banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
நல்லாயிருக்கு, சுவிதா டியர்கதிரின் பதிலால் உறைந்து நின்ற தாமரையை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து கொண்டு கிளம்பிய மித்ரனுக்கு திடீரென்று தொல்லைபேசிவழியே வந்த செய்தியால் வேறு வழியில்லாமல் மனைவியை தனியே வீட்டுக்கு அனுப்பியிருந்தான் மித்ரன்..
இவையனைத்தும் நினைவுக்கு வர பாட்டியிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்,தாமரைக்கு கொஞ்சம் டயர்ட்டாக இருக்கலாம், இரண்டு நாளா கொஞ்சம் அலைச்சல் பாருங்க,என்று பாட்டியிடம் சாதாரணமாக சொல்லிவிட்டு, தன் மனைவிக்காக ஃபிளாஸ்க்கில் டீ வாங்கிக் கொண்டே சென்றான் "தி கிரேட் மித்ரன் "..
தாமரையின் அறைவாசலில் வந்து நின்று கதவை தட்டுவதற்காக கை வைக்க அது தானே திறந்தது தாழிடப்படாததால்,கூடவே இருட்டும் வந்து முகத்தில் மோதியது லைட் போடாத காரணத்தால்..
லைட்போடாமல் என்ன தான் பண்ணுறா, என்று நினைத்துக் கொண்டே சுவிட்ச்சை போட்டவன், சற்றே அதிர்ந்து தான் போனான் பெண்ணவளின் தோற்றம் கண்டு..
மெத்தையின் நடுவே கால்கள் இரண்டையும் தன் இரு கைகளால் கட்டி தன் முழங்காலில் தலை சாய்த்து சோக சித்திரமாக காட்சி தந்தாள் மித்ரனின் மங்கை..
பதறிப்போன மித்ரன் ஃபிளாஸ்க்கை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு,தாமரை என பெயருக்கும் வலிக்குமோ என மெதுவே அழைத்தான்..
தாமரையிடமிருந்து பதிலேதும் வராது போகவே,தாமரை என்று தோள் தொட்டு மெதுவே அழைத்தான்.
தட்டி எழுப்பியதில் அலங்கமலங்க முழித்தபடி,என்ன? என்று பதறினாள் தாமரை..
மித்ரனை கண்டவுடன் ஃபாக்டரியில் நடந்தவை அனைத்தும் அவள் மனக் கண்ணில் திரும்பவும் ஊர்வலம் போக, அண்ணா வேலையை விட்டுவிட்டு போகலையே? அங்க தானே இருக்காங்க என்று தவிப்புடன் கேட்டாள் கதிரின் தங்கை..
ஆமாம்.. என்று தலையாட்டிய மித்ரன்,நீ ஏன் சாப்டலை தாமரை,இப்போ டீ குடிக்க கூட கீழே ஏன் வரல என்று கேட்க..
வெடித்து சிதறினாள் பெண்..
"உங்களுக்காக பாத்து நான் இப்போ எனது அண்ணனை இழந்து நிக்குறேன்,இது தேவையா?எனக்கு, தன்னோட சுகம் தான் பெரிசுன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிற இந்த உலகத்தில என்னோட அண்ணன் என்னை தாயாய் தோள் தாங்கினானே!!அவனுக்கு நான் செய்கிற கைமாறா இது"தாமரையின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது..
பெண்ணவளின் கண்ணீர் மித்ரனின் ஆழ்மனது வரை சென்று சுட்டது.
ஏதாவது செய்து அவளை புன்னகைக்கச் செய் என்று அவன் மனமே அவனிடம் மல்லுக்கு நின்றது..
சட்டென்று மெத்தையில் அவள் அருகே அமர்ந்து அவள் முட்டிலிருந்த அவளின் முகத்தை தனது மார்புக்கு இடம்மாற்றிக்கொண்டான் மித்ரன்..
இது எதுவும் தெரியாத பெண்ணவளோ பிதற்றினாள்...பிதற்றினாள்..பிதற்றிக்கொண்டே இருந்தாள்..
மித்ரனின் இடது கை தாமரையை அணைத்திருக்க வலது கை தலையை தடவிக்கொடுக்க,வாயோ எல்லாம் சரியாகிடும் கண்ணம்மா என்ற வார்த்தை யை விடாமல் உச்சரித்தது மந்திரம் போல..
அழுது ஓய்ந்து தானே தெளிந்த தாமரை அவன் நெஞ்சத்தில் நாடியை ஊன்றி "எல்லாம் சரியாகிடுமா?"என்று சிறு பிள்ளையாய் உதடு பிதுக்கி எல்லாம் அவனுக்குத் தான் தெரியும் என்கின்ற பாவனையில் கேட்டாள்..
அவளின் உதடுகள் பிதுங்கிய பாவனையில் மொத்தமும் தொலைந்த மித்ரன் தாமரையின் கண்ணோடு கண் பார்த்து இரு கன்னங்களையும் தன் கையில் ஏந்தி,சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கண்டிப்பாக கண்ணம்மா ,இல்லைன்னா மச்சானை தூக்கிடலாம் என்று கேலிக்குரலில் கூறினான்..
மச்சானா!!..என்று தனது புருவத்தை உச்சிக்கு தூக்கிய மனைவியிடம் ,"நீ என் பொண்டாட்டி என்றால்,அந்த தடியன் எனக்கு மச்சான் தானே என்று சத்தமாக சிரித்தான் மித்ரனவன்..
இதில் சற்றே புன்னகை முகமான பெண்ணவள்,என்னங்க, என்றழைக்க..
எ..ன்..ன..ங்..க என்று கேலியாக நீட்டி முழங்கி பதிலுக்கு ராகமிழுந்தான் மித்ரன்.
அவன் கேலியில் மெல்லச்சிணுங்கிய பெண்ணிடம்,
ஏங்க,காலையிலே யாரோ ஒரு அழகான பொண்ணு என்னைப் பார்த்து அத்தான் னு கூப்டுச்சே அந்த பொண்ணை நீங்க பாத்தீங்ளாங்க" என்று வம்பிழுத்தான் மித்ரன் கணவனாக..
இவனின் கேலியில் மலர்ந்து சிரித்த மங்கையவள் தன் வெட்கத்தை மறைக்க மன்னவன் மார்பிலேயே முகம் மறைந்தாள்..
பெண்ணவளின் இந்த செயலில் தன்னை மறந்த மித்ரனோ,வாகாய் தோளணைத்து குழைந்து நிற்கும் தாமரையின் கன்னங்களில் பக்கத்திற்கொன்றாய் தன் அச்சாரத்தை மெல்லவே பதித்தான் ஆசையோடு...
பெண்ணவளோ மனம் மயங்கி மன்னவன் தோள் சேர,தன் சொர்கத்தை சேர்த்தணைத்த மித்ரனின் காதுகளில் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த
"வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக...
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாக்ஷியோ மீனாக்ஷியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து...
நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூ வண்ணம்
கண்டேன் சிங்கார கை வண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன் சபாஷ்
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
என் வழி நேராக ஆக்கி வைத்தால்
என்னையும் சீராக மாறி வைத்தால்
தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்கலம் பொன்கிடும் மந்திர புன்னகை
இதழில் வழிய இனிமை விளைய
---
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே"
என்ற பாடல் ஆணவனின் உதடுகளில் புன்னகையை விரியச் செய்தது..
தாமரை-மித்ரன் வாழ்வு இனி துலங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெறுவோம் நட்பூக்களே...