நினைவில் தத்தளிக்கும் நேசமது 20
பிப்ரவரி 16 :
ஒவ்வொருமுறை தன் காதலை பூமிஅழகி நிராகரிக்கும்போதும் வலியுடன் மரித்துபோகும் ஆதவன் , தான் கொண்ட காதலில் தளராமல் மீண்டுமாய் தன்னவளை தேடி ஆர்பாட்டமாய் வெளிவரும் காலை பொழுது .
பலபல காதல்களையும் , சந்தேகங்களையும் , வலிகளையும் , அழுகைகளையும் தாங்கியவாறு இந்த நாள் முடிய விருப்பது அறியாமல் அறுவரும் ( நினைவு + உணர்வு +உயிர் அலையில் தத்தளிப்பவர்கள் ) அந்த விடியலை மகிழ்ச்சியுடன் வரவேற்தனர் .
விஷ்வேந்தரும் , ஜிஷ்ணுவும் தத்தம் காதலியின் வருகைக்காக தயாராக ,
ஷாலினியும் , சித்ராங்கதாவும் அவரவர் காதலரை பார்க்க கிளம்பினர் .
அழகிய பொம்மையாய் ரோஜா வண்ண சுடிதாரில் சித்ராங்கதா இறங்கி வர , அவளை பார்த்த விஷ்வேந்தர் , என்னடி குளிச்சியா கொஞ்சம் அழகா இருக்குற .
டேய் ஒருவாரமா ஒரே பேண்ட்டை துவைக்காம போட்ற அழுக்குமூட்டை நீ என்னை சொல்றியா ?
ஹீஹீ இப்படி கம்பெனி சீக்ரெட்லாம் வெளிய சொல்லகூடாது என அவன் அசடுவழிய ,அவனை காரித்துப்புவது போல் பார்த்தாள் சித்ராங்கதா .
விடு..விடு... மொதல்ல கிளம்புங்க. இதோ ஏஞ்சலும் வந்தாச்சு என சித்ராங்கதாவிடம் சொல்லியவன் , ஹாஹா இது என்ன எப்பவும் நீ மித்ரேந்தர தூக்கிட்டே திரியுற என மித்ராளினியிடம் கேட்டான் .
தூயவெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிகப்பு வண்ண பூக்கள் பதித்த சுடிதாரில் , மித்ரேந்தரை வாகாய் அணைத்தார்ப்போல் தூக்கிவந்தவளை பார்க்க அத்தனை பாந்தமாய் இருந்தது .
விஷ்வாவின் கேள்விக்கு சட்டென்று , என் கை நா தூக்குறன் உனக்கென்ன என கேட்டவள் கேட்டபின்பே என்ன நினைப்பார்களோ என திருதிருவென முழித்தாள்.
விஷ்வா , ஹாஹா நம்ப உண்மையான ஏஞ்சல் வெளிய வராங்க டோய் என சிரிக்க ,
அது... ஆண்ட்டி சாவித்ரி ஆன்டியை பார்க்க போயிருக்காங்க , ரவி அங்கிளும் சீக்கிரமே கிளம்பிட்டாங்க , நான் தான் குட்டி என்கிட்டவே இருக்கட்டும்னு சொல்லிட்டேன் என்றாள் .
சரி சரி நீங்க இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும் கிளம்புங்க , ஏய் குரங்குக்குட்டி என்ன அமைதியா நிக்குற ? நான் சொன்னது நியாபகம் இருக்குல்ல வீட்டுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணு நான் வந்து கூட்டிட்டு வரேன் , இப்போ முருகன் அண்ணா வண்டிஓட்டுவாரு.
கொஞ்சம் வாய மூடு ,இந்த ஷாலினி எரும சரியா தான் சொல்லிருக்கா . உன் அண்ணன் வாய திறந்தா மூட மாட்டான்னு . சரி இப்போ நாம எங்க போறோம் அதுவும் நீ வரல போல என அவனிடம் வாய் கேட்டாலும் , மனமோ என் ரவுடி பேபியே ஏதோ அதிசயமா பார்க்கனுன்னு சொல்லிருக்கான் ...அதுலயும் இந்த பக்கி மண்ணை போட பாக்குறானே என புலம்பியது .
என்னடி! நேத்து நைட் தான ஏஞ்சல் கூட கோவிலுக்கு போய்ட்டு வா னு சொன்னேன், நீயும் மண்டைய மண்டைய ஆட்னியே .
அச்சச்சோ ,இதைத்தான் இவன் சொன்னானா இப்போ வரமுடியாது சொன்னாலும் கேள்வி கேட்டு கொல்லுவானே .இவங்க வேற அம்சமா கிளம்பிருக்காங்க, என்னபண்ணலாம்? என யோசிக்க , பேசாம இப்போ போயிட்டு பாதில கிளம்பிடலாம் , இவங்களுக்கு வழி தெரிஞ்சிருக்காதுனு தான் நம்பள அனுப்புறான் என மனசாட்சி ஐடியா குடுக்க அதற்க்கு கை கொடுத்து பாராட்டி உள்ளே அனுப்பியவள் ,
ஹான் ஆமா..ஆமா ..ஹீஹீ காது தவறி கேட்டுட்டேன் போல என சமாளிப்பதாய் நினைத்து உளறினாள் .
என்னது ! அது வாய் தவறி சொல்லிட்டேன்னு தான வரும் என்றான் விஷ்வா சந்தேகமாய் .
அவனிடமிருந்து தப்பிக்க ,எப்பப்பாரு கேள்விக்கேட்குறதே வேலையா வச்சிக்கிட்டு , நீங்க வாங்க நம்ப போவோம் நேரம் ஆகுது என மித்ராளினி வருகிறாளா என்றுகூட பார்க்காமல் வேகமாய் வெளியே சென்றாள் .
***************************************************************************
காலை 8மணி :
அத்தான் இது விஷ்வா தான என ஷாலினி கத்த , ஜித்தேந்தர் எதுவும் சொல்லாமல் அமைதியாய் பார்த்தான் .
அவனின் பார்வையில் , இது நம்ப விஷ்வா அத்தானே தான் ..லூசு மாதிரி கேள்வி கேக்குறானு பாக்குறாரோ ?? என எண்ணியவள் வெளியே , ஹீஹீ சின்னத்தான் போட்டோ இங்க எப்படிஎன கேட்டு அசடு வழிந்தாள்.
அதற்கு அவன் பதில் சொல்வதற்குள் ,
அண்ணா நீங்களா ...வாட் எ சப்ரைஸ் ...என வேகமாய் வந்து ஜித்தேந்தரை அணைத்துக்கொண்டான் சஞ்சீவ் .
இது யாரு புது என்ட்ரி என ஷாலினி புருவம் சுருக்க ,
ஹலோ சஞ்சீவ் , எப்படி இருக்க ? பிரகாஷ் எப்படி இருக்கான் .
எங்களுக்கு என்னன்ணா எல்லோரும் நல்லா இருக்கோம் .நீங்க வீட்டுக்கு வந்திருக்கலாமே ணா .
அது சஞ்சீவ் ! நாங்க ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி தெரிஞ்சிக்க தான் இங்க வந்திருக்கோம் அத இங்க பேசினா தான் சரியாஇருக்கும் .அப்றம் இவங்க ஷாலினி என்று அவனிடம் சொல்லியவன் ஷாலினியிடம் ,
ஷாலினி ! இவர் சஞ்சீவ் இந்த ஹாஸ்பிடலோட சேர்மன் , இவர் தம்பி பிரகாஷும் நம்ப விஷ்வாவும் ப்ரெண்ட்ஸ் என்று அறிமுகப்படுத்தினான்.
ஷாலினியா ....என அவளை அதிர்ச்சியாய் பார்த்த சஞ்சீவ் நம்ப விஷ்வா ...என ஆரம்பிக்க பார்வையாலே ஜித்தேந்தர் அவனை தடுத்ததில் அமைதியானான்.
இந்த பம்பரவாயன் என்ன சொல்ல வந்தான் இப்டி அத்தானை பார்த்து திருட்டுமுழி முழிக்கிறான் என ஷாலினி யோசிக்க ,
அதை கவனித்த ஜித்தேந்தர் நம்ப வந்த விஷயத்தை பேச ஆரம்பிக்கலாமா என்றான்.
ஹான் சொல்லுங்கணா , அதுக்குமுன்னாடி நம்ப வெளிய போய் எதுனா சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் என சஞ்சீவ் சொல்ல,
அப்பாடி ! இப்பவாவது வந்தவங்களுக்கு சாப்பிட எதுனா கொடுப்போம்னு தோணுச்சே .டேய் பம்பர வாயா இதுக்காகவே இந்த ஷாலினி, உன்ன பொழச்சிப்போன்னு விடுறேன் டா என அவனுக்கு பதிலை மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தாள் .
ஜித்தேந்திரோ , இல்ல சஞ்சீவ் , அதுக்குலாம் இப்போ டைம் இல்ல .இது ரொம்ப முக்கியமான விஷயம் என சொல்ல,
இதற்கும் ஷாலினி , "சோறு போச்சா " என மனதிற்குள் கவுண்டர் கொடுத்தாலும் , இது ஜித்தேந்தரின் வாழ்க்கை சம்பந்தபட்டது என அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தாள் .
சஞ்சீவ் ! போன ஆகஸ்ட் 18 மம் தேதி இந்ன் ஹாஸ்ப்பிட்டல அட்மிட் ஆன பேஷண்ட்ஸோட லிஸ்ட் எனக்கு வேணும் என ஜித்தேந்தர் கேட்க ,
ஆகஸ்ட் 18 ஆ ??? அண்ணா நான் நினைக்கிறது சரினா நீங்க " ராணி" அக்காவ பத்தியா கேக்குறீங்க ?
அவனின் கேள்வியில் , இவர் அத்தானோட " ராணிமா "வையா சொல்றாரு என வியந்தவள் , ஜித்தேந்தரை பார்க்க
அவனோ வழக்கம்போல் உணர்ச்சிகள் அற்ற முகத்துடன் அமர்ந்திருந்தான்.
அவனது முகம் உணர்வுகளை தொலைத்திருந்தாலும் , மனமது அவனின் ராணிமாவை சுற்றி சுழல சஞ்சீவின் கேள்விக்கு ஆம் என தலையசைத்தான் .
ஓஹ் ! விஷ்வாவும் பிரகாஷும் தான் அவங்கள இங்க கொண்டுவந்து சேர்த்தாங்கணா . எவ்வளவு ட்ரீட்மெண்ட் கொடுத்தும் அவங்களோட நிலைமை ரொம்ப கிரிடிக்கல்லா இருந்ததுனால கிட்டத்தட்ட ரெண்டு மாசம் இங்க கோமா ஸ்டேஜ்ல தான் இருந்தாங்க .
அவன்சொல்ல சொல்ல , ஜித்தேந்தரின் மனம் குற்றவுணர்வில் " என்னை மன்னிச்சுடுடாமா நான் இருந்தும் உன்னை இப்டி தனியா கஷ்டபடவிட்டுடனே " என கதறி துடித்தது .
தான் சொல்லி முடித்த பின்பே ஜித்தேந்தரை கவனித்த சஞ்சீவ் , அண்ணாவோட முகம் ஏன் இவ்ளோ கசங்கி போயிருக்கு ? அப்போ ....ராணி அக்காவ அண்ணனுக்கு தெரியுமா ...அப்போ அந்த விஷயமும் அண்ணாக்கு தெரியுமா என சஞ்சீவ் யோசிக்க ,(அது என்னனு அப்றம் பார்ப்போம் டியர்ஸ் ).
ஷாலினியோ , இதுவரை கம்பீரமாகவே பார்த்து வந்த அத்தானை இரண்டாம் முறையாய் கலங்கி போய் பார்த்ததில் அவளின் கண்களும் கலங்கியது .
இவர்களின் நிலையை கவனிக்காமல் கண்களை மூடி கொண்டிருந்த ஜித்தேந்தர் , இப்போ ராணிமா எங்க ?? என கேட்டான் . உள்ளுக்குள் அத்தனை கலங்கியிருந்தாலும் அவனின் குரலில் கலக்கமோ தடுமாற்றமோ எதுவும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது .
அண்ணா !அப்போ அந்த விஷயமா தான் வந்திங்களா ?? அப்படினா நீங்க இங்க வந்திருக்க வேண்டிய அவசியமே இல்ல . ஏன்னா விடை அங்க தான் இருக்கு என்றான்.
இப்பொழுதும் ஜித்தேந்தர் கண்களை திறக்கவில்லை ,
ஷாலினிக்கு அவன் சொல்வது புரியாமல் , நீங்க என்ன சொல்ல வரீங்க மிஸ்டர் .சஞ்சீவ் என கேட்க ,
அவன் பதில் சொல்வதற்கு முன்பே ஜித்தேந்தர் , " விஷ்வா " என்றிருந்தான் .
விஷ்வா - வா என ஷாலினி இவர் என்ன சொல்கிறார் குழப்பத்துடன் என சஞ்சீவை பார்க்க அவன் "ஆம்" என தலையசைத்தவன் ,
ரெண்டு மாசமா அவங்ககிட்ட எந்தவித முன்னேற்றமும் இல்லாம இருக்க அப்போ அவங்கள பார்க்க வந்த விஷ்வா, அவங்கள தன்னோட ஹாஸ்ப்பிட்டல்க்கு கூட்டிட்டு போய் பாத்துக்க போறதா சொன்னான் . இதே வேற யாராவது கேட்டிருந்தா நிச்சயம் ஒத்துக்கிட்டிருந்திருக்க மாட்டேன் . அவன் என்கிறதுனால ஒத்துக்கிட்டேன் அதுவும் "ராணி " அக்காவுக்காக தான் .
ஏனோ அவன் இறுதியாய் சொன்னது பாதி தான் என ஷாலினியின் துப்பறியும் மூளை சொன்னாலும் , இப்பொழுது ஜித்தேந்தரின் அருகில் எதுவும் கேட்கமுடியாமல் இருந்தாள் .
இத்தனை நேரம் கண்களை மூடி இருந்த ஜித்தேந்தர் தனது கண்ணாடியை அணிந்தவன் , ஓகே சஞ்சீவ் அப்போ நாங்க கிளம்புறோம் & உன் நேரத்தை வீணாக்கியதற்க்கு சாரி என்றான் .
அச்சோ அண்ணா என்ன நீங்க . ஓகே அண்ணா இப்போ நீங்க உடனே கிளம்பனும்னு புரியுது , நாங்க ஒருநாள் வீட்டுக்கு வரோம்ணா .
சரிஎன தலையசைத்து வேகமாய் நடக்க , அவனை தொடர்ந்து ஷாலினியும் விடைபெற்றுகிளம்பினாள்.
***************************************************************************
காலை 9 மணி :
மித்து அது ..என் பிரிண்ட் வர சொல்லிருந்தா . நான் உங்களையும், குட்டியையும் கோவில்ல விட்டுட்டு போயிட்டு வந்துர்றேன் . நான் வரவரைக்கும் அங்கையே இருங்க நான் வந்தப்பரும் விஷ்வாக்கு கூப்டுக்கலாம் சரியா என சித்ராங்கதா , மித்ராளினியிடம் சொன்னாள் .
சரி என்று பதிலுக்கு மித்ராளினி தலையசைத்து விட்டு மித்ரேந்தரை கவனிக்க ஆரம்பிக்க ,
ஏன் மித்து ! நீங்க ரொம்ப அமைதியோ .எப்பவும் ஒன்று ரெண்டு வார்த்தை தான் பேசுறீங்க இல்லனா தலையசைக்குறிங்க .ஆனா காலையில விஷ்வா கிட்ட பேசுனத பார்த்தா அப்டி தெரிலையே,
அவளின் கேள்விக்கு புன்னைகைத்த மித்ராளினி , ம்ம்ம் எனக்குமே இப்டி அமைதியா இருக்கிறது ஏதோ மாதிரி தான் இருக்கு . ஜிணு கூட சொன்னான் "நீ சரியான வாயாடி " னு .இப்போ மறந்ததுனால இப்படி இருக்கன்னு நினைக்குறேன் .
ஜிணு - வா ? அது யாரு மித்து ? நேத்து கூட அந்த மால்ல யாரையோ பார்த்தீங்கன்னு சொன்னிங்களே அவங்களா ?
ம்ம்ம் ஆமா ..அவங்கள தான் எனக்கு நியாபகம் இருக்கு ஒருவேளை சின்ன வயசுல இருந்தே எனக்கு அவன் அவனுக்கு நான்- னு கூடவே வளர்ந்ததுனால இருக்குமோ என அவளுக்கு தோன்றிய கேள்வியையே சித்ராங்கதாவிற்கு பதிலாய் சொன்னாள்.
அவள் சொல்லியதோ சிறுவயது முதல் தங்கள் இவருக்கான நட்பில் எவரையும் இடையில் கொண்டுவராமல் இருவர் மட்டுமாய் இருந்ததை ,
சித்ராங்கதா புரிந்துகொண்டதோ , அவர்கள் இருவரும் காதலர்கள் போல் என்று .
***************************************************************************
பிப்ரவரி 16 :
ஒவ்வொருமுறை தன் காதலை பூமிஅழகி நிராகரிக்கும்போதும் வலியுடன் மரித்துபோகும் ஆதவன் , தான் கொண்ட காதலில் தளராமல் மீண்டுமாய் தன்னவளை தேடி ஆர்பாட்டமாய் வெளிவரும் காலை பொழுது .
பலபல காதல்களையும் , சந்தேகங்களையும் , வலிகளையும் , அழுகைகளையும் தாங்கியவாறு இந்த நாள் முடிய விருப்பது அறியாமல் அறுவரும் ( நினைவு + உணர்வு +உயிர் அலையில் தத்தளிப்பவர்கள் ) அந்த விடியலை மகிழ்ச்சியுடன் வரவேற்தனர் .
விஷ்வேந்தரும் , ஜிஷ்ணுவும் தத்தம் காதலியின் வருகைக்காக தயாராக ,
ஷாலினியும் , சித்ராங்கதாவும் அவரவர் காதலரை பார்க்க கிளம்பினர் .
அழகிய பொம்மையாய் ரோஜா வண்ண சுடிதாரில் சித்ராங்கதா இறங்கி வர , அவளை பார்த்த விஷ்வேந்தர் , என்னடி குளிச்சியா கொஞ்சம் அழகா இருக்குற .
டேய் ஒருவாரமா ஒரே பேண்ட்டை துவைக்காம போட்ற அழுக்குமூட்டை நீ என்னை சொல்றியா ?
ஹீஹீ இப்படி கம்பெனி சீக்ரெட்லாம் வெளிய சொல்லகூடாது என அவன் அசடுவழிய ,அவனை காரித்துப்புவது போல் பார்த்தாள் சித்ராங்கதா .
விடு..விடு... மொதல்ல கிளம்புங்க. இதோ ஏஞ்சலும் வந்தாச்சு என சித்ராங்கதாவிடம் சொல்லியவன் , ஹாஹா இது என்ன எப்பவும் நீ மித்ரேந்தர தூக்கிட்டே திரியுற என மித்ராளினியிடம் கேட்டான் .
தூயவெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிகப்பு வண்ண பூக்கள் பதித்த சுடிதாரில் , மித்ரேந்தரை வாகாய் அணைத்தார்ப்போல் தூக்கிவந்தவளை பார்க்க அத்தனை பாந்தமாய் இருந்தது .
விஷ்வாவின் கேள்விக்கு சட்டென்று , என் கை நா தூக்குறன் உனக்கென்ன என கேட்டவள் கேட்டபின்பே என்ன நினைப்பார்களோ என திருதிருவென முழித்தாள்.
விஷ்வா , ஹாஹா நம்ப உண்மையான ஏஞ்சல் வெளிய வராங்க டோய் என சிரிக்க ,
அது... ஆண்ட்டி சாவித்ரி ஆன்டியை பார்க்க போயிருக்காங்க , ரவி அங்கிளும் சீக்கிரமே கிளம்பிட்டாங்க , நான் தான் குட்டி என்கிட்டவே இருக்கட்டும்னு சொல்லிட்டேன் என்றாள் .
சரி சரி நீங்க இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும் கிளம்புங்க , ஏய் குரங்குக்குட்டி என்ன அமைதியா நிக்குற ? நான் சொன்னது நியாபகம் இருக்குல்ல வீட்டுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணு நான் வந்து கூட்டிட்டு வரேன் , இப்போ முருகன் அண்ணா வண்டிஓட்டுவாரு.
கொஞ்சம் வாய மூடு ,இந்த ஷாலினி எரும சரியா தான் சொல்லிருக்கா . உன் அண்ணன் வாய திறந்தா மூட மாட்டான்னு . சரி இப்போ நாம எங்க போறோம் அதுவும் நீ வரல போல என அவனிடம் வாய் கேட்டாலும் , மனமோ என் ரவுடி பேபியே ஏதோ அதிசயமா பார்க்கனுன்னு சொல்லிருக்கான் ...அதுலயும் இந்த பக்கி மண்ணை போட பாக்குறானே என புலம்பியது .
என்னடி! நேத்து நைட் தான ஏஞ்சல் கூட கோவிலுக்கு போய்ட்டு வா னு சொன்னேன், நீயும் மண்டைய மண்டைய ஆட்னியே .
அச்சச்சோ ,இதைத்தான் இவன் சொன்னானா இப்போ வரமுடியாது சொன்னாலும் கேள்வி கேட்டு கொல்லுவானே .இவங்க வேற அம்சமா கிளம்பிருக்காங்க, என்னபண்ணலாம்? என யோசிக்க , பேசாம இப்போ போயிட்டு பாதில கிளம்பிடலாம் , இவங்களுக்கு வழி தெரிஞ்சிருக்காதுனு தான் நம்பள அனுப்புறான் என மனசாட்சி ஐடியா குடுக்க அதற்க்கு கை கொடுத்து பாராட்டி உள்ளே அனுப்பியவள் ,
ஹான் ஆமா..ஆமா ..ஹீஹீ காது தவறி கேட்டுட்டேன் போல என சமாளிப்பதாய் நினைத்து உளறினாள் .
என்னது ! அது வாய் தவறி சொல்லிட்டேன்னு தான வரும் என்றான் விஷ்வா சந்தேகமாய் .
அவனிடமிருந்து தப்பிக்க ,எப்பப்பாரு கேள்விக்கேட்குறதே வேலையா வச்சிக்கிட்டு , நீங்க வாங்க நம்ப போவோம் நேரம் ஆகுது என மித்ராளினி வருகிறாளா என்றுகூட பார்க்காமல் வேகமாய் வெளியே சென்றாள் .
***************************************************************************
காலை 8மணி :
அத்தான் இது விஷ்வா தான என ஷாலினி கத்த , ஜித்தேந்தர் எதுவும் சொல்லாமல் அமைதியாய் பார்த்தான் .
அவனின் பார்வையில் , இது நம்ப விஷ்வா அத்தானே தான் ..லூசு மாதிரி கேள்வி கேக்குறானு பாக்குறாரோ ?? என எண்ணியவள் வெளியே , ஹீஹீ சின்னத்தான் போட்டோ இங்க எப்படிஎன கேட்டு அசடு வழிந்தாள்.
அதற்கு அவன் பதில் சொல்வதற்குள் ,
அண்ணா நீங்களா ...வாட் எ சப்ரைஸ் ...என வேகமாய் வந்து ஜித்தேந்தரை அணைத்துக்கொண்டான் சஞ்சீவ் .
இது யாரு புது என்ட்ரி என ஷாலினி புருவம் சுருக்க ,
ஹலோ சஞ்சீவ் , எப்படி இருக்க ? பிரகாஷ் எப்படி இருக்கான் .
எங்களுக்கு என்னன்ணா எல்லோரும் நல்லா இருக்கோம் .நீங்க வீட்டுக்கு வந்திருக்கலாமே ணா .
அது சஞ்சீவ் ! நாங்க ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி தெரிஞ்சிக்க தான் இங்க வந்திருக்கோம் அத இங்க பேசினா தான் சரியாஇருக்கும் .அப்றம் இவங்க ஷாலினி என்று அவனிடம் சொல்லியவன் ஷாலினியிடம் ,
ஷாலினி ! இவர் சஞ்சீவ் இந்த ஹாஸ்பிடலோட சேர்மன் , இவர் தம்பி பிரகாஷும் நம்ப விஷ்வாவும் ப்ரெண்ட்ஸ் என்று அறிமுகப்படுத்தினான்.
ஷாலினியா ....என அவளை அதிர்ச்சியாய் பார்த்த சஞ்சீவ் நம்ப விஷ்வா ...என ஆரம்பிக்க பார்வையாலே ஜித்தேந்தர் அவனை தடுத்ததில் அமைதியானான்.
இந்த பம்பரவாயன் என்ன சொல்ல வந்தான் இப்டி அத்தானை பார்த்து திருட்டுமுழி முழிக்கிறான் என ஷாலினி யோசிக்க ,
அதை கவனித்த ஜித்தேந்தர் நம்ப வந்த விஷயத்தை பேச ஆரம்பிக்கலாமா என்றான்.
ஹான் சொல்லுங்கணா , அதுக்குமுன்னாடி நம்ப வெளிய போய் எதுனா சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் என சஞ்சீவ் சொல்ல,
அப்பாடி ! இப்பவாவது வந்தவங்களுக்கு சாப்பிட எதுனா கொடுப்போம்னு தோணுச்சே .டேய் பம்பர வாயா இதுக்காகவே இந்த ஷாலினி, உன்ன பொழச்சிப்போன்னு விடுறேன் டா என அவனுக்கு பதிலை மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தாள் .
ஜித்தேந்திரோ , இல்ல சஞ்சீவ் , அதுக்குலாம் இப்போ டைம் இல்ல .இது ரொம்ப முக்கியமான விஷயம் என சொல்ல,
இதற்கும் ஷாலினி , "சோறு போச்சா " என மனதிற்குள் கவுண்டர் கொடுத்தாலும் , இது ஜித்தேந்தரின் வாழ்க்கை சம்பந்தபட்டது என அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தாள் .
சஞ்சீவ் ! போன ஆகஸ்ட் 18 மம் தேதி இந்ன் ஹாஸ்ப்பிட்டல அட்மிட் ஆன பேஷண்ட்ஸோட லிஸ்ட் எனக்கு வேணும் என ஜித்தேந்தர் கேட்க ,
ஆகஸ்ட் 18 ஆ ??? அண்ணா நான் நினைக்கிறது சரினா நீங்க " ராணி" அக்காவ பத்தியா கேக்குறீங்க ?
அவனின் கேள்வியில் , இவர் அத்தானோட " ராணிமா "வையா சொல்றாரு என வியந்தவள் , ஜித்தேந்தரை பார்க்க
அவனோ வழக்கம்போல் உணர்ச்சிகள் அற்ற முகத்துடன் அமர்ந்திருந்தான்.
அவனது முகம் உணர்வுகளை தொலைத்திருந்தாலும் , மனமது அவனின் ராணிமாவை சுற்றி சுழல சஞ்சீவின் கேள்விக்கு ஆம் என தலையசைத்தான் .
ஓஹ் ! விஷ்வாவும் பிரகாஷும் தான் அவங்கள இங்க கொண்டுவந்து சேர்த்தாங்கணா . எவ்வளவு ட்ரீட்மெண்ட் கொடுத்தும் அவங்களோட நிலைமை ரொம்ப கிரிடிக்கல்லா இருந்ததுனால கிட்டத்தட்ட ரெண்டு மாசம் இங்க கோமா ஸ்டேஜ்ல தான் இருந்தாங்க .
அவன்சொல்ல சொல்ல , ஜித்தேந்தரின் மனம் குற்றவுணர்வில் " என்னை மன்னிச்சுடுடாமா நான் இருந்தும் உன்னை இப்டி தனியா கஷ்டபடவிட்டுடனே " என கதறி துடித்தது .
தான் சொல்லி முடித்த பின்பே ஜித்தேந்தரை கவனித்த சஞ்சீவ் , அண்ணாவோட முகம் ஏன் இவ்ளோ கசங்கி போயிருக்கு ? அப்போ ....ராணி அக்காவ அண்ணனுக்கு தெரியுமா ...அப்போ அந்த விஷயமும் அண்ணாக்கு தெரியுமா என சஞ்சீவ் யோசிக்க ,(அது என்னனு அப்றம் பார்ப்போம் டியர்ஸ் ).
ஷாலினியோ , இதுவரை கம்பீரமாகவே பார்த்து வந்த அத்தானை இரண்டாம் முறையாய் கலங்கி போய் பார்த்ததில் அவளின் கண்களும் கலங்கியது .
இவர்களின் நிலையை கவனிக்காமல் கண்களை மூடி கொண்டிருந்த ஜித்தேந்தர் , இப்போ ராணிமா எங்க ?? என கேட்டான் . உள்ளுக்குள் அத்தனை கலங்கியிருந்தாலும் அவனின் குரலில் கலக்கமோ தடுமாற்றமோ எதுவும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது .
அண்ணா !அப்போ அந்த விஷயமா தான் வந்திங்களா ?? அப்படினா நீங்க இங்க வந்திருக்க வேண்டிய அவசியமே இல்ல . ஏன்னா விடை அங்க தான் இருக்கு என்றான்.
இப்பொழுதும் ஜித்தேந்தர் கண்களை திறக்கவில்லை ,
ஷாலினிக்கு அவன் சொல்வது புரியாமல் , நீங்க என்ன சொல்ல வரீங்க மிஸ்டர் .சஞ்சீவ் என கேட்க ,
அவன் பதில் சொல்வதற்கு முன்பே ஜித்தேந்தர் , " விஷ்வா " என்றிருந்தான் .
விஷ்வா - வா என ஷாலினி இவர் என்ன சொல்கிறார் குழப்பத்துடன் என சஞ்சீவை பார்க்க அவன் "ஆம்" என தலையசைத்தவன் ,
ரெண்டு மாசமா அவங்ககிட்ட எந்தவித முன்னேற்றமும் இல்லாம இருக்க அப்போ அவங்கள பார்க்க வந்த விஷ்வா, அவங்கள தன்னோட ஹாஸ்ப்பிட்டல்க்கு கூட்டிட்டு போய் பாத்துக்க போறதா சொன்னான் . இதே வேற யாராவது கேட்டிருந்தா நிச்சயம் ஒத்துக்கிட்டிருந்திருக்க மாட்டேன் . அவன் என்கிறதுனால ஒத்துக்கிட்டேன் அதுவும் "ராணி " அக்காவுக்காக தான் .
ஏனோ அவன் இறுதியாய் சொன்னது பாதி தான் என ஷாலினியின் துப்பறியும் மூளை சொன்னாலும் , இப்பொழுது ஜித்தேந்தரின் அருகில் எதுவும் கேட்கமுடியாமல் இருந்தாள் .
இத்தனை நேரம் கண்களை மூடி இருந்த ஜித்தேந்தர் தனது கண்ணாடியை அணிந்தவன் , ஓகே சஞ்சீவ் அப்போ நாங்க கிளம்புறோம் & உன் நேரத்தை வீணாக்கியதற்க்கு சாரி என்றான் .
அச்சோ அண்ணா என்ன நீங்க . ஓகே அண்ணா இப்போ நீங்க உடனே கிளம்பனும்னு புரியுது , நாங்க ஒருநாள் வீட்டுக்கு வரோம்ணா .
சரிஎன தலையசைத்து வேகமாய் நடக்க , அவனை தொடர்ந்து ஷாலினியும் விடைபெற்றுகிளம்பினாள்.
***************************************************************************
காலை 9 மணி :
மித்து அது ..என் பிரிண்ட் வர சொல்லிருந்தா . நான் உங்களையும், குட்டியையும் கோவில்ல விட்டுட்டு போயிட்டு வந்துர்றேன் . நான் வரவரைக்கும் அங்கையே இருங்க நான் வந்தப்பரும் விஷ்வாக்கு கூப்டுக்கலாம் சரியா என சித்ராங்கதா , மித்ராளினியிடம் சொன்னாள் .
சரி என்று பதிலுக்கு மித்ராளினி தலையசைத்து விட்டு மித்ரேந்தரை கவனிக்க ஆரம்பிக்க ,
ஏன் மித்து ! நீங்க ரொம்ப அமைதியோ .எப்பவும் ஒன்று ரெண்டு வார்த்தை தான் பேசுறீங்க இல்லனா தலையசைக்குறிங்க .ஆனா காலையில விஷ்வா கிட்ட பேசுனத பார்த்தா அப்டி தெரிலையே,
அவளின் கேள்விக்கு புன்னைகைத்த மித்ராளினி , ம்ம்ம் எனக்குமே இப்டி அமைதியா இருக்கிறது ஏதோ மாதிரி தான் இருக்கு . ஜிணு கூட சொன்னான் "நீ சரியான வாயாடி " னு .இப்போ மறந்ததுனால இப்படி இருக்கன்னு நினைக்குறேன் .
ஜிணு - வா ? அது யாரு மித்து ? நேத்து கூட அந்த மால்ல யாரையோ பார்த்தீங்கன்னு சொன்னிங்களே அவங்களா ?
ம்ம்ம் ஆமா ..அவங்கள தான் எனக்கு நியாபகம் இருக்கு ஒருவேளை சின்ன வயசுல இருந்தே எனக்கு அவன் அவனுக்கு நான்- னு கூடவே வளர்ந்ததுனால இருக்குமோ என அவளுக்கு தோன்றிய கேள்வியையே சித்ராங்கதாவிற்கு பதிலாய் சொன்னாள்.
அவள் சொல்லியதோ சிறுவயது முதல் தங்கள் இவருக்கான நட்பில் எவரையும் இடையில் கொண்டுவராமல் இருவர் மட்டுமாய் இருந்ததை ,
சித்ராங்கதா புரிந்துகொண்டதோ , அவர்கள் இருவரும் காதலர்கள் போல் என்று .
***************************************************************************
Last edited: