நினைவில் தத்தளிக்கும் நேசமது 23 :
எத்தனை இடர்பாடு வந்தாலும் தன் சிரிப்பால் அதை கடந்து செல்லும் சித்ராங்கதா தன் காதலின் நிலைபாடை அறிய முடியா குழப்பத்தில் சிக்கி அதன் மூலம் தன்னை மட்டுமல்லாமல், தன்னவனையும் துயரத்தில் தொலைத்துவிட்டாள்.
தன் துயரில் மித்ராளினியையும், மித்ரேந்தரையும் மறந்து தன்போக்கில் நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் இப்போது கண்ணீரின் சாயல் துளியும் இல்லை.
கைகளால் தன்னைத்தானே இறுக்கியவாறு நடந்து கொண்டிருந்த அவளின் முகமும் அதற்கு ஈடாக இறுகி இருக்க மனமோ நினைவுகளிடம் ஆறுதல் தேடி ஓடியது.
இவள் தன்னை மறந்து ஜிஷ்ணுவை நினைத்துகொண்டிருக்க , இவளுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற படபடப்பில் இருந்தான் ஜிஷ்ணு.
இத்தனை நேரமாய் அவள் நடந்து கொண்ட விதத்தில் கோபமாய் இருந்தவன் இப்போது தன்னை தானே திட்டிக் கொண்டான் .
"எல்லாமே என் தப்புதான்.. எப்படி இருந்திருக்க வேண்டிய நாள்?? எப்பவும் நான்தான் ஓவரா பண்ணுவன் அவ அதை எவ்வளவு அழகா சிரிச்சுக்கிட்டே ஒன்னும் இல்லாம பண்ணுவா.
இன்னைக்கு ஏதோ குழப்பத்துல அவ அப்படி நடந்துகிட்டானா நானும் கோபப்பட்டு ச்சே" என கைக்கொண்டு ஸ்டியரிங்கில் குத்தியவன் ,
"ஏழுகுண்டலவாடா நீ தான் என் பேபிக்கு துணையா இருக்கணும். ப்ளீஸ் என் பேபிக்கு எதுவும் ஆகக்கூடாது, அவ குழந்தை மாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் அவள போய் அழ வச்சுட்டேன்" என அந்த கடவுளிடம் வேண்டிக் கொண்டும் தனக்குத்தானே புலம்பிக் கொண்டும் வந்த ஜிஷ்ணுவின் கரங்கள் சித்ராங்கதாவை தேடி வண்டியை செலுத்தினாலும் அவனின் மனம் அவளுடன் கழித்த நாட்களை நோக்கி ஓடியது.
--------------------------------------------------------------------------------
தங்கள் முன் மூச்சுவாங்க நின்றிருந்த அந்த பாதுகாவலரை கண்ட விஷ்வா, "என்னாச்சு?? ஏன் இவ்வளவு அவசரம்??" என கேட்க,
"சார் ...சார் ....உங்க... உங்ககூட நீங்க கூட்டிட்டு வந்தவங்களுக்கு ஆக்சிடென்ட் சார் " என படபடப்பாக சொன்னான் .
அவன் சொன்ன செய்தியில் இருவரும் அதிர்ந்தாலும் முதலில் சுதாரித்த ஷாலினி," அண்ணா ! என்ன சொல்றீங்க? யாருக்கு என்னாச்சி ? நிதானமா என்ன விஷயம்னு சொல்லுங்கள் " என தெளிவு படுத்திக்கொள்ள கேட்டாள்.
"இல்லைமா ..நம்ப விஷ்வேந்தர் சார்க்கு பாதுகாப்புக்கு என்னை நியமித்த ஜித்தேந்தர் சார் அவரோட கூட ஒருத்தங்க வர போறதாவும் அவங்க பாதுகாப்பிற்கும் ஒருத்தரை ஏற்பாடு பண்ண சொல்லியிருந்தார்மா. அவன் வழக்கம் போல இன்னிக்கும் அவங்களை தொடர அங்கு ஏதேதோ ஆகிபோய்ச்சிமா .அவன் சுதாரிக்கிறதுக்கு முன்னாடியே விபத்து ஆகி இரண்டு பேர் அவங்கள ஆஸ்பத்திரிக்கு தூக்கிகிட்டு போய்ட்டதாவும் இப்போ தான்மா சொன்னான் " என்று கடகடவென தனக்கு தெரிந்த தகவல்களை ஒப்பித்தார் பாதுகாவலர் .
ஷாலினி ஏதோ பேச வர இடையிட்ட விஷ்வா, " ஷாலினி ! விசாரணைக்கு இப்போ டைம் இல்ல . சார் நீங்க போய் வண்டியை எடுங்க "என தன் வழக்கத்துக்கு மாறாய் மிகவும் படபடத்து பேசிய விஷ்வா காரை நோக்கி செல்ல, ஷாலினியும் அவனை தொடர்ந்தாள்.
முடிந்த அளவு அவர் காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தார். பின்சீட்டில் அமர்ந்திருந்த ஷாலினிக்கும் இந்த செய்தி அதிர்ச்சியை அளித்திருந்தாலும் , எதையும் பேசாமல் ஒருவித பரிதவிப்புடன் அமர்ந்திருந்த விஷ்வாவின் நிலையில் , அதில் தெரிந்த அலைபுறுதலில் அதற்குமேல் அமைதியாய் வர அவளால் முடியவில்லை.
முன்னிருப்பவர்க்கு கேட்காத வண்ணம் குரலைத் தாழ்த்தியவள், " என்னடா ! இப்படி ஆயிடுச்சுனு எனக்கும் கவலையா தான் இருக்கு, ஆனால் தயவு செஞ்சு இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்காதடா, அத என்னால பார்க்க முடியால. அவங்களுக்கு எதுவும் ஆகாது ...ஆகவும் கூடாது ... அதுவும் இன்னிக்குதான் பெரியத்தான் " என ஆரம்பித்தவள் அதை நிறுத்தி ,
"நீதான சொன்ன அவங்க உன் ஏஞ்சல்னு. ஏஞ்சல்லுக்கு பிரச்சினை வரும் ஆனால் ஆபத்து வருமா" என சிறு குழந்தையை சமாதானம் செய்வது போல சொல்ல அவளின் கைகளை தன் கைகளில் பொத்தி கொண்ட விஷ்வாவின் உள்ளங்கைகள் இரண்டும் அத்தனை ஜில்லிட்டிருக்க அவனும் வியர்த்திருந்தான் .
சிறு குழந்தை என அவளின் கைகளை இறுக்கமாக பற்றியபடி அவளின் முகம் பார்த்து " எனக்கு பயமாயிருக்கு ..அவங்களுக்கு எதுவும் ஆகாது தான ... எதுவும் ஆகக்கூடாது ஆமா எதுவும் ஆகக்கூடாது, அவங்களுக்கு எதுவும் ஆகாது என மீண்டும் மீண்டுமாய் நிலை இல்லாமல் புலம்ப, அவனின் நிலை கண்டு என்ன செய்வது என அறியாமல் தவித்து போனாள்.
" அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்க " என முன்னிருப்பவரை துரித படுத்தியவளை பார்த்த விஷ்வா தொடர்ந்து, " உனக்கு தெரியாது என் வாழ்க்கையில் நடந்த நிறைய விஷயங்கள் உனக்கு தெரியாதுடி. நான் அவங்கள சும்மா பேச்சுக்கு ஏஞ்சல்னு சொல்லலை . என் வாழ்க்கையோட மோசமான பக்கங்களை அழிச்சி எனக்கு என்னோட வாழ்க்கையை சரிப்படுத்தி தந்த தேவதைடி அவங்க. அவங்கள போய் சந்தேகப்பட்டியேனு தான் எனக்கு கோபம். சொல்லுடி அவங்களுக்கு எதுவும் இல்லை தான " என மாற்றி மாற்றி சொல்லி தன்னுள் புதைத்திருந்த விஷயங்களை சிறிது சிறிதாக வெளிக்கொணர ஆரம்பித்தான் .
தன் காதல் , தன் வாழ்வின் மறக்க வேண்டிய நாட்கள் , மித்ராளினியின் வருகை அவன் வாழ்வை மாற்றியது என ஒவ்வொரு நிகழ்வுகளாய் தன் வாழ்வை பின்னோக்கிச் சென்று ஷாலினியிடம் கூற ஆரம்பிக்க, அவளும் அவன் சொல்லும் நிகழ்வுகளை காட்சிப்படுத்தி , அச்சூழல்களில் தன் நிலைப்பாடுகளை நோக்கி தன் நினைவை செலுத்தினாள்.
--------------------------------------------------------------------------------
மித்ராளினி ஜித்தேந்தரை பிரிந்து ஆறு மாதங்கள் தான் கடந்திருந்தது , ஆனால் சென்றது வெறும் ஆறு மாதங்கள் தானா இல்லை வருடங்கள் ஆயினவா என தோன்றக் கூடிய அளவு இந்த நிமிடம் வரை ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் வேண்டுவதை கண்டு விடுவோமோ என்ற ஆர்வத்திலும், முடிவில் ஏமாற்றத்தையும் சுமந்து கொண்டு சென்ற இரவுகளையும் சந்தித்த ஜித்தேந்தருக்கு இந்த நிமிடம் அத்தனை அர்த்தம் நிரம்பியதாக இருந்தது .
நீண்ட நெடிய இடைவெளியாய் தோன்றிய நாட்களுக்குப் பிறகு கண்டுகொண்ட அவனின் இதய ராணி அவனின் நெஞ்சில் முத்தமிட்ட அத்தருணம் அவனின் மனம் அமைதியாய் இதுவரை அனுபவித்த துயர் நீங்கி அந்த உணர்வை மட்டும் ஆழ்ந்து அனுபவித்து .
தன் சிம்மாசனத்தை மீண்டுமாய் ஆக்கிரமித்து அது என்றும் எனது என்பது போல் அவனின் நெஞ்சமதில் இதழ்பதித்துக்கொண்டிருந்த மித்ராளினிக்கு , நடுக்கடலில் மூழ்கி மூச்சுவிட முடியாமல் தத்தளித்து இறுதியில் நலமாய் கரை சேர்ந்தது போல் ஒரு எண்ணம்.
தன் சுயம் அறியா நிலையிலும் அவளால் தன் உயிர் அறியமுடிந்ததே அவளின் காதலின் ஆழமற்கு அத்தாட்சி. இந்த நொடி வரை அவளின் நினைவில் எதுவும் மாற்றம் இல்லை. ஆனால் அவள் மனமோ இந்த சிம்மாசனம் உனக்கே உனக்கானது எனக் கட்டியம் கூறியதில் மேலும் அவனிடம் ஒன்றியவள் இன்னும் அழுத்தமாய் தன் இதழ் பதித்தாள் .
அவளின் செயலில், உடல் முழுக்க ஏற்பட்டிருந்த காயத்தின் விளைவாய் வெளிப்பட்ட சிறு வலி கூட காணாமல் போக, ஜித்தேந்தரின் உதடுகள் இரண்டும் அழகாய் புன்னகைத்தன .
உடலின் கடைசி துளி ரத்தம் வற்றும்வரை எத்தனை வலி இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் கண்களில் சிறு தூசியும் படாமல் காக்கும் ஆண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தன் மனதில் உள்ள பாசத்தை வெளிப்படுத்த அறியாமல் இருக்கலாம், அதற்காக அவர்கள் பாசம் இல்லாதவர்கள் அல்ல .
அவர்களில் ஒருவனாய் இருந்த ஜித்தேந்திருக்கு உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு ஆடை முழுவதும் அவன் மற்றும் மித்ராளினியின் இரத்தத்தில் நனைந்து இருந்ததை உணர்ந்தவனுக்கு தனக்கு ஏற்பட்ட காயங்களை விட தன்னவளுக்கு ஏற்பட்ட காயமும் , தன்னால் அவளையும் தங்கள் பிள்ளையையும் காக்கமுடியவில்லையே என்ற எண்ணமே அதிக வலியை கொடுத்தது.
கண்களைமூடியபடியே, சிறிது நகர்த்தினால் கூட உயிர் போகும் வலியை கொடுத்த வலது கையில் தன் மகனை சமாதானப்படுத்துவதற்காக மெதுவாய் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவனின் வருடலில் மித்ரேந்தர் அமைதியாக, மித்ராளினியும் தன்னிடம் சேர்ந்ததில் அந் நிமிட சந்தோஷத்தை அனுபவித்தபடி தன் வலி உணராமல் அமைதியாய் இருந்தாள்.
முன்புற கண்ணாடியில் இவர்களை கண்ட ஜிஷ்ணு அமைத்த பாதுகாவலருக்கு, மித்ராளினி குழந்தையை அணைத்திருக்க இருவரையும் சேர்ந்தாற்போர் அணைத்து தலையில் இருந்து வந்த ரத்தம் கழுத்துமுழுக்க வழிய அமர்ந்திருந்த ஜித்தேந்தரை கண்டு கண்கள் கலங்கியது.
அந்த கார் அவர்களின் மருத்துவமனை நோக்கி பயணபட, ஜித்தேந்தரின் மனமோ தன்னவளுடன் இருந்த தன் வாழ்வின் பொக்கிஷநாட்களை நோக்கி பயணப்பட ஆரம்பிக்க , மித்ராளினியின் ஆழ்மனமும் அவனுடன் சேர்ந்து சென்றது.
இத்தனை நாட்கள் நினைவலை (ஜித்தேந்தர்- மித்ராளிணி), உயிர் அலை (விஷ்வேந்தர்- ஷாலினிவர்தன்), உணர்வலை (ஜிஷ்ணு- சித்ராங்கதா) என தனித்தனியாக தத்தளித்துக் கொண்டிருந்த இந்த அறுவரது மனங்களும் தற்பொழுது தத்தமது "நினைவில் தத்தளிக்கும் நேசமது"வை (நேசம்+அது)தேடி ஒன்றாய் பயணித்தது.
எத்தனை இடர்பாடு வந்தாலும் தன் சிரிப்பால் அதை கடந்து செல்லும் சித்ராங்கதா தன் காதலின் நிலைபாடை அறிய முடியா குழப்பத்தில் சிக்கி அதன் மூலம் தன்னை மட்டுமல்லாமல், தன்னவனையும் துயரத்தில் தொலைத்துவிட்டாள்.
தன் துயரில் மித்ராளினியையும், மித்ரேந்தரையும் மறந்து தன்போக்கில் நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் இப்போது கண்ணீரின் சாயல் துளியும் இல்லை.
கைகளால் தன்னைத்தானே இறுக்கியவாறு நடந்து கொண்டிருந்த அவளின் முகமும் அதற்கு ஈடாக இறுகி இருக்க மனமோ நினைவுகளிடம் ஆறுதல் தேடி ஓடியது.
இவள் தன்னை மறந்து ஜிஷ்ணுவை நினைத்துகொண்டிருக்க , இவளுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற படபடப்பில் இருந்தான் ஜிஷ்ணு.
இத்தனை நேரமாய் அவள் நடந்து கொண்ட விதத்தில் கோபமாய் இருந்தவன் இப்போது தன்னை தானே திட்டிக் கொண்டான் .
"எல்லாமே என் தப்புதான்.. எப்படி இருந்திருக்க வேண்டிய நாள்?? எப்பவும் நான்தான் ஓவரா பண்ணுவன் அவ அதை எவ்வளவு அழகா சிரிச்சுக்கிட்டே ஒன்னும் இல்லாம பண்ணுவா.
இன்னைக்கு ஏதோ குழப்பத்துல அவ அப்படி நடந்துகிட்டானா நானும் கோபப்பட்டு ச்சே" என கைக்கொண்டு ஸ்டியரிங்கில் குத்தியவன் ,
"ஏழுகுண்டலவாடா நீ தான் என் பேபிக்கு துணையா இருக்கணும். ப்ளீஸ் என் பேபிக்கு எதுவும் ஆகக்கூடாது, அவ குழந்தை மாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் அவள போய் அழ வச்சுட்டேன்" என அந்த கடவுளிடம் வேண்டிக் கொண்டும் தனக்குத்தானே புலம்பிக் கொண்டும் வந்த ஜிஷ்ணுவின் கரங்கள் சித்ராங்கதாவை தேடி வண்டியை செலுத்தினாலும் அவனின் மனம் அவளுடன் கழித்த நாட்களை நோக்கி ஓடியது.
--------------------------------------------------------------------------------
தங்கள் முன் மூச்சுவாங்க நின்றிருந்த அந்த பாதுகாவலரை கண்ட விஷ்வா, "என்னாச்சு?? ஏன் இவ்வளவு அவசரம்??" என கேட்க,
"சார் ...சார் ....உங்க... உங்ககூட நீங்க கூட்டிட்டு வந்தவங்களுக்கு ஆக்சிடென்ட் சார் " என படபடப்பாக சொன்னான் .
அவன் சொன்ன செய்தியில் இருவரும் அதிர்ந்தாலும் முதலில் சுதாரித்த ஷாலினி," அண்ணா ! என்ன சொல்றீங்க? யாருக்கு என்னாச்சி ? நிதானமா என்ன விஷயம்னு சொல்லுங்கள் " என தெளிவு படுத்திக்கொள்ள கேட்டாள்.
"இல்லைமா ..நம்ப விஷ்வேந்தர் சார்க்கு பாதுகாப்புக்கு என்னை நியமித்த ஜித்தேந்தர் சார் அவரோட கூட ஒருத்தங்க வர போறதாவும் அவங்க பாதுகாப்பிற்கும் ஒருத்தரை ஏற்பாடு பண்ண சொல்லியிருந்தார்மா. அவன் வழக்கம் போல இன்னிக்கும் அவங்களை தொடர அங்கு ஏதேதோ ஆகிபோய்ச்சிமா .அவன் சுதாரிக்கிறதுக்கு முன்னாடியே விபத்து ஆகி இரண்டு பேர் அவங்கள ஆஸ்பத்திரிக்கு தூக்கிகிட்டு போய்ட்டதாவும் இப்போ தான்மா சொன்னான் " என்று கடகடவென தனக்கு தெரிந்த தகவல்களை ஒப்பித்தார் பாதுகாவலர் .
ஷாலினி ஏதோ பேச வர இடையிட்ட விஷ்வா, " ஷாலினி ! விசாரணைக்கு இப்போ டைம் இல்ல . சார் நீங்க போய் வண்டியை எடுங்க "என தன் வழக்கத்துக்கு மாறாய் மிகவும் படபடத்து பேசிய விஷ்வா காரை நோக்கி செல்ல, ஷாலினியும் அவனை தொடர்ந்தாள்.
முடிந்த அளவு அவர் காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தார். பின்சீட்டில் அமர்ந்திருந்த ஷாலினிக்கும் இந்த செய்தி அதிர்ச்சியை அளித்திருந்தாலும் , எதையும் பேசாமல் ஒருவித பரிதவிப்புடன் அமர்ந்திருந்த விஷ்வாவின் நிலையில் , அதில் தெரிந்த அலைபுறுதலில் அதற்குமேல் அமைதியாய் வர அவளால் முடியவில்லை.
முன்னிருப்பவர்க்கு கேட்காத வண்ணம் குரலைத் தாழ்த்தியவள், " என்னடா ! இப்படி ஆயிடுச்சுனு எனக்கும் கவலையா தான் இருக்கு, ஆனால் தயவு செஞ்சு இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்காதடா, அத என்னால பார்க்க முடியால. அவங்களுக்கு எதுவும் ஆகாது ...ஆகவும் கூடாது ... அதுவும் இன்னிக்குதான் பெரியத்தான் " என ஆரம்பித்தவள் அதை நிறுத்தி ,
"நீதான சொன்ன அவங்க உன் ஏஞ்சல்னு. ஏஞ்சல்லுக்கு பிரச்சினை வரும் ஆனால் ஆபத்து வருமா" என சிறு குழந்தையை சமாதானம் செய்வது போல சொல்ல அவளின் கைகளை தன் கைகளில் பொத்தி கொண்ட விஷ்வாவின் உள்ளங்கைகள் இரண்டும் அத்தனை ஜில்லிட்டிருக்க அவனும் வியர்த்திருந்தான் .
சிறு குழந்தை என அவளின் கைகளை இறுக்கமாக பற்றியபடி அவளின் முகம் பார்த்து " எனக்கு பயமாயிருக்கு ..அவங்களுக்கு எதுவும் ஆகாது தான ... எதுவும் ஆகக்கூடாது ஆமா எதுவும் ஆகக்கூடாது, அவங்களுக்கு எதுவும் ஆகாது என மீண்டும் மீண்டுமாய் நிலை இல்லாமல் புலம்ப, அவனின் நிலை கண்டு என்ன செய்வது என அறியாமல் தவித்து போனாள்.
" அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்க " என முன்னிருப்பவரை துரித படுத்தியவளை பார்த்த விஷ்வா தொடர்ந்து, " உனக்கு தெரியாது என் வாழ்க்கையில் நடந்த நிறைய விஷயங்கள் உனக்கு தெரியாதுடி. நான் அவங்கள சும்மா பேச்சுக்கு ஏஞ்சல்னு சொல்லலை . என் வாழ்க்கையோட மோசமான பக்கங்களை அழிச்சி எனக்கு என்னோட வாழ்க்கையை சரிப்படுத்தி தந்த தேவதைடி அவங்க. அவங்கள போய் சந்தேகப்பட்டியேனு தான் எனக்கு கோபம். சொல்லுடி அவங்களுக்கு எதுவும் இல்லை தான " என மாற்றி மாற்றி சொல்லி தன்னுள் புதைத்திருந்த விஷயங்களை சிறிது சிறிதாக வெளிக்கொணர ஆரம்பித்தான் .
தன் காதல் , தன் வாழ்வின் மறக்க வேண்டிய நாட்கள் , மித்ராளினியின் வருகை அவன் வாழ்வை மாற்றியது என ஒவ்வொரு நிகழ்வுகளாய் தன் வாழ்வை பின்னோக்கிச் சென்று ஷாலினியிடம் கூற ஆரம்பிக்க, அவளும் அவன் சொல்லும் நிகழ்வுகளை காட்சிப்படுத்தி , அச்சூழல்களில் தன் நிலைப்பாடுகளை நோக்கி தன் நினைவை செலுத்தினாள்.
--------------------------------------------------------------------------------
மித்ராளினி ஜித்தேந்தரை பிரிந்து ஆறு மாதங்கள் தான் கடந்திருந்தது , ஆனால் சென்றது வெறும் ஆறு மாதங்கள் தானா இல்லை வருடங்கள் ஆயினவா என தோன்றக் கூடிய அளவு இந்த நிமிடம் வரை ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் வேண்டுவதை கண்டு விடுவோமோ என்ற ஆர்வத்திலும், முடிவில் ஏமாற்றத்தையும் சுமந்து கொண்டு சென்ற இரவுகளையும் சந்தித்த ஜித்தேந்தருக்கு இந்த நிமிடம் அத்தனை அர்த்தம் நிரம்பியதாக இருந்தது .
நீண்ட நெடிய இடைவெளியாய் தோன்றிய நாட்களுக்குப் பிறகு கண்டுகொண்ட அவனின் இதய ராணி அவனின் நெஞ்சில் முத்தமிட்ட அத்தருணம் அவனின் மனம் அமைதியாய் இதுவரை அனுபவித்த துயர் நீங்கி அந்த உணர்வை மட்டும் ஆழ்ந்து அனுபவித்து .
தன் சிம்மாசனத்தை மீண்டுமாய் ஆக்கிரமித்து அது என்றும் எனது என்பது போல் அவனின் நெஞ்சமதில் இதழ்பதித்துக்கொண்டிருந்த மித்ராளினிக்கு , நடுக்கடலில் மூழ்கி மூச்சுவிட முடியாமல் தத்தளித்து இறுதியில் நலமாய் கரை சேர்ந்தது போல் ஒரு எண்ணம்.
தன் சுயம் அறியா நிலையிலும் அவளால் தன் உயிர் அறியமுடிந்ததே அவளின் காதலின் ஆழமற்கு அத்தாட்சி. இந்த நொடி வரை அவளின் நினைவில் எதுவும் மாற்றம் இல்லை. ஆனால் அவள் மனமோ இந்த சிம்மாசனம் உனக்கே உனக்கானது எனக் கட்டியம் கூறியதில் மேலும் அவனிடம் ஒன்றியவள் இன்னும் அழுத்தமாய் தன் இதழ் பதித்தாள் .
அவளின் செயலில், உடல் முழுக்க ஏற்பட்டிருந்த காயத்தின் விளைவாய் வெளிப்பட்ட சிறு வலி கூட காணாமல் போக, ஜித்தேந்தரின் உதடுகள் இரண்டும் அழகாய் புன்னகைத்தன .
உடலின் கடைசி துளி ரத்தம் வற்றும்வரை எத்தனை வலி இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் கண்களில் சிறு தூசியும் படாமல் காக்கும் ஆண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தன் மனதில் உள்ள பாசத்தை வெளிப்படுத்த அறியாமல் இருக்கலாம், அதற்காக அவர்கள் பாசம் இல்லாதவர்கள் அல்ல .
அவர்களில் ஒருவனாய் இருந்த ஜித்தேந்திருக்கு உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு ஆடை முழுவதும் அவன் மற்றும் மித்ராளினியின் இரத்தத்தில் நனைந்து இருந்ததை உணர்ந்தவனுக்கு தனக்கு ஏற்பட்ட காயங்களை விட தன்னவளுக்கு ஏற்பட்ட காயமும் , தன்னால் அவளையும் தங்கள் பிள்ளையையும் காக்கமுடியவில்லையே என்ற எண்ணமே அதிக வலியை கொடுத்தது.
கண்களைமூடியபடியே, சிறிது நகர்த்தினால் கூட உயிர் போகும் வலியை கொடுத்த வலது கையில் தன் மகனை சமாதானப்படுத்துவதற்காக மெதுவாய் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவனின் வருடலில் மித்ரேந்தர் அமைதியாக, மித்ராளினியும் தன்னிடம் சேர்ந்ததில் அந் நிமிட சந்தோஷத்தை அனுபவித்தபடி தன் வலி உணராமல் அமைதியாய் இருந்தாள்.
முன்புற கண்ணாடியில் இவர்களை கண்ட ஜிஷ்ணு அமைத்த பாதுகாவலருக்கு, மித்ராளினி குழந்தையை அணைத்திருக்க இருவரையும் சேர்ந்தாற்போர் அணைத்து தலையில் இருந்து வந்த ரத்தம் கழுத்துமுழுக்க வழிய அமர்ந்திருந்த ஜித்தேந்தரை கண்டு கண்கள் கலங்கியது.
அந்த கார் அவர்களின் மருத்துவமனை நோக்கி பயணபட, ஜித்தேந்தரின் மனமோ தன்னவளுடன் இருந்த தன் வாழ்வின் பொக்கிஷநாட்களை நோக்கி பயணப்பட ஆரம்பிக்க , மித்ராளினியின் ஆழ்மனமும் அவனுடன் சேர்ந்து சென்றது.
இத்தனை நாட்கள் நினைவலை (ஜித்தேந்தர்- மித்ராளிணி), உயிர் அலை (விஷ்வேந்தர்- ஷாலினிவர்தன்), உணர்வலை (ஜிஷ்ணு- சித்ராங்கதா) என தனித்தனியாக தத்தளித்துக் கொண்டிருந்த இந்த அறுவரது மனங்களும் தற்பொழுது தத்தமது "நினைவில் தத்தளிக்கும் நேசமது"வை (நேசம்+அது)தேடி ஒன்றாய் பயணித்தது.