நினைவில் தத்தளிக்கும் நேசமது 22 :
குழப்பத்துடன் கோவிலில் இருந்து கிளம்பிய சித்ராங்கதா சிறிது நேர பயணத்தில் அந்த இடத்திற்கு வந்திருக்க, கதவை திறந்து செல்லும் பொழுதே டப்ப் என்ற ஓசை கேட்க அடுத்த நொடி இடது கையை கன்னத்தில் வைத்தவாறு முழித்தாள் .
"யாருடா அந்த பயபுள்ள... இப்படி அடிவாங்குவது. சத்தத்தை கேட்டதுக்கே எனக்கு காது கிழியுதே" என அடித்தவனை எட்டிப்பார்த்தாள்.
"ஆத்தாடி! இது நம்ம ரவுடி பேபி போல இருக்கே, எதுக்கும் கொஞ்சம் கிட்ட போய் பார்ப்போம் " என கால் எடுத்து வைத்தவள், அடுத்து அடுத்தவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்ததை பார்த்து விட்டு, "ரைட்டு! இனி டௌட்டே வேணாம் இது நம்ம ஆளு தான்.இவருக்கு போலீஸ் ட்ரைனிங்ல என்ன கத்துக் கொடுத்தாங்களோ இல்லையோ ஆனாவூனா துப்பாக்கிய தூக்க சொல்லிக்கொடுத்து இருக்காங்க போல" என மனதில் கவுண்டர் அடித்தாள்.
இத்தனை நேரம் மனதில் இருந்த குழப்பம் அனைத்தும் அவனை கண்ட நொடியில் கரைவதாய்
உணர்ந்தாள்.
அதன் பிறகு அவனை ஜொல்லியவாறு வாயிலிலேயே நின்று கொண்டிருக்க, சிறிது நேரம் பிறகு அதைக் கண்ட ஜிஷ்ணு சிரித்தவாறே அவளைக் கூட்டிச் சென்றான்.
அவனின் அதிரடியிலே மயங்கும் அவள், அவனின் அத்தி பூத்தார் போன்ற இவ்வசியம் செய்யும் சிரிப்பில் மொத்தமாய் சறுக்கினாள்.
எவ்வளவு நேரம் சென்றதோ ,அவளின் ரசிப்பை ரசித்தவன் "பேபி போதும்டி இது பப்ளிக் பிளேஸ் உன் மச்சான் ஒரு போலீஸ்னு மறந்துடாத" என்றான் .
அசடு வழிய, "ஏதோ பேசணும்னு சொன்னீங்க வந்து ஒரு மணி நேரம் ஆகுது" என சமாளித்த அவளுக்கு அப்பொழுதுதான் தான்கேட்க வேண்டியது எல்லாம் நினைவுக்கு வந்தன.
இத்தனை நேரம் அவளை ரசித்தவாறு அமர்ந்திருந்தவன், அவளின் கேள்வியில் காதலை சொல்லும் தருணம் வந்ததும் சிறிது படபடத்தான்.
"முதல்ல ....அது...எனக்கு ...நான் .. அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு " என இருபது பேரை ஒரே நேரத்தில் அசால்டாய் சமாளிப்பவன் காதலை சொல்ல தடுமாறினான்.
அவன் தடுமாற்றத்தில் அவன் சொல்ல வருவதை உணர்ந்தவள் அது சரிதானா என அறிவதற்கு இதற்கு முன் தனக்கு தோன்றிய கேள்விகளை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் எனத் தவறாக முடிவு எடுத்தாள்.
ஆழமூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஜிஷ்ணு, "பேபி ...ஐ "என சொல்வதற்கும்
சித்ராங்கதா," நீங்க எனக்காகவா தினம் காலேஜ் வந்தீங்க" என கேட்டிருந்தாள்.
காதலை சொல்ல வந்தவன் அவளின் திடீர் கேள்வியை புரியாமல் பார்க்க,
அதை உணர்ந்த சித்ராங்கதா,"இல்லை, நீங்க போலீஸ்தான. போலீஸ்க்கு எப்பவும் வேலை இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, நீங்க எங்க காலேஜ் வாசலில் வாட்ச்மேன் வேலை தானே பார்த்தீங்க" என தனது கேள்வியை விளையாட்டாய் கேட்டவளின் மனமோ, "உன்னை பார்க்கத்தான் வந்தேன் பேபினு சொல்லுடா" என வேண்டியது.
ஜிஷ்ணு அனைவரிடமும் அழுத்தமாய் தன்னை காட்டிக் கொண்டாலும் அதை உடைத்து அவனை பாசமான தந்தையாகவும், அடம்பிடிக்கும் குழந்தையாகவும் மாற செய்தவள் மித்ராளினியே. அவளைத் தவிர வேறு ஒருவரிடம் அவன் அப்பரிமாணத்தை வெளிப்படுத்துவான் என்றால் அது சித்ராங்கதா மட்டுமே.
அவள் தன் கேள்வியை விளையாட்டாய் கேட்டிருக்க, இவனும் தன் காதலை சொல்லப் போகும் தருணத்தில் கொண்ட பரபரப்பில் அதை, அவளின் மனதின் வேண்டுதலை உணராமல் "பேபி அது நான் பாப்பாவ ட்ராப் பண்ண வந்தேன்டா... ஆஹாஹா.... அதுக்கு நீ என்ன வாட்ச்மேன் ஆகிட்டியா" என சிரித்தான்.
" பாப்பா...வா..." என சித்ராகதாவின் குரல் தந்தியடிக்க,
"ஹான் எப்பவும் வெளியே அப்படி சொல்லியே பழக்கம் ஆகிடுச்சு. ஆக்ஷுயலா நானே உன்கிட்ட அவளை அறிமுக படுத்தனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள என்னன்னவோ ஆகிடிச்சி ம்ம்ம்ம் ...அவ தான் என்னோட உயிர், என் தேவதை, சின்னதுல இருந்து எப்பவும் என்னோடவே இருக்கிறவ , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பேபி. உனக்கு கூட தெரிஞ்சு இருக்கும் உன் காலேஜ் தான, அவளை கூட்டிட்டு போறதுக்கும் விடுவதற்காகவும் தான் உன் காலேஜ்க்கு வருவேன் அண்ட் அதுனால தான உன்னையும் பார்த்தேன்" என இத்தனை நாளாய் பேசாததற்கும் சேர்த்து அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக, எதிரிலிருந்தவள் சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தாள்.
"அப்போ இவர் எனக்கானவர் இல்லையா ? அன்னிக்கு என்னை பார்க்கும் போது காதல் தெரிஞ்சுதே அது எனக்கானது இல்லையா ? இல்ல அது என் கற்பனையா ? நான் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுகிட்டேனா? அப்போ... அப்போ...என் காதல் தப்பானதா?எனவும்...
இல்லை கீர்த்தி சொன்னமாதிரிலாம் இருக்காது ...ஆமா இருக்காது..இவர் என்னுடையவர், என்னோட ரவுடி பேபி தான்" என உள்ளுக்குள் ஒரு வாதத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.
சித்ராங்கதாவின் முகத்தை பார்த்த ஜிஷ்ணு தன் பேச்சை நிறுத்தி,"பேபி என்னாச்சுடா? ஏன் உன் முகம் இவ்வளவு வலியை காட்டுது" என பதறினான்.
"தான் சொல்லாமலே தன் முகம் பார்த்து வலியை உணரும் அவனை எண்ணி பெருமைப்படுவதா? இத்தனை நாள் போல் இல்லாமல் இடைவிடாமல் அவன் பேச அதில் சந்தோஷப்படுவதா? இல்லை தான் எண்ணியது அனைத்தும் பொய்யாய்ப் போக அவன் தனக்கு இல்லை என்பதில் அழுவதா" என எந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவது என அறியா பிள்ளையாய் கண்கள் கலங்க விழித்தாள்.
இவளின் முகம் காட்டும் உணர்வுதனில் அவனின் மனம் கசங்க எழுந்து அவளருகில் அமர்ந்து, "என்ன ஆச்சு பேபி ! சொல்லுடா "என கேட்க அந்த கேள்வி அவளின் காதில் விழவேயில்லை.
அவள் கவனம் முழுக்க டேபிளில் வைத்து இருந்த அவனின் தொலைபேசியின் ஒளியில் தெரிந்த எண்ணிலே இருந்தது.
ஜிஷ்ணு மொபைலை சைலன்டில் போட்டிருக்க, சத்தமில்லாததில் அவன் அதை கவனிக்காமல் இருக்க, அதற்குள் அவன் அலைபேசி மூன்று நான்கு முறை கிறுகிறுத்து அடங்கியது .
அதில் அவன் மித்ராளினிக்கு புதிதாய் வாங்கி கொடுத்த அலைபேசியின் எண் ஒலிக்க, திரையில் (என் உயிரானவள்)மித்துமா என இருந்தது .
அதை பார்க்க பார்க்க தன் காதல் ஒன்றுமில்லாததாய் தோன்ற, ஜிஷ்ணுவின் குரல் அவளின் செவியில் கேட்காமல் போக, சித்ராங்கதாவின் மனதின் குரல் அதிகமாய் கூக்குரலிட்டது .
"இவன் உனக்கானவன் இல்லை வேறுஒருவருக்கு சொந்தமானவன். நீ போ இங்கிருந்து . அவன் சித்ராங்கதாவிற்கானவன் இல்லை அவன் மித்ராளினியின் முறைமகன் " என சத்தமிட அதற்கு மேல் அதை கேட்க முடியாதவள், காதை பொத்தியவாறே " இல்லை... நீ... நீங்க... எனக்கு வேணாம்... எனக்கு... வேணாம்.." என கத்தினாள்.
அவள் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதில் ஜிஷ்ணு புரியாமல் அவளை பார்க்க, அவளோ "வேண்டாம் ..போங்க... போயிருங்க... நான் உங்களுக்கு ஒண்ணுமே இல்ல தானே போங்க" என கத்த,
அவன் " பேபி மா "என் அருகில் வர,
"வராதீங்கனு சொல்றேன்ல... போயிருங்க ...போங்க.."என அவள் கூச்சலிட்டதும் தான் அவனும் சுற்றுபுறம் உணர்ந்து பார்த்தான்.
அங்கிருந்த அனைவரும் இவர்களை வேடிக்கை பார்ப்பது அறிந்து சற்று இறுக்கமாய் உணர்ந்தவன், ஆயினும் காரணம் புரியவில்லை எனினும் கதறிக் கொண்டிருக்கும் தன்னவள் மட்டுமே முக்கியமாய் பட்டதில் முதலில் அவளை அமைதிப்படுத்த தண்ணீர் இருந்த கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு கதறி கொண்டிருப்பவளை, "பேபி" என அழைக்க,
தன் காதல் பொய்யாய் போனதாய் தப்பாய் புரிந்துகொண்டவள் அதன் கனத்தை தாங்கமுடியாததால் சரியாய் யோசிக்கமுடியாமல் போக, பாய்ந்து அவன் சட்டையை இரு கைகளாலும் பற்றி," ஏன் மச்சான் இப்படி சொன்னீங்க? அப்போ நீங்க எனக்காக வரலையா? அப்போ நான் உங்களுக்கு முக்கியம் இல்லையா? என மீண்டும் மீண்டும் அதையே கேட்டவாறு இருந்தாள்.
அப்பொழுதுதான் சிக்கலின் நுனியை கண்டுகொண்ட ஜிஷ்ணு, "இல்ல டா பேபி "என ஆரம்பிக்க,
அவனை பேசவிடாமல்," வேணாம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். உங்க உயிரானவங்ககிட்டயே போங்க. அவங்க தான உங்களுக்கு முக்கியம்ல போயிடுங்க" என கத்த இவ்வளவு நேரம் காதலர்களின் சண்டையை சுவாரஸ்யமாய் பார்த்தவர்கள் இப்போது இன்னும் ஆர்வமாய் பார்க்க,
ஏற்கனவே இந்நிலையில் சிறிது இறுக்கமடைந்திருந்தவன் சித்ராங்கதாவின் தற்போதைய பேச்சில் இன்னும் இறுக கோபத்தை அடக்கும் வழி அறியாமல் கையில் இருந்த கண்ணாடி தம்ளரை கைகளால் இறுக்கி உடைத்தான் .
உடைத்த பின்பும் கோபம் அடங்காமல் போக மேலும் கைகளை இறுக்க உடைந்த கண்ணாடித் துண்டுகள் அவனின் கையை கிழித்து , ரத்தம் வேகவேகமாய் அத்துண்டுகளை அலங்கரித்தது.
இதை கண்டு சித்ராங்கதா பதறி அருகில் வர, இப்பொழுது அவன் விலகியவாறு அவளை நோக்கி இடதுபுற உதடு வளைய சிரித்தான்.
அவனின் சிரிப்பினை புரியாமல் அவள் பார்க்க , "என்னோட யோசனை சரினா.. நீ இதுவரைக்கும் என்னையும் அவளையும் சேர்த்து கூட பார்த்திருக்க மாட்ட. நான் இப்போ சொல்லலைன்னா உனக்கு இது சரியாக கூட தெரிஞ்சு இருக்காது . நான் அவளை எப்படி பாக்குறேன்... இனிமே இப்படி பார்ப்பேன்... அவ என்ன எப்படி பார்த்தா... இது எதுவும் தெரியாது. ஏன் இப்ப நான் உன் கிட்ட சொல்ல வருவதை கூட நீ முழுசா கேட்கல. ஆனா அதுக்குள்ள சந்தேகம் ....நைஸ்... சூப்பர்... பென்டாஸ்டிக்" என ரத்தம் கசியும் கையையும் பொருட்படுத்தாமல் கை தட்டினான்.
அவனின் உரத்த கேள்வியில் தவறு செய்த குழந்தையாய் அவள் திருத்திருக்க , அந்நிலையிலும் அவளை அள்ளி அணைத்திடவே அவன் நெஞ்சம் விரும்பியது.
எப்படி ஆரம்பித்தது இந்த நாள்.. தன் காதலைச் சொல்லி அவளுடன் எப்படி எல்லாம் பேச வேண்டும் என எத்தனை முறை சிந்தித்து தனக்கு தானே சிரித்த நொடிகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனிற்கு அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் போக விலகியவன் அவளை திரும்பி பார்க்கவேண்டுமென தோன்றிய உணர்வில் மறுபடியும் வந்தவன் அங்கிருந்த அலைபேசியை கண்டு அதை எடுத்தவாறு வெளியேறினான்.
சித்ராங்கதாவோ, அவனின் காதல் தனக்கு இல்லையோ என மனதில் எழுந்த சிறுகுழப்பத்தில் மிக இலகுவாய் பேசவேண்டியவற்றை , தனக்கு வேண்டியதை பிறர் பறித்துவிடுவாரோ என அவசரம் கொள்ளும் குழந்தையாய் செயல் பட்டு அவர்களின் உணர்வலையை அறுத்தவள், அவனின் விலகலையும் தாங்க முடியாமல் அழுதவாறே வெளியேறினாள்.
வலியே என்
உயிர் வலியே நீ
உலவுகிறாய் என்
விழி வழியே சகியே
என் இளம் சகியே உன்
நினைவுகளால் நீ
துரத்துறியே மதியே என்
முழு மதியே பெண் பகல்
இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே
மனம் மனம்
எங்கிலும் ஏதோ கனம்
கனம் ஆனதே தினம்
தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா முழுமையாய்...
நானோ வெறுமையாய்..
நாமோ இனி சேர்வோமா...
யாரோ மனதிலே
ஏனோ கனவிலே நீயா
உயிரிலே தீயா தெரியலே
மிக மிகக்
கூர்மையாய் என்னை
ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள்
வசித்தது உன் வாா்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளை
மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா நானும்
வெறும் கானலா
குழப்பத்துடன் கோவிலில் இருந்து கிளம்பிய சித்ராங்கதா சிறிது நேர பயணத்தில் அந்த இடத்திற்கு வந்திருக்க, கதவை திறந்து செல்லும் பொழுதே டப்ப் என்ற ஓசை கேட்க அடுத்த நொடி இடது கையை கன்னத்தில் வைத்தவாறு முழித்தாள் .
"யாருடா அந்த பயபுள்ள... இப்படி அடிவாங்குவது. சத்தத்தை கேட்டதுக்கே எனக்கு காது கிழியுதே" என அடித்தவனை எட்டிப்பார்த்தாள்.
"ஆத்தாடி! இது நம்ம ரவுடி பேபி போல இருக்கே, எதுக்கும் கொஞ்சம் கிட்ட போய் பார்ப்போம் " என கால் எடுத்து வைத்தவள், அடுத்து அடுத்தவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்ததை பார்த்து விட்டு, "ரைட்டு! இனி டௌட்டே வேணாம் இது நம்ம ஆளு தான்.இவருக்கு போலீஸ் ட்ரைனிங்ல என்ன கத்துக் கொடுத்தாங்களோ இல்லையோ ஆனாவூனா துப்பாக்கிய தூக்க சொல்லிக்கொடுத்து இருக்காங்க போல" என மனதில் கவுண்டர் அடித்தாள்.
இத்தனை நேரம் மனதில் இருந்த குழப்பம் அனைத்தும் அவனை கண்ட நொடியில் கரைவதாய்
உணர்ந்தாள்.
அதன் பிறகு அவனை ஜொல்லியவாறு வாயிலிலேயே நின்று கொண்டிருக்க, சிறிது நேரம் பிறகு அதைக் கண்ட ஜிஷ்ணு சிரித்தவாறே அவளைக் கூட்டிச் சென்றான்.
அவனின் அதிரடியிலே மயங்கும் அவள், அவனின் அத்தி பூத்தார் போன்ற இவ்வசியம் செய்யும் சிரிப்பில் மொத்தமாய் சறுக்கினாள்.
எவ்வளவு நேரம் சென்றதோ ,அவளின் ரசிப்பை ரசித்தவன் "பேபி போதும்டி இது பப்ளிக் பிளேஸ் உன் மச்சான் ஒரு போலீஸ்னு மறந்துடாத" என்றான் .
அசடு வழிய, "ஏதோ பேசணும்னு சொன்னீங்க வந்து ஒரு மணி நேரம் ஆகுது" என சமாளித்த அவளுக்கு அப்பொழுதுதான் தான்கேட்க வேண்டியது எல்லாம் நினைவுக்கு வந்தன.
இத்தனை நேரம் அவளை ரசித்தவாறு அமர்ந்திருந்தவன், அவளின் கேள்வியில் காதலை சொல்லும் தருணம் வந்ததும் சிறிது படபடத்தான்.
"முதல்ல ....அது...எனக்கு ...நான் .. அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு " என இருபது பேரை ஒரே நேரத்தில் அசால்டாய் சமாளிப்பவன் காதலை சொல்ல தடுமாறினான்.
அவன் தடுமாற்றத்தில் அவன் சொல்ல வருவதை உணர்ந்தவள் அது சரிதானா என அறிவதற்கு இதற்கு முன் தனக்கு தோன்றிய கேள்விகளை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் எனத் தவறாக முடிவு எடுத்தாள்.
ஆழமூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஜிஷ்ணு, "பேபி ...ஐ "என சொல்வதற்கும்
சித்ராங்கதா," நீங்க எனக்காகவா தினம் காலேஜ் வந்தீங்க" என கேட்டிருந்தாள்.
காதலை சொல்ல வந்தவன் அவளின் திடீர் கேள்வியை புரியாமல் பார்க்க,
அதை உணர்ந்த சித்ராங்கதா,"இல்லை, நீங்க போலீஸ்தான. போலீஸ்க்கு எப்பவும் வேலை இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, நீங்க எங்க காலேஜ் வாசலில் வாட்ச்மேன் வேலை தானே பார்த்தீங்க" என தனது கேள்வியை விளையாட்டாய் கேட்டவளின் மனமோ, "உன்னை பார்க்கத்தான் வந்தேன் பேபினு சொல்லுடா" என வேண்டியது.
ஜிஷ்ணு அனைவரிடமும் அழுத்தமாய் தன்னை காட்டிக் கொண்டாலும் அதை உடைத்து அவனை பாசமான தந்தையாகவும், அடம்பிடிக்கும் குழந்தையாகவும் மாற செய்தவள் மித்ராளினியே. அவளைத் தவிர வேறு ஒருவரிடம் அவன் அப்பரிமாணத்தை வெளிப்படுத்துவான் என்றால் அது சித்ராங்கதா மட்டுமே.
அவள் தன் கேள்வியை விளையாட்டாய் கேட்டிருக்க, இவனும் தன் காதலை சொல்லப் போகும் தருணத்தில் கொண்ட பரபரப்பில் அதை, அவளின் மனதின் வேண்டுதலை உணராமல் "பேபி அது நான் பாப்பாவ ட்ராப் பண்ண வந்தேன்டா... ஆஹாஹா.... அதுக்கு நீ என்ன வாட்ச்மேன் ஆகிட்டியா" என சிரித்தான்.
" பாப்பா...வா..." என சித்ராகதாவின் குரல் தந்தியடிக்க,
"ஹான் எப்பவும் வெளியே அப்படி சொல்லியே பழக்கம் ஆகிடுச்சு. ஆக்ஷுயலா நானே உன்கிட்ட அவளை அறிமுக படுத்தனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள என்னன்னவோ ஆகிடிச்சி ம்ம்ம்ம் ...அவ தான் என்னோட உயிர், என் தேவதை, சின்னதுல இருந்து எப்பவும் என்னோடவே இருக்கிறவ , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பேபி. உனக்கு கூட தெரிஞ்சு இருக்கும் உன் காலேஜ் தான, அவளை கூட்டிட்டு போறதுக்கும் விடுவதற்காகவும் தான் உன் காலேஜ்க்கு வருவேன் அண்ட் அதுனால தான உன்னையும் பார்த்தேன்" என இத்தனை நாளாய் பேசாததற்கும் சேர்த்து அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக, எதிரிலிருந்தவள் சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தாள்.
"அப்போ இவர் எனக்கானவர் இல்லையா ? அன்னிக்கு என்னை பார்க்கும் போது காதல் தெரிஞ்சுதே அது எனக்கானது இல்லையா ? இல்ல அது என் கற்பனையா ? நான் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுகிட்டேனா? அப்போ... அப்போ...என் காதல் தப்பானதா?எனவும்...
இல்லை கீர்த்தி சொன்னமாதிரிலாம் இருக்காது ...ஆமா இருக்காது..இவர் என்னுடையவர், என்னோட ரவுடி பேபி தான்" என உள்ளுக்குள் ஒரு வாதத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.
சித்ராங்கதாவின் முகத்தை பார்த்த ஜிஷ்ணு தன் பேச்சை நிறுத்தி,"பேபி என்னாச்சுடா? ஏன் உன் முகம் இவ்வளவு வலியை காட்டுது" என பதறினான்.
"தான் சொல்லாமலே தன் முகம் பார்த்து வலியை உணரும் அவனை எண்ணி பெருமைப்படுவதா? இத்தனை நாள் போல் இல்லாமல் இடைவிடாமல் அவன் பேச அதில் சந்தோஷப்படுவதா? இல்லை தான் எண்ணியது அனைத்தும் பொய்யாய்ப் போக அவன் தனக்கு இல்லை என்பதில் அழுவதா" என எந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவது என அறியா பிள்ளையாய் கண்கள் கலங்க விழித்தாள்.
இவளின் முகம் காட்டும் உணர்வுதனில் அவனின் மனம் கசங்க எழுந்து அவளருகில் அமர்ந்து, "என்ன ஆச்சு பேபி ! சொல்லுடா "என கேட்க அந்த கேள்வி அவளின் காதில் விழவேயில்லை.
அவள் கவனம் முழுக்க டேபிளில் வைத்து இருந்த அவனின் தொலைபேசியின் ஒளியில் தெரிந்த எண்ணிலே இருந்தது.
ஜிஷ்ணு மொபைலை சைலன்டில் போட்டிருக்க, சத்தமில்லாததில் அவன் அதை கவனிக்காமல் இருக்க, அதற்குள் அவன் அலைபேசி மூன்று நான்கு முறை கிறுகிறுத்து அடங்கியது .
அதில் அவன் மித்ராளினிக்கு புதிதாய் வாங்கி கொடுத்த அலைபேசியின் எண் ஒலிக்க, திரையில் (என் உயிரானவள்)மித்துமா என இருந்தது .
அதை பார்க்க பார்க்க தன் காதல் ஒன்றுமில்லாததாய் தோன்ற, ஜிஷ்ணுவின் குரல் அவளின் செவியில் கேட்காமல் போக, சித்ராங்கதாவின் மனதின் குரல் அதிகமாய் கூக்குரலிட்டது .
"இவன் உனக்கானவன் இல்லை வேறுஒருவருக்கு சொந்தமானவன். நீ போ இங்கிருந்து . அவன் சித்ராங்கதாவிற்கானவன் இல்லை அவன் மித்ராளினியின் முறைமகன் " என சத்தமிட அதற்கு மேல் அதை கேட்க முடியாதவள், காதை பொத்தியவாறே " இல்லை... நீ... நீங்க... எனக்கு வேணாம்... எனக்கு... வேணாம்.." என கத்தினாள்.
அவள் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதில் ஜிஷ்ணு புரியாமல் அவளை பார்க்க, அவளோ "வேண்டாம் ..போங்க... போயிருங்க... நான் உங்களுக்கு ஒண்ணுமே இல்ல தானே போங்க" என கத்த,
அவன் " பேபி மா "என் அருகில் வர,
"வராதீங்கனு சொல்றேன்ல... போயிருங்க ...போங்க.."என அவள் கூச்சலிட்டதும் தான் அவனும் சுற்றுபுறம் உணர்ந்து பார்த்தான்.
அங்கிருந்த அனைவரும் இவர்களை வேடிக்கை பார்ப்பது அறிந்து சற்று இறுக்கமாய் உணர்ந்தவன், ஆயினும் காரணம் புரியவில்லை எனினும் கதறிக் கொண்டிருக்கும் தன்னவள் மட்டுமே முக்கியமாய் பட்டதில் முதலில் அவளை அமைதிப்படுத்த தண்ணீர் இருந்த கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு கதறி கொண்டிருப்பவளை, "பேபி" என அழைக்க,
தன் காதல் பொய்யாய் போனதாய் தப்பாய் புரிந்துகொண்டவள் அதன் கனத்தை தாங்கமுடியாததால் சரியாய் யோசிக்கமுடியாமல் போக, பாய்ந்து அவன் சட்டையை இரு கைகளாலும் பற்றி," ஏன் மச்சான் இப்படி சொன்னீங்க? அப்போ நீங்க எனக்காக வரலையா? அப்போ நான் உங்களுக்கு முக்கியம் இல்லையா? என மீண்டும் மீண்டும் அதையே கேட்டவாறு இருந்தாள்.
அப்பொழுதுதான் சிக்கலின் நுனியை கண்டுகொண்ட ஜிஷ்ணு, "இல்ல டா பேபி "என ஆரம்பிக்க,
அவனை பேசவிடாமல்," வேணாம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். உங்க உயிரானவங்ககிட்டயே போங்க. அவங்க தான உங்களுக்கு முக்கியம்ல போயிடுங்க" என கத்த இவ்வளவு நேரம் காதலர்களின் சண்டையை சுவாரஸ்யமாய் பார்த்தவர்கள் இப்போது இன்னும் ஆர்வமாய் பார்க்க,
ஏற்கனவே இந்நிலையில் சிறிது இறுக்கமடைந்திருந்தவன் சித்ராங்கதாவின் தற்போதைய பேச்சில் இன்னும் இறுக கோபத்தை அடக்கும் வழி அறியாமல் கையில் இருந்த கண்ணாடி தம்ளரை கைகளால் இறுக்கி உடைத்தான் .
உடைத்த பின்பும் கோபம் அடங்காமல் போக மேலும் கைகளை இறுக்க உடைந்த கண்ணாடித் துண்டுகள் அவனின் கையை கிழித்து , ரத்தம் வேகவேகமாய் அத்துண்டுகளை அலங்கரித்தது.
இதை கண்டு சித்ராங்கதா பதறி அருகில் வர, இப்பொழுது அவன் விலகியவாறு அவளை நோக்கி இடதுபுற உதடு வளைய சிரித்தான்.
அவனின் சிரிப்பினை புரியாமல் அவள் பார்க்க , "என்னோட யோசனை சரினா.. நீ இதுவரைக்கும் என்னையும் அவளையும் சேர்த்து கூட பார்த்திருக்க மாட்ட. நான் இப்போ சொல்லலைன்னா உனக்கு இது சரியாக கூட தெரிஞ்சு இருக்காது . நான் அவளை எப்படி பாக்குறேன்... இனிமே இப்படி பார்ப்பேன்... அவ என்ன எப்படி பார்த்தா... இது எதுவும் தெரியாது. ஏன் இப்ப நான் உன் கிட்ட சொல்ல வருவதை கூட நீ முழுசா கேட்கல. ஆனா அதுக்குள்ள சந்தேகம் ....நைஸ்... சூப்பர்... பென்டாஸ்டிக்" என ரத்தம் கசியும் கையையும் பொருட்படுத்தாமல் கை தட்டினான்.
அவனின் உரத்த கேள்வியில் தவறு செய்த குழந்தையாய் அவள் திருத்திருக்க , அந்நிலையிலும் அவளை அள்ளி அணைத்திடவே அவன் நெஞ்சம் விரும்பியது.
எப்படி ஆரம்பித்தது இந்த நாள்.. தன் காதலைச் சொல்லி அவளுடன் எப்படி எல்லாம் பேச வேண்டும் என எத்தனை முறை சிந்தித்து தனக்கு தானே சிரித்த நொடிகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனிற்கு அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் போக விலகியவன் அவளை திரும்பி பார்க்கவேண்டுமென தோன்றிய உணர்வில் மறுபடியும் வந்தவன் அங்கிருந்த அலைபேசியை கண்டு அதை எடுத்தவாறு வெளியேறினான்.
சித்ராங்கதாவோ, அவனின் காதல் தனக்கு இல்லையோ என மனதில் எழுந்த சிறுகுழப்பத்தில் மிக இலகுவாய் பேசவேண்டியவற்றை , தனக்கு வேண்டியதை பிறர் பறித்துவிடுவாரோ என அவசரம் கொள்ளும் குழந்தையாய் செயல் பட்டு அவர்களின் உணர்வலையை அறுத்தவள், அவனின் விலகலையும் தாங்க முடியாமல் அழுதவாறே வெளியேறினாள்.
வலியே என்
உயிர் வலியே நீ
உலவுகிறாய் என்
விழி வழியே சகியே
என் இளம் சகியே உன்
நினைவுகளால் நீ
துரத்துறியே மதியே என்
முழு மதியே பெண் பகல்
இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே
மனம் மனம்
எங்கிலும் ஏதோ கனம்
கனம் ஆனதே தினம்
தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா முழுமையாய்...
நானோ வெறுமையாய்..
நாமோ இனி சேர்வோமா...
யாரோ மனதிலே
ஏனோ கனவிலே நீயா
உயிரிலே தீயா தெரியலே
மிக மிகக்
கூர்மையாய் என்னை
ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள்
வசித்தது உன் வாா்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளை
மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா நானும்
வெறும் கானலா