Vishnu jegadeesan
புதிய முகம்
அத்தியாயம் - 5
காதல் சிற்பியாய் நீ, உனை
மயக்கும் பாவையவளாய் நான்,
விழிகளில் பேசும் மொழிகளாய் பார்வையில் ஆயிரம் ரகசியங்கள்
மொழிகின்றாய் கள்வனே!
காதல் சிற்பியாய் நீ, உனை
மயக்கும் பாவையவளாய் நான்,
விழிகளில் பேசும் மொழிகளாய் பார்வையில் ஆயிரம் ரகசியங்கள்
மொழிகின்றாய் கள்வனே!
மெல்லிய சாரலாய் காற்று வீசிக் கொண்டிருக்க, மரங்கள் சூழ்ந்த இடத்தின் மையத்தில் அழகிய டேபிளில் அவர்களுக்கான புக் செய்யப்பட்டிருந்த இடத்தில் முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்தாள் உத்ரா.
ஆபீஸ்ல வச்சு பேசலாமே, ஏன் ரெஸ்டாரன்ட்டுக்கு வர சொன்னிங்க , கொஞ்சம் சூடாகவே கேட்டாள்.
எனக்கு பீஸ் ஃபுல்லான இடத்தில வச்சு பேசினா தான் பிடிக்கும் , அப்பதான் ரொமான்டிக் ஃபீல் வரும்.
நான் ஒன்னும் உங்க கூட ரொமான்ஸ் பண்ண வரல மைண்ட் இட் , கோபமாக சீறினாள்.
அவனுக்கு அவளை இன்னும் சீண்ட வேண்டும் போல் தோன்றியது. அதற்குள் வெயிட்டர் வந்துவிடவே என்ன சாப்பிடுகிறாய்? என்று கேட்டான்.
உத்ரா, எனிதிங் யு விஷ் என்றவுடன் " பீஸ் புலவ், வெஜிடபிள் பிரைட் ரைஸ், பன்னீர் மஷ்ரூம் புலவ், பன்னீர் கோப்தா, பேபி கார்ன் மஞ்சூரியன், டீப் மஷ்ரூம் ஃப்ரை மத்ததெல்லாம் அப்புறம் சொல்றோம்" என்றான்.
சுற்றிலும் உள்ள இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள். அவனோ செவ்வனே தனது வேலையை செய்துக் கொண்டிருந்தான் (வேறு என்ன உத்ராவை சைட் அடிப்பது).
எதேச்சையாய் திரும்பியவள் அவன் பார்வை தன்னையே வண்டன சூழ்ந்து கொண்டிருப்பதை பார்த்தவள் அதிர்ச்சியுற்றாள். அவன் பார்வை இம்மியும் அசையாது, ஒருவேளை அசைந்தால் தொலைந்து விடுமோ என்ற எண்ணத்துடனோ சிறிதும் அசையாது பூமியை காணும் ஆதவனை போல் பிரகாசமாய் , தன்னை தீண்டிய தென்றலை தழுவிடும் காற்றாய் இமைக்கவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய பார்வை உத்ராவிற்குள் உயிர் வரை சென்று தீண்டியது. தன்னை சிறைப் பிடிக்கும் கூர் விழிகளில் பாவையவள் தொலைந்து போனவளாய் ஒருவர் விழிகளில் ஒருவர் தொலைந்து போயினர்.
பார்வையை திருப்ப முயன்றும் தோற்றவளாய் விழிகளிலே காதல் மொழிகள் கற்கும் மாணவியாய் , தலைமையை திறம்பட செய்யும் மங்கையவளின் மாயவனாய் காதல் ரசத்தை சொட்டச் செய்து மங்கையவளின் மனதை களவாட காதல் எனும் போர் தொடுத்து விழிகளாலே கைது செய்தான்.
நேரம் சென்றதே தெரியாமல் கண்களிலே காதல் முத்தெடுத்தவர்கள் தாங்கள் சொன்ன உணவு வந்துவிடவே தங்கள் பார்வையை திருப்பிக் கொண்டனர்.
உத்ராவின் மனதிலோ , இவன் என்னை , என் மனதை ஏதோ செய்கிறான்.
ஹீ மெஸ்மரைஸ் மீ, இவன் கண்கள் ஏதோ சொல்லுது , அது இவன் கிட்ட என்னை மொத்தமா இழுக்குது, உத்ரா நீ சரியில்ல இப்படியே போனா அவ்வளவுதான்....பி ஸ்டெடி உத்ரா...பி ஸ்டெடி , தனக்குத் தானே பட்டிமன்றம் நடத்தி முடிவும் எடுத்துக் கொண்டாள்.
அவள் முகத்தில் வந்து போகும் மாற்றங்களை கவனித்துக் கொண்டிருந்தவன் கடைசியாக அவள் ஏதோ முடிவு எடுத்தவளாய் தனக்குத் தானே சபாஷ் போட்டுக்கொண்டவளை விழிகள் மின்ன சுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்ன பேபி என்கிட்ட மயங்கிட கூடாதுன பலமா யோசிக்கிறாயோ, பட் நீ என்ன நினைச்சாலும் என்கிட்ட இருந்தும் என் பார்வையில் இருந்தும் உன்னால தப்பிக்கவே முடியாது" ஒரு வித தீவிரத்துடன் கண்களில் இப்படித்தான் இருந்து ஆக வேண்டும் என்று பிடிவாதத்துடன் கூறி கண் சிமிட்டினான்.
தன்னை கண்டுகொண்டானே என்ற கடுப்பிலும் , அவன் சொற்களின் தீவிரத்தில் பயந்தும் இருந்தவள்.... அவன் கண் சிமிட்டலில் டேபிளில் மேல் இருந்த தண்ணீரை இவன் மூஞ்சியில் ஊற்றினால்தான் என்ன, என்னும் பார்வை பார்த்தாள்.
ஓ நோ பேபி, அப்படி எல்லாம் என் மேலே தண்ணியை ஊற்றிடாத, அவள் பார்வையிலிருந்து கண்டு கொண்டு பதிலளித்தான்.
ம்.ம்.... அந்த பயம் இருக்கட்டும், அமர்தலாக கூறினாள்.
ம்ஹும்..... சுவாரஸ்யமாய் அவள் முகத்தை வேடிக்கை பார்த்தான்.
அழகிய மஞ்சள் நிற சுடிதாரில் தேவதை போல் இருந்தவளை பார்த்து விழி அகற்ற முடியவில்லை அவனுக்கு.
சாப்பிட்டுக்கொண்டே ப்ராஜெக்ட் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். தன் வெளிநாட்டு அனுபவத்தை சுவைப்பட சொல்லி அவளை சிரிக்க வைத்தான். பேச பேச தன்னுடைய ரசனைகளும் அவனுடையதும் ஒன்றுபோல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது.
ஐ ஹவ் சம்திங் ஃபார் யு..... என்று ஒரு பைலை நீட்டினான்.
திறந்து பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
எனக்கு உங்கள் கம்பெனி வொர்க் பிடித்திருக்கிறது... அதனால் இன்னும் சில ஒப்பந்தம் உங்கள் கம்பெனியோடு செய்ய விரும்புகிறேன்... அதுக்கான காண்ட்ராக்ட் பத்திரம் தான் இது.
ஓ நைஸ் ராகவன் சார் ரொம்ப சந்தோஷப்படுவார், மகிழ்ச்சியுடன் கூறினாள்.
ம்.ம்.... இது உங்களோட சின்சியர் உழைப்புக்காக கண்களில் பாராட்டுடன் கூறினான்.
உன்னோட ஐடியாஸ் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு, நம்ம டார்கெட்டை விட அதிகமா லாபம் வந்திருக்கு, குட் ஜாப் உத்ரா , மிகுந்த மகிழ்ச்சியோடும் தன்னவளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக கூறினான்.
ம்... தேங்க் யு ஸோ மச் , என் கூட வொர்க் பண்றவங்க எல்லாரும் ரொம்ப டேலண்ட் ஆனவங்க, டெடிகேட்டிவ் ,லேட் ஆயிடுச்சின்னா அப்படியே கிளம்பாமல் அன்னைக்கு வொர்க் முடிச்சுட்டுதான் கிளம்பு வாங்க. எல்லாரும் ரொம்ப அற்பணிப்பா வேலை பார்க்கிறதாலதான் முடிக்க முடிஞ்சிச்சு.
ம்.ம்... உன்னோட பாராட்டையும் சேர்த்து உங்களுக்கே கொடுத்துட்ட...எனி வே பட் நைஸ் கோ ஆர்டினேஷன்.
ரியலி அவங்களோட ஹெல்ப் இல்லைனா இவ்வளவு சீக்கிரம் வேலை செய்ய முடியாது.
"இம்மி அளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டீங்க, அப்படித்தானே மேடம்?" குறும்புடன் கேட்டான்.
பல் வரிசை தெரிய அழகாக முறுவலித்தாள் உத்ரா.
யு லுக் பிரிட்டி , வென் யு ஸ்மைல்.... அவன் பார்வை அவளை ரசனையாக வருடியது.
அவன் பார்வையை சந்தித்தவளுக்கு பேச்சு வரவில்லை... ஏன் அடிக்கடி ஒரு மாதிரியாக பார்க்கிறான்?... நன்றாக பேசிக் கொண்டிருக்கும்போதே ஏன் இப்படியொரு பார்வை.
அவனின் காந்தப் பார்வை ஒருபுறம் மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொரு புறமோ அபாய மணியையும் ஒரு சேர சேர்ந்தே அளித்தது. இல்லை.... இவன் பார்வைக்கு மயங்கக் கூடாது... இன்னும் இவனிடம் மிகவும் ஜாக்கிரதையாக பழக வேண்டும்.
அவனோ, எதற்கு அடிக்கடி நத்தை போல் என் ஓட்டுக்குள்ளேயே சுருங்கிக் கொள்கிறாள்... இவளிடம் எப்படி பேசி தன்னை, தன் அன்பை புரிய வைப்பது?
இருவரும் வெவ்வேறு சிந்தனைகளில் உளன்று கொண்டிருந்தனர்.
அப்போது அவள் போன் ஒலிக்க எடுத்துப் பார்த்தவள் மகிழ்ச்சி அடைந்தாள்.
ஹாய் கார்த்திக் , இப்ப தான் உனக்கு என் ஞாபகம் வந்ததா? யுஎஸ் போனவுடனே என்னை மறந்துட்டேல்ல... இதுல அத்தை பொண்ணு ரத்தினம்ன டயலாக் வேற, போலியாக சண்டை பிடித்தாள்.
எதிர் முனையில் என்ன பேசினானோ, உத்ரா, "என்ன அதெல்லாம் முடியாது என் பேச்ச தான் நீ கேக்கணும் , அவங்க சொல்றத கேட்காத... நான்தான உன்னோட பார்பி டால்" , செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு அணைப்பை துண்டித்தவள் திகைத்து விழித்தாள்.