அத்தம்மா கத்தி கொண்டு ஓடி வந்தது 23 வயது அழகிய தென்றல், பெயர் ஷாலினிவர்தன் அவள் நயன மொழி பேசும் நீள் விழிகளுக்கு சொந்தமானவள் அவள் இதழ்கள் ரோஜாவின் மென்மையை ஒத்ததாய் அழகிய சிரிப்புடன் விரிந்திருந்தது . (இந்த ஷாலினி தாங்க நம்ம விஷ்வாக்கு ஜோடியா வருவான்னு நினைக்கிறேன் ஆனா அவங்க எல்லோரும் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியலையே )
ஜித்தேந்தர் ஓட தாத்தா பொன்சக்கரவர்த்திக்கு ஒரு பையன் , ஒரு பொண்ணு .பையன் ரவி சக்கரவர்த்தி , பொண்ணு சாவித்திரி இவங்க ரெண்டு பேரும் சிவாஜி சாவித்திரி மாதிரி பாச மழையா பொழியலனாலும் , நம்ப கில்லி விஜய் ஜெனிபர் மாதிரி என்ன தான் அடிச்சுக் கிட்டாலும் உள்ளுக்குள்ள பாசம் அ்ளும் . ரவி சாருக்கும்- நாச்சியாருக்கும் கல்யாணம் நடந்த 2 வருடம் கழிச்சு சாவித்திரியை விரும்பி பெண் கேட்டு வந்த ருத்திரவர்தனுக்கு நிச்சயம் பண்ணி , இப்படி ஒரு கல்யாணத்தை பார்த்தது இல்லை என்று ஊரே வியக்கும் அளவுக்கு பொன் சக்கரவர்த்தி நடத்தினார் . ருத்திரன் வர்தனும் சாதாரண ஆளு இல்லை பொன் சக்கரவர்த்தி மாதிரி இந்திய அளவில் இல்லைனாலும் தமிழ்நாட்டுல பெரிய மரியாதையான பரம்பரை பணக்காரர்கள் தான்.
ருத்திர வர்தன்- சாவித்திரி வீடு இல்ல இல்ல மாளிகை சென்னை அண்ணா நகரில் இருக்கு . அவங்களோட ஒரே செல்ல புதல்வி ஷாலினிவர்தன். சென்னையின் புகழ்பெற்ற கம்பெனியில் வேலை பார்க்கிறாள் .அவ என்ன பண்றா என்ன பண்ண போறான்னு யாருக்குமே தெரியாது ஒரே ஒருத்தன தவிர .
அத்தம்மா கத்திக்கொண்டே வந்த ஷாலினி அவங்க கையில இருக்க குழந்தைய பார்த்து, அத்தம்மா யார் இந்த பாப்பா க்யூட் இருக்கான். அய்யோ இவன் தூக்கத்திலே சிரிக்கிறான் பாருங்களேன், செம்மையா இருக்கு கால் ,கை எல்லாம் எம்புட்டு குட்டியா red ஆ இருக்கு .அச்சோ சோ ஸ்வீட் அத்தம்மா. (விஷ்வாவுக்கு வாய்க்குறதுலாம் இப்படி தான் அமையுமோ கேப்பே விடாம பேசுது பாரு)
நாச்சியார் ,ஹேய் போதும்டி சின்ன குழந்தைங்கண்ணா அப்படி தான் இருக்கும். தூங்குற குழந்தையை கொஞ்ச கூடாது ,ஆமா நீ என்ன தனியாவா வந்த .
ஷாலினி , பின்ன நீங்க பெத்த ரெண்டு கழுதைல ஒரு கழுதை கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வரவே இல்ல. இன்னொரு கழுத பாசமா கூட்டிட்டு வந்து பாதியில கழட்டி விட்டுட்டு போயிடிச்சி சலிப்பா சொல்லும் போதே ஒரு குரல் தேனாய் காதில் பாய்ந்தது .(ஹி ஹி ஹி அது விஷ்வானு யாரும் தப்பா நினைச்சுகாதீங்க).
டார்லிங் எப்படா வந்த? வந்த உடனே அத்தான பார்க்க வராம அந்த கிழவி கூட எதுக்குடா செல்லம் மொக்க போட்ற- வேற யாரும் இல்லைங்க நம்ம லவ் பாய் ரவி சார் தான். (நாச்சியார் கிட்ட மாமா, ஷாலினி கிட்ட அத்தானா உங்க பசங்கள விட உங்களோட லவ்ஸ் எங்கேயோ போகுது பின்றீங்கபோங்க )
ஹாய் டார்லோமா (டார்லிங் மாமா) வந்த உடனே என்னோட கண்ணு உங்களதான் தேடுச்சி , இந்த கிழவி தான் தடுத்து மொக்க போடுறாங்க டார்லோமா- ஷாலினி. இவங்க கொஞ்சுறத பார்த்துட்டு நம்ப நாச்சியார் காளி அவதாரம் எடுப்பார் என்று எதிர்பார்த்தா சோ சாரி அவங்க மித்ரேந்தர் கூட பிஸியா இருக்காங்க . அதை பார்த்த அப்புறம் தான் ஷாலினிக்கு பாப்பா ஞாபகம் வந்துச்சி .
அத்தம்மா நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்ல , யார் இந்த பாப்பா ? கேட்டுக்கிட்டே பாப்பாவ தூக்குறா கை மாறுனத்துல அசைவில் குழந்தை விழிச்சிக்கிட்டு அழ ஆரம்பித்துவிட்டான் . நாச்சியார், ரவி சார் மாத்தி மாத்தி சமாதானம் படுத்துறாங்க ,இந்த ஷாலினி புள்ள என்ன என்னமோ வித்த காட்டுது ஆனாலும் மித்ரேந்தர் அழுகை நின்ன பாடில்லை .
குழந்தை அழுகை குரல் கேட்டு நம்ப ஜித்து பாவா அவசர அவசரமா கீழே வரான் . மாமா ஏன் இவ்ளோ வேகமா வராங்க வெளியில் எங்கனா போறாங்களா ஆனா கேஷுவல் டிரஸில் இருக்காங்களே ஷாலினி தனக்குள்ளேயே பேசுகிறா ( இவ விஷ்வாவுக்கு ஏத்த ஆளு தான் அவன மாதிரியே தனக்குத் தானே பேசிக் கொள்வதைப் பாரு) .
கீழே வந்த ஜித்தன் நாச்சியார் இடம் இருந்து குழந்தைய வாங்குகிறான் . நா பங்காரம் ஏமிடா எந்த செய்யிலி( என் தங்கமே என்னடா என்ன செய்யுது ) லேதுரா லேது நாணா ஒச்சண்டிரா சூடுரா ( இல்ல டா இல்ல அப்பா வந்துட்டேன் பாரு ) .
என்ன இவன் ஏதோ பேசுறான் ஆனா ஒண்ணுமே புரியலையே ரவி சார் நாச்சியார் காதுல முனங்குறார் . அதான என் புள்ள அறிவெல்லாம் இருந்து இருந்தா நீங்க இப்படி வீட்டில் உட்கார்ந்து மொக்கை போட்டுட்டு இருப்பீங்களா , குழந்தைக்கு என்ன ஆச்சு தெரியலையே நாச்சியார் பதிலுக்கு முனங்குறாங்க .
மாமா இப்ப நாணானா சொன்னாங்க இந்த தெலுங்கு படத்துலலாம் அப்பாவை தான் அப்படி சொல்லி பார்த்திருக்குறோம். இவங்க ஏன் இப்படி அந்த பாப்பா கிட்ட சொல்றாங்க, இந்த பாப்பா யாரு ?? ஐயோ ஈஸ்வரா மண்டைய காய விடுறாங்களே . (பாவம் ஷாலினி இருக்கற கொஞ்சூண்டு முளையை வைத்து யோசிக்கிறாள்)
அப்போ நம்ம ஜித்து பாவா அடுத்த ஷாக் அ கொடுக்குறான் . நம்ப பாவா சின்ன வயசுல இருந்து நல்லா பாடுவான் . ஆனா கடந்த 6 மாதமாக பாடவும் இல்லை , பாடல் வந்தால் அந்த இடத்தில் இருப்பதும் இல்லை . அவன் எதற்காக அப்படி இருந்தாலும் திரும்பவும் இப்போ தன்னோட குழந்தைக்காக பாட்றத கேட்டு தான் எல்லோரும் ஷாக் ஆனாங்க . ஜித்து பாவா மித்ரேந்தர தூக்கி தன்னோட தோள்ல சாய்ச்சு, நெஞ்சோட பொத்துவைச்சிகிட்டு பாட்றான் .
ஆராரோ ஆரிரரோ
அம்புலிக்கு நேர் இவரோ ....
தாயான தாய் இவரோ
தங்க ரத தேர் இவரோ ....
மூச்சிப்பட்டா நோகுமுன்னு
மூச்சடக்கி முத்தமிட்டேன் ...
நிழலுப்பட்டா நோகுமுன்னு
நிலவடங்க முத்தமிட்டேன் ...
தூங்காம நீ விளக்கி
தூங்காமத் தூங்குக் கண்ணே...
ஆராரோ ஆரிராரோ ...
ஆரிரோ ஆரிரரோ ...
ஆராரோ ஆரிரரோ ...
ஆரிரோ ஆரிரரோ ...
இவன் பாட்ட கேட்டுட்டே குழந்தை தூங்கிட்டான் .இவன் பாட்றத கேட்டு உள்ள இருந்தவங்க மட்டும் இல்ல அப்போதான் வீட்க்குள் நுழைந்த விஷ்வாவும் சித்ராங்கதாவும் கூட சந்தோஷமா பார்த்தாங்க .
ஷாலினிவர்தன்
ஜித்தேந்தர் ஓட தாத்தா பொன்சக்கரவர்த்திக்கு ஒரு பையன் , ஒரு பொண்ணு .பையன் ரவி சக்கரவர்த்தி , பொண்ணு சாவித்திரி இவங்க ரெண்டு பேரும் சிவாஜி சாவித்திரி மாதிரி பாச மழையா பொழியலனாலும் , நம்ப கில்லி விஜய் ஜெனிபர் மாதிரி என்ன தான் அடிச்சுக் கிட்டாலும் உள்ளுக்குள்ள பாசம் அ்ளும் . ரவி சாருக்கும்- நாச்சியாருக்கும் கல்யாணம் நடந்த 2 வருடம் கழிச்சு சாவித்திரியை விரும்பி பெண் கேட்டு வந்த ருத்திரவர்தனுக்கு நிச்சயம் பண்ணி , இப்படி ஒரு கல்யாணத்தை பார்த்தது இல்லை என்று ஊரே வியக்கும் அளவுக்கு பொன் சக்கரவர்த்தி நடத்தினார் . ருத்திரன் வர்தனும் சாதாரண ஆளு இல்லை பொன் சக்கரவர்த்தி மாதிரி இந்திய அளவில் இல்லைனாலும் தமிழ்நாட்டுல பெரிய மரியாதையான பரம்பரை பணக்காரர்கள் தான்.
ருத்திர வர்தன்- சாவித்திரி வீடு இல்ல இல்ல மாளிகை சென்னை அண்ணா நகரில் இருக்கு . அவங்களோட ஒரே செல்ல புதல்வி ஷாலினிவர்தன். சென்னையின் புகழ்பெற்ற கம்பெனியில் வேலை பார்க்கிறாள் .அவ என்ன பண்றா என்ன பண்ண போறான்னு யாருக்குமே தெரியாது ஒரே ஒருத்தன தவிர .
அத்தம்மா கத்திக்கொண்டே வந்த ஷாலினி அவங்க கையில இருக்க குழந்தைய பார்த்து, அத்தம்மா யார் இந்த பாப்பா க்யூட் இருக்கான். அய்யோ இவன் தூக்கத்திலே சிரிக்கிறான் பாருங்களேன், செம்மையா இருக்கு கால் ,கை எல்லாம் எம்புட்டு குட்டியா red ஆ இருக்கு .அச்சோ சோ ஸ்வீட் அத்தம்மா. (விஷ்வாவுக்கு வாய்க்குறதுலாம் இப்படி தான் அமையுமோ கேப்பே விடாம பேசுது பாரு)
நாச்சியார் ,ஹேய் போதும்டி சின்ன குழந்தைங்கண்ணா அப்படி தான் இருக்கும். தூங்குற குழந்தையை கொஞ்ச கூடாது ,ஆமா நீ என்ன தனியாவா வந்த .
ஷாலினி , பின்ன நீங்க பெத்த ரெண்டு கழுதைல ஒரு கழுதை கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வரவே இல்ல. இன்னொரு கழுத பாசமா கூட்டிட்டு வந்து பாதியில கழட்டி விட்டுட்டு போயிடிச்சி சலிப்பா சொல்லும் போதே ஒரு குரல் தேனாய் காதில் பாய்ந்தது .(ஹி ஹி ஹி அது விஷ்வானு யாரும் தப்பா நினைச்சுகாதீங்க).
டார்லிங் எப்படா வந்த? வந்த உடனே அத்தான பார்க்க வராம அந்த கிழவி கூட எதுக்குடா செல்லம் மொக்க போட்ற- வேற யாரும் இல்லைங்க நம்ம லவ் பாய் ரவி சார் தான். (நாச்சியார் கிட்ட மாமா, ஷாலினி கிட்ட அத்தானா உங்க பசங்கள விட உங்களோட லவ்ஸ் எங்கேயோ போகுது பின்றீங்கபோங்க )
ஹாய் டார்லோமா (டார்லிங் மாமா) வந்த உடனே என்னோட கண்ணு உங்களதான் தேடுச்சி , இந்த கிழவி தான் தடுத்து மொக்க போடுறாங்க டார்லோமா- ஷாலினி. இவங்க கொஞ்சுறத பார்த்துட்டு நம்ப நாச்சியார் காளி அவதாரம் எடுப்பார் என்று எதிர்பார்த்தா சோ சாரி அவங்க மித்ரேந்தர் கூட பிஸியா இருக்காங்க . அதை பார்த்த அப்புறம் தான் ஷாலினிக்கு பாப்பா ஞாபகம் வந்துச்சி .
அத்தம்மா நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்ல , யார் இந்த பாப்பா ? கேட்டுக்கிட்டே பாப்பாவ தூக்குறா கை மாறுனத்துல அசைவில் குழந்தை விழிச்சிக்கிட்டு அழ ஆரம்பித்துவிட்டான் . நாச்சியார், ரவி சார் மாத்தி மாத்தி சமாதானம் படுத்துறாங்க ,இந்த ஷாலினி புள்ள என்ன என்னமோ வித்த காட்டுது ஆனாலும் மித்ரேந்தர் அழுகை நின்ன பாடில்லை .
குழந்தை அழுகை குரல் கேட்டு நம்ப ஜித்து பாவா அவசர அவசரமா கீழே வரான் . மாமா ஏன் இவ்ளோ வேகமா வராங்க வெளியில் எங்கனா போறாங்களா ஆனா கேஷுவல் டிரஸில் இருக்காங்களே ஷாலினி தனக்குள்ளேயே பேசுகிறா ( இவ விஷ்வாவுக்கு ஏத்த ஆளு தான் அவன மாதிரியே தனக்குத் தானே பேசிக் கொள்வதைப் பாரு) .
கீழே வந்த ஜித்தன் நாச்சியார் இடம் இருந்து குழந்தைய வாங்குகிறான் . நா பங்காரம் ஏமிடா எந்த செய்யிலி( என் தங்கமே என்னடா என்ன செய்யுது ) லேதுரா லேது நாணா ஒச்சண்டிரா சூடுரா ( இல்ல டா இல்ல அப்பா வந்துட்டேன் பாரு ) .
என்ன இவன் ஏதோ பேசுறான் ஆனா ஒண்ணுமே புரியலையே ரவி சார் நாச்சியார் காதுல முனங்குறார் . அதான என் புள்ள அறிவெல்லாம் இருந்து இருந்தா நீங்க இப்படி வீட்டில் உட்கார்ந்து மொக்கை போட்டுட்டு இருப்பீங்களா , குழந்தைக்கு என்ன ஆச்சு தெரியலையே நாச்சியார் பதிலுக்கு முனங்குறாங்க .
மாமா இப்ப நாணானா சொன்னாங்க இந்த தெலுங்கு படத்துலலாம் அப்பாவை தான் அப்படி சொல்லி பார்த்திருக்குறோம். இவங்க ஏன் இப்படி அந்த பாப்பா கிட்ட சொல்றாங்க, இந்த பாப்பா யாரு ?? ஐயோ ஈஸ்வரா மண்டைய காய விடுறாங்களே . (பாவம் ஷாலினி இருக்கற கொஞ்சூண்டு முளையை வைத்து யோசிக்கிறாள்)
அப்போ நம்ம ஜித்து பாவா அடுத்த ஷாக் அ கொடுக்குறான் . நம்ப பாவா சின்ன வயசுல இருந்து நல்லா பாடுவான் . ஆனா கடந்த 6 மாதமாக பாடவும் இல்லை , பாடல் வந்தால் அந்த இடத்தில் இருப்பதும் இல்லை . அவன் எதற்காக அப்படி இருந்தாலும் திரும்பவும் இப்போ தன்னோட குழந்தைக்காக பாட்றத கேட்டு தான் எல்லோரும் ஷாக் ஆனாங்க . ஜித்து பாவா மித்ரேந்தர தூக்கி தன்னோட தோள்ல சாய்ச்சு, நெஞ்சோட பொத்துவைச்சிகிட்டு பாட்றான் .
ஆராரோ ஆரிரரோ
அம்புலிக்கு நேர் இவரோ ....
தாயான தாய் இவரோ
தங்க ரத தேர் இவரோ ....
மூச்சிப்பட்டா நோகுமுன்னு
மூச்சடக்கி முத்தமிட்டேன் ...
நிழலுப்பட்டா நோகுமுன்னு
நிலவடங்க முத்தமிட்டேன் ...
தூங்காம நீ விளக்கி
தூங்காமத் தூங்குக் கண்ணே...
ஆராரோ ஆரிராரோ ...
ஆரிரோ ஆரிரரோ ...
ஆராரோ ஆரிரரோ ...
ஆரிரோ ஆரிரரோ ...
இவன் பாட்ட கேட்டுட்டே குழந்தை தூங்கிட்டான் .இவன் பாட்றத கேட்டு உள்ள இருந்தவங்க மட்டும் இல்ல அப்போதான் வீட்க்குள் நுழைந்த விஷ்வாவும் சித்ராங்கதாவும் கூட சந்தோஷமா பார்த்தாங்க .
ஷாலினிவர்தன்
Attachments
-
93.3 KB Views: 3
Last edited: