இரவு சரியாக பதினோரு மணி ஏழு நிமிடத்திற்கு வந்த ரகுநந்தனின் வரவைச் சொன்ன அவனது BMW சத்தத்தில், அதுவரை அவனுக்காக உண்ணாமல், உறங்காமல் காத்திருந்த பெண்ணவள் அவளது அறையிலிருந்து ஓடி வந்தாள் வாயிலுக்கு,
“ஏய்... என்ன இன்னும் நீ தூங்கலயா?”
“கை, கால் அலம்பிட்டு சாப்பிட வாங்க”
“எடுத்து வச்சுட்டு போயி படுக்க வேண்டியது தான.....”
சத்தமில்லாமல் அடுக்களைக்குள் செல்லும் மனைவியைக் கண்டு, சத்தமில்லாமல் பின்னே வந்தவன் அவளது இடக்கையை பிடித்து நிறுத்தினான்.
திரும்பியவள், கணவனையும் அவளது கையை அவன் விடாமல் பற்றி இருப்பதையும் மாறி மாறி பார்த்தவாறு
“எடுத்து வைக்க தெரியாம தான் இருந்துட்டேன், அடுத்த தடவை எடுத்து வைக்கிறேன், இப்போ என் கைய விட்டுட்டு கை கால் அலம்புங்க போங்க”
“உத்தரவு மகாராணி”, என்று சிரித்தவாறு போனவன் விரைவில் உண்ண வந்து அமர்ந்தான்.
அவனுக்கு உணவை தந்தவள், தட்டில் உணவுடன் வந்து அவனருகில் அமர்ந்தாள்.
“நீ இன்னும் சாப்டலயா?”
பேசாமல் உணவில் கவனம் செலுத்தியவளை, அதற்குமேல் பேசி துன்புறுத்தாமல் உண்டு எழுந்தான்.
அடுக்களையை சீராக்கியவள், வாயிற்கதவுகளை சரி பார்த்து பூட்டிவிட்டு அவனது அறைக்குள் சென்றாள்.
இதுவரை, அவனுடைய அறையுடன் இணைந்து இருக்கும் (அவளது)அறையில் உறங்குபவள், இன்று அவனுடைய அறையில் இருக்கும் படுக்கையில் படுத்துவிட்டாள்.
டிவியில் சிறிது நேரம் நியூஸ் பார்த்துவிட்டு அறைக்கு வந்தவனின் கண்களில், இரவு நேர விளக்கின் வெளிச்சத்தில் அவனுடைய படுக்கையில் படுத்திருக்கும் வதனியைக் கண்டான்.
“ஏஞ்சல்!”
“பேபி டால்!”
“பொண்டாட்டி!”
எதற்கும் சத்தம் வராமல் இருக்கவே, அதற்குள்ளாகவா உறங்கி விட்டாள், இப்போது தானே அறைக்குள் வந்தாள் என யோசித்தபடி வந்து படுத்தான்.
சுவரைப் பார்த்தபடி படுத்திருக்கும் மனைவியின் வதனத்தை காண எழுந்த ஆசையினால், தன் பக்கமாக திருப்ப முயல,
உறங்குவது போல பாவனையில் இருப்பவளைக் கண்டு கொண்டான்.
சட்டென, அவளை அள்ளி எடுத்து, தன் மல்லார்ந்த அகன்ற மேனியை அவளுக்கு படுக்கையாக்கினான்.
பெண்ணவள் திமிர, தன் கைகளால் அவளின் தோள்பகுதியையும், அவன் கால்களால் அவனிடமிருந்து நழுவிய அவள் கால்களையும் சிறை செய்திருந்தான்.
“ஏஞ்சலுக்கு அத்தாங்கிட்ட என்ன கோவம்?”
“கோபமெல்லாம் இல்ல.....”
“அப்ப ஏன் சாப்டாம இருந்த இவ்ளோ நேரம்?”
“உங்களோட சாப்பிடத்தான்”
“இனி இப்டி லேட்டானா எனக்காக வயிட் பண்ணாத”
“வயிட் பண்றது என் இஷ்டம், அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் மிஸ்டர். ரகு”
“புருஷன பேர் சொல்லிக் கூப்பிடுற”
“கூப்டறதுக்கு தான பேரு வச்சிருக்காங்க”
“என் மாமியாருட்ட போயி சொல்லப் போறேன்”
“சொல்லுங்க.... எனக்கு ஒன்னும் பயமில்ல”
“பயங்கர வீராங்கனையா ஆகிட்டு வர போல”
“ஆமா, எங்கயாவது அடியாளு வேணும்னா என்னைய அனுப்பி காலி பண்ணிறாத ரகு”
“என்னடி இப்டியெல்லாம் பேசுற... இன்னிக்கு”
“நான் இன்னும் பேசுவேன்.... என்ன விட்டா நான் பெட்ல படுத்துப்பேன், என்னை கைதிய விட மோசமா கட்டி வச்சிருக்கீங்க, விடுங்க....”
“நீ திமிர்னதால அப்டி பண்ணேன்”, என்றபடி அவளை விடுவித்திருந்தான். ஆனால் படுக்கைக்கு வர எண்ணாதவளாய்,
அவளின் முகத்தைத் தாங்கிய இரு கைகளையும் அவனின் திரண்ட மார்பில் ஊன்றியவாறு இருந்தவளின் அழகிய வதனத்தை கண்டிருந்தவனிடம்
“என்ன பார்வை?”
“பார்க்கறக்கெல்லாம் ரீசன் சொல்லணுமா?”
“இருட்டுல மின்னுற கண்ணு தெரியுது, ஆனா என்னைப் பற்றி என்ன நினச்சு, எப்படி பார்க்குறீங்கனு பாக்க முடியல, அதான் கேட்டேன்”
“தூக்கம் வரலயா?”
“வந்துது..... ஆனா இங்க படுத்து பழக்கமில்லல.... அதான் படுத்தா தூக்கம் வர மாட்டிங்குது”
“தாலாட்டவா..... தூங்குறியா?”
“வேணாம்”
“என் ஏஞ்சலுக்கு வேற என்ன வேணும்?”
“ஒன்னும் வேணாம்”
“வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தமாம், உனக்கு தெரியுமா?”
“இத எந்த அரவேக்காடு சொல்லிச்சாம்?”
“ஏண்டி.... புருசன அரவேக்காடுனல்லாமா சொல்லுவ”
“எதையும் எங்கிட்ட ஸ்ட்ரைட்டா சொல்லுங்க.... இல்லனா இப்டி தான் டேமேஜ் ஆகிருவீங்க”
“உன்னை இப்ப இந்த அரவேக்காடு என்ன பண்ணுதுன்னு பாரு”, என்றபடி அவளை மேலிழுத்து இதழைச் சுவைத்திருந்தான். எதிர்பாரா தாக்குதலால் பெண் துவண்டிருந்தாள்.