கேள்வியின் நாயகியே... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்.
ஹா..ஹா என்னன்னே தெரியல, இப்படியே முடிக்கறேன். நைட் கொடுத்தாலும் கொடுப்பேன்.கேள்வியின் நாயகியே... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்.
Ohh...amala ...டேய் இன்னும் ரெண்டு எபில கதை முடியனும்... ..போட்டிி முடியட்டும் தனியா போட்டுடலாம் என நம்புவோம்.
?????????"தெய்வா, அப்படி உனக்கு மனசு ஆறலைன்னா , நான் அம்முவ பெங்களூருக்கு கூட்டிட்டு போறேன் "
அனைவருக்கு அது சரியென்றே பட்டது. வீரபாண்டியும் "தெய்வானை அத்தை சொல்றது சரி கொஞ்ச நாள் அவங்க அங்க இருக்கட்டும்"
தெய்வானை அரைமனதோடு சம்மதித்தார்.
"அச்சோ என்னால வர முடியாதே, நான் எப்ப பெங்களூரூ வரது" என அரசு புலம்ப,
"இந்த கலவரத்துலயும் உனக்கு குதூகலம் கேக்குதா!! வெசம்..வெசம்" என அவன் தலையை கொட்டியவாறு இழுத்து சென்றான்.
வேலன் நைசாக நழுவி, கௌதமின் அறைக்கு வந்தான். " உள்ள வரலாமா"
"யா கம் இன்"
உள்ளே வந்தவனை பார்த்தவன், இவன் எதுக்கு இங்கே வந்தான் என்று யோசித்தாலும் அவன் அமர இருக்கையை காட்ட, வேலன் அதில் அமர்ந்து கொண்டான்.
இவனும் கட்டிலில் அமர்ந்து கொண்டு "என்ன பேசனும்"
"ஸ்ஸப்பா என்ன காரம்"
"இன்னைக்கு ஆசிட் உத்த வந்தானே அவன் என்ன சொல்ல வந்தான்னு தெரிஞ்சுதா உங்களுக்கு"
கௌதமுக்கு இப்போதுதான் புரிந்தது, இத எப்படி மறந்தேன் அதான் நம்மமேல கோவமா இருக்காளோ! என தலையில் கைவைத்துக் கொண்டான்.
"நான் மட்டும் சுதாரிச்சு அடிக்கலைனா இந்நேரம் உளறி வச்சிருப்பான், அப்ப நாச்சியாரோட நிலமைய யோசிச்சு பாத்தீங்களா?
ஒரு பொண்ணா எவ்வளவு சங்கடம் ஊரு முன்னாடி, குடும்பத்து முன்னாடி. உங்க நகரத்துல இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம் ஆனா இங்க அப்படி இல்ல.
ஆம்பிளைங்க விசயத்துல நாலு பக்கம் யோசிச்சா பொண்ணுங்க விசயத்துல பத்து பக்கமும் யோசிக்கணும். அதுவும் விரும்பற பொண்ணுன்னா ரொம்ப கவனமா இருக்கனும்.
இதெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரியனும்னு இல்ல பாத்துக்கோங்க. அப்பறம் நாச்சியார பெங்களூரு கூட்டி போக அத்த சொல்லிட்டாங்க" என்றுகூறியவன் வந்த வேலை முடிந்தது போல கிளம்ப,
"வேலா"
"என்ன என்பதை போல பார்க்க"
"நீ... அப்படி கூப்பிடலாம்ல"
"ம் தாராளமா, ஒரே வயசுதான் ரெண்டு பேருக்கும்"
நீ எப்படி கரெக்டா வந்த"
அவனை கூர்மையாக பார்த்தவன் "எங்க வீட்டு பொண்ணுங்க எங்க இருந்தாலும் என்னோட பாதுகாப்புலதான் இருப்பாங்க" என்று மீசையை முறுக்கியபடி கூற,
"நீ நாச்சியார காதலிச்சியா?" இப்போது நேரடியாக கௌதம் கேட்டான். அவனுக்கு தெரிய வேண்டியிருந்தது.
குறும்பு புன்னகையுடன் "மாமன் பொண்ணு தங்கச்சின்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்..ஆனா நீங்க சொல்ற மாதிரி இல்ல, எங்க கல்யாணம் நடந்தா குடும்பம் சேரும்னு கூட நினைச்சிருக்கேன். ஆனா இப்ப இல்ல"
"ஏன்னு தெரிஞ்சிக்கலாமா"
"நாச்சியார், அவங்களோட விருப்பம், புடிக்காத ஆம்பிளைகிட்ட எந்த பொண்ணும் அப்படி இருக்க மாட்டாங்க, அதுவும் நாச்சியார் நெருப்பு. "
சற்று திணறியபடி "நீ....நீ எங்க ..."
"திருமூர்த்திமலை"
"ஓ..."
கௌதமா அப்படியே அங்க இருக்க பாறைலயே தலைய முட்டிக்க. இப்படியா சுத்தி யார் இருக்கான்னு கூட பாக்காம இருப்ப" என தனக்குள்ளயே முனகிகொண்டிருக்க,
சத்தம் போட்டு சிரித்த வேலன்
"காதல் எதையும் கவனிக்காது. கீழ அவசரமா கல்யாணம் பேசாதீங்க சொன்னேன், அதையே உங்ககிட்ட சொல்ல மாட்டேன் , சீக்கிரமா சமாதானபடுத்தி கல்யாண சாப்பாடு போடுங்க. அப்ப நான் கெளம்பறேன்" என்றவனை
"வேலா"
அருகில் வந்த கௌதம் அணைத்து விடுவித்தவன் ,
"தேங்கஸ்" என உளமாற கூறினான்.
சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டவன் சென்றுவிட்டான்.
கௌதமிற்க்கு இப்படியும் ஒரு மனிதனா என பிரமிப்பாக இருந்தது.
"வாவ் ப்யூட்டி நீயும் வரியா வா..வா அங்க வச்சு உன்ன பாத்துக்கறேன்" என உல்லாச மனநிலையோடு கட்டிலில் விழ விதி அவனை பார்த்து கெக்கபிக்கேவென்று சிரித்தது அவனுக்கு தெரியலயே?????
இப்படியாக அவளை கேட்காமலேயே எல்லாம் நடந்து விட அவளுக்கு மறுக்க அவகாசமே இல்லை.
முகத்தை கடுகடுவென்று வைத்தவாறே பெங்களூரு வந்தடைந்தாள் நச்சியார்.
இவர்களை அழைத்து செல்ல கார் வந்திருந்தது. அவர்கள் வீட்டுக்கு சென்று உள்ளே நுழைந்த சில நிமிடங்களில்
"கௌதம் எங்க போனீங்க இத்தன நாளா?"என்றவாறு ஒரு நாவநாகரீக யுவதி அவனை கட்டிக்கொள்ள,
பாட்டிக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
"பாட்டி இந்த அல்டாப்பு எப்படி உடனே வந்துது எதாவது ஸ்பை வச்சிருக்குமோ" ராகேஷ் பாட்டியிடம் வினவினான்.
நாச்சியார் எள்ளும் கொல்லும் வெடிக்கும் அளவு வெப்பத்தை வெளியிட்டவாறு இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் பாவாடை தாவணியில் அவளை பார்த்த அந்த யுவதி " ஏய் வேலைக்காரி புதுசா வந்திருக்கியா?
போய் கௌதம்க்கு ஒரு ஆப்பிள் ஜீஸ் எடுத்து வா!" என நாச்சிரிடம் கேட்டாளே ஒரு கேள்வி.
பாட்டியின் தோள் மீது கைவைத்தவாறு நின்றிருந்த ராகேஷ் "ஆத்தி" என்றவாறு தடுமாறியவன்
" இந்த பொண்ணு வந்தவுடனே ஆப்பு மேல் ஏறுதே சொல்லுவோமா! ச்சே வேணாண்டா ராகேஷ் எத்தன தடவ உன்ன சர்வென்ட்ன்னு கூப்டிருப்பா அனுபவிக்கட்டும் நீ நடக்கறத வேடிக்கை மட்டும் பாரு"
பாட்டியை பார்க்க அவரும் அதே டோனிலேயே இவனை பார்த்தார் இருவருக்கும் புன்னகை வர
"அப்படிங்கறீங்க"
"ஆமாங்கறேன்"
"அப்ப வாங்க" என வேடிக்கை பார்க்க அங்கேயே சோபாவில் அமர்ந்து கொண்டனர்.
"ஏய் நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ என்ன வேடிக்கை பாக்கற, ஏன் கௌதம் இங்க வேலைக்காரி கிடைக்கலன்னு கிராமத்துக்கு போய் கூட்டிட்டு வந்தீங்களா"
அதுவரை அவள் யாரை கூறுகிறாள் என்று அறியாத கௌதம்
"ஹேய் நிவி அது..."
"என்ன கௌதம் இப்படி மரியாதை தெரியாதவளெல்லாம் ஏன் வேலைக்கு வச்சிருக்கீங்க"
என தோளில் தொங்கிய நிலையிலேயே கிள்ளை மொழியில் மிளற்ற,
"நிவி ஸ்டாப் இட்"
"வெய்ட் கௌதம் இவல்லாம் இப்படி சொன்னா கேக்க மாட்டா, ஏய் நீ வா" என்று நாச்சியாரை சமையலறைக்கு இழுத்து போனாள்.
கௌதம் தலையில் கைவைத்தபடி அமர்ந்தவன், பாட்டியை பார்த்து
"நீங்களாவது சொல்லலாம்ல"
"என்ன சொல்றது பேராண்டி இதுவரைக்கும் நடந்தத நாங்க கம்முனு வேடிக்கை பார்த்தமில்ல இனி நடக்கறத நீ பாரு"
அவனுக்கும் அதை தவிர வேறு வழி இல்லை. வந்தவுடன் இப்படி ஒரு சீனை அவன் எதிர்பார்க்கவில்லை.
இவள் நிவிதா கௌதம் அம்மாவின் அண்ணன் மகள். எப்போதும் இப்படிதான் நடந்து கொள்வாள்.
அப்போதெல்லாம் சிறு பெண் என விட்டுவிட்டான். ஆனால் இப்போதுதான் அது அதிகபடியோ என தோன்றியது.
எல்லையை வகுத்திருக்க வேண்டுமோ? பாட்டி சொன்ன போதெல்லாம் அலட்சியமாய் விட்டதற்கு இது தேவைதான்.
அப்படியே எதாவது சொன்னாலும் உடனே தன் தந்தை கருணாகரனிடம் சொல்லி, அவர் வந்து
"என் தங்கை இருந்தால் இப்படி நடக்குமா?"
என்று காதை ஒட்டு போடும் அளவுக்கு ஓட்டையாக்கி விட்டுதான் போவார். அனைத்தையும் அன்னைக்காக பொறுத்துக்கொள்வான்.
இப்போதும் அதற்குதான் தலையில் கை வைத்தான். மற்றபடி அவன் அழகியை பற்றி கவலையில்லை அவள் எப்படியாயினும் சமாளித்து விடுவாள்.
ஆனால் மாமா வந்து நாச்சியாரை எதாவது கூறினால் பொறுத்துக் கொள்ள முடியாது.
இனி பாட்டிக்கு பிறகு இவள்தான் இங்கு எல்லாமே என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
சமையலறையில் இருந்து நிவி முன்னே வர, நாச்சியார் பின்னால் ஜுஸ் கிளாஸ் அடங்கிய ட்ரே வை தூக்கியபடி வந்தாள்.
" ஏய் எல்லாருக்கும் கொடு"
என்று கூறியவள் பாட்டியை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவாறு கௌதமின் அருகில் சென்று அமர்ந்தாள்.
பாட்டியும் பாவமாய் ஒரு பார்வை பார்த்தார் அவளை அது அவளுக்கு இப்போது புரியவில்லை , புரிந்தபோதோ??????????