நிறுத்துங்கள் போரை!
…………..
முன்னேற்றப் பாதையில்
முன்னோக்கிப் போகிறோம் என
நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்,
ஆதி காலத்திற்கே திருப்ப
போய் விட்டோமா?
என சந்தேகிக்க வைக்கிறது
இந்தப் போர்!
இயற்கை, பேரிடராய் சீறினால்,
மனித உயிர் வாங்கினால்,
அது தவிர்க்க முடியாதது!
தடுக்க இயலாதது!
ஆனால்,
மனிதன் மனிதனை அழிப்பது,
போரால் நாட்டையே சிதைப்பது,
வன்முறையின் மிச்சம்!
கொடூரத்தின் உச்சம்!
குண்டு மழையில், நனைந்து கருகும் மலருக்கும் தெரியாது!
மழலைக்கும் புரியாது!
எதற்காக மரணிக்கிறோம் என்று!
சிட்டுக்குருவிக்கும், சிங்கத்துக்கும் வலிமை வேறு வேறு தான்!
ஆனால் வலி ஒன்றுதான்!
வலியோன் , எளியோனை வதைப்பதை,
எவனுமே தட்டிக் கேட்கவில்லையெனில்,
மனிதம் மரித்து விட்டது,
என்று தானே அர்த்தம்!
உறைவிடமிழந்து, உறவிழந்து, வீதியில் நிற்கவும் பயந்து,
ஓடி ஒளிந்து, இறுதியில் மடிந்து போகும் மக்களின் மனங்கள்
மன்னிக்குமா?
ஆதிக்கத்துக்கு ஆதரவாக,
மௌனம் சாதிக்கும்
உலக நாடுகளை!
எங்கோ நடக்கிறது போர் என, வேடிக்கை பார்க்கும் கூட்டமே!
அங்கு வீசும் குண்டு,
உன் வீட்டு அடுப்பங்கரையில் வெடிக்கும்!
தோட்டா பட்டு தெறிக்கும் ரத்தம், உலக வரைபடம் எங்கும் சிதறும்!
போர் எல்லைகளை விரிவுபடுத்தும், ஆனால் மனிதத்தை
மொத்தமாய் இழிவுபடுத்தும்!
ஆறாம் அறிவின் செறிவோடு, நெஞ்சத்தில் ஈரம் கொஞ்சம்
மீதமிருந்தால்,
நிறுத்தி விடுங்கள்
உங்கள் போரை!
……
பொன்.தமிழ்ச்செல்வி
…………..
முன்னேற்றப் பாதையில்
முன்னோக்கிப் போகிறோம் என
நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்,
ஆதி காலத்திற்கே திருப்ப
போய் விட்டோமா?
என சந்தேகிக்க வைக்கிறது
இந்தப் போர்!
இயற்கை, பேரிடராய் சீறினால்,
மனித உயிர் வாங்கினால்,
அது தவிர்க்க முடியாதது!
தடுக்க இயலாதது!
ஆனால்,
மனிதன் மனிதனை அழிப்பது,
போரால் நாட்டையே சிதைப்பது,
வன்முறையின் மிச்சம்!
கொடூரத்தின் உச்சம்!
குண்டு மழையில், நனைந்து கருகும் மலருக்கும் தெரியாது!
மழலைக்கும் புரியாது!
எதற்காக மரணிக்கிறோம் என்று!
சிட்டுக்குருவிக்கும், சிங்கத்துக்கும் வலிமை வேறு வேறு தான்!
ஆனால் வலி ஒன்றுதான்!
வலியோன் , எளியோனை வதைப்பதை,
எவனுமே தட்டிக் கேட்கவில்லையெனில்,
மனிதம் மரித்து விட்டது,
என்று தானே அர்த்தம்!
உறைவிடமிழந்து, உறவிழந்து, வீதியில் நிற்கவும் பயந்து,
ஓடி ஒளிந்து, இறுதியில் மடிந்து போகும் மக்களின் மனங்கள்
மன்னிக்குமா?
ஆதிக்கத்துக்கு ஆதரவாக,
மௌனம் சாதிக்கும்
உலக நாடுகளை!
எங்கோ நடக்கிறது போர் என, வேடிக்கை பார்க்கும் கூட்டமே!
அங்கு வீசும் குண்டு,
உன் வீட்டு அடுப்பங்கரையில் வெடிக்கும்!
தோட்டா பட்டு தெறிக்கும் ரத்தம், உலக வரைபடம் எங்கும் சிதறும்!
போர் எல்லைகளை விரிவுபடுத்தும், ஆனால் மனிதத்தை
மொத்தமாய் இழிவுபடுத்தும்!
ஆறாம் அறிவின் செறிவோடு, நெஞ்சத்தில் ஈரம் கொஞ்சம்
மீதமிருந்தால்,
நிறுத்தி விடுங்கள்
உங்கள் போரை!
……
பொன்.தமிழ்ச்செல்வி