நான் உன் பாடல் நீ என் தேடல் குட்டி ரிவியூ:
மிதமான காதல் கதை ஒவ்வொரு கதாபாத்திரமும் தனி அழகு.
செழியன் மனைவியை அழைக்கும் முறையில் இருந்தே அவனது குணம் தெரிகிறது.அன்பான கணவன்.
மறுமணம் என்பது அக்காலத்தில் தொடங்கி இன்று வரை பெண்ணுக்கு ஒரு சவால் தான்,அதை கடக்கும் முறை அழகு.
பல பெற்றோர்கள் செய்யும் தவறே தான் ஜனாவின் பெற்றோரும் செய்துள்ளனர்,பிள்ளைகள் மீது நம்பிகை இல்லாமல் போனால் அவர்கள் கதி என்ன என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது இக்கதை.
ஐந்து விரல்களும் ஒன்றா என்ன,ஜோதியை பெற்ற வயிற்றில் தான் ஜானவியும் பிறந்தால்,படைப்பின் விந்தை.
கடலில் ஆண் கடல் பெண் கடல் என்று உண்டாம்,ராமேஸ்வரத்தில் கடலளந்த ஜெகநாத பெருமாள் கோவில் அருகில் இருக்கும் கடலில் அலையே இருக்காது,ஆண் கடலும்,பெண் கடலும் சங்கமிக்கும் ராமேஸ்வரத்திலும் அலை இருக்காது,அதே நகரில் இருக்கும் சேது கரையில் அலை ஆளை தூக்கும் அளவிற்கு வேகமாக இருக்கும்,ஜனாவின் வாழ்க்கையின் முற்பகுதி சேது கரை போல் என்றால்,பிற்பகுதி அலையில்லா கடல் போல் அமைதியான தெளிந்த நீரில் செல்லும் படகு, காதல் என்னும் மிதமான அலையில் தாலாட்டி தாலாட்டி செல்கிறது, அப்படகில் அழகான இரு கிளிகளும்,முதிர்ந்த நரை தட்டிய இரு கழுகும்,அவற்றைச் செலுத்தி செல்ல இரு துடுப்புமாக அழகாகச் செல்கிறது கதை,மென்மையான காதல் கதை.
வாழ்த்துக்கள் தமிழச்சி.................
மிதமான காதல் கதை ஒவ்வொரு கதாபாத்திரமும் தனி அழகு.
செழியன் மனைவியை அழைக்கும் முறையில் இருந்தே அவனது குணம் தெரிகிறது.அன்பான கணவன்.
மறுமணம் என்பது அக்காலத்தில் தொடங்கி இன்று வரை பெண்ணுக்கு ஒரு சவால் தான்,அதை கடக்கும் முறை அழகு.
பல பெற்றோர்கள் செய்யும் தவறே தான் ஜனாவின் பெற்றோரும் செய்துள்ளனர்,பிள்ளைகள் மீது நம்பிகை இல்லாமல் போனால் அவர்கள் கதி என்ன என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது இக்கதை.
ஐந்து விரல்களும் ஒன்றா என்ன,ஜோதியை பெற்ற வயிற்றில் தான் ஜானவியும் பிறந்தால்,படைப்பின் விந்தை.
கடலில் ஆண் கடல் பெண் கடல் என்று உண்டாம்,ராமேஸ்வரத்தில் கடலளந்த ஜெகநாத பெருமாள் கோவில் அருகில் இருக்கும் கடலில் அலையே இருக்காது,ஆண் கடலும்,பெண் கடலும் சங்கமிக்கும் ராமேஸ்வரத்திலும் அலை இருக்காது,அதே நகரில் இருக்கும் சேது கரையில் அலை ஆளை தூக்கும் அளவிற்கு வேகமாக இருக்கும்,ஜனாவின் வாழ்க்கையின் முற்பகுதி சேது கரை போல் என்றால்,பிற்பகுதி அலையில்லா கடல் போல் அமைதியான தெளிந்த நீரில் செல்லும் படகு, காதல் என்னும் மிதமான அலையில் தாலாட்டி தாலாட்டி செல்கிறது, அப்படகில் அழகான இரு கிளிகளும்,முதிர்ந்த நரை தட்டிய இரு கழுகும்,அவற்றைச் செலுத்தி செல்ல இரு துடுப்புமாக அழகாகச் செல்கிறது கதை,மென்மையான காதல் கதை.
வாழ்த்துக்கள் தமிழச்சி.................