கொட்டும் நீரில் நின்றாலும் மனம் அமைதியடைய மறுத்தது. இளங்கோ என்னகூற வந்தான். "நீ மட்டும் காதலிக்கலாமா என்றா? அப்படியென்றால் கௌதமுடன் நான் நெருக்கமாக இருந்ததை பார்த்திருக்கிறான்.
இதை பொதுவில் கூறியிருந்தால்...நினைக்க, நினைக்க பதறியது. தன்னை பற்றி என்ன நினைத்திருப்பார்கள், பெற்றோருக்கு தலைகுனிவை ஏற்படுத்த இருந்தேனே! என்று வெகுநேரம் நீரில் நின்றவள் பின் உடைமாற்றி தலையை கூட உலர்த்தாமல் படுத்து உறங்கிவிட்டாள்.
சிறிது நேரத்தில் அவளது அறைக்கு வந்ந தெய்வானை அவளின் நிலையை கண்டு அவள் மிகுந்த கோபத்தில் இருப்பதை அறிந்து கொண்டார்.
ஏனெனில் அவளது கோபம் எல்லை மீறும் போது இப்படிதான் செய்து வைப்பாள். சிறிது நேரம் அவளை பார்த்தவர் ஒரு முடிவு எடுத்தவராய் சென்றார்.
அனைவரும் அங்கே ஹாலில் இருக்க, ரத்னபாண்டி, காமாட்சி அருகில் சென்றவர்
"மாமா, அத்தை உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"
பொதுவாக இப்படியெல்லாம் பொதுவில் இருக்கும் போது ரத்னபாண்டியிடம் முக்கியமானதை தவிர வேறு பேச மாட்டார் என்பதால், ரத்னபாண்டி, காமாட்சி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
காமாட்சி "சொல்லுமா"
"அது வந்து ... நம்ம நாச்சியாருக்கு கல்யாணம் பண்ணலாங்க அத்தை" அனைவருமே அதிர்ந்தனர். ஆனால் வேறுவேறு காரணங்கள் அவரவர்க்கு.
"ஏன்மா திடீர்னு"
"அவளுக்கும் வயசு 24 ஆகுது, கல்யாணம் பண்ணா அப்பதான் இவளுக்கும் பொறுப்பு வரும் எந்த வம்புக்கும் போகமாட்டா.
இல்லைனா இன்னைக்கு ஆசிட் தூக்கிட்டு வந்த மாதிரி, நாளைக்கு ஒருத்தன் கத்திய தூக்கிட்டு வர மாட்டான்னு என்ன நிச்சயம்" இன்று நடந்த சம்பவத்தால் அவர் மிகவும் பயந்திருக்கிறார் என்பது தெரிந்தது.
ஒரு தாயாக அவரது பயம் நியாயமே. ரத்னபாண்டி "அதுக்கென்னமா மாப்பிள்ள பார்க்க ஆரம்பிக்கலாம்"
"இல்லைங்க மாமா சீக்கிரமா இது நடக்கனும்" தலை குனிந்தவாறு சொல்ல,
"புள்ளபூச்சிக்கு பயந்து வீட்ட கொளுத்த முடியாதுமா"
"அது பாம்பா இருந்தா அதுவும் அடிபட்டு பழிவாங்க வந்ததா இருந்தா அப்ப பயந்துதானே ஆகனும்."
வேலன் "அத்த நாங்கலாம் இருக்கோம் அப்படிலாம் ஒண்ணும் ஆகாது. தவிர நம்ம பொண்ணு மேல தப்பில்லையே, நீங்க பெருமைதான் படனும்."
அவனை நோக்கியவர், "இன்னைக்கும் எல்லாரும் அங்கதானே இருந்தோம், ஏதோ குலசாமி புண்ணியம் காப்பாத்திருச்சு, இல்லைனா எம்மவ நிலமைய நினைச்சு பாருங்க" என்று தழுதழுத்தவர்
"வேணாம்பா அவளுக்கு சீக்கிரம் கல்யாணத்த பண்ணி புகுந்த வீட்டுக்கு அனுப்பனும்" புரிந்தது ஒரு தாயாய் அவரது தவிப்பும் சரியே.
"சரிம்மா அதுக்குன்னு நல்ல இடமா தேட வேணாமா..அதுக்கு நாளாகுமே" ரத்னபாண்டி.
"நம்ம சொந்தத்துலயே பாக்கலாமே, ஏன் நம்ம வேலன் தம்பி கூட இருக்காப்லயே" இதைக் கேட்ட கௌதம் விருட்டென்று எழுந்து விட்டான்.
"ஏன் எங்களை பார்த்தா மாப்பிள்ளையா தெரியலயா?" கோபத்துடன் மேலே அவனது அறைக்கு சென்றன்.
அவனது நடவடிக்கையை இருவர் புன்னகையுடன் பார்த்தனர்.அஞ்சுகம் பாட்டி ஒருவர், அவருக்கு பேரனின் மனம் புரிந்தது அதில் மகிழ்ச்சியே இதைத்தான் அவரும் விரும்பினார். மற்றொருருவர் வேலன்.
நாச்சியாரின் அறையை தாண்டிதான் அவனது அறைக்கு செல்ல வேண்டும். செல்லும்போது அவளது அறை லேசாக திறந்திருப்பதை பார்த்தவன் உள்ளே செல்லலாமா என யோசித்தான்.
என்னோட ப்யூட்டி அறைக்கு போக யார்கிட்ட அனுமதி வாங்கனும் என்று நினைத்தவன் உள்ளே சென்று கதவை சாற்றிவிட்டு, அவள் அருகில் சென்றான்.
தாவணி பாவாடையில் ஈர கூந்தலை மெத்தையில் தோகை போல விரியவிட்டு ஒருபக்கமாய் படுத்தவாறு உறங்கிகொண்டிருந்தாள்.
அந்த ஆசிட் மட்டும் இவள் மேல் பட்டிருந்தால். அந்த கொடுமையான நொடிகளை நினைத்து பார்த்தான். அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என உணர்த்திய அற்புத நொடிகள் அவை.
பார்த்து ஒரு வாரமே ஆன பெண்ணின் மேல் இவ்வளவு நேசம் தோன்றுமா?
"முட்டாள் அவளின் சிறுவயது ஞாபகங்களைகூட நீ மறக்கவில்லையே, உன்னுள்ளே இருந்தவளை கண்டுபிடிக்கவே இந்த ஒரு வாரம்" என மனம் எடுத்துரைக்க,
அவளை நோக்கி குனிந்தவன் அவள் தலையை மெதுவாக வருடி கொடுத்தான். சிறிது அசைந்தவள் மெல்லிய புன்னகையுடன் உறங்கி போனாள்.
இவனுக்கும் புன்னகை வந்தது, "எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றா, இப்ப தூங்கறத பாரு சின்ன புள்ளையாட்டம்,
அங்க உனக்கு கல்யாணம் பேசறாங்க ப்யூட்டி, அப்படியே உன்ன தூக்கிட்டு எங்கயாவது போயிடலாமான்னு தோணுது,
ஆமா நல்லாதான இருந்த அதுக்குள்ள என்னடி கோபம் முகத்த திருப்பிட்டு போற. ஆனா ஒண்ணு உன்ன சமாளிக்க ரொம்ப பாடுபடனும் போல..
நிம்மதியா தூங்குடா இனி எதுவும் உன்ன நெருங்காம பாத்துக்குவேன்" என்று நெற்றியில் மென்முத்தம் பதித்தவன் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு சென்று விட்டான்.
கீழே வேலன் ஒருவாறு பேசிசமாளித்துக்கொண்டிருந்தான். "அத்த இதுக்கு பயந்துலாம் கல்யாணத்த வைக்க வேணாம். "
"ஏன் தம்பி உங்களுக்கு என் பொண்ண புடிக்கலிங்களா?"
"அத்த என்ன பேசறீங்க, நம்ம பொண்ணு கட்டிக்க யாருக்காவது கசக்குமா! இது அப்படி இல்ல நாச்சியாரோட விருப்பம் முக்கியம்.
வீட்ட விட்டு துரத்தறாங்கன்னு நினைப்பு வந்துடும். நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் முடிஞ்சு அடுத்த வீட்டுக்கு போகும் போது சந்தோசமா போகனும், அதான் சொல்றேன் கொஞ்சநாள் ஆறப்போடுங்க எல்லாம் சரியாகும்"
அவன் பேசியே தெய்வானையை சம்மதிக்க வைத்து விட்டான்.
நாங்கலாம் அப்பவே அப்படி-- 8
திருமணம் நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்க்கு வந்து விட்டிருந்தனர். தம்பதியர் இருவரும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, வீரபாண்டி , கனக வேலு இருவரும் இத்தனை வருடம் விட்டதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.
நாச்சியார் மாடிக்கு சென்றுவிட மற்ற இளவட்டங்கள் கீழேயே தங்கிவிட்டனர். அரசு, வேலன், ராகேஷ் மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்க, கௌதம் தனித்திருந்தான்.
அவனுக்கு வேலனோடு ஒன்ற மனமில்லை. ஏதோ அவனுக்கு போட்டியாய் வந்தது போலவே பாவித்தான். எல்லோரும் அவனையே தாங்கி பேச இவன் அந்நியமாய் உணர தொடங்கினான்.
ஏன் நாச்சியாரும் கூட இவனிடம் பேசவில்லை என்ற சுணக்கம் வேறு. இத்தனை எண்ணங்கள் மனதில் சுழன்றாலும் வெளியில் ஒன்றும் காண்பிக்காமல் போனில் ஏதோ பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
நாச்சியார் மேலே வந்தவளுக்கோ கண்மண் தெரியாத கோபம். ஆசிட் ஊற்ற வந்தவன் மேல் , அவன் கூற வந்து பாதியில் விட்ட காரணத்தின் மேல், அதற்கு காரணமான கௌதம் மேல், அதற்கு துணை போன தன்மேல் என பல கோபங்கள். மாற்றுத்துணி எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டாள்.
கொட்டும் நீரில் நின்றாலும் மனம் அமைதியடைய மறுத்தது. இளங்கோ என்னகூற வந்தான். "நீ மட்டும் காதலிக்கலாமா என்றா? அப்படியென்றால் கௌதமுடன் நான் நெருக்கமாக இருந்ததை பார்த்திருக்கிறான்.
இதை பொதுவில் கூறியிருந்தால்...நினைக்க, நினைக்க பதறியது. தன்னை பற்றி என்ன நினைத்திருப்பார்கள், பெற்றோருக்கு தலைகுனிவை ஏற்படுத்த இருந்தேனே! என்று வெகுநேரம் நீரில் நின்றவள் பின் உடைமாற்றி தலையை கூட உலர்த்தாமல் படுத்து உறங்கிவிட்டாள்.
சிறிது நேரத்தில் அவளது அறைக்கு வந்ந தெய்வானை அவளின் நிலையை கண்டு அவள் மிகுந்த கோபத்தில் இருப்பதை அறிந்து கொண்டார்.
ஏனெனில் அவளது கோபம் எல்லை மீறும் போது இப்படிதான் செய்து வைப்பாள். சிறிது நேரம் அவளை பார்த்தவர் ஒரு முடிவு எடுத்தவராய் சென்றார்.
அனைவரும் அங்கே ஹாலில் இருக்க, ரத்னபாண்டி, காமாட்சி அருகில் சென்றவர்
"மாமா, அத்தை உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"
பொதுவாக இப்படியெல்லாம் பொதுவில் இருக்கும் போது ரத்னபாண்டியிடம் முக்கியமானதை தவிர வேறு பேச மாட்டார் என்பதால், ரத்னபாண்டி, காமாட்சி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
காமாட்சி "சொல்லுமா"
"அது வந்து ... நம்ம நாச்சியாருக்கு கல்யாணம் பண்ணலாங்க அத்தை" அனைவருமே அதிர்ந்தனர். ஆனால் வேறுவேறு காரணங்கள் அவரவர்க்கு.
"ஏன்மா திடீர்னு"
"அவளுக்கும் வயசு 24 ஆகுது, கல்யாணம் பண்ணா அப்பதான் இவளுக்கும் பொறுப்பு வரும் எந்த வம்புக்கும் போகமாட்டா.
இல்லைனா இன்னைக்கு ஆசிட் தூக்கிட்டு வந்த மாதிரி, நாளைக்கு ஒருத்தன் கத்திய தூக்கிட்டு வர மாட்டான்னு என்ன நிச்சயம்" இன்று நடந்த சம்பவத்தால் அவர் மிகவும் பயந்திருக்கிறார் என்பது தெரிந்தது.
ஒரு தாயாக அவரது பயம் நியாயமே. ரத்னபாண்டி "அதுக்கென்னமா மாப்பிள்ள பார்க்க ஆரம்பிக்கலாம்"
"இல்லைங்க மாமா சீக்கிரமா இது நடக்கனும்" தலை குனிந்தவாறு சொல்ல,
"புள்ளபூச்சிக்கு பயந்து வீட்ட கொளுத்த முடியாதுமா"
"அது பாம்பா இருந்தா அதுவும் அடிபட்டு பழிவாங்க வந்ததா இருந்தா அப்ப பயந்துதானே ஆகனும்."
வேலன் "அத்த நாங்கலாம் இருக்கோம் அப்படிலாம் ஒண்ணும் ஆகாது. தவிர நம்ம பொண்ணு மேல தப்பில்லையே, நீங்க பெருமைதான் படனும்."
அவனை நோக்கியவர், "இன்னைக்கும் எல்லாரும் அங்கதானே இருந்தோம், ஏதோ குலசாமி புண்ணியம் காப்பாத்திருச்சு, இல்லைனா எம்மவ நிலமைய நினைச்சு பாருங்க" என்று தழுதழுத்தவர்
"வேணாம்பா அவளுக்கு சீக்கிரம் கல்யாணத்த பண்ணி புகுந்த வீட்டுக்கு அனுப்பனும்" புரிந்தது ஒரு தாயாய் அவரது தவிப்பும் சரியே.
"சரிம்மா அதுக்குன்னு நல்ல இடமா தேட வேணாமா..அதுக்கு நாளாகுமே" ரத்னபாண்டி.
"நம்ம சொந்தத்துலயே பாக்கலாமே, ஏன் நம்ம வேலன் தம்பி கூட இருக்காப்லயே" இதைக் கேட்ட கௌதம் விருட்டென்று எழுந்து விட்டான்.
"ஏன் எங்களை பார்த்தா மாப்பிள்ளையா தெரியலயா?" கோபத்துடன் மேலே அவனது அறைக்கு சென்றன்.
அவனது நடவடிக்கையை இருவர் புன்னகையுடன் பார்த்தனர்.அஞ்சுகம் பாட்டி ஒருவர், அவருக்கு பேரனின் மனம் புரிந்தது அதில் மகிழ்ச்சியே இதைத்தான் அவரும் விரும்பினார். மற்றொருருவர் வேலன்.
நாச்சியாரின் அறையை தாண்டிதான் அவனது அறைக்கு செல்ல வேண்டும். செல்லும்போது அவளது அறை லேசாக திறந்திருப்பதை பார்த்தவன் உள்ளே செல்லலாமா என யோசித்தான்.
என்னோட ப்யூட்டி அறைக்கு போக யார்கிட்ட அனுமதி வாங்கனும் என்று நினைத்தவன் உள்ளே சென்று கதவை சாற்றிவிட்டு, அவள் அருகில் சென்றான்.
தாவணி பாவாடையில் ஈர கூந்தலை மெத்தையில் தோகை போல விரியவிட்டு ஒருபக்கமாய் படுத்தவாறு உறங்கிகொண்டிருந்தாள்.
அந்த ஆசிட் மட்டும் இவள் மேல் பட்டிருந்தால். அந்த கொடுமையான நொடிகளை நினைத்து பார்த்தான். அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என உணர்த்திய அற்புத நொடிகள் அவை.
பார்த்து ஒரு வாரமே ஆன பெண்ணின் மேல் இவ்வளவு நேசம் தோன்றுமா?
"முட்டாள் அவளின் சிறுவயது ஞாபகங்களைகூட நீ மறக்கவில்லையே, உன்னுள்ளே இருந்தவளை கண்டுபிடிக்கவே இந்த ஒரு வாரம்" என மனம் எடுத்துரைக்க,
அவளை நோக்கி குனிந்தவன் அவள் தலையை மெதுவாக வருடி கொடுத்தான். சிறிது அசைந்தவள் மெல்லிய புன்னகையுடன் உறங்கி போனாள்.
இவனுக்கும் புன்னகை வந்தது, "எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றா, இப்ப தூங்கறத பாரு சின்ன புள்ளையாட்டம்,
அங்க உனக்கு கல்யாணம் பேசறாங்க ப்யூட்டி, அப்படியே உன்ன தூக்கிட்டு எங்கயாவது போயிடலாமான்னு தோணுது,
ஆமா நல்லாதான இருந்த அதுக்குள்ள என்னடி கோபம் முகத்த திருப்பிட்டு போற. ஆனா ஒண்ணு உன்ன சமாளிக்க ரொம்ப பாடுபடனும் போல..
நிம்மதியா தூங்குடா இனி எதுவும் உன்ன நெருங்காம பாத்துக்குவேன்" என்று நெற்றியில் மென்முத்தம் பதித்தவன் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு சென்று விட்டான்.
கீழே வேலன் ஒருவாறு பேசிசமாளித்துக்கொண்டிருந்தான். "அத்த இதுக்கு பயந்துலாம் கல்யாணத்த வைக்க வேணாம். "
"ஏன் தம்பி உங்களுக்கு என் பொண்ண புடிக்கலிங்களா?"
"அத்த என்ன பேசறீங்க, நம்ம பொண்ணு கட்டிக்க யாருக்காவது கசக்குமா! இது அப்படி இல்ல நாச்சியாரோட விருப்பம் முக்கியம்.
வீட்ட விட்டு துரத்தறாங்கன்னு நினைப்பு வந்துடும். நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் முடிஞ்சு அடுத்த வீட்டுக்கு போகும் போது சந்தோசமா போகனும், அதான் சொல்றேன் கொஞ்சநாள் ஆறப்போடுங்க எல்லாம் சரியாகும்"
அவன் பேசியே தெய்வானையை சம்மதிக்க வைத்து விட்டான்.
Last edited: