சோழர்கள் என்றாலே நம் கண் முன் நிழலாடுவது முதலாம் ராஜ ராஜ சோழனும், முதலாம் ராஜேந்திர சோழனும் தான். இவர்களுக்கும் முன் வாழ்ந்த சோழ நாட்டின் இளவரசன் 'ஆதன் அறனாளன்' பற்றிய கதை, வரலாற்றுத் தடயம்.
நாட்டின் எல்லைகளை விஸ்தீரணப் படுத்துவதில், அத்தனை ஆர்வம் காட்டும் சோழ நாட்டு இளவல். தன் அடுத்த கட்ட முயற்சியாக, அவன் பார்வை குமரித்தீவில் படிகின்றது. வேட்டைக்குப் போன சோழப் புலி, மான் விழியில் மயங்கி நிற்கிறது. மானும், புலியும் சமரசம் செய்து கொண்டு, சேர நாட்டை எதிர்க்க ஆயத்தம் பண்ணுகின்றன.
தாய் வழி தாயம், வாளுடை விழா என அறிவுக்கு நல்ல விருந்து. கோட்டைகளையும், அரசவைகளையும் படிக்கும் போது, என்னை சாண்டில்யன் தொட்டுச் சென்றார்.
நெஞ்சுரம் கொண்ட ஒற்றர்களையும் நீங்கள் விட்டு விடவில்லை ஆசிரியரே! விருந்தினர் மாளிகையில், கன்யா தேவி ஓலையைப் பற்றிக் கூறும் போது, என்னையறியாமலேயே 'சபாஷ்' போட்டேன். ரசித்துக் கொண்டேன்.
ஆசிரியரின் முயற்சியை மனமாரப் பாராட்டுகிறேன். படிக்கத் தவறியவர்கள், நிச்சயம் படியுங்கள். நல்ல தமிழ், நல்ல நடை.. முத்துப் போன்ற வார்த்தைகள்.
ஆசிரியரின் வயது யானறியேன். இருந்தாலும், இது போன்ற இன்னும் பல படைப்புக்களைக் கொடுத்தால், சரித்திரக் கதை ஆசிரியர்கள் வரிசையில் இடம் பிடிப்பீர்கள் என்பது என் அவா.
உங்கள் சேவை தொடர அடியேனின் பிரார்த்தனைகள்.
@kalpanaekambaram
நாட்டின் எல்லைகளை விஸ்தீரணப் படுத்துவதில், அத்தனை ஆர்வம் காட்டும் சோழ நாட்டு இளவல். தன் அடுத்த கட்ட முயற்சியாக, அவன் பார்வை குமரித்தீவில் படிகின்றது. வேட்டைக்குப் போன சோழப் புலி, மான் விழியில் மயங்கி நிற்கிறது. மானும், புலியும் சமரசம் செய்து கொண்டு, சேர நாட்டை எதிர்க்க ஆயத்தம் பண்ணுகின்றன.
தாய் வழி தாயம், வாளுடை விழா என அறிவுக்கு நல்ல விருந்து. கோட்டைகளையும், அரசவைகளையும் படிக்கும் போது, என்னை சாண்டில்யன் தொட்டுச் சென்றார்.
நெஞ்சுரம் கொண்ட ஒற்றர்களையும் நீங்கள் விட்டு விடவில்லை ஆசிரியரே! விருந்தினர் மாளிகையில், கன்யா தேவி ஓலையைப் பற்றிக் கூறும் போது, என்னையறியாமலேயே 'சபாஷ்' போட்டேன். ரசித்துக் கொண்டேன்.
ஆசிரியரின் முயற்சியை மனமாரப் பாராட்டுகிறேன். படிக்கத் தவறியவர்கள், நிச்சயம் படியுங்கள். நல்ல தமிழ், நல்ல நடை.. முத்துப் போன்ற வார்த்தைகள்.
ஆசிரியரின் வயது யானறியேன். இருந்தாலும், இது போன்ற இன்னும் பல படைப்புக்களைக் கொடுத்தால், சரித்திரக் கதை ஆசிரியர்கள் வரிசையில் இடம் பிடிப்பீர்கள் என்பது என் அவா.
உங்கள் சேவை தொடர அடியேனின் பிரார்த்தனைகள்.
@kalpanaekambaram