Nice one.... Semma feel....??ஊமையாய் அழும் உள்ளத்திற்கு
உவமைகள் எதற்கடா
பாட்டுடைத் தலைவானாக உனை
பாடல்கள் பலவற்றுள் புனைந்து
பாவை இயற்றிய பாவெல்லாம்
பாழாய் போன இக்காதலினால் விளைந்ததடா
பாவங்களையெல்லாம்
பண் பாடினேன் மனதினை
புண்ணாக்கினாய்
புலப்படா இக்காதல் மையப்பு்ள்ளி
புயல் தனை வாழ்வில் உண்டாக்கி
பூதகரமாய் வெடித்து சிதறி
புதைந்ததடா என்னுள்ளே...
ஆதலால் ஆசைக் கொள்கிறேன்
நின் நினைவுகள் யாவும் நீர்த்து போகிட...